search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "collapsed and died"

    • தண்ணீரை குடித்தவுடன் பழனிசாமி அதே இடத்தில் சுருண்டு விழுந்து விட்டார்.
    • கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் காஞ்சிக்கோயில் காந்தி நகரைச் சேர்ந்தவர் பழனி சாமி (52). இவருக்கு திருமண மாகி 2 மகள்கள் உள்ளனர். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரண மாக கடந்த 15 ஆண்டுகளாக பழனிசாமி மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

    பழனிசாமி கடந்த சில ஆண்டுகளாக கருங்கல்பா ளையம், குயிலான் தோப்பு பகுதியில் உள்ள கோசாலை யில் தங்கி மாடுகளை பராமரிக்கும் வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு சுமார் 11 மணியளவில் தன்னுடன் வேலை பார்க்கும் நபரிடம் வயிறு வலிப்பதாக கூறி குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார்.

    தண்ணீரை வாங்கி குடித்தவுடன் பழனிசாமி அதே இடத்தில் சுருண்டு விழுந்துவிட்டார். உடனடியாக 108 ஆம்பு லன்சுக்கு தகவல் தெரி விக்கப்பட்டு மருத்துவக்குழுவினர் வந்து பரிசோ தித்து பார்த்துவிட்டு பழனிசாமி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    இதையடுத்து பழனிசாமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சிதம்பரத்தில் வீட்டில் சுருண்டு விழுந்து பிளஸ்-2 மாணவன் பரிதாபமாக இறந்தார்.
    • இவர் அண்ணா மலை நகரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    கடலூர்

    சிதம்பரம் அண்ணா மலைநகர் போலீஸ் சரகம் வடபாதி பகுதியை சேர்ந்த வர் இளங்கோவன். இவரது மகன் ஹரீஸ் ராகவேந்திரா (வயது 16). இவர் அண்ணா மலை நகரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். நேற்று மாலை இவர் வீட்டில் படித்துக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி சுருண்டு விழுந்தார்.

    இதனை பார்த்த பெற்றோர் அதிர்ச்சிய டைந்தனர். உடனடியாக ஹரீஸ் ராகவேந்திராவை மீட்டு சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோ தித்த டாக்டர்கள் ஹரீஸ் ராக வேந்திரா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோத னைக்காக ராஜாமுத்தையா மருத்து வகல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து அண்ணா மலைநகர் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×