என் மலர்tooltip icon

    கடலூர்

    • துப்புரவு ஊழியர் லலிதா திடீரென்று நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
    • துப்புரவு ஊழியர்கள் சாலையில் விழுந்து கதறி அழுதனர்.

    கடலூர்:

    கடலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பாதிரிக்குப்பம் ஊராட்சி செயல்பட்டு வருகின்றது. இங்கு 50-க்கும் மேற்பட்ட துப்புரவு ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் ஊராட்சியில் பணிபுரிந்து வந்த துப்புரவு ஊழியர் லலிதா திடீரென்று நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில் இறந்த லலிதா குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கூறி 40-க்கும் மேற்பட்ட துப்புரவு பெண் ஊழியர்கள் இன்று காலை கடலூர் பாதிரிக்குப்பம் ஊராட்சி அலுவலகத்திற்கு திரண்டனர். பின்னர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அங்கிருந்த துப்புரவு ஊழியர்கள் சாலையில் விழுந்து கதறி அழுதனர்.

    மேலும் எங்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் பணி பாதுகாப்பு, உயிர் பாதுகாப்பு ஏற்படுத்தி தர கோரி சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களும் எழுப்பினர். இத்தகவல் அறிந்த கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு ஊழியர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதன் காரணமாக ஊராட்சி பகுதியில் குப்பைகள் அகற்றாததால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயமும் ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    பணி செய்யும் போது சூப்பர்வைசர் 4 பேருக்கும் அதிகமாக வேலை வாங்கியதாகவும் இதனால் ஆத்திரத்தில் இந்த 4 பேரும் சூப்பர்வைசர் சஞ்சய் குமாரை தாக்கியதை ஒப்புக்கொண்டனர்.

    கடலூர்:

    பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய் குமார் (வயது 43) அதே மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய் சிங் (32)இவர்கள் 2 பேரும் கடலூர் முதுநகர் குடிகாட்டில் உள்ள தனியார் ரசாயன தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தனர். இந்த தொழிற்சாலையில் சஞ்சய் குமார் சூப்பர்வைசராக பணிபுரிந்து வந்தார்.நேற்று இரவு 2 பேரும் வேலை முடிந்து சக தொழிலாளர்களுடன் தொழிற்சாலையில் இருந்து வெளியே வந்தனர். அப்போது தொழிற்சாலை பகுதியில் பதுங்கி இருந்த மர்மகும்பல் திடீரென கட்டையால் சஞ்சய் குமார், சஞ்சய் சிங் ஆகியாரை சரமாரியாக தாக்கியது. இதில் இருவரும் பலத்த காயங்களுடன் விழுந்தனர்.இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அருகில் இருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சஞ்சய் குமாரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். பின்னர் சஞ்சய் சிங்கிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து கடலூர் முதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.விசாரணையில் இறந்த சஞ்சய் குமாருக்கும் அதே தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் 4 பேர் கும்பலுக்கும் ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்ததாக தெரிந்தது. இதனை அடுத்து போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளின் அடிப்படையில் 4 பேர் கும்பலை தேடி வந்தனர்.

    இந்நிலையில் அவர்கள் காரைக்காடு பகுதியில் உள்ள வீட்டில் உள்ள அறை ஒன்றில் பதுங்கி இருந்தது தெரிய வந்தது. உடனே போலீசார் அங்கு சென்று அந்த 4 பேரையும் மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களிடம் விசாரணை செய்தனர்.விசாரணையில் அவர்கள் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராஜேந்திர சவுத்ரி, ரவீந்தர் சவுத்ரி, சுனில் குமார், சோனு குமார் என்பது தெரியவந்தது. ரசாயன தொழிற்சாலையில் பணி செய்யும் போது சூப்பர்வைசர் சஞ்சய் குமார் இந்த 4 பேருக்கும் அதிகமாக வேலை வாங்கியதாகவும் இதனால் ஆத்திரத்தில் இந்த 4 பேரும் சூப்பர்வைசர் சஞ்சய் குமாரை தாக்கியதை ஒப்புக்கொண்டனர். இதனால் சஞ்சய் குமார் இறந்தது தெரியவந்தது. உடனே போலீசார் அந்த 4 பேரையும் கைது செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    விருத்தாசலம் வள்ளாலார் தெருவைச் சேர்ந்தவர் ஷகிம் மனைவி சிவரஞ்சனி(29). இவர் கடந்த சில தினங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று மீண்டும் சிவரஞ்சினிக்கு வயிற்றுவலி வந்துள்ளது.

    அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற விருத்தாசலம் போலீசார், சிவரஞ்சினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆங்கில புத்தாண்டு பிறப்பினை கொண்டாடும் விதமாக குடித்து விட்டு முழு போதையில் 3 வாலிபர்கள் நள்ளிரவு 3 மணிக்கு பஸ்சின் அருகில் வந்தனர்.
    • பக்கவாட்டில் நின்ற 3 பேரும் பஸ்சினை தட்டினர்.

    கடலூர்:

    விருத்தாசலத்திலிருந்து பண்ருட்டி அருகே முத்தாண்டிக்குப்பத்திற்கு தடம் எண்.12-ல் அரசு பஸ் இயக்கப்படுகிறது. இரவு நேரங்களில் பேர்பெரியான்குப்பம் அனந்தீஸ்வரன் கோவில் அருகே பஸ்சினை நிறுத்திவிட்டு காலையில் விருத்தாசலத்திற்கு இந்த பஸ் இயக்கப்படும்.

    அதுபோல கடந்த 31-ந் தேதி இரவு இந்த பஸ்சினை நிறுத்திவிட்டு டிரைவர் முருகன் (வயது 46), கண்டக்டர் எம்பெருமான் 2 பேரும் ஓய்வு எடுத்தனர். ஆங்கில புத்தாண்டு பிறப்பினை கொண்டாடும் விதமாக குடித்து விட்டு முழு போதையில் 3 வாலிபர்கள் நள்ளிரவு 3 மணிக்கு பஸ்சின் அருகில் வந்தனர். பக்கவாட்டில் நின்ற 3 பேரும் பஸ்சினை தட்டினர். பஸ்சினுள் இருந்து இறங்கி வந்த டிரைவர் முருகன், எதற்காக பஸ்சினை தட்டுகிறீர்கள் என்று போதை வாலிபர்களிடம் கேட்டுள்ளார்.ஆத்திரமடைந்த போதை வாலிபர்கள் 3 பேரும் டிரைவர் முருகனை தாக்கிவிட்டு, பஸ்சின் பக்கவாட்டில் உள்ள கண்ணாடியை உடைத்து விட்டு தப்பிவிடுகின்றனர்.இதில் பலத்த காயமடைந்த டிரைவர் முருகன் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது தொடர்பான புகாரின் பேரில் முத்தாண்டிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் மானடிக்குப்பம் ராஜதுரை (வயது 24), முத்தாண்டிக்குப்பம் பிரவின் குமார் (23), வீரசிங்ககுப்பம் செல்வமணி (23) ஆகியோர் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க பண்ருட்டிக் கு அழைத்து வந்தனர். அப்போது பிரவின்குமார் என்ற வாலிபர் தப்பி ஓடிவிட்டார்.

    இதையடுத்து பண்ருட்டி உதவி போலீஸ் சுப்பிரண்டு சபியுல்லா, முத்தாண்டி க்குப்பம் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன் தலைமையில் தனிப்படை அமைத்து தப்பி ஒடிய வாலிபரை தேடி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிளில் திருச்சி அருகே நடக்கும் கபடி விளையாட்டு போட்டிக்கு நேற்று சென்றனர்.
    • டி.பளூர் பகுதி அருகே மோட்டார் சைக்கிள் வந்தபோது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி சாலையில் விபத்துக்குள்ளானது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே ம.கொளக்குடி ஊராட்சிக்குட்பட்ட பூராசாமி மகன் சரத்குமார் (வயது 23). ஐ.டி.ஐ. படித்து விட்டு வேலை தேடி வந்தார். சரத்குமார் முன்னதாகவே கபடி விளையாட்டு வீரர்.இந்நிலையில் சரத்குமாரும், அதே பகுதியைச் சேர்ந்த கதிரவன் (20) மணிமாறன் (20)என்பவருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் திருச்சி அருகே நடக்கும் கபடி விளையாட்டு போட்டிக்கு நேற்று சென்றனர்.

    அப்போது டி.பளூர் பகுதி அருகே மோட்டார் சைக்கிள் வந்தபோது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி சாலையில் விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து சரத்குமாரும், கதிரவன், மணிமாறனும் சாலையில் விழுந்து படுகாயம் அடைந்தனர்.இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்டு அருகில் இருந்த ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சரத்குமாரை பரிசோதித்த டாக்டர் இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    மேலும் விபத்தில் கால் முறிவு ஏற்பட்ட கதிரவன் மணிமாறனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த திருச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.மேலும் விபத்தில் இறந்த சரத்குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்சி போலீசார் காட்டுமன்னார்கோவில் போலீசார் இடம் ஒப்ப டைத்தனர். இதனையடுத்து காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகாலை 2.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் மற்றும் மார்கழி மாத சிறப்பு பூஜை நடைபெற்றது.
    • 8-ந் தேதி தைலக்காப்பு உற்சவம் தொடங்குகிறது.

    கடலூரை அடுத்த திருவந்திபுரத்தில் தேவநாத சாமி கோவில் உள்ளது. 108 வைணவ தளங்களில் பிரசித்தி பெற்ற இக்கோவிலில் ஆண்டு தோறும் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி கடந்த 23 ந்தேதி பகல்பத்து உற்சவத்துடன் தொடங்கியது.

    நேற்று 1-ந் தேதி பகல்பத்து உற்சவம் முடிவடைந்தது. இன்று 2-ந் தேதி (திங்கட்கிழமை) வைகுண்ட ஏகாதசி நாளையொட்டி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து சொர்க்கவாசல் (பரமபத வாசல்) முன்பு மலர்களாலும் வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டது. இதைமுன்னிட்டு அதிகாலை 2.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் மற்றும் மார்கழி மாத சிறப்பு பூஜை நடைபெற்றது. அதைதொடர்ந்து முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு காலை 5.30 மணிக்கு நடைபெற்றது.

    இதன் பின்னர் ஸ்ரீதேவி பூதேவியுடன் தேவநாதசாமி சிறப்பு அலங்காரத்தில் சொர்க்கவாசல் (பரமபத வாசல்) வழியாக எழுந்தருளினார். அப்போது தேசிகர் எதிர்சேவை நடைபெற்றது. அதிகாலை 2 மணி முதல் திரளாக திரண்டிருந்த பக்தர்கள் "கோவிந்தா கோவிந்தா" என பக்தி கோஷங்களை எழுப்பி தேவநாதசுவாமியை தரிசித்தனர்.

    பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் பாதுகாப்புக்காக, இன்ஸ் பெக்டர் வனிதா தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

    இதனை தொடர்ந்து தேவநாதசாமி வெளிப் பிரகாரம் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனைத் தொடர்ந்து மூலவரை தரிசிக்க பொதுமக்களை அனுமதித்தனர்.

    பின்னர் ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று பயபக்தியுடன் சாமி கும்பிட்டு சென்றனர்.

    இதனைத் தொடர்ந்து இன்று இரவு முதல் ராப்பத்து உற்சவம் வெகு விமர்சையாக தொடங்க உள்ளது. மேலும் ஜனவரி 8-ந் தேதி தைலக்காப்பு உற்சவம் தொடங்குகிறது. விழாவிற்கான ஏற்பாடு களை கோவில் நிர்வாகத்தி னர் செய்து வருகின்றனர்.

    • அனந்தீஸ்வரன் கோவில் அருகே பஸ்சினை நிறுத்திவிட்டு காலையில் விருத்தாசலத்திற்கு இந்த பஸ் இயக்கப்படும்.
    • அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர்.

    கடலூர்:

    விருத்தாசலத்திலிருந்து பண்ருட்டி அருகே முத்தாண்டிக்குப்பத்திற்கு தடம் எண்.12-ல் அரசு பஸ் இயக்கப்படுகிறது. இரவு நேரங்களில் பேர்பெரியான்குப்பம் அனந்தீஸ்வரன் கோவில் அருகே பஸ்சினை நிறுத்திவிட்டு காலையில் விருத்தாசலத்திற்கு இந்த பஸ் இயக்கப்படும். அதுபோல நேற்று இரவு இந்த பஸ்சினை நிறுத்திவிட்டு டிரைவர் முருகன் (வயது 46), கண்டக்டர் எம்பெருமான் 2 பேரும் ஓய்வு எடுத்தனர். ஆங்கில புத்தாண்டு பிறப்பினை கொண்டாடும் விதமாக குடித்து விட்டு முழு போதையில் 3 வாலிபர்கள் நள்ளிரவு 3 மணிக்கு பஸ்சின் அருகில் வந்தனர். பக்கவாட்டில் நின்ற 3 பேரும் பஸ்சினை தட்டினர். பஸ்சினுள் இருந்து இறங்கி வந்த டிரைவர் முருகன், எதற்காக பஸ்சினை தட்டுகிறீர்கள் என்று போதை வாலிபர்களிடம் கேட்டுள்ளார்.

    ஆத்திரமடைந்த போதை வாலிபர்கள் 3 பேரும் டிரைவர் முருகனை தாக்கிவிட்டு, பஸ்சின் பக்கவாட்டில் உள்ள கண்ணாடியை உடைத்துவிட்டு தப்பிவிடுகின்றனர். இதில் பலத்த காயமடைந்த டிரைவர் முருகன் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பான புகாரின் பேரில் முத்தாண்டிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் மானடிக்குப்பம் ராஜதுரை (வயது 24), முத்தாண்டிக்குப்பம் பிரவின் குமார் (23), வீரசிங்ககுப்பம் செல்வமணி (23) ஆகியோர் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஏழுமலைக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று நள்ளிரவு பரிதாபமாக உயிரிழந்தார்
    • போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    கடலூர் அருேக காரைக்காடு சேர்ந்தவர் ஏழுமலை (வயது 51). இவர் கடலூர் சிப்காட்டில் உள்ள தனியார் பெயிண்ட் கம்பெனியில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வந்தார். கடந்த 28-ந் தேதி வழக்கம் போல் ஏழுமலை வேலைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டிற்கு வந்த ஏழுமலை திடீரென்று மயங்கி கீழே விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக ஏழுமலை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கும், சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் ஏழுமலைக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று நள்ளிரவு பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை இறந்த ஏழுமலை உடலை ஆம்புலன்ஸ் மூலமாக கடலூர் சிப்காட் வளாகத்திலுள்ள தனியார் பெயிண்ட் கம்பெனி முன்பு கொண்டு வந்தனர். பின்னர் ஆம்புலன்சில் உடலுடன் உறவினர்கள் கடலூர் - சிதம்பரம் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்தகவல் அறிந்த கடலூர் முதுநகர் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது உங்கள் புகார் தொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் அளியுங்கள். அதன்படி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆகையால் உங்கள் போராட்டத்தை கைவிட்டு உடலை கடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • இன்று அதிகாலையில், எதிர்பாராத விதமாக நிலைத் தடுமாறிதலைக் குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    • லாரியை பள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் ஓட்டி வந்தார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை அருகே உள்ள பள்ளிப்பட்டு கிராமத்தில் இருந்து பைபாஸ் சாலை பிரியும் இடத்தில்,சிமெண்ட் சாம்பல் ஏற்றிச் செல்லும் டேங்கர் லாரி ஒன்று, இன்று அதிகாலையில், எதிர்பாராத விதமாக நிலைத் தடுமாறிதலைக் குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தால், மங்கலம்பேட்டை- விருத்தாசலம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்துக்குள்ளான லாரியை பள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் ஓட்டி வந்தார். இந்த சம்பவம் குறித்து மங்கலம்பேட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    • விருத்தாசலத்தில் பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • அதன் பேரில் ஊழியர் ஜெயராஜ், மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போட்டுள்ளார்.

    கடலூர்:

    விருத்தாசலம் காட்டுகூடலூர் சாலை, அண்ணா நகர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில், நேற்று இரவு ஜெயராஜ் (மாற்றுத்திறனாளி) மற்றும் ஊழியர்கள் பணியில் இருந்தனர். அப்போது நள்ளிரவு 2 மணியளவில் அங்கு வந்த திரு.வி.க. நகரை சேர்ந்த சித்திக் (வயது 24), அமீர் (23), வசந்த் (23) ஆகிய 3 பேர் மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் பங்கிற்கு வந்தனர். 50 ரூபாய்க்கு பெட்ரோல் போட சொன்னதாகவும்,போ ன்பேயில் 200 ரூபாய் அனுப்புகிறேன், பெட்ரோல் போட்டது போக மீதி 150 ரூபாயை பணமாக திருப்பி தாருங்கள் என்று பெட்ரோல் பங்க் ஊழியரிடம் கூறியுள்ளனர். அதன் பேரில் ஊழியர் ஜெயராஜ், மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போட்டுள்ளார்.

    ஆனால் பெட்ரோல் பங்கின் கணக்கிற்கு 200 ரூபாய் பணம் வரவில்லை. இதனால் மோட்டார் சைக்கிளில் வந்த அந்த இரண்டு நபர்களும்,அங்கு காத்திருந்தனர், சிறிது நேரத்தில் பெட்ரோல் பங்க் ஊழியர் ஜெயராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அடித்துள்ளனர், அப்போது வலி தாங்க முடியாமல் மாற்றுத்திறனாளியான பெட்ரோல் பங்க் ஊழியர் ஜெயராஜ், தன்னை தாக்கிய நபர்களின் கையைப் பிடித்து கடித்துள்ளார். அங்கு வந்த மற்றொரு பெட்ரோல் பங்க் ஊழியர் அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளார் .அதன்பிறகு,அங்கிருந்து சென்ற இரண்டு நபர்களும், மற்றொரு நபரை அழைத்து வந்து, பெட்ரோல் பங்க் அறையில் படுத்து இருந்த ஜெயராஜை அடித்து தாக்கியுள்ளனர். அங்கிருந்த மற்றொரு பெட்ரோல் பங்க் ஊழியரையும் கட்டைக் குச்சியால் தாக்கி விட்டு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளனர். பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட சென்ற பொழுது ,சண்டை ஏற்பட்டு, பெட்ரோல் பங்க் ஊழியர் கையைப் பிடித்து கடித்து விட்டதாக அங்கிருந்த போலீசாரிடம் கூறியுள்ளனர். அதன்பிறகு, காயம் அடைந்த பெட்ரோல் பங்க் ஊழியர் ஜெயராஜ் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று, நடந்த சம்பவங்களை போலீசாரிடம் கூறியதன் பேரில் ஆஸ்பத்திரியில் இருந்த 3 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும், இது தொடர்பான சி.சி.டி.வி. விடியோ விருத்தாசலம் பகுதியில் வைரலாக பரவி வருகிறது.

    • அப்போது அங்கு இருந்த 4 இளம் வாலிபர்கள் திடீரென்று ஜோதி மணியை வழிமறித்தனர்.
    • வழுதலம்பட்டு காலனி சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே வடலூர் பார்வதிபுரம் சேர்ந்தவர் ஜோதிமணி (வயது 37). இவர் நேற்று வழுதலம்பட்டு செந்தாமரை வாய்க்கால் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு இருந்த 4 இளம் வாலிபர்கள் திடீரென்று ஜோதி மணியை வழிமறித்தனர். பின்னர் ஜோதி மணியை தாக்கி மிரட்டி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ஏடிஎம் கார்டு, ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை பறித்து தப்பித்து சென்றனர். இதில் காயமடைந்த ஜோதிமணி கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

    இது குறித்து ஜோதிமணி குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தனர். இதில் திருப்பூர் மாவட்டம் பாண்டியன் நகர் சேர்ந்த சுரேஷ் ராகுல் (வயது 19), நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சேர்ந்த 18 வயது சிறுவன், திருப்பூர் மாவட்டம் சேர்ந்த 15 வயது சிறுவன், குறிஞ்சிப்பாடி வழுதலம்பட்டு காலனி சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

    • சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் அதே வேனில் சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தனர்.
    • 108 ஆம்புலன்ஸ் மூலம் மற்றும் ஆட்டோ மூல மும் திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கீழ்ச்செருவாய் கிராமத்தைச் சேர்ந்த 19 பேர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு மாலை அணிவித்து ஒரு வேனில் சென்றனர். நேற்று சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் அதே வேனில் சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். வேனை வதிஷ்டபுறம் கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித் என்பவர் ஓட்டி வந்தார். திட்டக்குடியை அடுத்துள்ள தி.இளமங்கலம் அருகே வந்து கொண்டிருக்கும்போது திடீரென ஓட்டுநர் கட்டுப் பாட்டை இழந்த வேன் சாலை ஓரம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 2 குழந்தை கள் உட்பட 19 பேரும் வேனில்சிக்கினர். சாலையில் சென்றவர்களும் அருகில் இருந்த வர்களும் ஓடி வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மற்றும் ஆட்டோ மூல மும் திட்டக்குடி அரசு மருத்து வமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதில் படுகாயம் அடைந்த ஜெயந்தி (40), ஐஸ்வர்யா (16) காயத்ரி (24) முத்து (45), வீரம்மாள் (40), மகேஸ்வரி (28), சரிதா (32), பரமேஸ்வரி (22) ஆகியோருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் ஜெயந்தி, காயத்ரி, வீரம்மாள், மகேஸ்வரி, சரிதா உட்பட 5 பெண்கள் மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவ மனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்து அப்பகுதி கிராமத் தைச் சேர்ந்த பொது மக்கள் ஏராளமா னோர் மருத்துவ மனையில் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    ×