என் மலர்
நீங்கள் தேடியது "Wall Advertising"
- 1 ஆம் தேதி முதல்வரின் பிறந்த நாள் வருகிறது. ஆகையினால் இங்கு எழுத வேண்டாம் என ஆட்சேபணை தெரிவித்தனர்.
கடலூர்:
பா.ம.க. நிறுவனர் மரு.ராமதாஸ் வரும் 21-ம் தேதி சென்னையில் துவங்கி, 28-ம் தேதி மதுரையில் நிறைவு செய்யும் வகையில் தமிழைத் தேடி எனும் விழிப்புணர்வு பரப்புரை பயணத்தை நடத்த உள்ளார். அரசியல் சார்பில்லாமல், பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் நடத்தும் இந்த நிகழ்ச்சிக்காக கடலுார் வடக்கு மாவட்டம் பா.ம.க. சார்பில், மாவட்ட செயலாளர் ஜெகன் பல்வேறு இடங்களில் துண்டு பிரசுரங்களை வழங்கியும், சுவர் விளம்பரம் எழுதும் பணியையும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், நேற்று, சென்னை கும்பகோணம் சாலையில் உள்ள வீராணம் நீரேற்றும் மையத்தின் சுவரில் விளம்பரம் எழுதுவதற்கான தீவிர பணியில் பா.ம.க.வினர் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த தி.மு.க.வினர் சிலர், வரும் 1 ஆம் தேதி முதல்வரின் பிறந்த நாள் வருகிறது. ஆகையினால் இங்கு எழுத வேண்டாம் என ஆட்சேபணை தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த நெய்வேலி சரக டி.எஸ்.பி. ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது உள்ளிட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பா.ம.க. வடக்கு
நத்தம்:
திண்டுக்கல் பாராளு மன்றத் தொகுதிக்குட்பட்டது நத்தம் சட்டமன்ற தொகுதியாகும்.இதில் தேர்தல் நன்னடத்தை விதிமுறை அமலுக்குவந்ததை தொடர்ந்து நத்தம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரசியல்கட்சி சுவர் விளம்பரங்கள், கொடிக்கம்பங்கள், மற்றும் விளம்பர பேனர்கள் மாவட்ட நிர்வாகம் உத்தரவின் பேரில் அகற்றப்பட்டது. மேலும் பஸ்நிலையம், கோவில்பட்டி, அவுட்டர், மூன்றுலாந்தர், மீனாட்சிபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
இதுதவிர சுவர் விளம்பரங்கள், விளம்பர பேனர்கள், வைப்பதற்கு அனுமதி நிறுத்தப்பட்டுள்ளது. இந்த பணிகளில் பேரூராட்சி செயல் அலுவலர் சரவணக்குமார், துப்புரவுபணி மேற்பார்வையாளர் சடகோபி,மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.






