search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை அருகே விபத்தில் 4 பேர் படுகாயம்
    X

    கோவை அருகே விபத்தில் 4 பேர் படுகாயம்

    • கேரளாவில் இருந்து ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர்.
    • படுகாயம் அடைந்த 4 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

    கோவை,

    கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள மண்ணுத்தியை சேர்ந்தவர் ராஜூ(வயது50). இவரது மனைவி சம்ளா(43). இவர்களது மகள் ஆயிஷா (18) மகன் இஷான் (14).

    தற்போது பள்ளிகள் கோடை விடுமுறை என்பதால் அனைவரும் காரில் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்றனர். பின்னர் அங்கு ஜாலியாக சுற்றிப்பார்த்து விட்டு மீண்டும் சொந்த ஊருக்கு காரில் புறப்பட்டனர்.

    கார் கோத்தகிரி ரோட்டில் பவானி சாகர் காட்சி முனை அருகே சென்ற போது திடீரென காரின் பிரேக் பிடிக்காமல் போனது.

    அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரத்தில் இருந்த தடுப்பில் மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 4 பேரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர்.

    அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் அனைவரும் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இந்த விபத்து குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×