என் மலர்
கடலூர்
- நேற்று மாலை பூசாரி பூஜை முடித்து கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார்.
- பொதுமக்கள் அவர்களை துரத்தி பிடிக்க முயன்றபோது, அவர்கள் தப்பிச் சென்றனர்.
கடலுார்:
கடலுார் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த செம்பேரி பகுதியில் வீரனார் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று மாலை பூசாரி பூஜை முடித்து கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். இதனையடுத்து இரவில் கோவில் வளாகத்தின் பின்புறம் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் சென்று பார்த்தபோது, மர்ம நபர்கள் கோவில் உண்டியல் உடைப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பொதுமக்கள் அவர்களை துரத்தி பிடிக்க முயன்றபோது, அவர்கள் தப்பிச் சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த பெண்ணாடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கோவில் உண்டியலை உடைத்து திருடிச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இது அந்த பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
- கிருஷ்ணமூர்த்தி தினசரி இரவு நேரத்தில் வழக்கம்ேபால் வீட்டுமுன்பு தூங்குவார்.
- தனது வீட்டின் அருகே ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
கடலூர்:
கடலூர் முதுநகர் போலீஸ் சரகம் ஈச்சங்காடு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 26). கூலி தொழிலாளி. இவர் தினசரி இரவு நேரத்தில் வழக்கம்ேபால் வீட்டுமுன்பு தூங்குவார். அதன்படி நேற்று இரவு வீட்டுக்கு வெளியே கிருஷ்ண மூர்த்தி தூங்கினார். இன்று காலை கிருஷ்ணமூர்த்தி தனது வீட்டின் அருகே ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதனை அந்த வழி யாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது. இதனால் ஏராள மானோர் திரண்டனர். இதுபற்றி கடலூர் முதுநகர் போலீசாருக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்த கிருஷ்ண மூர்த்தியின் கழுத்து அறுக்கப்பட்டிருந்தது. இவரை மர்மநபர்கள் கத்தி யால் கழுத்தில் வெட்டி கொலை செய்துள்ளனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆற்றில் வாலிபர் ஒருவர் கொன்று புதைக்கப்பட்ட வழக்கில் கிருஷ்ணமூர்த்தி சம்மந்தப் பட்டுள்ளது தெரியவந்தது. எனவே பழிக்குபழியாக கிருஷ்ணமூர்த்தி கொலை செய்யப்பட்டாரா? அவரை கொலை செய்த மர்மநபர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தடயவியல் நிபுணர்கள் விரைந்து சென்று கொலை யாளிகளின் ரேகைகளை பதிந்து தீவிரமாக துப்புதுலக்கி வருகிறார்கள். அந்த பகுதியில் பதட்டம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
- இருவரும் தனிமையில் உல்லா சமாக இருந்ததால், தற்போது சிறுமி கர்ப்பம் அடைந்து ள்ளார்.
- குழந்தைகள் நல அலு வலர்கள் மூலம் சிறுமி மீட்கப்பட்டார்.
கடலுார்:
கடலுார், திரு வந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுவன். இவரு க்கும், 14 வயது சிறுமி க்கும் பள்ளியில் படிக்கும்போது பழக்கம் ஏற்பட்டது. தற்போது இருவருமே பாதியில் படிப்பை நிறுத்திவிட்டனர். பின்னர் இருவரும் தனிமையில் உல்லா சமாக இருந்ததால், தற்போது சிறுமி கர்ப்பம் அடைந்து ள்ளார். இதுகுறித்து சிறுமியின் உறவி னர்கள் குழந்தைகள் நல அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில், குழந்தைகள் நல அலு வலர்கள் மூலம் சிறுமி மீட்கப்பட்டு, கடலுார் திருப்பாதிரிப்புலியூர் போலீசில் புகார் அளிக்க ப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து, 16 வயது சிறுவனை 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர்.
- கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்று வருகின்றது.
- கோரிக்கை மனுவும் அவர்கள் வைத்திருந்த பையில் மண்எண்ணை கேன் இருந்தது.
கடலூர்:
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்று வருகின்றது. அதன்படி இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை கொண்டு வந்து அதிகாரியிடம் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர். இந்த நிலையில் புவனகிரியை சேர்ந்த சசிகலா தனது தாய் அஞ்சம்மாள் (வயது67) ஆகியோருடன் கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் வந்தார்.
அப்பொழுது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை சோதனை செய்தபோது கோரிக்கை மனுவும் அவர்கள் வைத்திருந்த பையில் மண்எண்ணை கேன் இருந்தது. இதனைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்த மண்எண்ணை கேனை போலீசார் பறிமுதல் செய்தனர் பின்னர் அவர்களிடம் இருந்த கோரிக்கை மனுவில், எனது மகள் ராதிகா பிரியா என்பவருக்கும், சதீஷ்குமார் என்பவருக்கும் திருமணம் நடைபெற்று வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் ராதிகாப்பிரியா கடந்த10.2.2022 அன்று இறந்து விட்டதால் மேற்படி இறப்பு தொடர்பாக அண்ணாமலை நகர் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெற்று வருகிறதுசதீஷ்குமார் என்பவரிடம் இருந்து தனது மகளுடைய நகை, பொருட்கள் அனைத்தையும் பெற்று தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து அங்கிருந்து போலீசார் உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக உரிய முறையில் அதிகாரிகளை நேரில் சந்தித்து மனு அளித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இது போன்ற நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது என அறிவுரை கூறி மனு அளிக்க அனுமதித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.
- தொழிற்சாலைகளிலும் தமிழக இளைஞர்கள் வேலை பார்த்து வந்தனர்.
- ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் கடலூர் மாவட்டத் துக்கு வந்துள்ளனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் இயற்கை வளம் மிகுந்த பகுதியாகும். இங்கு ஆண்டு தோறும் பருவகாலங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. எனவேதான் இங்கு ஏராளமான விளை நிலங்கள் உள்ளது. இது தவிர பண்ருட்டி நகரம் பலாப்பழம், முந்திரிக்கு புகழ்பெற்றது. எனவே தான் ஏராளமான பலாப்பழ மண்டிகள், முந்திரி தொழிற்சாலைகள் உள்ளது. இங்கு தமிழகத்தை சேர்ந்த ஏராளமான தொழி லாளர்கள் வேலைபார்த்து வந்தனர். இதுபோக கடலூர் நகரின் தெற்கு பகுதியில் குடிகாடு, காரைக்காடு பகுதியில் சிப்காட் தொழிற் சாலை உள்ளது. இங்கிருந்து பல்வேறு பொருட்கள் உற்பத்தியாகி வெளி மாநி லங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
எனவே இந்த தொழிற் சாலைகளிலும் தமிழக இளைஞர்கள் வேலை பார்த்து வந்தனர். ஆனால் நாளடைவில் முந்திரி, பலாப்பழ மண்டி, சிப்காட் தொழிற்சாலைகளை வடமாநில வாலிபர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இங்கு உள்ள அனைத்து கம்பெனிகளும் வடமாநில இளைஞர்களே வேலை பார்த்து வருகிறா ர்கள். இவர்கள் குறைந்த சம்ப ளத்தில் அதிகநேரம் வேலை பார்ப்பதால் கம்பெனி உரி மையாளர்களும் வடமாநில தொழிலாளர்களை வரவேற்கின்றனர்.
இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தை சேர்ந்த தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். உதாரண மாக தமிழக வாலிபர்கள் கூடுதல் சம்பளம், குறைந்த நேரத்தில் பணி செய்வதற்கு கறார் செய்வ தால் இதுபோன்ற நிலை உருவாகி உள்ளதாக தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது ஒருபுறம் இருக்க மாவட்டத்தில் உள்ள மளிகைகடை, ஜவுளிக்கடை, கட்டிட வேலை உள்ளிட்ட நிறுவனங்களையும் வட மாநில தொழிலாளர்கள் புகுந்து வேலைபார்த்து வருகிறார்கள். மேலும் நகர் பகுதிகளில் உள்ள வீதிகளில் பானிபூரி, பஞ்சுமிட்டாய், போர்வைகள், தலையணை கள், படுக்கை விரிப்புகள், வீட்டுக்கு தேவையான பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தையும் சாலை ஓரத்தில் அமர்ந்து விற்பனை செய்து வருகிறார்கள்.
இந்த தொழில்களை பார்ப்பதற்காக மேலும் ஆயிரக் கணக்கான வடமாநில தொழிலாளர்கள் கடலூர் மாவட்டத் துக்கு வந்துள்ளனர். இவர்களால் கடலூர் நகர் பகுதி மற்றும் புறநகர் பகுதியில் வீட்டு வாடகை 2 மடங்காக உயர்ந்துள்ளது. குறிப்பாக முன்பு ஒரு வீட்டுக்கு ரூ.3 ஆயிரம் வாடகை என்றி ருந்தால். வடமாநில தொழிலாளர்கள் வந்த உடன் அந்த வாடகை ரூ.6 ஆயிரமாக உயர்ந்துள்ளது. ஒரே வீட்டில் 8 பேருக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கி உள்ளனர். இதுபோன்ற நிலை உள்ளதால் கடலூர் மாவட்டத்தில் வசிக்கும் தமிழக நடுத்தர குடும்பத்தி னர் வாடகை வீடு கிடைக்காமல் திணறிவருகின்றனர். கடந்த ஆண்டு மட்டும் தமிழகத்தில் சுமார் 1.50 கோடி வடமாநில தொழிலாளர்கள் வந்துள்ள தாக தெரியவந்துள்ளது. இவர்கள் தமிழகம் முழு வதும் பரந்து விரிந்து வேலை பார்த்து வருகிறார்கள்.
இதுபோன்ற நிலை நீடித்தால் கடலூர் மாவட் டத்தையே வடமாநில தொழி லாளர்கள் ஆக்கிரமித்து விடுவார்கள். எனவே மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் தனிகவனம் செலுத்தி வட மாநில தொழி லாளர்கள் எந்த பகுதியில் வசித்து வருகிறார்கள். அவர்கள் அடையாள அட்டை வைத்துள்ளார்களா என்பதை கண்காணிக்க வேண்டும். இதுபோன்ற வடமாநில தொழிலாளர்களால் பல்வேறு குற்ற செயல்களும் அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் சிப்காட் வேலை தொடர்பாக வடமாநில தொழிலாளர்கள் மோதிக்கொண்டனர். இந்த சம்பவம் கொலையில் முடிந்துள்ளது. மேலும் பல்வேறு வீடுகளிலும் வியாபாரம் செய்வதுபோல் நடித்து கைவரிசை காட்டி வருகிறார்கள். எனவே போலீசாரும் இந்த விச யத்தில் தனிகவனம் செலுத்த வேண்டும் என சமூக ஆர்வளர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
- 5-ம் வகுப்பு மாணவி கிள்ளை பூவாராகசாமி மண்டபம் வீதியில் உள்ள செண்பகவள்ளி என்பவரிடம் டியுஷன் படித்து வருகிறார்.
- சிறுமி அழுது கொண்டே வீட்டிற்கு சென்று தனது தாய் தீபாவிடம் நடந்ததை கூறினார்.
கடலூர்:
சிதம்பரம் அடுத்த கிள்ளை பகுதியில் வசித்து வருபவர் தீபா. இவரது 10 வயதுடைய மகள் அங்குள்ள ஊராட்சி பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். மேலும், கிள்ளை பூவாராகசாமி மண்டபம் வீதியில் உள்ள செண்பகவள்ளி என்பவரிடம் டியுஷன் படித்து வருகிறார். வழக்கம் போல கடந்த 3-ந் தேதியன்று மாலையில் டியுஷனுக்கு 5-ம் வகுப்பு மாணவி சென்றார். அங்கு படித்துக் கொண்டிருந்த போது சீறுநீர் கழிக்க அந்த வீட்டின் பின்புறம் சென்றுள்ளார்.
அப்போது அங்கிருந்த டியுஷன் மாஸ்டரின் தந்தை தீயணைப்புத் துறையில் இருந்து ஒய்வு பெற்ற தர்மலிங்கம் (வயது 65), சிறுமியை அருகில் அழைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி அழுது கொண்டே வீட்டிற்கு சென்று தனது தாய் தீபாவிடம் நடந்ததை கூறினார். இது தொடர்பாக சிறுமியின் தாயார் சிதம்பரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் வனஜா தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து, சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தகவலறிந்த தர்மலிங்கம் வீட்டிலிருந்து தப்பி ஓடிவிட்டார். 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துவிட்டு தலைமறைவாகியுள்ள ஓய்வு பெற்ற தீயணைப்புத் துறை ஊழியரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
- ஜெயலட்சுமி வீட்டின் பின்புறம் அரசால் தடை செய்யப்பட்ட சாராய பாக்கெட்டுகளை அரசு அனுமதி இல்லாமல் விற்பனை செய்தது தெரிய வந்தது.
- சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கடலூர்:
புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் நேற்றுதீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பண்ருட்டி தாலுகா பெரியஎலந்தம்பட்டு புதுநகர் பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 70) என்பவர் வீட்டின் பின்புறம் அரசால் தடை செய்யப்பட்ட சாராய பாக்கெட்டுகளை அரசு அனுமதி இல்லாமல் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவரை கைது செய்து அவரிடம் இருந்து சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- மணியரசு மனநலம் பாதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
- புவனேஸ்வரி கடந்த 5ம் தேதி மருத்துவமனைக்கு சென்று வருவதாக கூறி விட்டு சென்றவர் வீடு திரும்பி வரவில்லை.
கடலூர்:
பண்ருட்டி அருகே தட்டாம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மணியரசு. இவரது மகள் புவனேஸ்வரி (வயது 29)திருமணம் ஆகாதவர். மணி யரசு மனநலம் பாதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். எனவே மனவேதனையில் இருந்த புவனேஸ்வரி கடந்த 5ம் தேதி மருத்துவமனைக்கு சென்று வருவதாக கூறி விட்டு சென்றவர் வீடு திரும்பி வரவில்லை. இதைக் கண்டு அதிர்ந்து போன குடும்பத்தினர் அக்கம்பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக அவரது சித்தப்பா பாலமுருகன் கொடுத்த புகாரின்பேரில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்.இன்ஸ்பெக்டர் தங்க வேல்ஆகியோர்வழக்கு பதிவு செய்து காணாமல்போன இளம் பெண்ணை தீவிர மாக தேடி வருகின்றனர்.
- பித்தளைக்கு பாலிஷ் போடுவதாக கூறி விளக்கை கொண்டு வந்து கொடுத்து பாலிஷ் போட்டுள்ளார்.
- மர்மநபர்கள் அவர்கள் நகையுடன் அங்கிருந்து தப்பி சென்றுள்ள னர்
கடலூர்:
திட்டக்குடி அருகே வெங்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அமுதமொழி (29) தற்பொழுது தனது தாய் வீடான டி.ஏந்தல் வீட்டில் உள்ளார். நேற்று மாலை இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பித்தளைக்கு பாலிஷ் போடுவதாக கூறியதன் பேரில், அமுதமொழி வீட்டில் இருந்த விளக்கை கொண்டு வந்து கொடுத்து பாலிஷ் போட்டுள்ளார். அப்போது மர்ம நபர்கள் அணிந்திருந்த மோதிரத்தை கழற்றி பாலிஷ் போடும்போது, பளிச்சென்று தெரியவே, அமுதமொழி தன்னுடைய கழுத்தில் இருந்த தாலி செயின் மற்றும் ஒரு கிராம் மோதிரம் மொத்தம் 8 பவுன் நகையை கழற்றி பாலிஷ் போட்டு தரும்படி கொடுத்தார்.
அப்போது மர்ம நபர்கள் அதிக நகை இருப்பதால் வெந்நீர் இருந்தால் தான் பாலிஷ் போட முடியும் என தெரிவித்தவுடன் அமுதமொழி வெண்ணீர் எடுப்பதற்காக வீட்டின் உள்ளே சென்றுள்ளார். இதனை சாதகமாக பயன்படுத்திய மர்மநபர்கள் அவர்கள் நகையுடன் அங்கிருந்து தப்பி சென்றுள்ள னர் வெளியே வந்து பார்த்த அமுதமொழி மர்ம நபர்கள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டு உள்ளார். அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்த பொழுது நடந்தவற்றை அமுதமொழி கூறி அழுதுள்ளார். உடனடியாக ராமநத்தம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற ராமநத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமுதமொழி வீட்டிற்கு வருவதற்கு முன் அந்தப் பகுதியல் உள்ள ஒரு வீட்டுக்கு சென்று டிப்டாப் ஆசாமிகள் 2 பேர் வீட்டில் இருந்த பெண்ணிடம் பாலிஷ் போடலாமா என கேட்கும் சிசிடிவி காட்சிகள் பதிவாகி இருந்ததால் அந்த காட்சிகளை கொண்டு ராமநத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாவட்ட காவல்துறை தனிப்படை அமைத்து இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும் டிப்டாப் ஆசாமிகளை விரைந்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தொடர்ந்து 2-வது நாளாக இன்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தனது நடைபயணத்தை மேல்வளையமாதேவி கிராமத்தில் இன்று தொடங்கினார்.
- கீழ்வளையமாதேவி, கரிவெட்டி ஆகிய கிராமங்கள் வழியாக சென்று மும்முடிச்சோழகன் கிராமத்தில் அன்புமணி நடைபயணத்தை நிறைவு செய்கிறார்.
விருத்தாசலம்:
என்.எல்.சி. நிர்வாகம் கடலூர் மாவட்டத்தை விட்டு வெளியேற வேண்டும் என்ற கோஷத்துடன் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் நடைபயணத்தை வடலூரை அடுத்த வானதிராயபுரத்தில் நேற்று தொடங்கினார்.
தொடர்ந்து தென்குத்து, வடலூர், மந்தாரக்குப்பம், வடக்கு வெள்ளூர், அம்மேரி, தொப்பிளிக்கும் வழியாக ஆதண்டார்கொல்லையில் தனது முதல் நாள் நடைபயணத்தை அன்புமணி ராமதாஸ் முடித்தார்.
இதைத் தொடர்ந்து 2-வது நாளாக இன்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தனது நடைபயணத்தை மேல்வளையமாதேவி கிராமத்தில் இன்று நண்பகல் 12.30 மணிக்கு தொடங்கினார். இதைத் தொடர்ந்து கீழ்வளையமாதேவி, கரிவெட்டி ஆகிய கிராமங்கள் வழியாக சென்று மும்முடிச்சோழகன் கிராமத்தில் நிறைவு செய்கிறார்.
இந்த நடைபயணத்தில் பா.ம.க. நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் எழுச்சியுடன் பங்கேற்றனர்.
- உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்த நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
- வினாத்தாள்கள், மாதிரித்தேர்வுகள், பாடக்குறிப்புகள் ஆகியவை உள்ளன.
கடலூர்:
கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :- கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினால் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு தொழில்நெறி வழிகாட்டல் நிகழ்ச்சிகள், உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்த நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த அலுவலகத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக பல்வேறு அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக வீட்டில் இருந்தபடியே போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் மெய்நிகர் கற்றல் வலைதளம் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக உருவாக்கப்பட்டு இயங்கி வருகிறது. அனைத்து போட்டித்தேர்வுக்கான விவரங்களை இணையதளம் உள்ளடக்கியது. போட்டித்தேர்விற்கான பாடத்திட்டங்கள், வினாத்தாள்கள், மாதிரித்தேர்வுகள், பாடக்குறிப்புகள் ஆகியவை உள்ளன.
மெய்நிகர் கற்றலுக்கான இணையத்தளத்தில் போட்டித்தேர்விற்கு தயாராகும் மாணவர்கள் அனைவரும் பாடக்குறிப்புகள் மற்றும் வினாத்தாள்களை இலவசமாக பதிவு செய்து பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். இத்தளத்தின் வாயிலாக தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசு தேர்வாணையங்களால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் போட்டி தேர்வாளர்கள் பயன்பெறலாம். மேலும் கல்வி தொலைக்காட்சியில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் தொடக்கப்பட்டு ஊக்க உரைகள், முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள் பற்றிய கலந்துரையாடல், நடப்பு நிகழ்வுகள், போட்டித் தேர்வு வகுப்புகள் ஆகிய பல்வேறு நிகழ்ச்சிகளை தினமும் கல்வி தொலைக்காட்சியில் காலை 7 மணியிலிருந்து 9 மணி வரையும், இதன் மறு ஒளிபரப்பு மாலை 7 மணியிலிருந்து 9 மணி வரையும் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.கல்வி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பு செய்யப்படுகிறது. எனவே, கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள் இதனை பயன்படுத்தி அரசு பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளில் அதிகளவில் வெற்றி பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
- கொள்ளை கும்பல் இரும்பு பொருட்கள் கடத்த முடி யாமல் தவித்து வருகின்றனர்.
- பொதுமக்கள் யாறேனும் அவ் வழியாக வந்தால் அவர்களை மிரட்டியும் வருவதாக கூறப்படுகிறது.
கடலூர்:
கடலூர் அருகே பெரியப் பட்டு பகுதியில் தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு கம்பெனி உள்ளது. இங்கு இருந்து பல்லாயிரம் டன் இரும்பு பொருட்களை ஏராளமானோர் தினந் தோறும் திருடிக் கொண்டு லாரி டிராக்டர் மற்றும் மோட்டார் சைக்கிளில் திருடி சென்று வருகின்றனர். கடந்த சில மாதங்களில் தனியார் கம்பெனியிலிருந்து பல்லாயிரம் டன் கணக்கில் இரும்பு பொருட்கள் திருடி சென்றதாக போலீஸ் நிலையங்களில் வழக்கு பதிவு செய்து கடலூர் மாவட்டம் முழுவதும் ஏராளமானவரை கைது செய்து வருகின்றனர். போலீசார் இரும்பு பொருட்கள் திருடும் கும்ப லை தீவிரமாக கண்கா ணித்து பல்வேறு நடவ டிக்கை எடுத்து வருவதால் கொள்ளை கும்பல் இரும்பு பொருட்கள் கடத்த முடி யாமல் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது கடற்கரை வழியாக திருடப்பட்ட இரும்பு பொருட்களை வாகனங்கள் மூலமாக மர்ம கும்பல் கடத்தும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதனை தொடர்ந்து தனியார் கம்பெனியில் இருந்து பெரிய அளவிலான இரும்பு பொருட்களை சுமார் 50-க்கும் மேற்பட்ட நபர்கள் ஒன்று சேர்ந்து வாகனங்கள் மூலமாக புது சத்திரம் பகுதி அய்யம் பேட்டை உள்ளிட்ட சுற்று வட்டார கடற்கரை ஓரமாக கொண்டு வரப்பட்டு கியாஸ் சிலிண்டர் மற்றும் வெல்டிங் மிஷின் ஆகிய வற்றை கொண்டு வந்து நள்ளிரவு முதல் அதிகா லை வரை இரும்பு பொருட்களை தங்களுக்கு தேவையான அளவில் பிரித்து எடுத்து 10 -க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் கடற்கரை ஓரமாகவே இரும்பு பொருட்களை கடத்தி வருகின்றனர். இதன் காரணமாக மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் ஏறேனும் அவ் வழியாக வந்தால் அவர்களை மிரட்டியும் வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் போலீசார் பல்வேறு கெடுபிடி விதித்தாலும் மர்ம கும்பல் நூதன முறையில் கடற்கரை ஓரமாக திருடப்பட்ட இரும்பு பொருட்களை கடத்தும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






