என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்
    • அக்டோபர் 11-ந்தேதி பணியாளர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்த திட்டம்

    கோவை,

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், கோவை கோட்டம் சார்பில், தகவல் அறியும் உரிமை சட்ட வாரம் கொண்டாடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம், கோவை கோட்ட மேலாண் இயக்குநர் ஜோசப் டையஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம், கோவை கோட்டம் சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டம்- 2005 விழிப்புணர்வு வாரம் அக்ேடாபர் 5 முதல் 12 ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.

    அதன் தொடக்கமாக, கோவை தலைமை அலுவலக வளாகத்தில் விழிப்புணர்வு பதாகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

    இதேபோல, ஈரோடு, திருப்பூர் மற்றும் ஊட்டி மண்டலங்களிலும் விழிப்புணர்வு பதாகை காட்சிப்படுத்தப்பட்டு, பஸ் நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

    இதைத் தொடர்ந்து, அக்டோபர் 8-ந் தேதி நாளை விழிப்புணர்வு மாரத்தான், நடைப்பயணம் நடைபெற உள்ளது.

    இந்தப் பேரணியானது, கோவை அரசுப் போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தில் இருந்து காலை 6.30 மணிக்கு தொடங்கி, கவுண்டம்பா ளையம், சேரன் மாநகர் வழியாக மீண்டும் அரசுப் போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தில் நிறைவு பெறவுள்ளது. அதே நாள் பொள்ளாச்சியிலும் விழிப்புணர்வு நடைப்ப யணம் நடைபெற உள்ளது.

    இந்நிகழ்வில், பொதுமேலாளர்கள், துணை மேலாளர்கள், பணியாளர்கள், அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர். மாரத்தான், நடைப்பயணத்தை நிறைவு செய்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். கோவை தலைமையகத்தில் அக்டோபர் 11-ந் தேதி பணியாளர்களுக்கு தகவல் உரிமைச் சட்டப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • குழி தோண்டி போட்டு விட்டு இன்னும் பணிகள் முடியவே இல்லை
    • வாகன ஓட்டிகள் சாலையில் விழுந்து எழுந்து செல்லும் நிலையும் காணப் படுகிறது

    பீளமேடு,

    கோவை மாநகரின் முக்கிய பகுதியாக பீளமேடு விளங்கி வருகிறது.

    இங்கு அரசு மற்றும் தனியார் கலைக்கல்லூரிகள், என்ஜினீயரிங் கல்லூரிகள் மற்றும் தொழில் நிறுவ னங்கள், ஐ.டி. நிறுவனங்களும் அதிகளவில் செயல்பட்டு வருகின்றன. இந்த பகுதியில் எப்போதுமே வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். பீளமேடு பகுதியில் இருந்து, காந்திமாநகர், சேரன்மா நகர் வழியாக சத்தியமங்கலம் செல்லும் சாலைக்கு ஒரு இணைப்பு சாலை செல்கிறது.

    இந்த சாலை பீளமேடு பயனீர் மில் சாலை என அழைக்கப்பட்டு வருகிறது. இந்த சாலை வழியாக விளாங்குறிச்சி, சேரன் மாநகர், காந்திமா நகர், பாரதிநகர் பகுதிகளுக்கு செல்லலாம். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த சாலையில், குழாய் பதிப்பதற்காக குழிகள் தோண்டப்பட்டன.

    குழி தோண்டி போட்டு விட்டு இன்னும் பணிகள் நடைபெறாமலேயே உள்ளதால் இந்த சாலை முழுவதும் எங்கு பார்த்தாலும் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. சில இடங்களில் பெரிய அளவிலான குழிகளும் உள்ளது. இது அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிக ளுக்கு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அவ்வழியாக செல்பவர்கள் மிகுந்த கவனத்துடனேயே வாகனத்தை இயக்கி சென்று வருகின்றனர்.

    இருந்த போதிலும் குண்டும், குழியுமான சாலையில் அடிக்கடி விபத்துக்களும் நடந்து வருகிறது. சிலர் சாலையில் விழுந்து எழுந்து செல்லும் நிலையும் காணப் படுகிறது. மேலும் மழைக்காலங்க ளில் இந்த ரோட்டில் செல்லவே முடியாது. குழிகளில் தண்ணீர் தேங்கி விடுவதால், குழி எங்கு இருக்கிறது என்று தெரியா மல் வாகனத்தை இயக்கி சென்று, குழிக்குள் விழுந்து எழுந்து செல்பவர்க ளையும் காணமுடி கிறது. மேலும் குண்டும், குழியு மான சாலையால் இந்த பகுதியில் கடும் போக்கு வரத்து நெரி சலும் ஏற்ப ட்டு வருகிறது.

    எனவே இந்த சாலையை சரி செய்து தர வேண்டும் என்பதே வாகன ஓட்டிக ளின் கோரிக்கை யாக உள்ளது. எனவே இதற்கு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் ேகாரிக்கை விடுத்துள்ளனர்.

    • காரமடை நகராட்சியில் நகர்மன்ற மாதாந்திர கூட்டம் நடைபெற்றது
    • அறிவிப்பு பலகையை மக்களின் பார்வைக்கு வைக்க நகராட்சி ஆணையாளர் உத்தரவு

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே காரமடை நகராட்சி யில் நகர்மன்ற மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. நகராட்சி தலைவர் உஷா தலைமை வகித்தார். நகராட்சி ஆணையாளர் மனோகரன், துணை தலைவர் மல்லிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் நடந்த விவாதங்கள் பின்வருமாறு:

    விக்னேஷ்(பா.ஜ.க): காரமடை நகராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு பிரச்சனை உள்ளது. இந்த சூழ்நிலையில் புதிதாக குடிநீர் இணைப்புகள் வழங்கப்படுகின்றன. குடிநீர் பிரச்சினையை தீர்க்காமல் புதிதாக இணைப்புகள் வழங்குவதால் மேலும் பிரச்சினை அதிகமாகிறது.

    காரமடை சந்தையில் சுங்க கட்டணம் வசூலிப்பதில் முறைகேடு நடக்கிறது. சுங்கம் வசூலிப்பது தொடர்பாக, நகராட்சி சார்பாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ள கட்டணம் தொடர்பான அறிவிப்பு பலகையை சந்தையில் வைக்க வேண்டும். இல்லை என்றால் ஆர்ப்பாட்டம் செய்யப்படும்.

    நகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளில் தூய்மை பணிகள் சரி வர மேற்கொள்ள ப்படுவ தில்லை. பள்ளிகளின் கழிப்பிடத்தை பயன்படுத்தும் குழந்தைகளுக்கு நோய் பாதிப்பு ஏற்படுகிறது என பெற்றோர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதற்கு உடனடியாக ஆட்களை நியமித்து கழிப்பிடங்களை பராமரிக்கப்பட வேண்டும்.

    ராமுகுட்டி (தி.மு.க) : காரமடை நகராட்சிக்கு உட்பட்ட சந்தையை இடம் மாற்றம் செய்யக்கூடாது. தற்போது செயல்பட்டு வரும் சந்தையில் போது மான அளவு இடவசதி உள்ளது. புதிதாக சந்தை தேவையில்லை, மேம்ப டுத்தினால் போதுமானது.

    வனிதா (அ.தி.மு.க) : காரமடை சந்தையை இடமாற்றம் செய்தால், விவசாயிகளும், பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். சந்தை இடமாற்றம் செய்யக்கூடாது என ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    குருபிரசாத் (தி.மு.க) : சந்தையை இடமாற்றம் செய்யக்கோரி தீர்மானம் கொண்டு வரப்படவில்லை. கவுன்சிலர்கள் முதலில் அதனை புரிந்து கொள்ள வேண்டும். புதிதாக சந்தை கொண்டுவர தான் தீர்மானம் வந்துள்ளது. இடமாற்றம் செய்யப்படவில்லை. திட்டங்கள் தொடர்பாக கவுன்சிலர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அரசுக்கு கருத்துரு அனுப்புவதற்கு முன்பாக, கவுன்சிலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள வேண்டும். மக்கும் மக்காத குப்பைகள் தரம் பிரித்து தூய்மை பணியாளர்கள் வாங்க வேண்டும்.

    எஸ்.என்.எஸ் ரவிக்கு மார் (தி.மு.க): ராஜீவ் காந்தி நகர், அன்னை வேளாங்கண்ணி நகரில் கழிவுநீர் கால்வாய் அமைத்து சாலை அமைத்து தர வேண்டும். உப்பு தண்ணிக்கு போர்வெல் அமைத்து தர வேண்டும்.

    ராம்குமார் (தி.மு.க) : காரமடை நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. 27 வார்டுகளிலும் தல ஒரு லட்சம் வீதம் ரூ.27 லட்சத்திற்கு சாலைக ளில் பேட்ச் ஒர்க் பார்க்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. ஆனால் 3 வார்டுகளில் மட்டும் தான் பணி நடந்துள்ளது. மற்ற வார்டுகளில் பேட்ச் ஒர்க் பார்க்கப்படவில்லை. இதற்கான பில்களை எங்களிடம் காண்பிக்க வேண்டும். ரவிக்குமார் (தி.மு.க): ராயல் கார்டனில் கடந்த ஒன்றரை ஆண்டுக ளாக தண்ணீர் பிரச்சினை உள்ளது. இதுதொடர்பாக போர்வெல் அமைத்து தர கோரி தொடர்ந்து கேட்டு வருகிறேன். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

    ஆணையாளர் மனோகரன்: தற்போது இயங்கி வரும் காரமடை சந்தையை இடமாற்றம் செய்யப் போவதில்லை. இந்த சந்தையில் இருந்து ரூ.44 லட்சம் அளவிற்கு நகராட்சிக்கு வருவாய் வருகிறது. இந்த சந்தை கண்டிப்பாக செயல்படும். அதே சமயம் புதிதாகவும் சந்தை அமைக்கலாமா என தான் கருத்து கேட்டு ள்ளோம்.

    பள்ளிகளில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்ப டும். இதை நான் எனது நேரடி கவனத்திற்கு எடுத்துக் கொள்கிறேன். கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பழுதடைந்து இடியும் தருவாயில் உள்ள கட்டிடங் களை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக ரூ. 4.25 கோடி நிதி ஒதுக்க கோரி அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. நகராட்சி சார்பில் மக்கள் சேவைகள் தொடர்பாக, அந்த பணிகள் எத்தனை நாட்களுக்குள் முடிக்கப்படும் என்பதற்கான அறிவிப்பு பலகை மக்களின் பார்வைக்கு வைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

    • தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.11.86 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது
    • நீலகிரி எம்.பி., ஆ.ராசா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே வெள்ளியங்காடு ஊராட்சிக்குட்பட்ட சுண்டக்கரை பகுதியில் 250-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. 240க்கும் மேற்பட்ட ரேஷன்கார்டுதாரர்கள் உள்ளனர். சுண்டக்கரை பகுதியில் உள்ள ரேஷன் கடை, வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தது. எனவே அதற்கு சொந்த கட்டிடம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    நீலகிரி எம்.பி ஆ.ராசாவின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.11.86 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. இதற்கான திறப்பு விழா நடந்தது. நீலகிரி எம்.பி., ஆ.ராசா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் தி.மு.க வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, தலைமைச்செயற்குழு உறுப்பினர்கள் டி.ஆர்.சண்முகசுந்தரம், அஷ்ரப்அலி, ஒன்றிய செயலாளர்கள் சுரேந்திரன், எஸ்.எம்.டி.கல்யாண சுந்தரம், மாவட்ட விவசாய அணி தலைவர் பத்திரசாமி, கூடலூர் நகராட்சி தலைவர் அறிவரசு, மாவட்ட பிரதிநிதி மேடூர் கணேசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில்குமார், ராமமூர்த்தி, வட்ட வழங்கல் அலுவலர் சங்கர்லால் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தண்ணீர் கேட்பது போல் நடித்து துணிகர செயல்
    • தடாகம் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்

    கோவை,

    கோவை தடாகம் அருகே உள்ள காளையனூரை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மனைவி சரஸ்வதி (வயது 75). சம்பவத்தன்று இவர் தனது வீட்டு முன்பு அமர்ந்து இருந்தார். அப்போது 2 பெண்கள் அந்த வழியாக வந்தனர். அவர்கள் சரஸ்வதியின் அருகில் வந்து குடிப்பதற்கு தண்ணீர் கேட்டனர். இதனையடுத்து அவர் தண்ணீர் எடுப்பதற்காக வீட்டிற்கு சென்றார்.

    அப்போது அவரை பின் ெதாடர்ந்து 2 பெண்களும் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தனர். அவர்கள் தண்ணீர் எடுத்து கொண்டு இருந்த சரஸ்வதியை கீழே தள்ளி தாக்கினர். பின்னர் அவர் கழுத்தில் அணிந்து இருந்த 7 பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் செல்ல முயன்றனர்.

    இதில் அதிர்ச்சியடைந்த மூதாட்டி திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று மூதாட்டியிடம் செயினை பறித்து விட்டு தப்பிச் செல்ல முயன்ற 2 பெண்களையும் மடக்கி பிடித்தனர். பின்னர் இதுகுறித்து அவர்கள் தடாகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்தனர்.

    அவர்களிடம் 2 பெண்களையும் பொது மக்கள் ஒப்படைத்தனர். போலீசார் 2 பெண்களையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கள் சாய்பாபா காலனியை சேர்ந்த ராதிகா(33), சர்மிளா(42) என்பது தெரிய வந்தது. பின்னர் போலீசார் இவர்கள் 2 பேரையும் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • சாக்கடையை கடந்து சென்று அமரும் அவலம்
    • இருக்கைகள் சிதலமாகி உடைந்து விழும் அபாயநிலையில் உள்ளது

    குனியமுத்தூர்,

    கோவை ஹோப்ஸ் காலேஜில் இருந்து சிங்காநல்லூர் செல்லும் காமராஜர் ரோட்டில், மணிஸ் தியேட்டர் பஸ் நிறுத்தம் உள்ளது. இதன்வழியாக காந்திபுரம், டவுன்ஹாலுக்கு எண்ணற்ற பஸ்கள் சென்று வருகின்றன. தினமும் ஆயிரக்கணக்கானோர் பயணம் செய்கின்றனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அங்கு பயணிகளின் பயன்பாட்டிற்காக ஒரு நிழற்குடை அமைக்க ப்பட்டது. ஆனால் இதன் முன்பாக சாக்கடை ஓடுகிறது.

    அதனை கடந்து தான் நிழற்குடைக்கு செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது. எனவே பயணிகள் யாரும் சாக்கடையை தாண்டி செல்வது இல்லை. சாலையில் நின்றபடி பஸ் ஏறி செல்லும் சூழ்நிலை உள்ளது.இந்த பகுதியில் ஏராளமான பள்ளி-கல்லூரி மாணவிகளும், வேலைக்கு செல்லும் பெண்களும் உள்ளனர். இவர்கள் அனைவரும் காந்திபுரம் செல்வதற்கு இந்த நிழற்குடையை தான் பயன்படுத்த வேண்டி உள்ளது.

    அப்படியே ஒருவேளை சாக்கடையை தாண்டி உட்காருவதற்கு சென்றால், அங்கு இருக்கை வசதிகள் மோசமான நிலையில் உள்ளன. உடைந்து கீழே விழும் அபாய நிலையில் உள்ளது. எனவே ஹோப் கல்லூரி சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் முகம் சுளித்தபடி நிற்பதை பார்க்க முடிகிறது.

    கோவை நகரின் முக்கியமான பிரதான சாலையில் அமைக்கப்பட்டு உள்ள பயணிகள் நிழற்குடை இந்த அளவு மோசமாக இருக்குமா? என்று பல்வேறு சமூக அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

    எனவே போக்குவரத்து அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தில் உள்ள பயணிகள் நிழற்குடையை சீரமைத்து, சாக்கடை மேல் கான்கிரீட் பாலம் அமைத்து தர வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • அன்னை சத்யா அரசு காப்பகத்தில் இருந்து 43 மாணவர்கள் பங்கேற்பு
    • நீலகிரி பயோஸ்பியர் எக்கோ பார்க், சலீம் அலி பறவையியல் மையத்தை சுற்றி பார்த்தனர்

    கோவை,

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழா மற்றும் உலக சுற்றுலா தின விழா வையொட்டி, ஆதரவற்ற பள்ளி குழந்தைகளுக்கான ஒரு நாள் விழிப்புணர்வுச் சுற்றுலா நடைபெற்றது.

    ேகாவை மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத் துறை இணைந்து நடத்திய இந்த விழிப்புணர்வு சுற்றுலா வாகனம் காந்திபுரத்தில் உள்ள ஹோட்டல் தமிழ்நாடு வளாகத்தில் இருந்து புறப்பட்டது.

    சுற்றுலாப் பஸ்சை மாவட்ட சுற்றுலா அலுவலர் க.சீனிவாசன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் மதியழகன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    இந்த சுற்றுலாவில் அன்னை சத்யா ஆதரவற்ற அரசு குழந்தைகள் காப்பகத்தில் இருந்து 43 மாண வர்கள், 10 அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    குழந்தைகள் அனைவரையும் ஆனைகட்டிக்கு அருகே உள்ள நீலகிரி பயோஸ்பியர் எக்கோ பார்க், சலீம் அலி பறவையியல் இயற்கை வரலாற்று மையம் ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்றனர். அங்குள்ள பூங்காக்கள், அரிய வகை மரங்கள், மூலிகைச் செடிகள் ஆகியவற்றை கண்டுக ளித்தனர்.

    இந்நிகழ்ச்சியில் உதவி சுற்றுலா அலுவலர் துர்கா தேவி, ஹோட்டல் தமிழ்நாடு மேலாளர் பாலசுப்பிரமணியம், சுற்றுலாத் துறை, சுற்றுலா வளர்ச்சிக் கழகப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • காங்கிரஸ் கட்சியினர் போலீஸ் பாதுகாப்புடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி தலைமையில் திரண்டிருந்த 30-க்கும் மேற்பட்ட பா.ஜ.கவினர் காங்கிரஸ் கட்சியை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

    கோவை:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ராவணன் போல் பா.ஜ.கவினர் சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதை கண்டித்து நேற்று மாலை கோவை காந்திபுரம் வி.கே.கே மேனன் சாலையில் உள்ள பா.ஜ.க அலுவலகம் அருகில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்தனர்.

    மேலும் இந்த போராட்டத்தின் போது பா.ஜ.க அலுவலகத்தை முற்றுகையிட போவதாக தகவல் வெளியானது. இதனையடுத்து பா.ஜ.க.வினரும் அங்கு திரண்டனர். காங்கிரஸ் கட்சியினர் போலீஸ் பாதுகாப்புடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இதனைத் தொடர்ந்து கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி தலைமையில் திரண்டிருந்த 30-க்கும் மேற்பட்ட பா.ஜ.கவினர் காங்கிரஸ் கட்சியை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

    பா.ஜ.க.வினர் போலீசாரின் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி, பாஜக மாநில துணை தலைவர் ப்ரீத்தி லட்சுமி, கோவை மாவட்ட துணை தலைவர் குமரன் உள்பட முக்கிய நிர்வாகிகள் 6 பேர் மீது சட்ட விரோதமாக ஒன்று கூடுதல் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறுகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தண்ணீர் தொட்டியை பார்த்த போது குகன்ராஜ் தண்ணீர் தொட்டிக்குள் மூச்சுபேச்சின்றி கிடந்தார்.
    • அஜாக்கிரதையாக செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    வடவள்ளி:

    கோவை வேடபட்டி சாலை நாகராஜபுரம் அன்னை சத்தியா நகரை சேர்ந்தவர் கார்த்திக். கட்டிடத் தொழிலாளி.

    இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 6 வயதில் குகன்ராஜ் என்ற மகன் உள்ளார்.

    குகன்ராஜ், அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று குகன்ராஜ் வீட்டில் இருந்தான். மதியம் தனது தாயிடம் விளையாட செல்வதாக கூறிவிட்டு வீட்டின் அருகே சென்று குகன்ராஜ் விளையாடி கொண்டிருந்தான்.

    இந்நிலையில் விளையாட சென்ற சிறுவன் மாலை வெகுநேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வராததால், பெற்றோர் அதிர்ச்சியாகினர். அக்கம்பக்கத்தில் சிறுவனை தேடி பார்த்தனர். ஆனால் கிடைக்கவில்லை.

    இவர்களது வீட்டின் அருகே ஆரம்ப பள்ளியின் சுற்றுச்சுவர் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த பணிக்காக அங்கு தண்ணீர் தொட்டி ஒன்றை அமைத்து தண்ணீர் நிரப்பி உள்ளனர். இந்நிலையில் அந்த தண்ணீர் தொட்டியில் சிறுவன் ஒருவன் மூழ்கி கிடப்பதாக பரவிய தகவலை அடுத்து, அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அங்கு திரண்டனர். சிறுவனின் பெற்றோரும் அங்கு வந்தனர்.

    அவர்கள் தண்ணீர் தொட்டியை பார்த்த போது குகன்ராஜ் தண்ணீர் தொட்டிக்குள் மூச்சுபேச்சின்றி கிடந்தார். இதை பார்த்ததும் அதிர்ச்சியான அவர்கள், சிறுவனை தூக்கி கொண்டு, தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டதும் அவரது பெற்றோர் கதறி அழுதனர். இது அங்கிருந்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் பள்ளி சுற்றுச்சுவரை கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் தண்ணீர் தொாட்டியை மூடாமல் சென்றதால் தான் குழந்தை இறந்ததாக கூறி சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கு சென்று வாக்குவாதம் செய்தனர்.

    மேலும் அஜாக்கிரததையாக செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் பேரூர் டி.எஸ்.பி. ராஜபாண்டியன், தொண்டாமுத்தூர் இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்ப முயன்றனர்.

    ஆனால் உறவினர்கள் உடலை எடுக்க விடமால், குழந்தை இறப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் நடத்தினர். ஏராளமானோர் குவிந்ததால் பாதுகாப்புக்காக அங்கு அதிரடிப்படை போலீசாரும் குவிக்கப்பட்டனர்.

    தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனை தொடர்ந்து போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அசாம் மாநிலத்தை சேர்ந்த அபூபக்கர் (19), மாலிக் குஷ்தூர் (29), ஷேக் ஆஸ்குத்கொமல் (25), அஸருதுல் இஸ்லாம் (30) ஆகிய 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கர்நாடகத்தில் கடுமையான வறட்சி காணப்படுகிறது.
    • மேகதாது அணைத் திட்டம் தொடர்பாகவும் முன்மொழிவு தயார் செய்திருக்கிறோம்

    பெங்களூரு:

    கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவகுமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்துக்கு விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த முடியாது என்பதை காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடம் தெரிவித்துள்ளோம். இதுதொடர்பாக காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்துள்ளோம்.

    மேகதாது அணைத் திட்டம் தொடர்பாகவும் முன்மொழிவு தயார் செய்திருக்கிறோம். மேகதாது அணை திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகளில் மாநில அரசு தீவிரமாக உள்ளது. அதற்குத் தேவையான எல்லா வகையான சட்ட நடவடிக்கைகளையும் தயார் செய்துள்ளோம்.

    கர்நாடகத்தில் கடுமையான வறட்சி காணப்படுகிறது. போதுமான தண்ணீர் கிடைக்கும் வரை புதிதாக எந்த பயிரையும் விளைவிக்க வேண்டாம் என்று வேளாண்மை துறையை கேட்டுக் கொண்டுள்ளோம்.

    அடுத்த மாதத்தில் சிறிது மழை பெய்யலாம் என்று எதிர்பார்க்கிறோம். அதன் அடிப்படையில் அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • லாரி மோதியதில் வாலிபர் உடல் நசுங்கி சாவு
    • விபத்து குறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கோவை,

    கோவை இருகூர் அருகே உள்ள குளத்தூரை சேர்ந்த வர் பழனிசாமி (வயது 43). காவலாளி. சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் நீலாம்பூர் - சூலூர் பிரிவு ரோட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் பழனி சாமி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் 2 மோட்டார் சைக்கிளில் வந்தவர்களும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து உயி ருக்கு போராடினர். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் 3 பேரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே காவலாளி பழனிசாமி பரிதாபமாக இறந்தார். இது குறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சூலூர் அருகே உள்ள செம்மாண்டம்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (57). சம்பவத்தன்று இவர் தனது மொபட்டில் சிங்காநல்லூர் திருச்சி ரோட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற லாரி மொபட் மீது மோதியது. இதில் நிலைதடுமாறிய சுப்பிரமணி மொபட்டில் இருந்து கீழே விழுந்தார்.

    அப்போது அந்த வழியாக சென்ற மற்றொரு லாரி சுப்பிரமணி மீது ஏறி இறங்கியது. அதில் தலை மற்றும் உடலில் படுகாயம் அடைந்த அவர் சம்பவஇடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து குறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நர்சிங் படிப்பை பாதியில் கைவிட்ட பெண் உள்பட 2 பேர் மருந்துகளை பரிந்துரைத்ததும், ஊசிசெலுத்தியதும் தெரியவந்தது
    • யாரோ ஒரு டாக்டரிடம் வீடியோ கால் மூலம் பேசி சிகிச்சை அளித்ததாகவும் தகவல்

    சூலூர்,

    கோவை சூலூர் அருகே உள்ள மயிலம்பட்டி பகுதியில் டாக்டர்கள் இன்றி முறையாக மருத்துவம் பயிலாத 2 பேர் ஆஸ்பத்திரி நடத்தி வருவதாக மாவட்ட சுகாதார துறையினருக்கு புகார்கள் சென்றது.

    அதன்பேரில் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் (பொறுப்பு) மீரா விசாரணை நடத்த உத்தரவிட்டார். அந்த பகுதியைச் சேர்ந்த சுகாதார ஆய்வாளர் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

    அந்த ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் யாரும் இல்லை. மருத்துவமனைக்கு வரும் டாக்டர்கள் குறித்த எந்தவித விவரமும் இல்லை.

    ஆஸ்பத்திரியில் நர்சிங் படிப்பை பாதியில் கைவிட்ட பெண் உள்பட 2 பேர் டாக்டர் பெயரில் மருந்துகளை பரிந்துரைத்ததும், நோயாளிகளுக்கு ஊசி செலுத்தியதும் தெரியவந்தது. அவர்கள் யாரோ ஒரு டாக்டரிடம் வீடியோ கால் மூலம் பேசி சிகிச்சை அளித்ததாகவும் கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு சுகாதாரத்துறையினர் சூலூர் போலீஸ்நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இதுபற்றி மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் (ெபாறுப்பு) மீரா கூறியதாவது:-

    மயிலம்பட்டி பகுதியில் 24 மணி நேர மருத்துவமனை என்ற பெயரில் தனியார் மருத்துவமனை செயல்பட்டது. இந்த மருத்துவமனை மீது பொதுமக்கள் புகார் அளித்ததின் பேரில் அங்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து விசாரித்த பின் போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    வழக்குப்பதிந்த பின் அடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதுகுறித்து மாவட்ட கலெக்டரின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். 

    ×