என் மலர்
நீங்கள் தேடியது "துணை மேயர்"
- கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் துணை மேயர் தாமரைச்செல்வனுக்கு முன் ஜாமீன் வழங்கபட்டது.
- நாளை முதல் 15 நாட்களுக்கு குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் காலை 10.30 மணிக்கு கையெழுத்திட வேண்டும்
கடலூர்:
கடலூர் அருகே சுப்ரமணியபுரத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் கொடியை ஏற்றியது சம்பந்தமாக குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் துணை மேயர் தாமரைச்செல்வனுக்கு முன் ஜாமீன் வழங்கபட்டது. கடலூர் மாவட்ட நீதிமன்ற உத்தரவின்படி இன்று காலை துணை மேயர் தாமரைச்செல்வன் குறிஞ்சிப்பாடி குற்றவியல் நீதிமன்ற நீதிபதியின் முன்பு ஆஜராகி ஜாமீன் பெற்றார். இதனை தொடர்ந்து நாளை முதல் 15 நாட்களுக்கு குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் காலை 10.30 மணிக்கு கையெழுத்திட வேண்டும் என நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டது. அப்போது வக்கீல்கள் திருமார்பன், திருஞானமூர்த்தி, குணசீலன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு திட்டம் 2022-2023ன் கீழ் தார்ச்சாலை சீரமைத்தல் பணி தொடக்க விழா நடந்தது.
- நிகழ்ச்சியில் பலர் கலந்துகொண்டனர்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டலத்திற்கு உட்பட்ட 57-வது வார்டில் உள்ள விக்னேஷ்வராநகர் மெயின் வீதியில் தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு திட்டம் 2022-2023ன் கீழ், ரூ.14.89 லட்சம் மதிப்பில் தார்ச்சாலை சீரமைத்தல் பணி தொடக்க விழா நடந்தது. இதனை மாநகராட்சி துணை மேயர் பாலசுப்பிரமணியம் மற்றும் 4-வது மண்டல தலைவர் இல.பத்மநாபன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் வார்டு கவுன்சிலரும், சுகாதார குழு தலைவருமான கவிதா நேதாஜி கண்ணன், உதவி கமிஷனர் செல்வநாயகம், உதவி செயற்பொறியாளர் சிவக்குமார், சுகாதார அலுவலர் முருகன் மற்றும் முன்னாள் கவுன்சிலர் அன்பு பாலு மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கண்ணன், செல்வராஜ், பாஸ்கர், மேனன், குமார், திருநாவுக்கரசு மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
- துணை மேயர் வீடு, அலுவலகங்களில் மர்ம நபர்கள் தாக்குதல்.
- தாக்குதலில் இருசக்கர வாகனம், அலுவலக கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன.
மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் வீடு, அலுவலகங்களில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த துணை மேயர் நாகராஜன், மனைவி செல்வராணி ஆகியோர் வீட்டில் இருந்தபோது, மர்ம நபர்கள் இருவர் தாக்குதல் நடத்தினர்.
தாக்குதலில் இருசக்கர வாகனம், அலுவலக கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக துணை மேயர் வீட்டு வாசலில் ரகளையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- சாலையில் திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு மட்டுமே அபராதம் விதிக்கப்படுகிறது.
- குதிரை தொழுவங்கள் அமைப்பது உள்பட மொத்தம் 91 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
சென்னை:
சென்னை மாநகராட்சி கூட்டத்தில் மாடுகளால் ஏற்படும் பிரச்சனை குறித்த விவாதம் நடந்தபோது, எனது வீட்டுக்கும் தினமும் மாடுகள் வருகின்றன என துணை மேயர் மகேஷ்குமார் தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சி மாதாந்திர கூட்டம், ரிப்பன் மாளிகையில் உள்ள கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு மேயர் பிரியா தலைமை தாங்கினார். துணை மேயா் மகேஷ்குமார் மற்றும் கமிஷனர் குமரகுருபரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டம் தொடங்கியதும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் மறைவுக்கு 2 நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது. இவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் கவுன்சிலர்கள் கருப்பு உடையில் வந்திருந்தனர்.
கூட்டத்தில் பேசிய பெரும்பாலான கவுன்சிலர்கள், தெருநாய் மற்றும் மாடுகளால் மக்களுக்கு ஏற்படும் பிரச்சனை குறித்து பேசினார்கள். சிலர் மாடுகள் சாலையில் சுற்றித்திரிவதால் மாட்டின் உரிமையாளர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் அதிகமாக உள்ளது. இதனால் அவர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, சாலையில் திரியும் மாடுகளுக்கு அபராத தொகையை குறைக்க வேண்டும் என மேயரிடம் கோரிக்கை வைத்தனர்.
பின்னர் மண்டல குழு உறுப்பினர் ஸ்ரீராமலு (தி.மு.க.) பேசியபோது, "சாலையில் மாடுகள் அதிகமாக திரிகிறது. அதை கட்டுப்படுத்த வேண்டும். மாட்டின் உரிமையாளர்களுக்கு விதிக்கப்படும் அபராத தொகை அதிகமாக உள்ளது. அதை குறைக்க வேண்டும்"என்றார்.
அப்போது துணை மேயர் மகேஷ்குமார் குறுக்கிட்டு, "'வீடுகளில் தொழுவங்கள் வைத்து மாடுகள் வளர்த்தால் அபராதம் விதிப்பதில்லை. சாலையில் திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு மட்டுமே அபராதம் விதிக்கப்படுகிறது. எனது வீட்டுக்கும் தினமும் 5 மாடுகள் வருகின்றன" என்றார்.
மேயர் பிரியா பதில் அளித்து பேசும்போது, "தற்போது மாநகராட்சி நிதி மூலம் 15 மண்டலங்களிலும் மாட்டு தொழுவங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வரும் பிப்ரவரி 15-ந்தேதிக்குள் பணிகளை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பணிகள் முடிந்த பின்பு அபராதம் குறைப்பது குறித்து கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும்"என்றார்.
சென்னையில் தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் வகையில் கூடுதலாக 5 இனக்கட்டுப்பாட்டு மையங்கள் அமைத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூறியிருப்பதாவது:-
தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில் புளியந்தோப்பு, கண்ணம்மாபேட்டை, லாயிட்ஸ் காலனி, மீனம்பாக்கம், சோழிங்கநல்லூர் ஆகிய இடங்களில் நாய் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் செயல்பட்டு வருகின்றது. ஏற்கனவே மணலி, மாதவரம், அம்பத்தூர், வளசரவாக்கம், பெருங்குடி ஆகிய மண்டலங்களில் நாய் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்க ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. தற்போது கூடுதலாக திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, ராயபுரம், அண்ணாநகர் மற்றும் அடையாறு ஆகிய 5 மண்டலங்களில் நாய் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட உள்ளது. ஒவ்வொரு கருத்தடை மையத்திலும் ஆண்டுக்கு 6 ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை செய்ய முடியும். ஒவ்வொரு இனக்கட்டுப்பாட்டு மையத்திலும் கால்நடை டாக்டர், அறுவை சிகிச்சை கூடம், ஆய்வுக்கூடம், நாய்கள் அடைக்கும் அறைகள், உணவு மற்றும் மருந்து வழங்கும் இடம் ஆகியவை அமைக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கூட்டத்தில் நீர்வரத்துக்கு இடையூறாக உள்ள 19 பழைய பாலங்கள் இடிக்கப்பட்டு ரூ.45 கோடியில் அதே இடத்தில் 19 புதிய பாலங்கள் கட்டுவது, கடற்கரைகளில் சவாரிக்கு பயன்படுத்தப்படும் குதிரைகளுக்கு சேப்பாக்கம், கலங்கரை விளக்கம், பெசன்ட் நகர் ஆகிய இடங்களில் குதிரை தொழுவங்கள் அமைப்பது உள்பட மொத்தம் 91 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- மதுரை மாநகராட்சி துணை மேயர் மீது, பா.ஜனதா பட்டியல் அணி மாநில செயலாளர் புகார் மனு கொடுத்துள்ளார்.
- மதுரை ஜெய்ஹிந்த்புரம், எம்.ஜி.ஆர் கிழக்குத் தெருவில் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டியுள்ளதாக கூறியுள்ளார்.
மதுரை
மதுரை விளாங்குடி செம்பருத்தி நகரை சேர்ந்தவர் சிவாஜி. பா.ஜனதா பட்டியல் அணி மாநில செயலாளராக உள்ளார். இவர் இன்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்துகலெக்டர் அனீஷ்சேகரிடம் புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
மதுரை ஜெய்ஹிந்த்புரம், எம்.ஜி.ஆர் கிழக்குத் தெருவில் 20 அடி அகல பொதுரோட்டை 80-ம் வார்டு கவுன்சிலரும், மாநகராட்சி துணை மேயருமான நாகராஜன் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டிள்ளார். இதற்கான ஆவணங்களை பத்திர பதிவு அலுவலகத்தில் சரிபார்த்த போது, சுப்பிரமணியன் என்பவரிடம் நாகராஜன் பொது அதிகார ஆவணம் மூலம் 2176 ச.அடி நிலம் வாங்கி உள்ளார்.
அதன் பிறகு மாநகரா ட்சியின் முறையான அனுமதி பெறமால் 544 ச.அடி வீதம் 4 பேருக்கு கிரையம் செய்து கொடுத்து உள்ளார். இதில் 4-வது நபராக நாகராஜன் மனைவி செல்வராணி பெயரில் கிரையம் செய்து தரப்பட்டு உள்ளது.
அங்கு 20 அடி அகல பொதுப்பாதை செல்வதாக பத்திரங்களில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால் நாகராஜன் கீழ்புறம் உள்ள ரோட்டை மறைத்து, 10 அடி இடத்தை முழுவதுமாக ஆக்கிரமித்து வீடு கட்டி உள்ளார். அதேபோல மேலும் ஒருவரும் 10 அடி பொது பாதைக்கு விட்ட இடத்தை ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர்.
மாநகராட்சியில் துணை மேயர் பதவியில் இருந்து கொண்டு சட்டத்திற்கு புறம்பாக மாநகராட்சிக்கு செந்தமான ரோட்டை ஆக்கிரமிப்பு செய்து பொது மக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தி வரும் நாகராஜன் மற்றும் அவராது மனைவி செல்வராணி மீது நடவடிக்கை எடுத்து, மேற்படி அக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்கள் பயன்பாட்டுக்காக புதுப்பா தையை ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.