என் மலர்
கடலூர்
- இறந்த நிமலேஷ் சகோதரர் விஷ்வேஸ் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
- நிமிலேஷ் உடல் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டபோது பொதுமக்கள், உறவினர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி கதறி அழுதனர்.
கடலூர்:
கடலூர் அடுத்த செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரெயில் மோதி விபத்தில் சாருமதி அவரது சகோதரர் செழியன் மற்றும் நிமலேஷ் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் இறந்த நிமலேஷ் சகோதரர் விஷ்வேஸ் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் மாணவன் விஷ்வேசுக்கு சிகிச்சை அளிப்பதை தொடர்ந்து நேற்று பெற்றோர்கள் இறந்த நிமிலேஷ் உடலை இன்று வாங்கிக் கொள்வதாக தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் காயமடைந்து சிகிச்சையில் இருந்த மாணவன் விஷ்வேஸ் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து நிமிலேஷ் உடல் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடல் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டபோது பொதுமக்கள், உறவினர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி கதறி அழுதனர்.
- ரெயில்வே கேட்டை மூடாமல் ஊழியர் தூங்கிவிட்டதால் வேன் தண்டவாளத்தை கடந்த போது விபத்து நிகழ்ந்துள்ளது.
- அதிகாரி விமல் தொலைபேசியில் அழைத்த நிலையில், கேட் கீப்பர் பங்கஜ் சர்மா உறங்கி விட்டதாக கூறப்படுகிறது.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரெயில்வே கேட்டை கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற தனியார் பள்ளி வேன் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விபத்திற்கு ரெயில்வே கேட்டை மூடாமல் ஊழியர் தூங்கிவிட்டதால் வேன் தண்டவாளத்தை கடந்த போது விபத்து நிகழ்ந்துள்ளது.
ஆனால் இதனை மறுத்த தென்னக ரெயில்வே, விபத்திற்கு வேன் ஓட்டுநரே காரணம் என்றும் வேன் ஓட்டுநரின் வற்புறுத்தலின் பேரிலேயே கேட் கீப்பர் கேட்டை திறந்ததாக கூறியது. இதற்கு வேன் டிரைவர் மறுப்பு தெரிவித்தார். அவர் கூறுகையில், கேட் கீப்பரை பார்க்கவில்லை. கேட் திறந்தே இருந்தது. ரெயில் வரும் ஒலிக்கூட கேட்கவில்லை என்று கூறினார்.
இந்த நிலையில், பயணிகள் ரெயில் கடக்கும் முன் தொலைபேசியில் அழைப்பு வந்தும் பங்கஜ் சர்மா பதிலளிக்கவில்லை என்று தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அதிகாரி விமல் தொலைபேசியில் அழைத்த நிலையில், கேட் கீப்பர் பங்கஜ் சர்மா உறங்கி விட்டதாக கூறப்படுகிறது.
- கேட் கீப்பரின் அலட்சியத்தால் தான் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக கூறி ஆத்திரமடைந்த பொதுமக்கள் கேட் கீப்பரை தாக்கினர்.
- ரெயில்வே விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் என தெற்கு ரெயில்வே அறிவுறுத்தியதாக ஆனந்த ராஜ் கூறியுள்ளார்.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற தனியார் பள்ளி வேன் மீது ரெயில் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரெயில்வே கேட்டை மூடாமல் ஊழியர் தூங்கிவிட்டதால் வேன் தண்டவாளத்தை கடந்த போது விபத்து நிகழ்ந்துள்ளது. கேட் கீப்பரின் அலட்சியத்தால் தான் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக கூறி ஆத்திரமடைந்த பொதுமக்கள் கேட் கீப்பரை தாக்கினர். மேலும் வடமாநிலத்தை சேர்ந்தவரை இங்கு பணியமர்த்தும் போது மொழி தெரியாததால் பிரச்சனை ஏற்படுவதாக மக்கள் குற்றம் சாட்டினர்.
இந்த நிலையில், செம்மங்குப்பம் ரெயில் கேட்டில் புதிய கேட் கீப்பராக ஆனந்தராஜ் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மத்திய பிரதேசத்தை சேர்ந்தவரை தமிழ்நாடில் நியமித்தது சர்ச்சையான நிலையில், தமிழர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ரெயில்வே விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் என தெற்கு ரெயில்வே அறிவுறுத்தியதாக ஆனந்த ராஜ் கூறியுள்ளார்.
- பங்கஜ் சர்மாவை பணிநீக்கம் செய்து தென்னவே ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டது.
- கைதான கேட் கீப்பர் பங்கஜ் சர்மா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே தனியார் பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை போலீசார் கைது செய்தனர்.
இதனிடையே, விபத்து தொடர்பாக பங்கஜ் சர்மாவை பணிநீக்கம் செய்து தென்னவே ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டது.
இந்த நிலையில், ரெயில்வே கேட்டை மூடாமல் அலட்சியமாக இருந்ததாக கைதான கேட் கீப்பர் பங்கஜ் சர்மா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை கைது செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பள்ளி வேனில் ஒரு உதவியாளர் இருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே தனியார் பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை கைது செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், உதவியாளர் இல்லாமல் பள்ளி வேன் இயக்கப்பட்டது எப்படி? என தனியார் பள்ளிக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
பள்ளி வேனில் ஒரு உதவியாளர் இருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவை மீறி உதவியாளர் இல்லாமல் பள்ளி வேன் இயக்கப்பட்டது எப்படி? என விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
- கடலூரில் பள்ளி வேன் மீது ரெயில் மோதி விபத்து ஏற்பட்டது.
- வேனில் இருந்து 5 பேரில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர்.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே கேட்டை கடக்க முயன்ற தனியார் பள்ளி வேன் மீது ரெயில் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதில் அக்கா, தம்பியான சாருமதி மற்றும் செழியன் ஆகியோர் உயிரிழந்தனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பேர் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கவனக்குறைவாக இருந்து கேட்கீப்பர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் விபத்தில் உயிரிழந்த அக்கா-தம்பி சாருமதி மற்றும் செழியன் உடல்களுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அஞ்சலி செலுத்தினார். பிள்ளைகளை இழந்து வாடும் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்து, முதலமைச்சர் அறிவித்த ரூ.5 லட்சம் உதவித் தொகையை வழங்கினார்.
- கேட் கீப்பரான வடமாநிலத்தை சேர்ந்த பங்கஜ் சர்மாவை போலீசார் கைது செய்தனர்.
- இருசக்கர வாகன ஓட்டிகள் அழுத்தம் கொடுத்ததால் கேட்டை திறந்துள்ளார்.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே கேட்டை கடக்க முயன்ற தனியார் பள்ளி வேன் மீது ரெயில் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தின் கேட் கீப்பரின் அலட்சியமே காரணம் என சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்கள் குற்றம்சாட்டி கேட் கீப்பர் மீது தாக்குதலும் நடத்தினர்.
இதனிடையே, ரெயில் விபத்துக்கு வேன் ஓட்டுநரே காரணம் என தென்னக ரெயில்வே குற்றம்சாட்டியது. கேட்டை மூட கீப்பர் முயன்றபோது, வேன் ஓட்டுநர் வேனை கேட்டை கடக்க அனுமதிக்க கோரியதாக தகவல் வெளியாகி உள்ளது. வேன் ஓட்டுநர் கோரியிருந்தாலும் கேட் கீப்பர் வாகனத்தை அனுமதித்திருக்க கூடாது என்று கூறிய தென்னக ரெயில்வே கேட் கீப்பரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. இதையடுத்து கேட் கீப்பரான வடமாநிலத்தை சேர்ந்த பங்கஜ் சர்மாவை போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து, ரெயில் விபத்து நிகழ்ந்த இடத்தை திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் அன்பழன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதன்பின் பேசிய அன்பழகன், காலை 7.10-க்கு ரெயில் வருவதை அறிந்து 7.06-க்கு கேட்டை, கேட் கீப்பர் மூடியுள்ளார். ரெயில் வருவதற்குள் கடந்து விடுகிறோம் என இருசக்கர வாகன ஓட்டிகள் அழுத்தம் கொடுத்ததால் கேட்டை திறந்துள்ளார். கேட் கீப்பர் செய்தது தவறு தான். அப்படி திறந்திருக்கக்கூடாது என்று கூறினார்.
இதற்கிடையே, கடலூர் கலெக்டர் மீது தெற்கு ரெயில்வே குற்றம் சாட்டியுள்ளது. செம்மங்குப்பம் பகுதியில் சுரங்க பாதை அமைக்க அனுமதி வழங்கப்பட்டது. சுரங்கப்பாதை அமைக்க ரெயில்வே தரப்பில் நிதி ஒதுக்கீடு செய்தும் கடந்த ஒரு வருமாக கலெக்டர் அனுமதி தரவில்லை என தெற்கு ரெயில்வே குற்றம் சாட்டியுள்ளது.
- கேட் திறந்திருந்தால் 1 கி.மீ முன்னதாக இருக்கும் சிக்னலில் சிவப்பு விளக்கு எரியும்.
- வேன் ஓட்டுநர் மீது எந்த தவறும் கிடையாது.
கடலூர்:
கடலூர் செம்மங்குப்பத்தில் இன்டர்லாக்கிங் அமைப்பு இல்லாததே விபத்துக்கு காரணம் என தகவல் வெளியாகி உள்ளது.
சிக்னலால் கட்டுப்படுத்தப்படும் ஒருங்கிணைந்த அமைப்பே இன்டர்லாக்கிங் எனப்படும். கேட் திறந்திருந்தால் 1 கி.மீ முன்னதாக இருக்கும் சிக்னலில் சிவப்பு விளக்கு எரியும். சிக்னலைப் பார்த்து ஓட்டுநர் ரெயிலை நிறுத்திவிடுவார் என்பதால் விபத்துகள் தவிர்க்கப்படும்.
செம்மங்குப்பம் கேட்டில் இன்டர்லாக்கிங் இல்லாததால் கேட் திறந்திருந்ததை ஓட்டுநரால் அறிய முடியவில்லை என்று கூறப்படுகிறது.
இதனிடையே, விபத்துக்குள்ளான பள்ளி வேனில் அடுத்த நிறுத்தத்தில் ஏற வேண்டிய பள்ளி மாணவன் ஆர்யா செய்தியாளர்களிடம் கூறுகையில், ரெயில் கேட் திறந்திருந்ததை பார்த்தேன். வேன் ஓட்டுநர் மீது எந்த தவறும் கிடையாது. கேட் கீப்பர் தான் உறங்கி விட்டார் என்று தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து ரெயில் விபத்துக்கு கேட் கீப்பரும், ரெயில்வேதுறையில் நிகழும் குறைபாடுகளுமே காரணம் என்று கருதப்படுகிறது.
- வேன் ஓட்டுநர் கேட்டை கடக்க அனுமதி கோரியதால் கேட் கீப்பர் வாகனத்தை அனுமதித்தாக தென்னக ரெயில்வே விளக்கம் அளித்து இருந்தது.
- விபத்து நிகழ்ந்த பின்னரும் ரெயில்வே கேட் கீப்பர் வெளியே வரவில்லை என்று கூறினார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற தனியார் பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்திற்கு கேட் கீப்பரின் அலட்சிமான நடவடிக்கையே காரணம் என கூறி பொதுமக்கள் கேட் கீப்பரை தாக்கினர். இதையடுத்து கேட் கீப்பரை பொதுமக்களிடம் இருந்து காப்பாற்றி அழைத்து சென்ற போலீசாரிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து, ரெயில் விபத்துக்கு வேன் ஓட்டுநர் தான் காரணம் என்றும் கேட் கீப்பர் கேட்டை மூட்டத் தொடங்கியது போது, வேன் ஓட்டுநர் கேட்டை கடக்க அனுமதி கோரியதால் கேட் கீப்பர் வாகனத்தை அனுமதித்தாக தென்னக ரெயில்வே விளக்கம் அளித்து இருந்தது.
இந்த நிலையில், விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஓட்டுநர் சங்கரிடம், ரெயில்வே கேட் கீப்பரிடம் நீங்கள் கூறியதால் தான் ரெயில்வே கேட்டை திறந்தேன் என தெரிவித்ததாக தெற்கு ரெயில்வே அதிகாரிகள் கூறிகின்றனர் என கேட்டதற்கு அவர் பேச முடியாத நிலையிலும் அழுது கொண்டு நான் எதுவும் கூறவில்லை என்று கூறினார்.
இதனை தொடர்ந்து படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மாணவரிடம் விபத்து குறித்து கேட்டதற்கு, கேட் திறந்தே இருந்ததால் தான் பள்ளி வேன் கிராஸ் செய்தது என்றும், ரெயில் ஒலியும் எழுப்பவில்லை என்றும் கூறினார். மேலும் கேட் கீப்பர் எங்கிருந்தார், என்ன செய்து கொண்டிருந்தார் என எதுவும் தெரியாது. விபத்து நிகழ்ந்த பின்னரும் ரெயில்வே கேட் கீப்பர் வெளியே வரவில்லை என்று கூறினார்.
- விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
- ஊரக பகுதியான செம்மங்குப்பத்தில் இண்டர் லாக்கிங் தொழில்நுட்பம் இல்லை எனக் கூறப்படுகிறது.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில் சிகிச்சைக்கு அழைத்துச்சென்றவர்களில் ஒரு மாணவியும் பலியானார்.
பலத்த காயமடைந்த 2 மாணவர்கள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டபோது மாணவன் ஒருவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் புதிய தகவல் வெளியாகி உள்ளது.
அதிகப்படியான ரெயில் போக்குவரத்து உள்ள பகுதியில் இண்டர் லாக்கிங் தொழில்நுட்பம் உள்ளது. இண்டர் லாக்கிங் முறையில் கேட் திறந்திருந்தால் சிவப்பு சிக்னல். மூடப்பட்டால் பச்சை சிக்னல் இருக்கும்.
ஊரக பகுதியான செம்மங்குப்பத்தில் இண்டர் லாக்கிங் தொழில்நுட்பம் இல்லை எனக் கூறப்படுகிறது.
இண்டர் லாக்கிங் இல்லாததால் கேட் திறக்கப்பட்டபோது சிவப்பு சிக்னல் விளக்கு எரியவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.
- வேன் இடிபாடுகளை அகற்றி உள்ளே சிக்கிஇருந்த மாணவர்களை மீட்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர்.
- வேன் டிரைவர் சங்கரும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
கடலூர்:
கடலூர் அருகே இன்று காலை பள்ளி வேன் மீது ரெயில் மோதிய சம்பவம் தமிழக மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்து உள்ளது. இன்று காலை 7.40 மணிக்கு நடந்த இந்த விபத்து பற்றிய தகவல்கள் வருமாறு:-
கடலூரில் பிரபலமான தனியார் பள்ளி ஒன்று உள்ளது. அந்த பள்ளியில் படிக்கும் கடலூர் சுற்றுப் பகுதி மாணவ-மாணவிகள் தனியார் வேன்கள் மூலம் அழைத்து வரப்படுவது வழக்கம்.
கடலூரில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செம்மங்குப்பம் பகுதியில் இருந்தும் மாணவர்களை ஏற்றிக் கொண்டு வேன்கள் அந்த பள்ளிக்கு வருவது உண்டு. இன்று காலை சங்கர் என்ற டிரைவர் தனது வேனில் செம்மங்குப்பத்தில் இருந்து 3 மாணவர்கள் மற்றும் ஒரு மாணவியை ஏற்றிக் கொண்டு வந்தார்.
அருகில் உள்ள மற்ற பகுதிகளுக்கு சென்று மாணவ-மாணவிகளை ஏற்றிக் கொண்டு பள்ளிக்கு செல்ல வேண்டும் என்பதால் வேகவேகமாக சென்று கொண்டு இருந்தார். காலை 7.40 மணிக்கு அவரது வேன் செம்மங்குப்பம் ரெயில்வே தண்டவாளத்தை கடக்கும் பகுதிக்கு வந்தது.
அப்போது ரெயில்வே கேட் திறந்து இருந்ததாக தெரிகிறது. இதனால் டிரைவர் சங்கர் வேனை தண்டவாளத்தை கடந்து செல்ல ஓட்டினார். ஆனால் அந்த சமயத்தில் விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறைக்கு செல்லும் பயணிகள் ரெயில் மின்னல் வேகத்தில் வந்தது. ரெயில் வந்த சத்தம் கேட்காத நிலையில் தண்டவாளத்தின் மத்திய பகுதி வரை சென்று விட்ட டிரைவர் சங்கர் இதை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தார்.
வேனை ஓட்டி சென்று விடலாம் என்று வேகமாக ஓட்டினார். ஆனால் அடுத்த ஓரிரு நிமிடங்களில் அந்த பயணிகள் ரெயில் வேன் மீது பயங்கரமாக மோதியது. இதில் வேன் நிலைகுலைந்து என்ஜின் பகுதியில் சிக்கிக் கொண்டது.
வேன் மீது ரெயில் மோதிய சத்தம் அந்த பகுதி முழுக்க கேட்டது.
மோதிய வேகத்தில் வேனை ரெயில் இழுத்து சென்றது. சுமார் 50 மீட்டர் தூரம் பள்ளி வேன் இழுத்து செல்லப்பட்டதால் அது நொறுங்கி தகர்ந்தது. வேனுக்குள் இருந்த 3 மாணவர்களும், ஒரு மாணவியும் அலறினார்கள். ஆனால் அடுத்த சில நிமிடங்களில் வேன் இடிபாடுகளுக்குள் சிக்கி அவர்கள் ரத்த வெள்ளத்தில் மிதந்தனர்.
இதை கண்டதும் பயணிகள் ரெயிலை டிரைவர் நிறுத்தினார். அப்போது அந்த வேன் தண்டவாளம் ஓரத்தில் நொறுங்கி அப்பளமாக சிதறியது. சத்தம் கேட்டு அந்த பகுதியில் உள்ள மக்கள் பதட்டத்துடன் சம்பவ இடத்துக்கு ஓடி வந்தனர்.
வேன் இடிபாடுகளை அகற்றி உள்ளே சிக்கிஇருந்த மாணவர்களை மீட்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர். அப்போதுதான் தண்டவாளத்தில் ஒரு மாணவரின் உடல் சிதறி கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடல் சிதறி பலியான அந்த மாணவரின் பெயர் நிவாஸ். இவன் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.
வேனுக்குள் சிக்கி இருந்த மாணவர்களை மீட்டபோது சாருமதி என்ற மாணவி உடல் நசுங்கி பலியாகி இருப்பது தெரிந்தது. இவர் 11-ம் வகுப்பு படித்து வந்தார். உடனடியாக மாணவன் நிவாஸ் உடலும், மாணவி சாருமதி உடலும் கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

வேன் டிரைவர் சங்கர்
செழியன் (வயது15), விஸ்வேஸ் (16) என்ற 2 மாணவர்களும் படுகாயங்களுடன் வேனுக்குள் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். அவர்கள் 2 பேரும் மீட்கப்பட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்கிடையே வேன் டிரைவர் சங்கரும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இவர் கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியை சேர்ந்தவர். தினமும் காலை நேரம் வேனில் கடலூர் சுற்றுப் பகுதிக்கு சென்று மாணவ-மாணவிகளை அழைத்து வருவதை வழக்கமாக வைத்திருந்தார். இன்று காலை அவரது வேன் விபத்தில் சிக்கி நொறுங்கி போனது.
இதற்கிடையே கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த மாணவர் செழியன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் பள்ளி வேன் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.

கதறி அழும் பெற்றோர்
உயிரிழந்த செழியன் மாணவி சாருமதியின் சகோதரர் ஆவார். ஒரே குடும்பத்தில் அக்காவும், தம்பியும் பலியானது மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மற்றும் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். விபத்துக்கான காரணங்களை கேட்டறிந்தனர்.
முதல் கட்ட விசாரணையில் ரெயில்வே கேட் கீப்பர் தூங்கி விட்டதால் கேட்டை மூடவில்லை என்று தெரிகிறது. கேட் மூடாததால் பள்ளி வேன் டிரைவர் தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்ததும் தெரிய வந்துள்ளது.
ஆனால் இதை தெற்கு ரெயில்வே மறுத்துள்ளது. ரெயில்வே கேட் மூடப்பட்டதாகவும், பள்ளி வேன் டிரைவர் சங்கர் கேட்டுக்கொண்டதால் ரெயில்வே கேட்டை ஊழியர் திறந்ததாகவும் அதனால் தான் விபத்து ஏற்பட்டு இருக்கிறது என்றும் தென்னக ரெயில்வே கூறி உள்ளது.
- சிகிச்சைக்கு அழைத்துச்சென்றவர்களில் ஒரு மாணவி பலியானார்.
- ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மாணவன் ஒருவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில் சிகிச்சைக்கு அழைத்துச்சென்றவர்களில் ஒரு மாணவியும் பலியானார். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
பலத்த காயமடைந்த 2 மாணவர்கள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டனர். இதில் ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மாணவன் ஒருவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
பணியில் அலட்சியமாக இருந்ததாகக்கூறி கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை பணியிடை நீக்கம் செய்து ரெயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த நிலையில் பள்ளி வேன் மீது ரெயில் மோதுவதற்கு காரணமாக இருந்த ரெயில்வே கேட் கீப்பர் பங்கஜ் சர்மா கைது செய்யப்பட்டுள்ளார்.
பங்கஜ் சர்மாவிடம் ரெயில்வே போலீசாரும், உள்ளூர் போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






