search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டியில் சாராயம் விற்ற பெண் கைது
    X

    பண்ருட்டியில் சாராயம் விற்ற பெண் கைது

    • ஜெயலட்சுமி வீட்டின் பின்புறம் அரசால் தடை செய்யப்பட்ட சாராய பாக்கெட்டுகளை அரசு அனுமதி இல்லாமல் விற்பனை செய்தது தெரிய வந்தது.
    • சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    கடலூர்:

    புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் நேற்றுதீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பண்ருட்டி தாலுகா பெரியஎலந்தம்பட்டு புதுநகர் பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 70) என்பவர் வீட்டின் பின்புறம் அரசால் தடை செய்யப்பட்ட சாராய பாக்கெட்டுகளை அரசு அனுமதி இல்லாமல் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவரை கைது செய்து அவரிடம் இருந்து சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×