என் மலர்tooltip icon

    கடலூர்

    • சிதம்பரம் பள்ளிப்படை சேர்ந்த மூதாட்டி சின்ன பொண்ணு மற்றும் அவருடன் வந்த நபர் தங்கள் மனுக்களை கொடுக்கும் போது திடீரென்று கத்தி கூச்சலிட்டனர்.
    • இன்ஸ்பெக்டர் துர்கா மற்றும் போலீசார் உடனடியாக அந்த நபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமையில் இன்று காலை மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமையில் இன்று காலை மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை வழங்கினர். இந்த நிலையில் இன்று காலை கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்து வந்த நிலையில் சிதம்பரம் பள்ளிப்படை சேர்ந்த மூதாட்டி சின்ன பொண்ணு மற்றும் அவருடன் வந்த நபர் தங்கள் மனுக்களை கொடுக்கும் போது திடீரென்று கத்தி கூச்சலிட்டனர்.கடந்த 5 ஆண்டுகளாக பட்டா வேண்டி மனு அளித்தும் இது நாள் வரை நடவடிக்கை எடுக்கவில்லை. இது தொடர்பாக கடலூர் கலெக்டர் அலுவலகம், சிதம்பரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், தாசில்தார் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடர்ந்து மனு அளித்தும் வருவாய்த்துறை அதிகாரிகள் அலட்சியமாக இருந்து வருவதால் மனவேதனையில் இருந்து வருகின்றோம்.

    இதற்கான நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்துவோம் என தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் துர்கா மற்றும் போலீசார் உடனடியாக அந்த நபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனுவாக அளித்து உள்ளீர்கள். இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பார்கள் என கூறி அங்கிருந்து கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினார்கள். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பாக ணப்பட்டது.பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை வழங்கினர். இந்த நிலையில் இன்று காலை கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்து வந்த நிலையில் சிதம்பரம் பள்ளிப்படை சேர்ந்த மூதாட்டி சின்ன பொண்ணு மற்றும் அவருடன் வந்த நபர் தங்கள் மனுக்களை கொடுக்கும் போது திடீரென்று கத்தி கூச்சலிட்டனர்.கடந்த 5 ஆண்டுகளாக பட்டா வேண்டி மனு அளித்தும் இது நாள் வரை நடவடிக்கை எடுக்கவில்லை.

    இது தொடர்பாக கடலூர் கலெக்டர் அலுவலகம், சிதம்பரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், தாசில்தார் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடர்ந்து மனு அளித்தும் வருவாய்த்துறை அதிகாரிகள் அலட்சியமாக இருந்து வருவதால் மனவேதனையில் இருந்து வருகின்றோம்.

    இதற்கான நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்துவோம் என தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் துர்கா மற்றும் போலீசார் உடனடியாக அந்த நபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனுவாக அளித்து உள்ளீர்கள். இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பார்கள் என கூறி அங்கிருந்து கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினார்கள். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார்.இதனை கண்ட அவரது மனைவி, ஏன் இது போல் குடித்துவிட்டு வருகிறாய்? என்று கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்து கேபிள் வயரால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கடலூர்:

    மேல்புவனகிரியை சேர்ந்த ராமமூர்த்தி (வயது 62). சிதம்பரத்தில் கறிக்கடை வைத்திருந்தார். நேற்று மாலை இவர், கறி கடையை மூடி விட்டு குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார்.இதனை கண்ட அவரது மனைவி, ஏன் இது போல் குடித்துவிட்டு வருகிறாய்? என்று கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த ராமமூர்த்தி அவரது வீட்டின் மேல் மாடியில் உள்ள ரூமிற்கு சென்றார். வெகு நேரம் ஆகியும் அவர் கீழே வரவில்லை.

    சந்தேகமடைந்த ராமமூர்த்தியின் மனைவி மேலே சென்று பார்த்தபோது ரூமில் கேபிள் வயரால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.அக்கம் பக்கம் உள்ளவர்களின் உதவியுடன் அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். இதையடுத்து இவரது உடல் பிரேத பரிசோதனைக்கு சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.அங்கு திரண்ட உறவினர்கள், ராமமூர்த்தியின் சாவில் சந்தேகம் உள்ளதாக கூறினர். இதையடுத்து ராமமூர்த்தியின் உடலை பிரேத பரிசோதனைக்கு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கணபதி (வயது 50). இவர் நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில்பராமரிப்பு துப்புரவாளராகப் பணியாற்றி வந்தார்.
    • இவர் வழியில், வேகத்தடையில் நிலைத்தடுமாறி கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார்,சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்,

    கடலூர்:

    நெய்வேலியில் வட்டம் 13-ல் வசித்து வருபவர் கணபதி (வயது 50). இவர் நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்திற்கு சொந்தமான நீச்சல் குளத்தில் ஒப்பந்த அடிப்படையில் பராமரிப்பு துப்புரவாளராகப் பணியாற்றி வந்தார்.இந்நிலையில் தனது மோட்டார் சைக்கிளில் குறவன்குப்பத்திற்கு நேற்று புறப்பட்டுச் சென்றார். வேலுடையான்பட்டு கோயில் அருகே சென்றபோது வேகத்தடையில் நிலைத்தடுமாறி கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார்.

    உடனடியாக அருகில் உள்ள பொதுமக்கள் அவரை மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கணபதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இது குறித்து அவரது மனைவி செல்வி கொடுத்த புகாரின் பேரில் நெய்வேலி நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பரணிஸ்ரீ (வயது 20). இவர் கடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. தமிழ் 3-ம் ஆண்டு படித்து வருகின்றார்.
    • கல்லூரிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை.மாணவியின் தாய் கமலா போலீ!ஸ்நிலையத்தில் புகார் கொடுத்தார்

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த ஆண்டிப்பாளை யத்தை சேர்ந்தவர் பாரதி. இவரது மகள் பரணிஸ்ரீ (வயது 20). இவர் கடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. தமிழ் 3-ம் ஆண்டு படித்து வருகின்றார். இவர் கடந்த 14-ந்தேதி கல்லூரிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை   

    இவரை பல இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்காததால் பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் மாணவியின் தாய் கமலா புகார் கொடுத்தார். இதில் அங்குசெட்டி பாளையத்தை சேர்ந்த பரணிதரன் என்பவர் ஆசைவார்த்தை கூறி அழைத்து சென்றதாக கூறியுள்ளார்.இது குறித்து பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்கு பதிவு செய்த காணாமல் போன கல்லூரி மாணவி பரணிஸ்ரீ யை தேடி வருகின்றனர்.

    • லாரியில் கரும்பு ஏள்றிக் கொண்டு வந்த போது சாலையின் ஓரத்தில் வாகனத்தை நிறுத்துவதற்கு டிரைவர் சென்று கொண்டிருந்தார்.
    • இதனை பார்த்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சடைந்து ஏராளமானோர் அங்கு திரண்டனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த நெல்லிக்குப்பத்தில் தனியார் சர்க்கரை ஆலை உள்ளது. தற்போது சர்க்கரை அலையில் கரும்பு அரவை நடைபெற்று வருவதால் நெல்லிக்குப்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தினந்தோறும் டிராக்டர்கள் மற்றும் பல்வேறு வாகனங்கள் மூலம் கரும்புகள் ஏற்றி வந்து அரவை நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் இன்று காலை லாரியில் கரும்பு ஏள்றிக் கொண்டு வந்த போது சாலையின் ஓரத்தில் வாகனத்தை நிறுத்துவதற்கு டிரைவர் சென்று கொண்டிருந்தார். அப்போது மணல் பகுதியான சாலையில் திடீரென லாரி கவிழ்ந்தது.

    அப்போது சாலையின் ஓரத்தில் இருந்த வீட்டில் சுவர் பகுதியில் கரும்பு கட்டுகள் சரிந்தன. இதன் காரணமாக வீட்டின் அருகாமையில் இருந்த தகர சீட்டுகள் நசுங்கி பாதிப்படைந்தன. இதனை பார்த்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சடைந்து ஏராளமானோர் அங்கு திரண்டனர். மேலும், அந்த பகுதியை சேர்ந்த கவுன்சிலர்கள் பூபாலன் ராணி மற்றும் பலர் ஆலை நிர்வாகத்திடம் இது போன்ற விபத்துக்கள் அடிக்கடி நடைபெறுவதால் இதற்கு தீர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். தகவல் அறிந்த நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

    • இவ்வழியாக சென்று வருவதோடு பாதசாரிகளும் சாலை ஓரத்தில் நடந்து சென்று வருகின்றனர்.
    • தரம் நாளடைவில் பாதிப்பு ஏற்படக்கூடிய நிலை உருவாகியுள்ளது.

    கடலூர்:

    சென்னையில் இருந்து புதுச்சேரி கடலூர் வழியாக நாகப்பட்டினத்திற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதன் காரணமாக மிக முக்கிய வழித்தடங்களாக இருப்பதால் கடலூர் நகரின் வழியாக 24 மணி நேரமும் வாகனங்கள் போக்குவரத்து இருந்து வருகின்றன. இதில் மிக முக்கியமாக கருதக்கூடிய பாலமாக கடலூர் அண்ணா பாலம் இருந்து வருகின்றன. இந்த பாலம் கெடிலம் ஆறு குறுக்கே இருந்து வருகின்றது. மேலும் கடலூர் நகரின் முக்கிய இணைப்பு பாலமாக செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக கடலூர் மக்களின் மிக முக்கிய அத்தியாவசிய பாலமாக இருந்து வருவதால் அனைத்து வாகனங்களும் இவ்வழியாக சென்று வருவதோடு பாதசாரிகளும் சாலை ஓரத்தில் நடந்து சென்று வருகின்றனர். இந்த நிலையில் பாலத்தின் நடுவே தற்போது குண்டு குழியுமாக இருப்பதோடு பாலத்தில் உள்ள இரும்பு கம்பிகள் பெயர்ந்து மேலே வந்துள்ளது. இவ்வழியாக வாகனங்கள் அதிகளவில் சென்று வருவதால் பாலத்தின் தரம் நாளடைவில் பாதிப்பு ஏற்படக்கூடிய நிலை உருவாகியுள்ளது.

    மேலும் பாலத்தில் அதிகளவில் அதிர்வுகள் ஏற்பட்டு வருவதால் நாளுக்கு நாள் சாலையில் பள்ளம் அதிகரித்து வருவதோடு வாகனங்கள் சாலை ஓரத்தில் செல்லும்போது பாதசாரிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. சில நேரங்களில் பாதசாரிகள் மீது வாகனங்கள் மோதி விபத்தும் ஏற்பட்டு வருவதையும் காண முடிகிறது .இந்த நிலையில் கனரக வாகனங்கள் செல்லும் சமயத்தில் அதிக அதிர்வலைகள் ஏற்படும் நேரத்தில் அவ்வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் மற்றும் மக்களுக்கு அதிர்ச்சி ஏற்படக்கூடிய நிலையும் உருவாகி உள்ளது. ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மிக முக்கியமாக கருதக்கூடிய அண்ணா பாலத்தை உரிய முறையில் ஆய்வு செய்து பாலத்தின் தரமும் சாலையில் ஏற்பட்டுள்ள குண்டும் குழியுமானதை சரி செய்து உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் சாலையின் மேலே உள்ள இரும்பு கம்புகளை சரி செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • மேயர் சுந்தரி ராஜா உத்தரவின் பேரில் மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன் மேற்பார்வையில் பணிகள் நடைபெற்று வருகிறது.
    • கடும் துர்நாற்றம் வீசி வருவதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட 45 வார்டுகளில் துப்புரவு ஊழியர்கள் தினந்தோறும் குப்பைகளை அகற்றி மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து கொண்டு சென்று வருகின்றனர். கடலூர் மாநகராட்சியில் தற்போது குப்பை கிடங்கு இல்லாததால் 3இடங்களில் மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து உடனுக்குடன் குப்பைகளை அகற்றும் நடவடிக்கையில் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா உத்தரவின் பேரில் மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன் மேற்பார்வையில் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் கடலூர் மாநகராட்சி பகுதியில் குப்பை கிடங்கு இல்லாததால் ஆங்காங்கே குப்பைகள் உடனுக்குடன் அகற்ற முடியாத நிலையில் துப்புரவு ஊழியர்கள் இருந்து வருகின்றனர். 

    இதன் காரணமாக கடலூர் மாநகராட்சி பகுதியில் உடனுக்குடன் குப்பைகளை அகற்ற முடியாத காரணத்தினால் ஆங்காங்கே குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசி வருவதோடு நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. இதில் கடலூர் மஞ்சக்குப்பம் சொரக்கல்பட்டு பகுதியில் குப்பை தொட்டிகள் முழுவதும் கழிவுகள் மற்றும் குப்பைகள் நிரம்பி சாலையில் சிதறி இருக்கின்றது இதனை நாய், பன்றிகள் கிளறி செல்வதால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருவதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இது சம்பந்தமாக அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். ஆகையால் அதிகாரிகள் சுகாதாரத்திற்கு தனி கவனம் செலுத்தி பொதுமக்களின் அடிப்படை பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். 

    • தொடர்ச்சியாக 24 மணிநேரமும் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
    • இசைப்பாடல்கள், வாய்ப்பாட்டு ஆகியன நடைபெற்றது.

    கடலூர்:

    திருவதிகை வீரட்டா னேசுவரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது. இதை யொட்டி மூலவர், அம்பாள் மற்றும் பிரகார லிங்க திருமேனிக்கு 108 மூலிகை திரவியங்களால் 4 கால மகா அபிஷேகம் நடந்தது. சரக்கொன்றை நாதருக்கு சப்தநதி, பஞ்சகங்கை புண்ணிய தீர்த்தங்களால் நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை தொடர்ச்சியாக 24 மணிநேரமும் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

    திருநாவுக்கரசு திரு தொண்டு அடியார்கள் கூட்டம் சார்பில் இரவு முழு வதும் சொற்பொழிவு, பரத நாட்டியம், தேவாரம், திருவாசகம், இசைப்பா டல்கள், வாய்ப்பாட்டு ஆகியன நடைபெற்றது.இன்று அதிகாலை 5.30 மணிக்கு அதி உன்னத அதிகாரநந்தி கோபுர தரிசனம் நடந்தது.விழா வுக்கான ஏற்பாடு களை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன், ஆய்வாளர் ஸ்ரீதேவி, செயல் அலுவலர் மகாதேவி, சிவாச்சாரியார்கள், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • காலை 6 மணி முதல் தொடங்கப்பட்ட தேர்வில் ஏராளமான வீரர்கள் ஆர்வ முடன் கலந்து கொண்டனர்.
    • 14 வயது முதல் 24 வயதிற் குட்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.

    கடலூர்:

    தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் சங்கம் சார்பில், வேகப்பந்து வீச்சாளர் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் சிறப்பு பயிற்சிக் கான வீரர்கள் தேர்வு கடலூர் அண்ணா விளை யாட்டு மைதானத்தில் நடை பெற்றது. இதில் நேற்று சுழற் பந்து வீரர்களுக்கான தேர்வு நடைபெற்றது. இன்று காலை வேகப்பந்து வீரர்களுக்கான தேர்வு நடை பெற்று வருகிறது. கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் காலை 6 மணி முதல் தொடங்கப்பட்ட தேர்வில் ஏராளமான வீரர்கள் ஆர்வ முடன் கலந்து கொண்டனர். தேர்வு இன்று மாலை 6 மணி வரை நடக்கிறது.

    இந்த போட்டியில் 14 வயது முதல் 24 வயதிற் குட்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். தேர்வில் பங்கேற்கும் வீரர்கள் வெள்ளை நிற உடை அணிந்து வந்தனர். தமிழ் நாடு கிரிக்கெட் அசோசி யேஷன் சங்க செயலாளர் பழனி தலைமையில் கடலூர் மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் பாஸ்கரன் செயலாளர் கூத்தரசன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்த தேர்வில் கடலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களை சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் சிறந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

    • 30 வயது பெண் தனது வீட்டில் தோட்டத்தில் உள்ள பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது குரு என்பவர் மறைந்து நின்று பார்த்ததாக கூறப்படுகிறது.
    • மனைவி இரண்டு பேரும் இளம்பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    கடலூர்:

    கடலூர் அடுத்த நெல்லிக்குப்பம் சேர்ந்த 30 வயது பெண் தனது வீட்டில் தோட்டத்தில் உள்ள பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது குரு என்பவர் மறைந்து நின்று பார்த்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பெண் குருவை தட்டி கேட்டார்.

    அப்போது இருவருக்கும் வாக்குவதம் ஏற்பட்டது. இதில் குரு மற்றும் அவரது மனைவி இரண்டு பேரும் இளம்பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து குருவை அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவத்தில் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

    • வீட்டில் இருந்து பள்ளிக்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீட்டிற்கு வரவில்லை.
    • திடீரென்று இளம் பெண் காணாமல் சென்றது தெரிய வந்துள்ளது

    கடலூர்:

    கடலூர்முதுநகர் சேர்ந்த 23 வயது பெண் தனியார் பள்ளியில் கணக்காளராக பணிபுரிந்து வருகிறார். சம்பத்தன்று தனது வீட்டில் இருந்து பள்ளிக்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீட்டிற்கு வரவில்லை.இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் இளம்பெண்ணை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் காணாமல் போன இளம் பெண்ணுக்கும், வாலிபர் ஒருவருக்கும் பேஸ்புக்கில் பழக்கம் ஏற்பட்டதாகவும், இதன் மூலம் 2 பேரும் வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பேசி வந்த நிலையில் திடீரென்று இளம் பெண் காணாமல் சென்றது தெரிய வந்துள்ளது. இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.

    • 1 ஆம் தேதி முதல்வரின் பிறந்த நாள் வருகிறது. ஆகையினால் இங்கு எழுத வேண்டாம் என ஆட்சேபணை தெரிவித்தனர்.

    கடலூர்:

    பா.ம.க. நிறுவனர் மரு.ராமதாஸ் வரும் 21-ம் தேதி சென்னையில் துவங்கி, 28-ம் தேதி மதுரையில் நிறைவு செய்யும் வகையில் தமிழைத் தேடி எனும் விழிப்புணர்வு பரப்புரை பயணத்தை நடத்த உள்ளார். அரசியல் சார்பில்லாமல், பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் நடத்தும் இந்த நிகழ்ச்சிக்காக கடலுார் வடக்கு மாவட்டம் பா.ம.க. சார்பில், மாவட்ட செயலாளர் ஜெகன் பல்வேறு இடங்களில் துண்டு பிரசுரங்களை வழங்கியும், சுவர் விளம்பரம் எழுதும் பணியையும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.

    இந்நிலையில், நேற்று, சென்னை கும்பகோணம் சாலையில் உள்ள வீராணம் நீரேற்றும் மையத்தின் சுவரில் விளம்பரம் எழுதுவதற்கான தீவிர பணியில் பா.ம.க.வினர் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த தி.மு.க.வினர் சிலர், வரும் 1 ஆம் தேதி முதல்வரின் பிறந்த நாள் வருகிறது. ஆகையினால் இங்கு எழுத வேண்டாம் என ஆட்சேபணை தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த நெய்வேலி சரக டி.எஸ்.பி. ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது உள்ளிட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பா.ம.க. வடக்கு 

    ×