என் மலர்tooltip icon

    தர்மபுரி

    • கிழக்கு மாவட்ட செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தடங்கம் சுப்ரமணி இருந்து வந்தார்
    • கோடிஅள்ளியை சேர்ந்த பி.தர்மசெல்வன் தருமபுரி கிழக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டத்தில் கிழக்கு, மேற்கு என இருப்பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தி.மு.க.வில் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு கட்சி பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    இதில் கிழக்கு மாவட்ட செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தடங்கம் சுப்ரமணி இருந்து வந்தார். இந்த நிலையில் அவரை மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக கோடிஅள்ளியைச் சேர்ந்த தர்மசெல்வன் என்பவரை கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதுகுறித்து தி.மு.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரை முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தருமபுரி கிழக்கு மாவட்டக் கழக செயலாளராக பொறுப்பு வகித்து வரும் தடங்கம் சுப்பிரமணியத்தை அப்பொறுப்பில் இருந்து விடுவித்து, அவருக்குப் பதிலாக கூத்தப்பாடி அருகே கோடிஅள்ளியை சேர்ந்த பி.தர்மசெல்வன் தருமபுரி கிழக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.

    ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இவருடன் இணைந்து கொள்ளப்படுகிறார்கள் பணியாற்றிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார். 

    • அதிசய நிகழ்வை காண ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம் செய்வார்கள்.
    • இன்றும், நாளையும் அதிசய நிகழ்வை காண முடியும்.

    தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 21, 22, 23 ஆகிய தேதிகளில் மாலை வேளையில் சூரியன் அஸ்தமனம் ஆகும் நேரத்தில் சூரியஒளி ராஜகோபுரம் வழியாக வந்து முன் மண்டபத்தில் அமர்ந்திருக்கும் நந்தி சிலையின் இரு கொம்புகளுக்கும் நடுவே ஊடுருவி கருவறையில் வீற்றிருக்கும் சிவலிங்கத்தின் நெற்றியில் முதல் நாள் ஒளிபடும். 2-ம் நாள் மார்பிலும், 3-ம் நாள் பாதத்திலும் விழும் அதிசய நிகழ்வு நடைபெறும்.

    இந்த அதிசய நிகழ்வை காண ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம் செய்வார்கள். அதன்படி நேற்றும் பக்தர்கள் அதிக அளவில் குவிந்தனர். மாலை 6 மணி அளவில் ராஜகோபுரம் வழியாக உள்ளே வந்த சூரிய ஒளி நந்தி சிலையின் கொம்புகளுக்கு நடுவே ஊடுருவி கோவிலின் நடுவே உள்ள உண்டியல் மீது பட்டு மறைந்தது, பக்தர்கள் அதிக அளவில் கூடி கூட்ட நெரிசலை ஏற்படுத்தியதால் ஒளி உள்ளே செல்ல முடியாமல் மறைந்தது. இதனால் சிவலிங்கத்தின் மீது ஒளி விழும் அதிசய நிகழ்வை காண காத்திருந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு தீப ஆராதனை காட்டப்பட்டது. பக்தர்கள் அனைவரும் சாமியை வழிபட்டு சென்றனர். தொடர்ந்து இன்றும், நாளையும் இந்த அதிசய நிகழ்வை காண முடியும். 

    • காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்துள்ளது.
    • அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    ஒகேனக்கல்:

    கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து கடந்த ஒரு வாரமாக குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 500 கனஅடியாக வந்தது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்துள்ளது. இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி 1500 கனஅடியாக அதிகரித்து வந்தது.

    மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.

    காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
    • தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.

    ஒகேனக்கல்:

    கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து கடந்த ஒரு வாரமாக குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1200 கனஅடி வந்தது. இன்றும் அதே அளவு தண்ணீர் நீடித்து வந்தது.

    மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.

    பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.

    காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • வார விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு வருகை புரிந்தனர்.
    • சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால் மீன்கடை, கடைவீதி, பரிசல் நிலையம் ஆகிய பகுதிகளில் கூட்டம் அலைமோதியது.

    ஒகேனக்கல்:

    தமிழக கர்நாடகா காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததாலும், கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் அளவு குறைக்கப்பட்டதாலும், தற்போது குறைந்த அளவில் நீர்வரத்து ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வழியாக தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கிறது.

    இந்த நிலையில் நேற்று தமிழக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலுவில் வழியாக ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1500 கன அடியாக அதிகரித்தது. இந்த நிலையில் இன்று குறைந்து வினாடிக்கு 1200 கன அடியாக வருகிறது. மேலும் இந்த நீர்வரத்து குறைவதற்கான வாய்ப்பு உள்ளது.

    தற்போது வரும் இந்த நீர்வரத்தால் ஒகேனக்கல் ஆற்றில் உள்ள ஐந்தருவி, சினி பால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வேகம் குறைந்து கொட்டி செல்கின்றன.

    மேலும் இன்று ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு வருகை புரிந்தனர்.

    அவர்கள் பரிசலில் சவாரி செய்து மகிழ்ந்தனர். பின்னர் எண்ணெய் மசாஜ் செய்து அருவிகளில் குளித்தனர்.

    சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால் மீன்கடை, கடைவீதி, பரிசல் நிலையம் ஆகிய பகுதிகளில் கூட்டம் அலைமோதியது.

    • முத்துராமன் அதியமான்கோட்டை போலீசில் புகார் செய்தார்.
    • போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், எட்டிமரத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முத்து ராமன் (வயது38). இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார்.

    இவரது மனைவி பிரியா (31). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    முத்துராமன் தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிள் மற்றும் மனைவியின் மொபட் ஆகியவற்றை நிறுத்தி வைத்திருந்தார்.

    இந்த நிலையில் நேற்று காலை அவர் எழுந்து பார்த்தபோது, மோட்டார் சைக்கிள், மொபட், சைக்கிள் மற்றும் பக்கத்து வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிள் ஆகியவை தீயில் எரிந்து கிடந்தது. இதுகுறித்து முத்துராமன் அதியமான்கோட்டை போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது எட்டிமரத்துப்பட்டியை சேர்ந்த துரை (வயது 40) என்பவர் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மொபட் ஆகியவற்றுக்கு தீவைத்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் முத்துராமனின் மனைவி மகளிர் சுய உதவிகுழுவில் தலைவியாக உள்ளார். அவரிடம் துரை தனது குடும்பத்தினருக்கு கடன் உதவி ஏற்பாடு செய்து தருமாறு கூறினார்.

    அதற்கு அவர், கடன் வாங்கி கொடுத்தால், திருப்பி செலுத்தமாட்டீர்கள் என்று கூறினார். இதனால் ஆத்திரத்தில் துரை, முத்து ராமனின் வீட்டு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 வாகனங்களுக்கு தீயிட்டு கொளுத்தியதாக போலீசாரிடம் தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து போலீசார் கைதான துரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
    • கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி:

    தருமபுரி அருகே ஆட்டோ டிரைவர் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த 3 இருசக்கர வாகனங்களுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து எரிந்துள்ளனர். முன்விரோதம் காரணமாகா மர்ம நபர்கள் வாகனங்களுக்கு தீவைத்தனரா ? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தருமபுரி மாவட்டம், எட்டிமரத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முத்து ராமன் (வயது38). இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். மேலும், இவர் வட்டிக்கு பணம் கொடுத்து வருகிறார். இவரது மனைவி பிரியா (31). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் முத்துராமனிடம் அதே பகுதியை சேர்ந்த துரை (40) என்பவர் பணம் வாங்கியுள்ளார்.

    நீண்ட நாட்களாக வாங்கிய பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று இரவு முத்துராமன் தனது வீட்டின் முன்பு இருசக்கர வாகனம் மற்றும் மனைவியின் மொபட்டையும் நிறுத்தி விட்டு தூங்க சென்றுள்ளனர்.

    இன்று காலை விடிந்ததும் எழுந்து பார்த்தபோது வீட்டின் முன் நிறுத்திய முத்துராமனின் 2 இருசக்கர வாகனங்களும் மற்றும் அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த சண்முகம் மனைவி பச்சையம்மாளின் இருசக்கர வாகனமும் தீயில் எரிந்து கருகிய நிலையில் இருந்தது.

    இதைப்பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மர்ம நபர்கள் சிலர் நள்ளிரவில் 3 வாகனங்களும் தீ வைத்து கொளுத்தி விட்டு சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து முத்துராமன் அதியமான்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரித்தபோது, மர்ம நபர்கள் முதலில் முத்துராமன் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கு தீ வைத்துள்ளனர்.

    இதனால் அவர் வீட்டின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பச்சையம்மாளின் வாகனத்தின் மீதும் தீ பற்றி எரிந்ததால், 3 வாகனங்கள் எரிந்து முழுவதும் சேதமானது என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    இந்த சம்பவம் குறித்து முத்துராமன் போலீசாரிடம், புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து முன்விரோத காரணமாக? துரை என்பவர் முத்துராமனின் வாகனங்களுக்கு தீ வைத்தாரா? அல்லது முத்துராமனிடம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக வேறு யாராவது மர்ம நபர்கள் வாகனங்களுக்கு தீ வைத்தனரா? என்ற பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

    மேலும், இந்த சம்பவம் தொடர்பாக அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
    • மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    ஒகேனக்கல்:

    கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து கடந்த ஒரு வாரமாக குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 700 கனஅடியாக வந்தது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்துள்ளது. இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி 1,500 கனஅடியாக அதிகரித்து வந்தது.

    மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • ஒகேனக்கல் மெயின் அருவியில் குறைந்த அளவே தண்ணீர் கொட்டி வருகிறது.
    • நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    தருமபுரி:

    கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து கடந்த ஒரு வாரமாக குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 700 கனஅடியாக வந்தது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை அளவு குறைந்தது. இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி 500 கனஅடியாக குறைந்து வந்தது.

    காவிரி ஆற்றில் மூழ்கி கிடந்த பாறைகள் வெளியே தெரிய ஆரம்பித்துள்ளன. பல்வேறு இடங்களில் பறந்து விரிந்த காவிரி ஆறு நீரின்றி கருங்கல் பாறைகளாகவும், சிறு, சிறு ஓடைகளாகவும் காட்சியளிக்கிறது. ஒகேனக்கல் மெயின் அருவியில் குறைந்த அளவே தண்ணீர் கொட்டி வருகிறது. ஐவர் பாணி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது.

    காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • ஒகேனக்கலுக்கு நீர்வரத்து கடந்த ஒரு வாரமாக குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
    • ஐவர் பாணி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது.

    ஒகேனக்கல்:

    கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கலுக்கு நீர்வரத்து கடந்த ஒரு வாரமாக குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 700 கனஅடி வந்தது. இன்றும் அதே அளவு தண்ணீர் நீடித்து வந்தது.

    காவிரி ஆற்றில் மூழ்கி கிடந்த பாறைகள் வெளியே தெரிய ஆரம்பித்துள்ளன. பல்வேறு இடங்களில் பறந்து விரிந்த காவிரி ஆறு நீரின்றி கருங்கல் பாறைகளாகவும், சிறு, சிறு ஓடைகளாகவும் காட்சியளிக்கிறது. ஒகேனக்கல் மெயின் அருவியில் குறைந்த அளவே தண்ணீர் கொட்டி வருகிறது. ஐவர் பாணி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது.

    காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • நீர்வரத்து குறைந்த போதிலும் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
    • சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.

    ஒகேனக்கல்:

    கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கலுக்கு நீர் வரத்து கடந்த ஒரு வாரமாக குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1000 கனஅடியாக வந்தது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை அளவு குறைந்தது. இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி 700 கனஅடியாக குறைந்து வந்தது.

    நீர்வரத்து குறைந்த போதிலும் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.

    காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • மகனை தேடிச் சென்ற அபிரகாம்கட்டாவும் அந்த மின்சார வேலியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    • காயமடைந்த பவித்திர சந்திரன் சிகிச்சைக்காக அரூர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த சிக்கலூரில் உள்ள கோழிப் பண்ணை உள்ளது. இந்த கோழி பண்ணையில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த உத்தம்கட்டா (வயது22), பவித்தரசந்திரன் (25) ஆகிய 2 பேரும் தங்கி வேலை பார்த்து வந்தனர்.

    இந்த நிலையில் இருவரும், நேற்றிரவு அரசு மதுபான கடைக்கு சென்று விட்டு, அருகில் உள்ள ரூபி என்பவரின் விவசாய நிலத்தின் வழியாக வந்தபோது, வயலில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் உத்தம்கட்டா தெரியாமல் சிக்கினார். அப்போது அவர் மீது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதனை தடுக்க முயன்ற பவித்திரசந்திரன் தூக்கி வீசப்பட்டு காயமடைந்தார்.

    இதுகுறித்து கோழிப்பண்ணைக்கு சென்று உத்தம்கட்டாவின் தந்தைக்கு அபிரகாம்கட்டா (45) என்பவருக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர்.

    அப்போது மகனை தேடிச் சென்ற அபிரகாம்கட்டாவும் அந்த மின்சார வேலியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த வருவாய் துறையினர் மற்றும் அரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    பின்னர் போலீசார் பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனை அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்த பவித்திரசந்திரன் சிகிச்சைக்காக அரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து அரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மின்சார வேலியில் சிக்கி வடமாநிலத்தை சேர்ந்த தந்தை-மகன் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×