என் மலர்
உள்ளூர் செய்திகள்

பண்ருட்டியில் காங்கிரஸ் பிரமுகர் விஷம் குடித்து தற்கொலை
- இவர் நேற்று மாலை தனது வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சித்தார்.
- கிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்து விட்டார்.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த கண்டரக்கோட்டை காலணி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் அரிகிருஷ்ணன் (வயது 67). கடலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர். மாநில காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர். இவர் நேற்று மாலை தனது வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சித்தார்.
மயங்கிய நிலையில் இருந்த இவரை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்து விட்டார். இதுகுறித்து பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






