என் மலர்
கடலூர்
- கடந்த சில தினங்களாக எண்ணூர் தனசேகரன் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக சிறைத்துறை அலுவலர்களிடம் தொடர்ந்து கூறி வந்ததாக தெரிகிறது.
- எண்ணூர் தனசேகரன் அங்கிருந்த சிறை துறை போலீசாரிடம் தான் அதிகளவில் ரத்த அழுத்த மாத்திரை மற்றும் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உள்ளேன் என தெரிவித்தார்.
கடலூர்:
கடலூர் கேப்பர் மலையில் மத்திய சிறைச்சாலை உள்ளது.
இங்கு சென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரன் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய சிறை சாலை ஜெயிலர் மணிகண்டன் சிறை வளாகத்தில் ஆய்வு செய்தார். அப்போது எண்ணூர் தனசேகரன் அறையில் இருந்து செல்போன் மற்றும் சார்ஜர் ஆகியவற்றை பறிமுதல் செய்தார். இதனால் கைதிகளுக்கு வெளிதொடர்பு துண்டிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து எண்ணூர் தனசேகரன் தூண்டுதலின் பேரில் சிலர் சிறை வார்டன் மணிகண்டன் வீட்டில் இல்லாத சமயத்தில் அவரது குடும்பத்தை தீ வைத்து எரித்து கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசார் எண்ணூர் தனசேகரன் உள்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக எண்ணூர் தனசேகரன் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக சிறைத்துறை அலுவலர்களிடம் தொடர்ந்து கூறி வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் எண்ணூர் தனசேகரன் அங்கிருந்த சிறை துறை போலீசாரிடம் தான் அதிகளவில் ரத்த அழுத்த மாத்திரை மற்றும் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உள்ளேன் என தெரிவித்தார்.
இதையடுத்து சிறைத் துறை அலுவலர்கள் தனசேகரனை மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
எண்ணூர் தனசேகரன் தற்கொலைக்கு முயன்றது குறித்து வேலூர் சிறை துறை டி.ஐ.ஜி. விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் சிறைச்சாலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- கடலூரில் இருந்து புதுப்பாளையம் செல்வ தற்காக அரசு பஸ்சில் ஏறினார்.
- ஒரு பெண் நந்தினி வைத்திருந்த கைப்பையில் இருந்த மணிப்பரிசை எடுத்த போது அதிர்ச்சி அடைந்தார்.
கடலூர்:
கடலூர் கூத்தப்பாக் கத்தை சேர்ந்தவர் நந்தினி (வயது 29). இவர் தொண்ட மாநத்தம் தபால் துறை அலுவலகத்தில் பணி புரிந்து வருகின்றார். சம்பவத் தன்று கடலூரில் இருந்து புதுப்பாளையம் செல்வ தற்காக அரசு பஸ்சில் ஏறினார். அப்போது அங்கு இருந்த ஒரு பெண் நந்தினி வைத்திருந்த கைப்பையில் இருந்த மணிப்பரிசை எடுத்த போது அதிர்ச்சி அடைந்தார். அப்போது நந்தினி சத்தம் போட்டதால் அங்கிருந்த பொதுமக்கள் அந்த பெண்ணை மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்திய போது கடலூர் மஞ்சக்குப்பம் அங்கா ளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த தேன்மொழி (27) என்பது தெரிய வந்தது. இது குறித்து திருப்பாதிரிபுலியூர் போலீீசார் வழக்கு பதிவு செய்து தேன்மொழியை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.
- கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் கலந்து கொண்டு பேசினார்.
- சமூக விரோதிகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள நிறைவேற்றப்பட்டன.
கடலூர்:
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடலூர் தெற்கு மாவட்ட நிர்வாகி கள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் பால.அறவாழி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் முல்லைமாறன், ராஜேஷ், அன்பரசன், சுபாஷ், காட்டு ராஜா, ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் மீது தொடர்ந்து அவதூறு பரப்பும் சமூக விரோதிகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள நிறைவேற்றப்பட்டன.
- மணிகண்டன் (வயது 27). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கருணாகரன் மகன் அசோக் (23) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததுள்ளது.
- கத்தி மற்றும் நாட்டு துப்பாக்கியால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினர்
கடலூர்:
நெய்வேலி 21-வது வட்டம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்த லட்சுமணன் மகன் மணிகண்டன் (வயது 27). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கருணாகரன் மகன் அசோக் (23) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததுள்ளது.
இந்நிலையில் சம்பவ த்தன்று மணிகண்டன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அசோக் தனது நண்பர்களுடன் சேர்ந்து மணிகண்டனை சரமாரியாக தாக்கி ஆபாசமாக திட்டி உள்ளனர்.
மேலும் கத்தி மற்றும் நாட்டு துப்பாக்கியால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினர். இதுகுறித்து மணிகண்டன் நெய்வேலி தெர்மல் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அசோக். அரவிந்தன் (23). சுந்தரச் செல்வன் (23). முருகவேல் மகன் கணேஷ்குமார் (28) ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- மாணவர்கள், பஸ் படிகட்டில் தொங்கியபடி ள்ளிக்கு சென்று வருவதாக கூறப்படுகிறது
- இதில் இரண்டு கிராம மாணவர்களுக்கு இடையே அடிக்கடி மோதல் உருவாகி வந்தது.
கடலூர்:
குறிஞ்சிப்பாடி அரசுப் பள்ளியில் நத்தமேடு, குமுடிமுளை கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த மாணவர்கள் தினமும் பஸ்சில் பள்ளிக்கு சென்று வருவது வழக்கம்.
சேர்ந்த மாணவர்கள், பஸ் படிகட்டில் தொங்கியபடி பள்ளிக்கு சென்று வருவதாக கூறப்படுகிறது. இதில் இரண்டு கிராம மாணவர்களுக்கு இடையே அடிக்கடி மோதல் உருவாகி வந்தது.அதன்படி நேற்று முன்தினம் மாலை பள்ளி முடித்து மாணவர்கள் வீடு திரும்பினர். அப்போது அரசு பஸ்சின் படிகட்டில் தொங்கியபடி செல்வதில் மாணவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டதுஇதில் நத்தமேடு மாணவர்கள், குமுடிமுளை மாணவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து குமுடிமுளை மாணவர்கள் மருதூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களில் 2 பேர் மாணவர்களாவர்கள். அவர்களை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், 3 பேரை சிறையில் அடைத்தனர்.
- இவர் அதே பகுதியை சேர்ந்த சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
- அப்போது அவரை தள்ளிவிட்டு சிறுமிதப்பிஓடியுள்ளார்.
கடலூர்:
பண்ருட்டி முத்தாண்டிக்குப்பம் போலீஸ் எல்லைக்குட்பட்ட காட்டுக் கூடலுரை சேர்ந்தவர் சோழன். தொழிலாளி.
இவர் அதே பகுதியை சேர்ந்த சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது ஆசை வார்த்தை கூறி பாலியல் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அப்போது அவரை தள்ளிவிட்டு சிறுமிதப்பிஓடியுள்ளார். இது குறித்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து சோழனை தேடி வந்தனர். கடந்த 2 மாதகாலமாக தலை மறைவாக இருந்த சோழன் பஸ் நிறுத்தம்அருகில்நின்று கொண்டிருந்தபோது அவரை அதிரடியாக கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
கடலூர்:
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் மின்வாரியத்தில் 2018 ல் தொழிற்சங்கங்களுடன் போடப்பட்ட ஒப்பந்தத் தின்படி 1998 முதல் இன்று வரை பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்திட வேண்டும். காலியாக உள்ள கள உதவியாளர் பணி யிடங்களில் ஒப்பந்த ஊழியர்களை நியமித்திட வேண்டும். ஒப்பந்த ஊழி யர்களுக்கு அடையாள அட்டை மற்றும் கருணைத் தொகை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (16-ந் தேதி) கடலூர் சாவடியில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதுஅதன்படி மாநில துணைப் பொதுச் செயலாளர் பழனிவேல் தலைமையில் சி.ஐ.டி.யூ. மாநிலத் துணைத் தலைவர் கருப்பையன் மற்றும் நிர்வாகிகள் கடலூர் செம்மண்டலம் பகுதியில் திரண்டனர். அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரிசங்கர் தலைமையில் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி சப்-இன்ஸ்பெக்டர் கதிர வன் மற்றும் ஏராள மான போலீசார் குவிக்கப்பட்ட னர் பின்னர் போலீசார் கடலூர் சாவடி செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் என தெரிவித்துள்ளீர்கள்? ஏன் கடலூர் செம்மண்டலம் பகுதியில் நிர்வாகிகள் திரண்டு உள்ளீர்கள்? என கேட்டனர். அப்போது ஏராளமான நிர்வாகிகள் வரஉள்ளனர். இதன் காரணமாக அனைவரும் ஒருங்கிணைந்து கடலூர் செம்மண்ட லத்தில் இருந்து செயற்பொறியாளர் அலுவ லகம் வரை ஊர்வலமாக சென்று மறியல் போராட் டத்தில் ஈடுபட உள்ளோம் என தெரிவித்தனர்.
அப்போது போலீசார் ஊர்வலத்திற்கு அனுமதி கிடையாது. உங்கள் போராட்டத்தை நீங்கள் அறிவித்த இடத்தில் சென்று செய்து கொள்ளலாம் என தெரிவித்தனர். அப்போது எங்களது அடிப்படை கோரிக்கை களை வலியு றுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். ஆகை யால் நாங்கள் இங்கி ருந்து ஊர்வலமாக தான் செல்வோம் என தெரி வித்தனர். இதன் காரண மாக போலீசாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட வர்களுக்கும் கடும் வாக்கு வாதம் நடந்து வந்த நிலையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் எங்கள் கோரிக்கைகளை வலி யுறுத்தி அந்த பகுதியில் சென்று நாங்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபடு கிறோம் என தெரிவித்த னர். ஆனால் போலீசார் செம்மண்டலம் பகுதியில் திரண்ட 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை கைது செய்தனர். மேலும் ஏற்கனவே அறிவித்தது போல் மறியல் போராட்டம் வழக்கம் போல் நடை பெறும். அங்கு எங்கள் கோரிக்கைகள் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என நிர்வாகிகள் தெரிவித்தை தொடர்ந்து போலீசார் அங்கிருந்து கலைந்து சென்றனர். இத னால் செயற்பொறியாளர் அலுவலகம் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி யில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
- நூற்றுக் கணக்கான மீனவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் சோனாங்குப்பம் மீனவ கிராமத்திற்கு கடல் வழியாக சென்றனர்.
- பஞ்சநாதனை பயங்கர ஆயுதங்களை கொண்டு குத்தியதில் பஞ்சநாதன் பரிதாபமாக உயிரிழந்தார்.
கடலூர்,:
கடலூர் தேவனாம்பட்டி னம் மற்றும் சோனாங் குப்பம் மீனவர்களுக்கு முன் விரோத தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 15 ஆம் தேதி இவர்களுக்குள் மீண்டும் மோதல் ஏற்பட்டு கடலில் தாக்கிக் கொண்டனர்இதனை தொடர்ந்து கடலூர் தேவனாம்பட்டி னத்தில் இருந்து நூற்றுக் கணக்கான மீனவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் சோனாங்குப்பம் மீனவ கிராமத்திற்கு கடல் வழியாக சென்றனர்.அப்போது சோனாங் குப்பம் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் பஞ்சநாதன் என்பவர் தேவனாம்பட்டி னம் மீனவர்கள் இடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட சென்றார். இதில் ஆக்ரோஷமாக வந்த தேவனாம்பட்டினம் சேர்ந்த மீனவர்கள் பட்டப் பகலில் பஞ்சநாதனை பயங்கர ஆயுதங்களை கொண்டு குத்தியதில் பஞ்சநாதன் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 3 மீனவர்கள் காயமடைந்தனர்.இது குறித்து கடலூர் துறைமுகம் போலீசார் 21 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் இந்த வழக்கு கடலூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.இந்த நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்ட தினகரன் என்பவர் வழக்கு விசாரணையில் இருந்தபோது இறந்து விட்டார். இதனை தொடர்ந்து இன்று நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்து தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக கூறப்பட்டது.
இதனை தொடர்ந்து கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் கடலூர் நீதிமன்ற வளாகம், தேவனாம்பட்டினம், சோனாங் குப்பம் மற்றும் கடற்கரை பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.மேலும் எந்தவித அசம்பாவிதம் ஏற் படாமல் இருக்க ஏராளமான போலீசார் ஆங்காங்கே ரோந்து பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்இது மட்டுமின்றி அந்த பகுதிகளில் காரணமின்றி பொதுமக்கள் கூடாத வகையில் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து இன்று காலை நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு வந்ததுஇந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுபா அன்புமணி வருகிற மார்ச் 4-ந் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தார்.
- காலையில் மருத்துவமனைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு பணம் ரூ.100 வாங்கி கொண்டு சென்றார்,
- தாகர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது மகன் செல்வக்குமாருக்கு தகவல் தெரிவித்தனர்
கடலூர்:
சிதம்பரம் பழைய புவனகிரி ரோடு தொழிலாளர் குடியிருப்பில் வசிப்பவர் சுதாகர் (வயது 42) . இவர் தட்டுவண்டி தொழிலாளி . சம்பவத்தன்று காலையில் மருத்துவமனைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு பணம் ரூ.100 வாங்கி கொண்டு சென்றார். பின்னர் பிற்பகல் 3 மணி அளவில் பெரிய காஜியார் தெருவில் உள்ள ஒரு வீட்டில் சுதாகர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது மகன் செல்வக்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்த அவரது மகன் சிதம்பரம் போலீசில் புகார் செய்தார். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் செல்வக்குமார் தனது தந்தையின் சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து உள்ளார்.
- தனது மனைவியை உறவினர்கள் வீடுகளிலும், பல பகுதிகளிலும் தேடியும் காணவில்லை
கடலூர்:
சிதம்பரம் அருகே தியாகவள்ளி அருகே திருச்சோபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரமாதேவி (வயது 46) இவரது கணவர் கணேசன். ரமாதேவி சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து உள்ளார். இந்நிலையில் கடந்த 25ந் தேதி வீட்டிலிருந்த காணமல் போன தனது மனைவியை உறவினர்கள் வீடுகளிலும், பல பகுதிகளிலும் தேடியும் காணவில்லை என்பதால் புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். கணேசன் கொடுத்த புகாரின் பேரில் புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கடலூர்:
மாற்றுதிறனாளி சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற தொழிலாளி கைது செய்யப்பட்டார்.பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை போலீஸ் எல்லைக்குட்பட்ட கிராமத்தை சேர்ந்த மாற்று திறனாளி சிறுமி வீட்டில் தனியாக இருந்த போதுஅதே பகுதியை சேர்ந்த கரும்பு வெட்டும் கூலிதொழிலாளி காத்தமுத்து(35) சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றபோது அவரை தள்ளிவிட்டு சிறுமிதப்பி ஓடி விட்டார்
இது குறித்து மகளிர் போலீஸ நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து கரும்பு வெட்டும்தொழிலாளி காத்த முத்துவைதேடி வந்தனர்.கடந்த ஓராண்டு காலமாக தலை மறைவாக இருந்த காத்தமுத்து நேற்று புதுப்பேட்டை பஸ் நிறுத்தம்அருகில்நின்று கொண்டிருந்தபோது அவரை அதிரடியாக கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
- இந்த குரங்குகள் வீடுகளில் உள்ளே புகுந்தும், பொது மக்களை விரட்டியும், கடித்தும் வருகின்றன.
- ஒரு குரங்கு இருசக்கர வாகனம் நிறுத்தும் இடத்தில் மயங்கிய நிலையில் கிடந்தது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் வேப்பூரில் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குரங்குகள் உள்ளன.இந்த குரங்குகள் அவ்வப்போது வீடுகளில் உள்ளே புகுந்தும், பொது மக்களை விரட்டியும், கடித்தும் வருகின்றன. நடை பாதையில் பொதுமக்கள் வாங்கிச் செல்லும் தின்பண்டங்களை விரட்டி பிடித்து பறித்து செல்கின்றன. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்இந்நிலையில் ஒரு குரங்கு இருசக்கர வாகனம் நிறுத்தும் இடத்தில் மயங்கிய நிலையில் கிடந்தது. இதை அறிந்த சமூக ஆர்வலர் ஹில்சன் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். உடனே வேப்பூர் கால்நடை டாக்டர் வசந்த் மற்றும் விருத்தாசலம் வனச்சரகத்தின் வனவர் பன்னீர்செல்வம் மற்றும் வனக்காப்பாளர் ஆறுமுகம் ஆகியோர் விரைந்து வந்து அந்த குரங்கிற்கு சிகிச்சை அளித்தனர்.
பின்னர் கால்நடை மருத்துவர் கூறும் போது, குரங்கு விஷம் கலந்த உணவை சாப்பிட்டு உள்ளதாக தெரிவித்தார். இதை அடுத்து மீண்டும் அந்த குரங்கை வனத்துறையினர் அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று மேலும் மருத்துவ சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் குரங்கிற்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதற்காக முயற்சி செய்த சமூக ஆர்வலர் ஹில்சனுக்கு அப்பகுதியினர் பாராட்டு தெரிவித்தனர்.






