search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Modern theft"

    • பித்தளைக்கு பாலிஷ் போடுவதாக கூறி விளக்கை கொண்டு வந்து கொடுத்து பாலிஷ் போட்டுள்ளார்.
    • மர்மநபர்கள் அவர்கள் நகையுடன் அங்கிருந்து தப்பி சென்றுள்ள னர்

    கடலூர்:

     திட்டக்குடி அருகே வெங்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அமுதமொழி (29) தற்பொழுது தனது தாய் வீடான டி.ஏந்தல் வீட்டில் உள்ளார். நேற்று மாலை இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பித்தளைக்கு பாலிஷ் போடுவதாக கூறியதன் பேரில், அமுதமொழி வீட்டில் இருந்த விளக்கை கொண்டு வந்து கொடுத்து பாலிஷ் போட்டுள்ளார். அப்போது மர்ம நபர்கள் அணிந்திருந்த மோதிரத்தை கழற்றி பாலிஷ் போடும்போது, பளிச்சென்று தெரியவே, அமுதமொழி தன்னுடைய கழுத்தில் இருந்த தாலி செயின் மற்றும் ஒரு கிராம் மோதிரம் மொத்தம் 8 பவுன் நகையை கழற்றி பாலிஷ் போட்டு தரும்படி கொடுத்தார்.

    அப்போது மர்ம நபர்கள் அதிக நகை இருப்பதால் வெந்நீர் இருந்தால் தான் பாலிஷ் போட முடியும் என தெரிவித்தவுடன் அமுதமொழி வெண்ணீர் எடுப்பதற்காக வீட்டின் உள்ளே சென்றுள்ளார். இதனை சாதகமாக பயன்படுத்திய மர்மநபர்கள் அவர்கள் நகையுடன் அங்கிருந்து தப்பி சென்றுள்ள னர் வெளியே வந்து பார்த்த அமுதமொழி மர்ம நபர்கள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டு உள்ளார். அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்த பொழுது நடந்தவற்றை அமுதமொழி கூறி அழுதுள்ளார். உடனடியாக ராமநத்தம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற ராமநத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அமுதமொழி வீட்டிற்கு வருவதற்கு முன் அந்தப் பகுதியல் உள்ள ஒரு வீட்டுக்கு சென்று டிப்டாப் ஆசாமிகள் 2 பேர் வீட்டில் இருந்த பெண்ணிடம் பாலிஷ் போடலாமா என கேட்கும் சிசிடிவி காட்சிகள் பதிவாகி இருந்ததால் அந்த காட்சிகளை கொண்டு ராமநத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாவட்ட காவல்துறை தனிப்படை அமைத்து இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும் டிப்டாப் ஆசாமிகளை விரைந்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வங்கி அதிகாரி பேசுவதாக கூறி மோசடி
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    செங்கம் தாலுகா கல்லரைப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் வரதன் மகன் சுரேஷ். இவர் நேற்று திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

    நான் கூலி வேலை செய்து வருகிறேன். தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் சேமிப்பு கணக்கு வைத்து உள்ளேன். கடந்த 23-ந் தேதி மாலையில் எனது செல்போனுக்கு வங்கியில் இருந்த அதிகாரி பேசுவதாக கூறி உனது ஏ.டி.எம். கார்டு தேதி முடிவடையும் நிலையில் உள்ளது. புதியதாக கார்டு பெற வேண்டும். அதற்கு உங்கள் ஏ.டி.எம். கார்டின் பின்புறம் உள்ள குறியீடு எண்ணை கொடுக்குமாறு கேட்டார். நானும் அவர் கூறியதை உண்மை என்று நம்பி எனது ஏ.டி.எம். கார்டு பின்புறம் உள்ள குறியீடு எண்ணை அவருக்கு கொடுத்தேன்.

    அதன்பிறகு அவர் எனது செல்போனுக்கு தகவல் வரும். அந்த குறியீடு எண்ணை கூறுமாறு சொன்னார்.

    அவர் கூறியவாறே நான் அந்த எண்ணை அவரிடம் கூறினேன். அப்போது எனது வங்கி கணக்கில் ரூ.1 லட்சத்து 57 ஆயிரம் தொகை இருப்பு இருந்தது.

    அதன்பிறகு சில நாட்கள் கழித்து நேற்றுமுன்தினம் நடமாடும் ஏ.டி.எம். வங்கி அலுவலரிடம் எனது ஆதார் எண்ணை வைத்து பணம் எடுக்க முயன்ற போது வங்கி கணக்கில் பணம் இல்லை என தகவல் சொன்னார்.

    இது குறித்து நேற்று தேவனாம்பட்டில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு சென்று கிளை மேலாளரை சந்தித்து விவரம் கூறிய போது எனது வங்கி கணக்கு ஸ்டேட் மெண்டடை என்னிடம் கொடுத்து போலீசில் புகார் அளிக்க கூறினார்.

    எனவே இந்த புகார் மனுவினை பரிசீலித்து எழுத படிக்க தெரியாத என்னை ஏமாற்றி எனது வங்கி கணக்கில் இருந்து நூதன முறையில் பணத்தை எடுத்த நபர் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டு தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    ×