search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The woman who stole"

    • கடலூரில் இருந்து புதுப்பாளையம் செல்வ தற்காக அரசு பஸ்சில் ஏறினார்.
    • ஒரு பெண் நந்தினி வைத்திருந்த கைப்பையில் இருந்த மணிப்பரிசை எடுத்த போது அதிர்ச்சி அடைந்தார்.

    கடலூர்:

    கடலூர் கூத்தப்பாக் கத்தை சேர்ந்தவர் நந்தினி (வயது 29). இவர் தொண்ட மாநத்தம் தபால் துறை அலுவலகத்தில் பணி புரிந்து வருகின்றார். சம்பவத் தன்று கடலூரில் இருந்து புதுப்பாளையம் செல்வ தற்காக அரசு பஸ்சில் ஏறினார். அப்போது அங்கு இருந்த ஒரு பெண் நந்தினி வைத்திருந்த கைப்பையில் இருந்த மணிப்பரிசை எடுத்த போது அதிர்ச்சி அடைந்தார். அப்போது நந்தினி சத்தம் போட்டதால் அங்கிருந்த பொதுமக்கள் அந்த பெண்ணை மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்திய போது கடலூர் மஞ்சக்குப்பம் அங்கா ளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த தேன்மொழி (27) என்பது தெரிய வந்தது. இது குறித்து திருப்பாதிரிபுலியூர் போலீீசார் வழக்கு பதிவு செய்து தேன்மொழியை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

    ×