என் மலர்
கடலூர்
- விவசா யிகள் சட்டவிரோதமாக மின் வேலி அமைப்பது நாட்டுத் துப்பாக்கிகளால் வயல்வெளிக்கு வரும் வனவிலங்குகளை வேட்டையாடுகின்றனர்
- ஒருவர் துப்பாக்கியால் வேட்டையாடினார். இதை பார்த்த போலீசார் அந்த வாலிபரை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்
கடலூர்:
உளுந்தூர்பேட்டை அருகே குஞ்சரம் காப்பு க்காடு பகுதியை சுற்றி ஏராளமான விவசாய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமத்தில் விளையக் கூடிய பயிர்களை பாதுகா ப்பதற்காக விவசா யிகள் சட்டவிரோதமாக மின் வேலி அமைப்பது நாட்டுத் துப்பாக்கிகளால் வயல்வெளிக்கு வரும் வனவிலங்குகளை வேட்டையாடுகின்றனர் இதனை தடுப்பதற்காக டி.எஸ்.பி மகேஷ், எலவனாசூர்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் திரு மால் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் காலை குஞ்சரம் காப்புக்காடு பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது குஞ்சரம் காப்புக்காடு அருகே ஒரு வயல்வெளியில் துப்பாக்கி சத்தம் கேட்டதை அடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர் இந்நிலையில் அங்கு வயல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்த 2 மயில்களை வாலிபர் ஒருவர் துப்பாக்கியால் வேட்டையாடினார். இதை பார்த்த போலீசார் அந்த வாலிபரை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். பின்னர் போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் எறையூர் பாளையத்தை சேர்ந்த பவுல் அமல்ராஜ் (வயது 21) என்பது தெரிய வந்தது. மேலும் மான் வேட்டைக்கு சென்ற அமல்ராஜ் மயிலை வேட்டையாடியதும் விசா ரணையில் தெரியவந்தது. உடனே பவுல் அமல்ராஜை கைது செய்து போலீசார் அவரிடமிருந்து ஒரு நாட்டு துப்பாக்கி மற்றும் வேட்டையாட சென்ற மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
- பண்ருட்டி கணிசபாக்கம் கிராமத்தில் குமார், அவரது மகன் டேவிட், மனைவி சாந்தா ஆகிய 3 பேரும் வீட்டின் பின்புறம் எரிசாராய பாக்கெட்டுகள் விற்பனை செய்தது தெரியவந்தது,
- அவர்களிடம் இருந்து ஏராளமான எரிசாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்
கடலூர்:
பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், (பொ) சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேல் மற்றும் போலீசார் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பண்ருட்டி கணிசபாக்கம் கிராமத்தில் குமார், அவரது மகன் டேவிட், மனைவி சாந்தா ஆகிய 3 பேரும் வீட்டின் பின்புறம் எரிசாராய பாக்கெட்டுகள் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஏராளமான எரிசாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
- தீயணைப்பு துறை சார்பில் மாணவர்களுக்கு பேரிடர் மீட்பு குறித்து செயல் விளக்க பயிற்சி முகாம் நடந்தது.
- இதில் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் திருமுகம் மற்றும் ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கடலூர்
கடலூர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார் உத்தரவுபடி கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள புனித வளனார் பள்ளியில் பேரிடர் மீட்பு குறித்து செயல் விளக்க பயிற்சி முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கடலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் விஜயகுமார் தலைமை தாங்கினார். இதில் தீயணைப்பு வீரர்கள் பலர் கலந்து கொண்டு பேரிடர் காலங்களில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து செயல் விளக்க பயிற்சி அளித்தனர். மேலும் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பாக எவ்வாறு மீட்டு வருவது என்பது குறித்தும், தீப்பற்றிய கட்டிடங்களில் தீயை எவ்வாறு அணைக்க வேண்டும் என்பது குறித்தும், விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு முதலுதவி அளிப்பது குறித்தும் பள்ளி மாணவர்களுக்கு செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இதில் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் திருமுகம் மற்றும் ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- காலை அர்ச்சகர் நடராஜன் கோவிலுக்கு பூஜை செய்வதற்காக வந்து பார்த்தபோது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- ரேடியோ செட், விநாயகருக்கு அணிவிக்க கூடிய பித்தளை பொருட்கள் உள்ளிட்டவைகள் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ 65 ஆயிரம் ஆகும்.
கடலூர்,
கடலூர் கோண்டூர் டி.என்பி.எஸ்சி. நகரில் விநாயகர் கோவில் உள்ளது இக்கோவிலில் நேற்று வழக்கம்போல் பூஜை முடித்துவிட்டு இரும்பு கேட்டை பூட்டிவிட்டு சென்றனர் இன்று காலை அர்ச்சகர் நடராஜன் கோவிலுக்கு பூஜை செய்வதற்காக வந்து பார்த்தபோது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு வைக்கப்பட்டிருந்த உண்டியலை காணவில்லை. மேலும் கோவில் உட்புறத்தில் மரக்கதவு இருந்தது. அதுவும் உடைந்து திறந்து இருந்தது. அதற்குள் சென்று பார்த்த போது ரேடியோ செட், விநாயகருக்கு அணிவிக்க கூடிய பித்தளை பொருட்கள் உள்ளிட்டவைகள் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ 65 ஆயிரம் ஆகும். இதனைத் தொடர்ந்து நகர் தலைவர் பிரகாஷ் மற்றும் பொதுமக்கள் கடலூர் புதுநகர் போலீசருக்கு தகவல் கொடுத்தனர் அதன் பேரில் கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
கடலூர் பகுதியில் கடந்த 3 நாட்களில் 3 கடைகள் மற்றும் வீடுகளில் பூட்டை உடைத்து பொருட்கள் மற்றும் பணத்தை திருடியதும் நேற்று அதிகாலை ரோட்டில் நடந்து சென்ற நபரை 6 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து கத்தியை காட்டி பணம் மற்றும் செல்போன் பறித்து சென்றனர் மேலும் மற்றொருவரை கடுமையாக தாக்கி செல்போன் பறிக்கும் சமயத்தில் அவர் கூச்சலிட்டதால் மர்ம நபர்கள் தப்பி ஓடினர் நேற்று நள்ளிரவு கடலூர் அருகே விநாயகர் கோவிலில் பூட்டை உடைத்து உண்டியல் மற்றும் பொருட்களை திருடி சென்ற சம்பவம் கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மத்தியில் கடும் பீதியை ஏற்படுத்தி உள்ளது லும் நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் நடைப்பயிற்சி மற்றும் சாலையில் செல்லும் பொதுமக்கள் தற்போது குறைந்த அளவில் செல்வதை காண முடிகிறது. எனவே கடலூர் மாவட்ட போலீசார் சிறப்பு கவனம் செலுத்தி இரவு நேரங்களில் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு கடந்த 3 நாட்களாக நடைபெற்று வரும் கொள்ளை
- பண்ருட்டியில் துணிகரம்: போட்ேடாகிராபர் வீட்டில் நகை- பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
- இவர் தனது குழந்தை பிறந்தநாளை யொட்டி சென்னையில் உள்ள மாமியார் வீட்டுக்கு சென்றார்.
கடலூர்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அப்பாலு பத்தர் தெருவை சேர்ந்தவர் ராஜாராம். போட்ேடா கிராபராக உள்ளார். இவர் தனது குழந்தை பிறந்தநாளை யொட்டி சென்னையில் உள்ள மாமியார் வீட்டுக்கு சென்றார்.
இந்த சந்தர்ப் பத்தை பயன் படுத்திய மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் அங்கிருந்த பீரோவை உடைத்து நகை- பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
வீட்டுக்கதவு திறந்து கிடப்பது கண்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் செல்ேபான் மூலாம் ராஜராமுக்கு தகவல் தெரிவித்தனர். அதிர்ச்சி அடைந்த அவர் உடனே பண்ருட்டிக்கு விரைந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.உள்ளே சென்று பார்த்த போது ரூ. 5 லட்சம் மதிப்பிலான நகை-பணம் கொள்ளை போய் இருந்தது.
இதுகுறித்து ராஜாராம் பண்ருட்டி போலீசில் புகார் செய்தார் போலீஸ் டி.எஸ்.பி. சபிபுல்லா, இன்ஸ்பெக்டர் நந்தகுமார் ஆகியோர் வழக்குபதிந்து கொள்ளை நடந்த வீட்டுக்கு சென்றனர்.
கொள்ளையர்கள் பற்றி துப்புதுலக்க மோப்பநாய் வந்தது. அது வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கொள்ளையர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
- கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் தவறான ஆபரேசன் செய்த டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.
- கடலூர் அரசு மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் மாதம் 19-ந் தேதி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தேன்.
கடலூர்
பண்ருட்டி சிறுவத்தூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி பத்மாவதி. இவர்கள் தங்கள் குழந்தைகளுடன் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் வந்தனர். பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் பூவராகவனிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கடலூர் அரசு மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் மாதம் 19-ந் தேதி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தேன் அன்றைய தினம் எனக்கு ஆபரேஷன் மூலம் ஆண் குழந்தை பிறந்தது. இதனை தொடர்ந்து 11 நாட்கள் கழித்து எனக்கு தொடர்ந்து வயிற்று வலி இருந்ததால் கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மீண்டும் சேர்க்கப்பட்டேன்.
ஆனால் வலி நிற்காத காரணத்தினால் அக்டோபர் மாதம் 15 -ந் தேதி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டேன். இந்த நிலையில் தவறான ஆபரேசன் செய்ததாக டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தோம்.
இதனை தொடர்ந்து 2 முறை அரசு மருத்துவமனை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஆனால் இதற்கு இதனால் வரை பதில் மனு வழங்கவில்லை. ஆகையால் இது சம்பந்தமாக உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் பூவராகவன் உடனடியாக கடலூர் அரசு மருத்துவமனை அதிகாரிகளை தொடர்பு கொண்டு பத்மாவதி அளித்த புகாரின் அடிப்படையில் அது சம்பந்தமாக விசாரணை நடத்தியது தொடர்பாக ஆவண கோப்புகளை உடனடியாக எடுத்து வந்து இதற்கான தீர்வை ஏற்படுத்த வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டார். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
- விருத்தாசலத்திற்கு தடம் எண் 22 அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது.
- பஸ் கோ.மங்கலம் கிராமம் வழியாக சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.
விருத்தாசலம்:
விருத்தாசலம் அருகே சேப்பாக்கம் கிராமம் உள்ளது. இங்கிருந்து விருத்தாசலத்திற்கு தடம் எண் 22 அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது.
இந்த பஸ்சானது சேப்பாக்கத்தில் இருந்து புறப்பட்டு நல்லூர் வழியாக விருத்தாசலம் வந்தடையும். இக்கிராமத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள், பல்வேறு பணிகளுக்காக விருத்தாசலம் செல்லும் தனியார், அரசு ஊழியர்கள் இந்த டவுன் பஸ்சில் தான் செல்லவேண்டும்.
அதன்படி இன்று காலை 7 மணிக்கு இந்த பஸ் சேப்பாக்கம் கிராமத்தில் இருந்து புறப்பட்டது. இந்த பஸ்சினை டிரைவர் சரவணன் (வயது 40) ஓட்டினார். பஸ்சில் 100-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
இந்த பஸ் கோ.மங்கலம் கிராமம் வழியாக சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. தறிகெட்டு ஓடிய அந்த பஸ் சாலை ஓரம் பாசன வாய்க்காலில் தலைக்குப்புற கவிழ்ந்தது.
இதனால் பஸ்சில் வந்த பயணிகள், மாணவ-மாணவிகள் உயிர் பிழைக்க கூச்சல் போட்டனர்.சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக அங்கு ஓடி வந்தனர். இது குறித்து விருத்தாசலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் தீயணைப்புத் துறை, போக்குவரத்து துறை மற்றும் 108 ஆம்புலன்ஸ் போன்றவைகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விருத்தாசலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார், தீயணைப்பு நிலைய அலுவலர் மணி தலைமையிலான வீரர்கள் தலைகுப்புற கவிழந்த பஸ்சில் இருந்த பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.
இவர்கள் அனைவரையும் ஏற்றிச் செல்லும் அளவிற்கு 108 ஆம்புலன்ஸ் கிடைக்காததால், அவ்வழியே மோட்டார் சைக்கிளில் சென்றவர்களும் படுகாயமடைந்தவர்கள் ஏற்றிச் சென்றனர். இவர்கள் அனைவரும் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அப்போது அவ்வழியே வந்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தனது காரினை நிறுத்திவிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும், கூடுதல் ஆம்புலன்ஸ் வரவழைக்கவும், போக்குவரத்து சீர்படுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இச்சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
- சிதம்பரத்தில் வீட்டில் சுருண்டு விழுந்து பிளஸ்-2 மாணவன் பரிதாபமாக இறந்தார்.
- இவர் அண்ணா மலை நகரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
கடலூர்
சிதம்பரம் அண்ணா மலைநகர் போலீஸ் சரகம் வடபாதி பகுதியை சேர்ந்த வர் இளங்கோவன். இவரது மகன் ஹரீஸ் ராகவேந்திரா (வயது 16). இவர் அண்ணா மலை நகரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். நேற்று மாலை இவர் வீட்டில் படித்துக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி சுருண்டு விழுந்தார்.
இதனை பார்த்த பெற்றோர் அதிர்ச்சிய டைந்தனர். உடனடியாக ஹரீஸ் ராகவேந்திராவை மீட்டு சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோ தித்த டாக்டர்கள் ஹரீஸ் ராக வேந்திரா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோத னைக்காக ராஜாமுத்தையா மருத்து வகல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து அண்ணா மலைநகர் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பண்ருட்டி கணிசபாக்கம் கிராமத்தில் குமார், அவரது மகன் டேவிட், மனைவி சாந்தா ஆகிய 3 பேரும் வீட்டின் பின்புறம் எரிசாராய பாக்கெட்டுகள் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
- அவர்களிடம் இருந்து ஏராளமான எரிசாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்
கடலூர்:
பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், (பொ) சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேல் மற்றும் போலீசார் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பண்ருட்டி கணிசபாக்கம் கிராமத்தில் குமார், அவரது மகன் டேவிட், மனைவி சாந்தா ஆகிய 3 பேரும் வீட்டின் பின்புறம் எரிசாராய பாக்கெட்டுகள் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஏராளமான எரிசாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
- கணேசன். பஸ் நிறுத்த பகுதியில் நின்றார். அங்கு சின்னதுரை என்பவர் வந்தார்,
- அவர், கணேசனை வழிமறித்து செல்போன் கேட்டு மிரட்டினார்
கடலூர்;
சிதம்பரம் முத்துமாணிக்கம் தெருவை சேர்ந்தவர் கணேசன். (வயது 26). இவர் கஞ்சி தொட்டிமுனை பஸ் நிறுத்த பகுதியில் நின்றார். அப்போது அங்கு சின்னதுரை என்பவர் வந்தார். அவர் கணேசனை வழிமறித்து செல்போன் கேட்டு மிரட்டினார்.
இதுகுறித்து புகாரின் பேரில் சின்னதுரையை சிதம்பரம் டவுன் போலீசார் கைதுெசய்தனர்.
- பண்ருட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புதுச்சேரி சாராய பாட்டில்கள் விற்கப்படு கிறது.
- பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் (பொ) சாராய விற்பனை தொடர்பான புகார்கள் மீது உடனுக்கு டன் நடவடிக்கை எடுக்கப்பட்டு ௬ பேர் கைது செய்யப்பட்டனர்
கடலூர்:
பண்ருட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புதுச்சேரி சாராய பாட்டில்கள் விற்கப்படு கிறது. இது தொடர்பாக போலீசாரால் தினமும் யாரேனும் ஒருவர் கைது செய்யப்பட்டு சாராயம் பறிமுதல் செய்யப்படுகிறது. இந்நிலையில் பண்ருட்டி மேல்கவரப்பட்டில் கள்ள சாராயம் விற்பனையை தடுத்து நிறுத்தகோரி பெண்கள் உள்பட ஏராள மானோர் போலீஸ் நிலையம் முன்பு நேற்று திரண்டனர்.
சாராய விற்பனையில் ஈடுபட்டவர்களை கைது செய்ய கோரி பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். மேலும், இதுதொடர்பாக போலீஸ் நிலையத்தில் யாரேனும் புகார் தெரிவித்தால் அவர்களைக் கொலை செய்துவிடுவோம் என சாராய வியாபாரிகள் மிரட்டல் விடுப்பதாகவும் கூறினர். இதையடுத்து பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் (பொ) சாராய விற்பனை தொடர்பான புகார்கள் மீது உடனுக்கு டன் நடவடிக்கை எடுக்கப்படு கிறது என்று பொது மக்களிடம் கூறினார். இந்த புகார் மீதும் உடனடி யாக நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
- மாலை வீடுதிரும்பியபோதுராசாப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே எதிரில் வந்த மோட்டார் சைக்கிள் மோதியது.
- பலத்த காயங்களுடன் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
கடலூர்:
பண்ருட்டியை அடுத்த திருவதிகையை சேர்ந்தவர் மோகன் (வயது 55). இவர் தனது மோட்டார் சைக்கிளில் கடலூர் சென்றார். அங்கு பணிகளை முடித்துக் கொண்டு நேற்று மாலை பாலூர் வழியாக வீடு திரும்பினார். அப்போது டி.ராசாப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே வந்த போது எதிரில் வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. பலத்த காயங்களுடன் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இது தொடர்பாக பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேல் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






