search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Questioning"

    • சிதம்பரம் பள்ளிப்படை சேர்ந்த மூதாட்டி சின்ன பொண்ணு மற்றும் அவருடன் வந்த நபர் தங்கள் மனுக்களை கொடுக்கும் போது திடீரென்று கத்தி கூச்சலிட்டனர்.
    • இன்ஸ்பெக்டர் துர்கா மற்றும் போலீசார் உடனடியாக அந்த நபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமையில் இன்று காலை மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமையில் இன்று காலை மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை வழங்கினர். இந்த நிலையில் இன்று காலை கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்து வந்த நிலையில் சிதம்பரம் பள்ளிப்படை சேர்ந்த மூதாட்டி சின்ன பொண்ணு மற்றும் அவருடன் வந்த நபர் தங்கள் மனுக்களை கொடுக்கும் போது திடீரென்று கத்தி கூச்சலிட்டனர்.கடந்த 5 ஆண்டுகளாக பட்டா வேண்டி மனு அளித்தும் இது நாள் வரை நடவடிக்கை எடுக்கவில்லை. இது தொடர்பாக கடலூர் கலெக்டர் அலுவலகம், சிதம்பரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், தாசில்தார் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடர்ந்து மனு அளித்தும் வருவாய்த்துறை அதிகாரிகள் அலட்சியமாக இருந்து வருவதால் மனவேதனையில் இருந்து வருகின்றோம்.

    இதற்கான நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்துவோம் என தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் துர்கா மற்றும் போலீசார் உடனடியாக அந்த நபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனுவாக அளித்து உள்ளீர்கள். இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பார்கள் என கூறி அங்கிருந்து கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினார்கள். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பாக ணப்பட்டது.பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை வழங்கினர். இந்த நிலையில் இன்று காலை கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்து வந்த நிலையில் சிதம்பரம் பள்ளிப்படை சேர்ந்த மூதாட்டி சின்ன பொண்ணு மற்றும் அவருடன் வந்த நபர் தங்கள் மனுக்களை கொடுக்கும் போது திடீரென்று கத்தி கூச்சலிட்டனர்.கடந்த 5 ஆண்டுகளாக பட்டா வேண்டி மனு அளித்தும் இது நாள் வரை நடவடிக்கை எடுக்கவில்லை.

    இது தொடர்பாக கடலூர் கலெக்டர் அலுவலகம், சிதம்பரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், தாசில்தார் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடர்ந்து மனு அளித்தும் வருவாய்த்துறை அதிகாரிகள் அலட்சியமாக இருந்து வருவதால் மனவேதனையில் இருந்து வருகின்றோம்.

    இதற்கான நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்துவோம் என தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் துர்கா மற்றும் போலீசார் உடனடியாக அந்த நபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனுவாக அளித்து உள்ளீர்கள். இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பார்கள் என கூறி அங்கிருந்து கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினார்கள். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    • வேளாண் பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும்.
    • தருமபுரி, நீலகிரியில் நியாய விலை கடைகள் மூலம் கேழ்வரகு 2 கிலோ வீதம் வழங்க அனுமதி.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் சாா்பில் தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் சம்பா நெல் கொள்முதல் தொடா்பான முத்தரப்புக் கூட்டம் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.

    அமைச்சர்கள் சக்கரபாணி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தலைமை கொறடா கோவி செழியன், உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி விஜயன், வேளாண்மை துறை இயக்குனர் அண்ணாதுரை, அவர் பொருள் வாணிபாகளாக இயக்குனர் பிரபாகர், கல்யாணசுந்தரம் எம். பி . ஆகியோர் முன்னிலை வகித்தனர். தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வரவேற்றார்.

    இந்தக் கூட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சம்பா நெல் கொள்முதல் தொடர்பாக பேசினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    வரும் நிதியாண்டில் போடப்படும் மூன்றாவது வேளாண் பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு புதிய திட்டங்கள் அதிகமாக அறிவிக்கப்படும்.

    அடுத்த ஆண்டு சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டு உள்ளதால், அது தொடா்பாக பட்ஜெட்டில் அறிவிப்பு இடம்பெறும். தருமபுரி, நீலகிரியில் நியாய விலைக் கடைகள் மூலம் கேழ்வரகு 2 கிலோ வீதம் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பது, நெல் கொள்முதலின் போது ஏற்படும் பிரச்னைகள் தொடா்பாக விவசாயிகளிடமிருந்தும், விவசாய சங்கங்களிடமிருந்தும் கருத்துகள் கேட்டறியப்பட்டன.

    கடந்த முறை நடத்தப்பட்ட கூட்டத்தின் அடிப்படையில், நிகழாண்டு அனைத்து நெல்லும் கொள்முதல் செய்யப்பட்டு, அரைவைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    முதல்வரின் ஆலோசனையைப் பெற்று உணவுத் துறை அமைச்சா், துறை அலுவலா்கள் முழுவீச்சில் நடவடிக்கை எடுத்ததால், நெல் மூட்டைகள் திறந்தவெளியில் கிடக்காமல், கிடங்குகளுக்கு அனுப்பப்பட்டன. இவை அனைத்தும் அரைவை செய்யப்பட்டு, அரிசியாக்கப்பட்டு, நியாய விலை கடைகள் மூலம் பொதுமக்கள் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

    சம்பா அறுவடைக்கு தேவையான எந்திரங்கள் எந்தெந்த பகுதியில் இருக்கின்றன என்பதை விவசாயிகள் அறிந்து கொள்ளும் வகையில் உழவன் செயலியில் தகவல் பதிவு செய்யப்படுகிறது.

    இதே போல எந்திரத்துக்கு வாடகைத்தொகை இவ்வளவுதான் வாங்க வேண்டும் என நிர்ணயமும் செய்யப்படுகிறது. சீர்காழி பகுதியில் பலத்த மழை 32,700 ஹெக்டேர் பயிர்கள் பாதிக்கப்பட்டன.

    இதில் 33 சதவீத்துக்கும் அதிகமாக பாதிக்கப்பட்ட பயிர்கள் கணக்கெடுப்பு செய்யப்பட்டு நிவாரணத்துக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த கூட்டத்தில் கலெக்டர்கள் அருண் தம்பராஜ் ( நாகை), காயத்ரி கிருஷ்ணன் ( திருவாரூர்), லலிதா ( மயிலாடுதுறை ) , எம்.எல்.ஏ.க்கள் துரை சந்திரசேகரன்,, டி.கே.ஜி. நீலமேகம், கலைவாணன், அன்பழகன், அண்ணாதுரை, பன்னீர்செல்வம், ஜவாஹிருல்லா, மாரிமுத்து, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவி உஷா புண்ணியமூர்த்தி, மாநகராட்சி மேயர் சண் ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×