என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • கோவை அண்ணா மார்க்கெட் 40 வருடங்களுக்கு மேலாக நடந்து வருகிறது.
    • 500-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் ஏலம் எடுத்து கடை நடத்தி வருகிறோம்.

    கோவை, மே.22-

    கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.

    கோவை அண்ணா மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் மாடசாமி, செயலாளர் கனகராஜ், தலைமை பொருளாளர் அப்துல் சமது ஆகியோர் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:-

    கோவை அண்ணா மார்க்கெட் 40 வருடங்களுக்கு மேலாக நடந்து வருகிறது. இதனிடைய கோவை மாநகராட்சியால் பொது ஏலத்தில் விடப்படும் கடைகளை கடந்த 35 வருடங்களுக்கு மேலாக சுமார் 500-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் ஏலம் எடுத்து கடை நடத்தி வருகிறோம்.

    காய்கறிகள், மளிகை பொருட்கள் போன்ற வியாபாரங்கள் செய்து வருகிறோம். இதில் வியாபாரிகள் அவரது குடும்பத்தினர், கூலி தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் என ஆயிரக்கணக்கானோர் வாழ்வாதாரமும் அடங்கி உள்ளது.

    இதனிடையே கோவை மாநகராட்சி மத்திய மண்டல உதவி கமிஷனர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அண்ணா மார்க்கெட்டில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளது.

    எனவே சீரமைப்பு பணிகள் முடியும் வரை கோவை கவுண்டம்பா ளையம் எருக்கம்பெணி மைதானத்தில் தற்காலிகமாக எங்களது செலவில் கடைகளை அமைத்து வியாபாரம் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அப்பகுதியில் மின்சாரம், குடிநீர் கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. எனவே இந்த விவாகரத்தில் கலெக்டர் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வணிகம் செய்து கொண்டே மார்க்கெட்டை சீரமைக்க வழிவகை ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.

    • எஸ்.எஸ்.எல்.சி. பொது தேர்வு முடிவுகள் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது.
    • மாணவ, மாணவிகள் ஏராளமானோர் பள்ளிக்கு வந்திருந்தனர்.

    கோவை,மே.22-

    எஸ்.எஸ்.எல்.சி. பொது தேர்வு முடிவுகள் கடந்த வெள்ளிக்கிழமை வெளி யானது. இதனையடுத்து இன்று முதல் பிளஸ்-1 வகுப்பு மாணவர் சேர்க்கை தமிழ்நாடு முழுவதும் தொடங்கி உள்ளது.

    கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் இன்று காலை 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான சேர்க்கை தொடங்கியது.

    கோவையில் உள்ள அனைத்து அரசு பள்ளி களிலும் இன்று காலை முதலே மாணவ, மாண விகள் ஏராளமானோர் தங்களது பெற்றோர்களுடன் பள்ளிக்கு வந்திருந்தனர்.

    அவர்கள் பள்ளியில் தாங்கள் படிக்க விரும்பும் பாடப்பிரிவினை தேர்வு செய்து கொண்டனர். 10-ம் வகுப்பு வரை ஒரே மாதிரியான பாடப்பிரிவில் பயின்று வந்த மாணவர்கள் தற்போது பிளஸ் 1 வகுப்பில் பல்வேறு பாடப்பிரிவுகள் இருப்பதால் சில மாணவர்கள் எந்த பாடப்பிரிவை தேர்வு செய்வது என தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.

    அப்படி குழப்பமாக இருக்கும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள், மாணவர்கள் எடுத்த மதிப்பெண்களின் அடிப்படையில் அவர்கள் எந்த பிரிவை எடுத்து படிக்கலாம் என்பது குறித்து அறிவுரை வழங்கி வருகின்றனர். கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலுமே மாணவர் சேர்க்கையானது விறு,விறுப்பாக நடைபெற்று வருகிறது.

    • உக்கடம்-ஆத்துப்பாலம் 2-ம் கட்ட மேம்பால பணிகள் விரைவில் தொடங்கும்
    • உக்கடம்-கரும்புக்கடை வரை 55 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    கோவை, மே.22-

    கோவை உக்கடம்-ஆத்துப்பாலம் சாலை பொள்ளாச்சி செல்வதற்கும், குனியமுத்தூர் வழியாக கேரள மாநிலம் செல்வதற்கும் முக்கிய சாலையாக உள்ளது.

    மேம்பாலம்

    இச்சாலையில் நிலவி வந்த போக்குவரத்து நெரிசல் காரணமாக உக்கடம்-ஆத்துப்பாலம் இடையே 1.9 கிலோ மீட்டர் தூரம் மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கியது.

    முதல் கட்டமாக, உக்கடம் முதல் கரும்புக்கடை இடையே உள்ள மேம்பால பணிகளுக்கு ரூ.216 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

    உக்கடம்-கரும்புக்கடை வரை 55 தூண்கள் அமைக்கப்பட்டு அதில் ஓடுதளம் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. மேலும், உக்கடம் பஸ் நிலையம் அருகே மேம்பாலத்தில் ரவுண்டானா அமைப்பதற்கான பணிகளும் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது.

    அதே போல் உக்கடம் பஸ் நிலையம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமான பணிகளும் 90 சதவீதம் நிறைவடைந்து ள்ளன.

    2-ம் கட்ட மேம்பாலம் பணிகள்

    இதனிடையே, ரூ.265.44 கோடியில் உக்கடம்-ஆத்துப்பாலம் 2-ம் கட்ட மேம்பாலம் நீட்டிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மேம்பால பணி நீட்டிப்பின் மூலம் ஆத்துப்பாலத்தினை கடந்து பொள்ளாச்சி சாலை மற்றும் பாலக்காடு சாலையில் இறங்கும் வகையிலும், உக்கடம் சந்திப்பில் திருச்சி சாலைக்கு செல்லும் வகையில் இறங்குதளமும் அமைக்கப்பட உள்ளது.

    இந்த மேம்பால நீட்டிப்பு மூலம் 2.4 கிலோ மீட்டர் நீளத்திற்கு மேம்பாலம் அமைய உள்ளது. உக்க டத்தில் ரூ.233 கோடியில் 1.46 கிலோ மீட்டர் தூரத்திற்கு முதல்கட்ட மேம்பாலம் கட்டும் பணி முடியும் நிலையில் உள்ளது.

    ஆனால் 2-ம் கட்ட மேம்பால பணிகள் நிலம் கையெகப்படுத்தும் பணி காரணமாக பாதிக்கப்ப ட்டுள்ளது. நொய்யல் ஆற்றில் பில்லர் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆனால் அதனை அடுத்து வரும் பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு சாலையில் நிலம் கையெகப்படுத்தும் பணிகள் கிடப்பில் உள்ளது. இதன் காரணமாக மேம்பால பணிகள் கடந்த சில மாத காலமாக பாதிக்கப்பட்டுள்ளது.

    விரைவில் தொடக்கம்

    இதுகுறித்து அரசுதுறை அதிகாரி ஒருவர் கூறுகையில், உக்கடம்-ஆத்துப்பாலம் மேம்பால த்தில் பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு சாலையில் 2 இடங்களில் ஏறு தளமும், 2 இடங்களில் இறங்குதளமும் 5.50 மீட்டர் அகலத்துடன் அமைக்கப்படுகிறது. 2-ம் கட்ட மேம்பால பணிகளுக்காக நொய்யல் ஆற்றில் பில்லர் அமைக்கும் பணி நிறைவு பெறும் நிலையில் உள்ளது. 2-ம் கட்ட மேம்பால பணிகள் தொடர்பாக பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு சாலையில் நிலம் கையெகப்படுத்தும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளது என்றார்.

    • தேவிபாலா வைத்து இருந்த ரூ.23 ஆயிரத்தை மர்மநபர் திருடி சென்றனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள கல்லாரை சேர்ந்தவர் பாலமுருகன்.

    இவரது மனைவி தேவிபாலா (வயது 37). சலவைதொழிலாளி. சம்பவத்தன்று இவர் தனது சொந்த ஊரான மதுரைக்கு செல்வதற்காக மகள்களுடன் மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்துக்கு சென்றார்.

    பின்னர் அங்கு நின்று கொண்டு இருந்த பஸ்சில் ஏறினார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்து யாரோ மர்மநபர் தேவிபாலா கட்டைபையில் வைத்து இருந்த ரூ.23 ஆயிரம் பணத்தை திருடி தப்பிச் சென்றனர்.

    பஸ்சில் சென்ற போது டிக்கெட் எடுப்பதற்காக பார்த்த போது பணம் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது. இதில் அதிர்ச்சியடைந்த தேவிபாலா இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் கதிர்வேல் (37). டிரைவர். இவர் தனது சொந்த ஊரான சத்திக்கு செல்வதற்காக மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்துக்கு சென்றார்.

    பஸ்சில் ஏறிய போது யாரோ மர்மநபர் கதிர்வேல் பேண்டின் பின் பாக்கெட்டில் ரூ.10,300 பணத்துடன் வைத்து இருந்த மணிபர்சை திருடி சென்றனர். இது அவரும் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இளம்பெண் மில்லில் வேலை பார்த்த திருமணமான வாலிபரை காதலித்தார்.
    • காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    கோவை,

    பொள்ளாச்சி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த வர் 24 வயது இளம்பெண்.

    இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மலுமச்ச ம்பட்டியில் உள்ள மில்லில் வேலைக்கு சென்றார். அப்போது இளம்பெ ண்ணுக்கு அதே மில்லில் வேலை பார்த்த திருமண மான வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    நாளடைவில் இது காதலாக மாறியது. இளம்பெண் அடிக்கடி அந்த வாலிபருடன் பேசி பழகி வந்தார்.

    இந்த காதல் விவகாரம் இளம்பெ ண்ணின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் திருமணமான வாலிபருடன் பழகுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மேலும் வேலைக்கு செல்வதயைும் நிறுத்தி விட்டனர். இள ம்பெண்ணி ன் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைப்பதற்காக மணமகனை தேடி வந்தனர். சம்பவ த்தன்று இளம்பெண்ணின் வீட்டிற்கு மணமகனின் வீட்டார் பெண் பார்க்க வருவதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை அவரது பெற்றோர் செய்து வந்தனர்.

    அப்போது வீட்டில் இருந்த இளம்பெண் தனது காதலனுடன் ஓட்டம் பிடித்தார். இளம்பெ ண்ணை அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

    எனவே அவர்கள் மாயமான தங்களது மகளை கண்டுபிடித்து தரும்படி வடக்கிப்பாளையம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

    • கேரளாவில் இருந்து ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர்.
    • படுகாயம் அடைந்த 4 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

    கோவை,

    கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள மண்ணுத்தியை சேர்ந்தவர் ராஜூ(வயது50). இவரது மனைவி சம்ளா(43). இவர்களது மகள் ஆயிஷா (18) மகன் இஷான் (14).

    தற்போது பள்ளிகள் கோடை விடுமுறை என்பதால் அனைவரும் காரில் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்றனர். பின்னர் அங்கு ஜாலியாக சுற்றிப்பார்த்து விட்டு மீண்டும் சொந்த ஊருக்கு காரில் புறப்பட்டனர்.

    கார் கோத்தகிரி ரோட்டில் பவானி சாகர் காட்சி முனை அருகே சென்ற போது திடீரென காரின் பிரேக் பிடிக்காமல் போனது.

    அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரத்தில் இருந்த தடுப்பில் மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 4 பேரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர்.

    அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் அனைவரும் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இந்த விபத்து குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கொலையா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • வாலிபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

    கோவை,

    கோவை மாவட்டம் சுல்தான் பேட்டை பெரிய வதம்பச்சேரி பி.ஏ.பி. வாய்க்காலில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபரின் உடல் அழுகிய நிலையில் மிதந்து வந்தது.

    இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து வதம்பச்சேரி கிராம நிர்வாக அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவர் உடனடியாக சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை பார்வையிட்டார்.

    உடல் மீட்பு

    பின்னர் இது குறித்து சுல்தான்பேட்டை போலீசா ருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை மீட்டனர்.

    அவரது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. அந்த வாலிபர் சிவப்பு கலரில் டீசர்ட், கருப்பு கலரில் பேண்ட் அணிந்து இருந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது.

    பின்னர் போலீசார் அந்த வாலிபர் யார் என்பது குறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். ஆனால் அவர் யார் என்று தெரிய வில்லை.

    இதனை தொடர்ந்து போலீசார் வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கொலையா?

    இதுகுறித்து சுல்தான் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து 25 வயது மதிக்க தக்க வாலிபர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் அவரை யாராவது கொலை செய்து பி.ஏ.பி. வாய்க்காலில் வீசி சென்றார்களா? அல்லது குளிக்கும் போது நீரில் மூழ்கி இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சஜீத் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
    • வீட்டை பூட்டி சாவியை தந்தையிடம் கொடுத்து விட்டு சென்றார்.

    கோவை

    கோவை சரவணம்பட்டி விளாங்குறிச்சி ரோட்டை சேர்ந்தவர் சஜீத் (வயது40). தனியார் நிறுவன ஊழியர்.

    இவர் சம்பவத்தன்று தனது சொந்த ஊரான பாலக்காட்டிற்கு சென்றார். இதனால் வீட்டை பூட்டி சாவியை தந்தையிடம் கொடுத்து விட்டு சென்றார்.

    இந்த நிலையில் சஜீத்தின் வீட்டிற்கு அவரது தந்தை சென்றார்.

    அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், அவரது மகன் சஜீத்துக்கு தகவல் தெரிவித்தார்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சஜித், வீட்டிற்குள் சென்று பார்த்தார். அப்போது வீட்டில் வைக்கப்பட்டிருந்த 7 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து அவர் பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.

    இதனையடுத்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடி சென்ற கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    • கணவன்-மனைவி 2 பேரும் தூய்மை பணியாளராக வேலை செய்து வருகின்றனர்.
    • இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை,

    கோவை உக்கடம் அருகே எஸ்.எச் காலனியை சேர்ந்தவர் பரமசிவம் (வயது47).

    இவரது மனைவி லதா (41). கணவன்-மனைவி இருவரும் கோவை மாநகராட்சியில் தூய்மை பணியாளராக வேலை செய்து வருகின்றனர்.

    பரமசிவத்திற்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதனை அவரது மனைவி கண்டித்து வந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று பரமசிவம் மீண்டும் குடிபோதையில் வீட்டிற்கு வந்தார். அப்போ து மீண்டும் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த பரமசிவம் வீட்டில் இருந்த சாணி பவுடரை எடுத்து கரைத்துக்  குடித்தார். சிறிது நேரத்தில் அவரது வீட்டில் மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி யடைந்த அவரது மனைவி அவரை மீட்டு கோவையில் உள்ள அரசு ஆஸ்ப த்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து உக்கடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புவனேஷ்வரி தனியார் நிறுவன ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
    • புவனேஷ்வரி சம்பவ இடத்திலேயே கணவர் கண்முன்னே பரிதாபமாக இறந்தார்

    கோவை,மே.22-

    கோவை தொண்டா முத்தூர் அருகே உள்ள குப்பேபாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ். கூலித் தொழிலாளி. இவரது மனைவி புவனேஷ்வரி (வயது25). தனியார் நிறுவன ஊழியர்.சம்பவத்தன்று கணவன்-மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் குப்பேபாளை யத்தில் இருந்த தொண்டாமுத்தூர் நோக்கி சென்றனர். மோட்டார் சைக்கிள் வண்டிக்காரனூர் அருகே சென்றபோது அந்த வழியாக மாட்டுவண்டி சென்றது. திடீரென மாடு மிரண்டு மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர். இதில் தலையில் படுகாயம் அடைந்த புவனேஷ்வரி சம்பவ இடத்திலேயே கணவர் கண்முன்னே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய பிரகாஷை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த தகவல் கிடைத்ததும் தொண்டாமுத்தூர் போலீசார் விரைந்து சென்று இறந்த புவனேஷ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து தொண்டாமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • லாரியை சூலூர் போலீஸ் நிலையம் அருகே சாலையோரம் நிறுத்தி விட்டு, லாரியிலேயே படுத்து தூங்கி விட்டார்.
    • மது போதையில் லாரியை இயக்கியதற்காக அவருக்கு சூலூர் போலீசார் அபராதம் விதித்தனர்.

    சூலூர்:

    விழுப்புரத்தை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி(வயது41). லாரி டிரைவர். இவருக்கு திருமணமாகி 15 வயதில் மகள் உள்ளார்.இந்த நிலையில் அவரது முதல் மனைவி இறந்து விடவே ராஜீவ்காந்தி 2-வதாக திருமணம்செய்து கொண்டார். அவருக்கு சில தினங்களுக்கு முன்பு 2-வதும் பெண் குழந்தை பிறந்துள்ளது.

    இந்த நிலையில் ராஜீவ்காந்தி இரும்பு பொருட்களை ஏற்றுவதற்காக மும்பைக்கு சென்றார். பின்னர் அங்கு பொருட்களை ஏற்றி கொண்டு சேலத்திற்கு வந்தார்.

    அப்போது கோவை சூலூர் அருகே அருகே அவர் வந்த போது லாரியை திடீரென நிறுத்தி விட்டு மது அருந்தினார். பின்னர் லாரியை இயக்கி கொண்டு சென்ற அவரால் மேற்கொண்டு இயக்க முடியவில்லை என தெரிகிறது. இதனால் லாரியை சூலூர் போலீஸ் நிலையம் அருகே சாலையோரம் நிறுத்தி விட்டு, லாரியிலேயே படுத்து தூங்கி விட்டார்.

    நீண்ட நேரமாக லாரி அங்கேயே நின்றதால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே போலீசார் லாரி அருகே சென்று பார்த்தனர். அப்போது டிரைவர் தூங்கி கொண்டிருந்தார். அருகே மதுபாட்டிலும் இருந்தது. அவரை எழுப்பி பார்த்தனர். ஆனால் அவர் எழுந்திருக்கவில்லை.

    இதையடுத்து போலீசார் லாரியை போலீஸ் நிலையம் எடுத்து சென்றனர். பின்னர் தண்ணீரை ஊற்றி டிரைவரை எழுப்பினர். பின்னர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில், அவர் தனக்கு ஏற்கனவே பெண் குழந்தை உள்ளது. தற்போது 2-வதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. நான் செய்யும் டிரைவர் தொழிலில் 2 பெண் குழந்தைகளை வைத்து வளர்ப்பது மிகவும் கஷ்டம் எனவும் அந்த மன வருத்தத்திலேயே மது அருந்தியதாகவும், பிறந்த குழந்தையை கூட இன்னும் பார்க்கவில்லை. அதனை பார்க்கவும் எனக்கு பிடிக்க வில்லை. அதனால் நான் ஊருக்கு செல்லவில்லை எனக் கூறி புலம்பினார்.

    இதையடுத்து ராஜீவ்காந்திக்கு பெண் பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சியே உருவாகும். பெண்களுக்கு அரசின் பல நலதிட்டங்கள் நடைமுறையில் உள்ளது என அறிவுரை கூறினர்.

    தொடர்ந்து மது போதையில் லாரியை இயக்கியதற்காக அவருக்கு சூலூர் போலீசார் அபராதம் விதித்தனர்.

    • 2 ஆயிரம் ரூபாய் நோட்டை பதுக்கி வைத்தவர்கள், 2 ஆயிரம் ரூபாய் நோட்டால் கொள்ளையடித்தவர்களுக்குதான் மதிப்பிழப்பால் பிரச்சனை.
    • டாஸ்மாக், கூட்டுறவுத்துறை, மின்சார பில் கட்டும் இடங்களை மத்திய அரசு கண்காணிக்க வேண்டும்.

    கோவை:

    பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் காவல் துறையினருக்கு தகுந்த நேரத்தில் பதவி உயர்வு கிடைப்பது இல்லை. குறிப்பாக கிரேட்-2 பதவியில் இருக்கும் காவல் துறையினருக்கு பதவி உயர்வு வராதது கண்டிக்கத்தக்கது. காவல் துறையினரின் பதவி உயர்வுக்கான வழிமுறைகள் குறித்து முதலமைச்சரிடம் டி.ஜி.பி. பேச வேண்டும். இதை போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டும்.

    தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுவதில் பாதி தான் உண்மை. பாதி உண்மை இல்லை. புதுப்பிக்கத்தக்க மின்சக்தியில் நாம் பயனடைந்து வருகிறோம். இது மத்திய அரசின் கனவு.

    இதை தமிழக அரசு சரியாக உபயோகப்படுத்துவதில்லை. காற்றாலை உற்பத்தியாளர்களுக்கு பணம் கொடுப்பதிலும் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்துகிறார்கள். வீடுகளில் சோலார் பேனல் வைத்து இருப்பவர்களுக்கு மானியம் கொடுப்போம் என்று தி.மு.க. அரசு தெரிவித்தது. ஆனால் எத்தனை வீட்டிற்கு கொடுத்துள்ளார்கள் என்ற விவரத்தை தெரிவிக்க வேண்டும்.

    தமிழ்நாட்டில் 22 சதவீதம் மது விற்பனை அதிகரித்துள்ளது. 2 லட்சத்து 53 ஆயிரம் லிட்டர் சாராயம் காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 75 சதவீதம் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். 25 சதவீத டாஸ்மாக் கடைகள் மட்டும் செயல்பட வேண்டும்.

    மேலும் கள் விற்பனையை தொடங்க வேண்டும். இதில் வருமானத்திற்கும் வழி உள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் கள் மூலம் வருமானத்தை எப்படி ஈட்டி கொடுக்க முடியும் என்பது பாரதிய ஜனதாவின் வெள்ளை அறிக்கையில் உள்ளது.

    2 ஆயிரம் ரூபாய் நோட்டை பதுக்கிவைத்தவர்கள், 2 ஆயிரம் ரூபாய் நோட்டால் கொள்ளையடித்தவர்களுக்குதான் மதிப்பிழப்பால் பிரச்சினை. டாஸ்மாக், கூட்டுறவுத்துறை, மின்சார பில் கட்டும் இடங்களை மத்திய அரசு கண்காணிக்க வேண்டும் என தெரிவித்துள்ளேன்.

    அடுத்த ஆண்டு (2024) நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட எனக்கு விருப்பம் இல்லை. தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு தான் பாரதிய ஜனதாவுக்கு வந்தேன். பாராளுமன்ற தேர்தலில் தொண்டனாக வேலை செய்வேன். தேர்தலில் போட்டியிடுபவர்கள் வெற்றி பெற வேலை செய்வேன். தமிழ்நாட்டை விட்டு வெளியே செல்ல விருப்பம் இல்லை. இந்த மண்ணில் எனது அரசியல் இருக்க வேண்டும் என விரும்புகின்றேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×