என் மலர்
நீங்கள் தேடியது "ரவுடி தற்கொலை முயற்சி"
- புதிய பஸ்நிலையம் அருகே உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற நுழைவுவாசல் வளைவில் மரக்கிளை வழியாக ஏறி நின்றார்.
- பாட்டிலில் வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி தற்கொலை செய்யப்போவதாக அய்யனார் மிரட்டினார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள பாதிரியாபுலியூர் கிராமத்தை சேர்ந்தவர் அய்யனார்.
இவர் மீது திருட்டு, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் மயிலம் போலீஸ் நிலையத்தில் உள்ளது. பிரபல ரவுடியான இவரை கோர்ட்டில் ஆஜராகும்படி தகவல் தெரிவிப்பதற்காக மயிலம் போலீசார் நேற்று அய்யனார் வீட்டுக்கு சென்றனர். அப்போது அய்யனார் அங்கு இல்லை. அவரது சகோதரி மட்டும் இருந்தார்.
அவரிடம் போலீசார் அய்யனாரை உடனடியாக கோர்ட்டில் ஆஜராகும்படி தெரிவித்தனர். பின்னர் அங்கிருந்து மோட்டார் சைக்கிள், செல்போன் ஆகியவற்றை போலீசார் எடுத்து சென்றனர். இந்த தகவல் அய்யனாருக்கு தெரியவந்தது. எனவே அய்யனார் இன்று காலை விழுப்புரம் வந்தார்.
அப்போது புதிய பஸ்நிலையம் அருகே உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற நுழைவுவாசல் வளைவில் மரக்கிளை வழியாக ஏறி நின்றார். அப்போது பாட்டிலில் வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி தற்கொலை செய்யப்போவதாக அய்யனார் மிரட்டினார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீஸ் டி.எஸ்.பி. பார்த்திபன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், செல்வராஜ் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் வேல்முருகன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
அப்போது தீயணைப்பு வீரர்கள் ஏணி மூலம் நுழைவுவாயில் பகுதியில் ஏறினர். அப்போது லாவகமாக அய்யனாரை பிடித்து கீழே இறக்கினர். அதன் பின்னர் அவர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அய்யனாரை போலீசார் விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் விழுப்புரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- கடந்த சில தினங்களாக எண்ணூர் தனசேகரன் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக சிறைத்துறை அலுவலர்களிடம் தொடர்ந்து கூறி வந்ததாக தெரிகிறது.
- எண்ணூர் தனசேகரன் அங்கிருந்த சிறை துறை போலீசாரிடம் தான் அதிகளவில் ரத்த அழுத்த மாத்திரை மற்றும் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உள்ளேன் என தெரிவித்தார்.
கடலூர்:
கடலூர் கேப்பர் மலையில் மத்திய சிறைச்சாலை உள்ளது.
இங்கு சென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரன் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய சிறை சாலை ஜெயிலர் மணிகண்டன் சிறை வளாகத்தில் ஆய்வு செய்தார். அப்போது எண்ணூர் தனசேகரன் அறையில் இருந்து செல்போன் மற்றும் சார்ஜர் ஆகியவற்றை பறிமுதல் செய்தார். இதனால் கைதிகளுக்கு வெளிதொடர்பு துண்டிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து எண்ணூர் தனசேகரன் தூண்டுதலின் பேரில் சிலர் சிறை வார்டன் மணிகண்டன் வீட்டில் இல்லாத சமயத்தில் அவரது குடும்பத்தை தீ வைத்து எரித்து கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசார் எண்ணூர் தனசேகரன் உள்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக எண்ணூர் தனசேகரன் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக சிறைத்துறை அலுவலர்களிடம் தொடர்ந்து கூறி வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் எண்ணூர் தனசேகரன் அங்கிருந்த சிறை துறை போலீசாரிடம் தான் அதிகளவில் ரத்த அழுத்த மாத்திரை மற்றும் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உள்ளேன் என தெரிவித்தார்.
இதையடுத்து சிறைத் துறை அலுவலர்கள் தனசேகரனை மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
எண்ணூர் தனசேகரன் தற்கொலைக்கு முயன்றது குறித்து வேலூர் சிறை துறை டி.ஐ.ஜி. விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் சிறைச்சாலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






