என் மலர்
கடலூர்
- விருத்தாசலத்தில் இருந்து திட்டக்குடி நோக்கி சென்ற பெண்களுக்கான இலவச பஸ்சில் சென்றனர்.
- தினக்கூலி வேலைக்கு செல்லும் பெண்கள் திடீரென இலவச பஸ்களை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திட்டக்குடி:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே முருகன் குடி கிராமத்தில் நாள் தோறும் தினக்கூலிவேலைக்காக 50-க்கும் மேற்பட்ட பெண்கள் திட்டக்குடி பகுதிக்கு வேலைக்கு சென்று வருகின்றனர். இவர்கள் விருத்தாசலத்தில் இருந்து திட்டக்குடி நோக்கி சென்ற பெண்களுக்கான இலவச பஸ்சில் சென்றனர்.
ஆனால் இந்த பஸ் முருகன்குடியில் நிற்காமல் சென்றது. தொடர்ந்து வந்த 3-வது பஸ்களும் முருகன்குடி கிராமத்தில் நிற்காமல் சென்றது. இதனால் கடந்த ஒரு மணி நேரமாக காத்திருந்த 50-க்கும் மேற்பட்ட தினக்கூலி வேலைக்கு செல்லும் பெண்கள் திடீரென இலவச பஸ்களை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில் பஸ்கள் நிற்காமல் சென்றதால் இன்றைக்கு பணிக்கு செல்ல முடியவில்லை .ஒரு நாள் வருமானம் போய்விட்டது. இதுபோல் தொடர்ந்து கடந்த3 நாட்களாக பேருந்து முருகன்குடியில் நிற்காமல் செல்கிறது என்றனர். இந்த போராட்டம் 1மணி நேரமாக நீடித்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்படட்டது.
தகவல்அறிந்த போலீசார் விரைந்து சென்று பெண்களை சமாதானம் செய்தனர். ஆனால் இந்த சமரசத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. தொடர்ந்து போராட்டம் செய்தனர்.
- கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு சம்பவத்தன்று 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சிகிச்சை பெற வந்திருந்தார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த முதியவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு சம்பவத்தன்று 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சிகிச்சை பெற வந்திருந்தார். இந்த நிலையில் அவர் மருத்துவமனை வளாகத்திலேயே திடீரென மயங்கி விழுந்தார். இதை பார்த்த மருத்துவமனைக்கு வந்த பொதுமக்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அந்த முதியவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த முதியவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் துணை மேயர் தாமரைச்செல்வனுக்கு முன் ஜாமீன் வழங்கபட்டது.
- நாளை முதல் 15 நாட்களுக்கு குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் காலை 10.30 மணிக்கு கையெழுத்திட வேண்டும்
கடலூர்:
கடலூர் அருகே சுப்ரமணியபுரத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் கொடியை ஏற்றியது சம்பந்தமாக குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் துணை மேயர் தாமரைச்செல்வனுக்கு முன் ஜாமீன் வழங்கபட்டது. கடலூர் மாவட்ட நீதிமன்ற உத்தரவின்படி இன்று காலை துணை மேயர் தாமரைச்செல்வன் குறிஞ்சிப்பாடி குற்றவியல் நீதிமன்ற நீதிபதியின் முன்பு ஆஜராகி ஜாமீன் பெற்றார். இதனை தொடர்ந்து நாளை முதல் 15 நாட்களுக்கு குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் காலை 10.30 மணிக்கு கையெழுத்திட வேண்டும் என நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டது. அப்போது வக்கீல்கள் திருமார்பன், திருஞானமூர்த்தி, குணசீலன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- நள்ளிரவுதிடீரென தீப்பற்றி எரிந்தது. தீ மள,மளவென எரிந்துவீடு முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது
- அக்கம் பக்கம்வீடுகளுக்கு தீ மேலும் பரவாமல்தடுத்து அணைத்தனர்.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த அங்கு செட்டிபாளையம்பழைய காலனி சேர்ந்தவர் அய்யப்பன் (52)கூலி தொழிலாளி இவரது கூரை வீடு நேற்றுநள்ளிரவுதிடீரென தீப்பற்றி எரிந்தது. தீ மள,மளவென எரிந்துவீடு முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது. இது பற்றி தகவல் அறிந்ததும்பண்ருட்டி நிலைய தீயணைப்புநிலைய அலுவலர் ஜமுனா ராணி தலைமையில் தீயணைப்பு வீரர்கள்விரைந்து சென்றுஅக்கம் பக்கம்வீடுகளுக்கு தீ மேலும் பரவாமல்தடுத்து அணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
- காட்டுக்கொட்டகை தீப்பிடித்து எறிவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
- வீட்டிலிருந்த கிரைண்டர் போன்ற வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் தீக்கிரையானது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த புலிகாரம்பூர் கிராமத்தில் வசித்து வருபவர் முருகேசன் (வயது 45). விவசாயி. இவருக்கு சொந்தமான நிலத்தில் காட்டுக் கொட்டகை வீடு கட்டி வசித்து வருகிறார். வீட்டிற்கு தேவையான காய்கறிகள் வாங்குவதற்கு நேற்று இரவு 8 மணி அளவில் ராமநத்தம் சென்றார். இரவு 9.45 மணிக்கு வீடு திரும்பினார். அப்ேபாது இவரது காட்டுக்கொட்டகை தீப்பிடித்து எறிவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதில் காட்டு கொட்டகை வீடு முழுவதும் எரிந்து சாம்பல் ஆனது. வீட்டிலிருந்த கிரைண்டர் போன்ற வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் தீக்கிரையானது. இது குறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திட்டக்குடி தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சண்முகம் தலைமையிலான தீயணைப்புத் துறையினர் மேலும் விளை நிலத்திற்கு தீ பரவாமல் அணைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ராமநத்தம் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து காட்டுக்கொட்டைக்கு தீ வைத்த மர்ம நபர்கள் யார்? என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரவு நேரத்தில் காட்டுக் கொட்டகை வீடு தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
- தென்பெண்ணையாற்றில் நடந்த ஆற்றுத் திருவிழாவில் இவர்கள் தனித்தனியே ராட்டினம் அமைத்தனர். விழா முடிந்ததும் ராட்டினத்தை கழட்டும் பணியில் 2 தரப்பினரும் ஈடுபட்டனர்.,
- வாக்குவாதம் வந்தது. இதில் இருவர் மற்ற இருவரை தடியால் அடித்த தாக்கினர்,
விழுப்புரம்:
திருவெண்ணைநல்லூர் அருகே ஆண்டிமடம் பூக்குழி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சரவணன் (வயது 26). இவரது சகோதரர் சத்தியமூர்த்தி (24). இவர்கள் திருவிழாக்களில் ராட்டினம் அமைத்து தொழில் செய்து வருகின்றனர். இதேபோல விருத்தாசலம் புதாமூர் கிராமத்தைச் சேர்ந்த சதிஷ் (30), இவரது சகோதரர் தினேஷ் (23). இவர்களும் அதே தொழில் செய்து வருகின்றனர் திருவெண்ணைநல்லூர் அருகேயுள்ள பேரங்கியூர் தென்பெண்ணையாற்றில் நடந்த ஆற்றுத் திருவிழாவில் இவர்கள் தனித்தனியே ராட்டினம் அமைத்தனர். ஆற்றுத் திருவிழா முடிந்து ராட்டினத்தை கழட்டும் பணியில் 2 தரப்பினரும் ஈடுபட்டனர். தொழில் போட்டி காரணமாக இவர்களிடையே வாக்குவாதம் வந்தது. இதில் சதிஷ், தினேஷ் ஆகியோர் சரவணன், சத்தியமூர்த்தி ஆகியோரை தடியால் தாக்கினர். இதில் காயமடைந்த சத்தியமூர்த்தி முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதி க்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார்
. திருவெண்ணைநல்லூர் அருகே டி.கொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 63). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த மோகன் என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் ஆற்றுத் திருவிழா முடிந்து சாமி விதியுலா நடந்தது. இதில் சுப்பிரமணியன் மகன் சந்தோஷ் சாமிக்கு தீபாராதனை காட்டினார். அப்போது அங்கு வந்த மோகன், மஞ்சு, மனோஜ், நாராயணன் ஆகியோர் சந்தோஷை ஆபாசமாக திட்டி கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் காயமடைந்த சந்தோஷ் திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார் இவ்விரு சம்பவங்கள் குறித்த புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
கடலூர்:
கடலூர் அருகே கோண்டூர் பஸ் நிறுத்தம் பகுதியில் வீடு உள்ளது. இந்த வீட்டின் பின்புறம் கதவு உடைந்து இருந்தது. இதனை பார்த்து வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்து பார்த்த போது அங்கு நிறுத்தி வைக்க ப்பட்டிருந்த சைக்கிளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது இதனை தொடர்ந்து வீட்டின் அருகாமையில் டீக்கடை ஒன்று உள்ளது. டீக்கடையில் பூட்டை உடைத்து உள்ளே இருந்த 15 ஆயிரம் பணம் மற்றும் மிக்சியை திருடி சென்றது தெரியவந்தது. மேலும் இதன் அருகாமையில் மளிகை கடை ஒன்று உள்ளது. மளிகை கடை பூட்டை உடைத்து உள்ளே சென்று மர்ம நபர்கள் அங்கு இருந்த 10 ஆயிரம் ரொக்க பணம் திருடி சென்றனர். மேலும் அதே பகுதியில் ஜெராக்ஸ் கடை ஒன்று இருந்தது.
அந்த ஜெராக்ஸ் கடையின் ஒருபுறம் பூட்டை உடைத்து, மற்றொருபுறம் இருந்த பூட்டை உடைக்க முயற்சி செய்தபோது உடைக்க முடியவில்லை. இதன் காரணமாக மர்ம நபர்கள் அங்கு திருட முடியாமல் தப்பித்து ஓடினர். இந்த நிலையில் இதனை பார்த்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்ததோடு, பீதியில் காணப்பட்டனர் இத் தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திருடு நடந்த வீடு மற்றும் கடைகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நள்ளிரவில் 3 கடைகள் மற்றும் வீட்டில் பணம் மற்றும் சைக்கிள் திருடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதோடு கோண்டூர் மெயின் ரோட்டில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் மர்ம நபர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பொதுமக்கள் இடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
- இவருக்கும் அதே பகுதி சேர்ந்த வளையாபதி என்பவருக்கும் வீட்டுமனை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது.
- அம்சகுமார், அவரது மனைவியையும் ஆபாசமாக திட்டி அவரது இரு சக்கர வாகனத்தையும் உடைத்து சேதப்படுத்தினர்.
கடலூர்:
பண்ருட்டி அருகே காடாம்புலியூர் தெற்கு சாத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருக்கும் அதே பகுதி சேர்ந்த வளையாபதி என்பவருக்கும் வீட்டுமனை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. அந்தபிரச்சினைக்கு சுப்பிரமணியத்தின் அண்ணன் ஆறுமுகம், அவரது மகன் அம்சகு மாரும் காரணம் என கருதி வளையாபதி மற்றும் அவரது உறவினர்கள் ஒன்று சேர்ந்து அம்சகுமார் வீட்டிற்கு சென்றனர்
பின்னர் அம்சகுமார், அவரது மனைவியையும் ஆபாசமாக திட்டி அவரது இரு சக்கர வாகனத்தையும் உடைத்து சேதப்படுத்தினர். இது பற்றி தகவல் அறிந்ததும் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டி யன்,சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர் இதுகுறித்து வளையாபதி,தியாகராஜன்,ராமச்சந்திரன்,தங்கமணி ஜெய க்கொடி,அருள்பாண்டியன் உள்ளிட்ட 17 பேர் மீதுவழக்கு பதிவு செய்துஅருள்பாண்டியன் (19),சுப்பிரமணியன் (52) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெண்ணின் ஊருக்கு சென்று நேரடியாக பேசி அந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டு திருமணம் செய்து கொள்ள நரேஷ் தீர்மானித்தார்.
- எடப்பாடியில் இருந்து மோட்டார் சைக்கிளில் சேந்தமங்கலம் வந்தார். அப்போது நரேஷ் அந்த பெண்ணை நேரடியாக அழைத்து பேசினார்.
பண்ருட்டி:
சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் நரேஷ் (வயது 30). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி செய்து வருகிறார். அங்கு பண்ருட்டி அருகே சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணும் பணி செய்து வந்தார்.
இவர்கள் 2 பேரும் கடந்த 3 வருடங்களாக காதலித்தனர். தற்போது அந்த பெண்ணிற்கு அவரது பெற்றோர்கள் வேறொரு நபருடன் திருமண நிச்சயம் செய்தனர்.
இதனை அறிந்த நரேஷ் அந்த பெண்ணை செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயற்சித்தார். ஆனால் செல்போன் ஸ்விட்ச் ஆப்பில் இருந்தது. இதையடுத்து பணி செய்த அலுவலகத்தில் இருந்து அந்தப் பெண்ணின் விலாசத்தை நரேஷ் வாங்கினார்.
உடனே நரேஷ் அந்தப் பெண்ணின் ஊருக்கு சென்று நேரடியாக பேசி அந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டு திருமணம் செய்து கொள்ள நரேஷ் தீர்மானித்தார்.
இதையடுத்து எடப்பாடியில் இருந்து மோட்டார் சைக்கிளில் சேந்தமங்கலம் வந்தார். அப்போது நரேஷ் அந்த பெண்ணை நேரடியாக அழைத்து பேசினார். நாம் திருமணம்செய்து கொள்வோம் என்று கூறினார்.
ஆனால் அந்த இளம்பெண் நரேசுடன் செல்ல மறுத்துவிட்டு பெற்றோர்கள் நிச்சயம் செய்தவரைதான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறினார்.
இதனால் மனமுடைந்த நரேஷ் நீ என்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று காதலித்த பெண்ணை மிரட்டினார். ஆனாலும் அந்த பெண் எனது பெற்றோர்கள் நிச்சயித்த வாலிபரைத் தான் திருமணம் செய்து கொள்வேன். நீ ஊருக்கு திரும்பி சென்று விடு என்று கூறிவிட்டு சென்றார்.
இதனால் மனமுடைந்த நரேஷ், பெட்ரோல் பங்கிற்கு சென்று பெட்ரோல் வாங்கினார் . பின்னர் வீரப்பெருமாநல்லூர் அருகே சாலை ஓரத்தில் நின்று கொண்டு தன் மீது பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார். இதில் அவரது உடல் மீது தீ பற்றியது. இதனால் நரேஷ் வேதனையால் அலறி துடித்தார்.
சத்தம் கேட்டு சாலை பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில தொழிலாளர்கள் அவரை காப்பாற்ற முயற்சித்தனர். ஆனால் அவர்களால் முடியவில்லை.
உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். உடல் கருகிய நரேஷை 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நரேஷ் இறந்தார்.
இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாநில தலைவர் அண்ணாமலை வருகையையொட்டி கடலூர் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
- எங்கு பார்த்தாலும் பாரதிய ஜனதா கட்சி கொடிகள், பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.
கடலூர்:
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டசபை இடைத்தேர்தல் பிப்ரவரி மாதம் 27-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுதாக்கல் வருகிற 31-ந் தேதி தொடங்குகிறது. இந்த தேர்தலில் போட்டியிடுவது குறித்து கடலூரில் நடைபெறும் பா.ஜ.க. மாநில செயற்குழு கூட்டத்தில் அறிவிக்கப்படும் என்று மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
அதன்படி இன்று காலை கடலூரில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் தொடங்கியது. மாநில மேலிடபார்வையாளர் ரவி தலைமை தாங்கினார். கடலூர் கிழக்கு மாவட்ட தலைவர் மணிகண்டன் வரவேற்றார். கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி பேசினார்.
கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் சந்திரன், மத்திய மந்திரி எல்.முருகன், முன்னாள் மத்திய மந்திரிகள் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா, நடிகை நமீதா, பொருளாதார பிரிவு மாநில தலைவரும், அன்னை பாத்திமா கல்வி நிறுவனங்களின் குழும தலைவருமான எம்.எஸ்.ஷா மற்றும் மாநில பார்வையாளர்கள், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
ராமர் பாலம் பாதிக்காமல் சேது கால்வாய் திட்டம் அமைப்பது, கட்சி வளர்ச்சிப்பணி குறித்து விரிவாக ஆலோசிப்பது, புதுக்கோட்டையில் நடந்த பட்டியலின கொடுமைக்கு தி.மு.க. அரசு பொறுப்பேற்க வலியுறுத்துவது, ஏப்ரல் 14-ந் தேதி அண்ணாமலை திருச்செந்தூரில் இருந்து நடைபயணம் தொடங்குவது என்பது உள்பட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டம் இன்று மாலை வரை நடக்கிறது. அப்போது ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடுவது, யாத்ரா பவனி, கட்சி பணிகள் குறித்து மாநில தலைவர் அண்ணாமலை ஆலோசனை நடத்த உள்ளார்.
மாநில தலைவர் அண்ணாமலை வருகையையொட்டி கடலூர் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. எங்கு பார்த்தாலும் பாரதிய ஜனதா கட்சி கொடிகள், பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. முன்னதாக கடலூர் வந்த மாநில தலைவர் அண்ணாமலைக்கு பா.ஜ.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
- ஜல்ஜீவன் திட்டத்தின்கீழ் குடிநீர் தொட்டி கட்ட யூனியன்சார்பில் டெண்டர் விடப்பட்டுள்ளது.
- பண்ருட்டி யூனியன் அலுவலகம் முன்பு இன்று காலை தர்ணாபோராட்டத்தில் ஈடுபட்டார்.
கடலூர்:
பண்ருட்டி அருகே மணப்பாக்கம் பஞ்சாயத்து உள்ளது/ இதன் தலைவராக சியாமளா சுரேந்தர் உள்ளார். இந்த பஞ்சாயத்தில் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின்கீழ் குடிநீர் தொட்டி கட்ட யூனியன்சார்பில் டெண்டர் விடப்பட்டுள்ளது. இதனை அறிந்த பஞ்சாயத்து தலைவர் சியாமளா சுரேந்தர் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி டெண்டர் விடப்பட்டதாக கூறி பண்ருட்டி யூனியன் அலுவலகம் முன்பு இன்று காலை தர்ணாபோராட்டத்தில் ஈடுபட்டார். இதனை அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகசிகாமணி அவரிடம் பேச்சுவார்த்ைத நடத்தினார்.
- சேகர் பலமுறை அந்த இளம் பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் தொல்லை தந்துள்ளார்.
- 4 மாத கர்ப்பமான பெண் கொடுத்த புகாரின் பேரில் சிதம்பரம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கின் கீழ் சேகரை கைது செய்தனர்.
கடலூர்:
புவனகிரி அருகே உள்ள மருதூர், முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் சேகர் (வயது 50). இவரது மனைவிக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 16 வயது பெண் உதவியாக இருந்து வந்துள்ளார். இதை பயன்படுத்திய சேகர் பலமுறை அந்த இளம் பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் தொல்லை தந்துள்ளார். இதனால் அந்த பெண் 4 மாத கர்ப்பமானார். புகாரின் பேரில் சிதம்பரம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கின் கீழ் சேகரை கைது செய்தனர்.






