என் மலர்
கோயம்புத்தூர்
- ஆழியார் அணையில் வாலிபர் ஒருவர் பிணமாக மிதப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
- ஆழியார் போலீசார் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை,
கோவை பொள்ளாச்சி அடுத்த ஆழியார் தென்றல் நகரை சேர்ந்தவர் விஷ்வநாதன்.
இவர் அந்த பகுதியில் பாபாஜி கிரியா என்ற யோகா மையத்தை நடத்தி பலருக்கும் யோகா கற்று தந்து வந்தார்.இந்த நிலையில் சம்பவத்தன்று மதியம் விஷ்வநாதன் வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பின்னர் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.
இதையடுத்து அவரை உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் வீடுகளில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து உறவினர்கள், ஆழியார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான விஷ்வநாதனை தேடி வந்தனர். இந்த நிலையில் ஆழியார் அணையில் வாலிபர் ஒருவர் பிணமாக மிதப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. போலீசார் அணைக்கு சென்று உடலை மீட்டு பார்த்த போது, அது மாயமான விஷ்வநாதன் என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ஆழியார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்த விஷ்வநாதனுக்கு, நீச்சல் தெரியாது என்பதால், அணையில் இறங்கிய போது, அவர் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என தெரிகிறது. இருப்பினும் அவர் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 14 நாட்களாக குடிநீர் வராததால் பொதுமக்கள் ஆத்திரம் அடைந்தனர்.
- மறியலினால் இப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி ஊராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. ஊரா ட்சி தலைவராக நித்திய நந்தக்குமார், துணைத்தலை வராக தங்கராஜ் ஆகியோர் உள்ளனர்.
ஊராட்சிக்கு தேவை யான குடிநீர் பவானி ஆற்றில் இருந்து எடுத்து குழாய்கள் மூலம் குடியிருப்பு மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 12-வது வார்டுக்குட்பட்ட தேக்கம்பட்டி, கெண்டே பாளையம், தேவனாபுரம், நஞ்சேகவுண்டன் புதூர், தொட்டதாசனூர், காளியப்பனூர் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.
இங்குள்ள குடியிருப்பு வாசிகளுக்கு கடந்த 14 நாட்களுக்கு மேலாக குடிநீர் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்தில் தெரிவித்த போது குடிநீர் மோட்டார் பழுது ஏற்பட்டு இருப்பதா கவும், குடிநீர் பணியாளர்கள் போதிய அளவில் இல்லாத காரணத்தினாலும் முறையாக குடியிருப்பு வாசிகளுக்கு குடிநீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் குடிக்க தண்ணீர் இல்லாததால் இன்று காலை 7 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து தேக்கம்பட்டிக்கு வந்த அரசு பஸ்சை பெண்கள், ஆண்கள் என ஏராளமானோர் திரண்டு காலிக்குடங்களுடன் மறித்து சாலை மறியல் போரா ட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த ஊராட்சி தலைவர் நித்யா நந்தகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் ராமமூர்த்தி, காரமடை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர், ஊராட்சி துணைத்தலைவர் தங்கராஜ், ஒன்றிய கவுன்சிலர் சரவ ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட மக்களி டம் பேச்சு வார்த்தை நடத்தி னர்.
உடனடியாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதனால் இப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- தேசிய அஞ்சல் வாரத்தையொட்டி 13-ந் தேதி நடைபெறுகிறது.
- “நம்பிக்கைக்காக ஒன்றுபடுவோம்” என்ற தலைப்பில் தேசிய அஞ்சல் வாரம் கொண்டாடப்படுகிறது.
கோவை,
தேசிய அஞ்சல் வாரம் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 9-ந் தேதி முதல் ஒரு வாரத்திற்கு அஞ்சல் துறையினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. யுனிவர்சல் போஸ்டல் யூனியன் (உலகளாவிய தபால் ஒன்றியம்) 1874-ம் ஆண்டு தொடங்கப்பட்டதன் நினைவாக இந்த அஞ்சல் வார கொண்டாட்டம் ஒவ்வொரு வருடமும் நடைபெற்று வருகிறது.
மக்களிடையே அஞ்சல் துறை பற்றியும், அதனுடைய திட்டங்களை பற்றியும் பொதுமக்களுக்கு அஞ்சல் துறையினர் செய்து வரும் சேவைகள் பற்றியும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளை இந்த ஒரு வாரத்தில் நடத்த அஞ்சல் துறை திட்டமிட்டுள்ளது.
இந்த ஆண்டு "நாட்டின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் இந்திய அஞ்சல் துறையினரின் பங்கு" என்பதனை குறிக்கும் வகையில் "நம்பிக்கைக்காக ஒன்றுபடுவோம்" என்ற தலைப்பில் தேசிய அஞ்சல் வாரம் கொண்டாடப்படுகிறது.
அதன்படி, இன்று (9-ந் தேதி) உலக தபால் தினமும், 10-ந் தேதி வலுவூட்டல் தினமாகவும், 11-ந் தேதி தபால் தலை சேகரிப்பு தினமாகவும், 12-ந் தேதி தபால்கள் மற்றும் பார்சல் தினமாகவும் கடைசி நாளான 13-ந் தேதி சாமானியர் நல்வாழ்வு தினமாகவும் அனுசரிப்பது என அஞ்சல் துறை முடிவு செய்துள்ளது. இதன் தொடக்கமாக இன்று காலை 10.30 மணியளவில் கோவை தலைமை அஞ்சலகத்தில் அஞ்சல் வார கொண்டாட்டத்தின் தொடக்க விழா நடக்கிறது. இதனை கோவை அஞ்சல் கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் கோபாலன், ஆர்.எம்.எஸ். கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் அகில் நாயர் தொடங்கி வைக்கின்றனர்.
விழா ஏற்பாடுகள் மற்றும் ஒருவார நிகழ்ச்சிகள் அனைத்தையும் கோவை தலைமை அஞ்சலக முதுநிலை அஞ்சல் அதிகாரி ஜெயராஜ் பாபு ஏற்பாடு செய்துள்ளார். ஒவ்வொரு நாளும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளும், பள்ளி குழந்தைகள் அஞ்சலகத்தின் செயல்பாடுகள் பற்றி அறிந்து கொள்ளும் வகையில் கண்காட்சிகளும், அஞ்சல் ஊழியர்களுக்கு பல்வேறு போட்டிகளும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
முக்கிய நிகழ்வாக, பள்ளி குழந்தைகள் தங்களது 5-ம் வயதிலும், 15-ம் வயதிலும் ஆதார் அட்டை யில் உள்ள கைரேகை, புகைப்படம் மற்றும் கண் கருவிழி, ஆகியவற்றை கட்டாயம் புதுப்பிக்க வேண்டும். இதற்கு உதவி யாக 13-ந் தேதி சிறப்பு ஆதார் கவுண்டர் பள்ளி குழந்தைகளுக்காக கோவை தலைமை அஞ்சலகத்தில் திறக்கப்பட உள்ளது. இந்த ஆதார் கவுண்டர் பள்ளிக்கு சென்றுவிட்டு வரும் குழந்தைகள் தங்களது ஆதார் சேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் விதமாக மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும். இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறும் கோவை முதுநிலை அஞ்சல் அதிகாரி ஜெயராஜ் பாபு தெரிவித்துள்ளார்.
- 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு தொழிற்சாலைகள் அனைத்திலும் கருப்பு கொடி ஏற்றப்பட்டிருந்தது.
- தொழில் நிறுவனத்தில் பணியாற்ற வேண்டியவர்கள் தெருவில் வந்து போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
கோவை:
கோவை இடையர்பாளையம், கணபதி, குறிச்சி, சிட்கோ, காளப்பட்டி, நீலாம்பூர் உள்பட மாவட்டம் முழுவதும் கிரைண்டர், மிக்சி உதிரி பாகங்கள், வாகன உதிரிபா கங்கள் உள்பட பல்வேறு உதிரி பாகங்கள் தயாரிக்கக்கூடிய 50 ஆயிரம் சிறு, குறு தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த தொழிற்சாலைகளில் இருந்து தயாராகும் பொருட்கள் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக மூலப்பொருட்கள் விலை உயர்வு, பொருளாதார மந்த நிலை உள்ளிட்ட பல இன்னல்களை தொழில் துறையினர் சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் மின் கட்டணமும் உயர்ந்துள்ளதால் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழில்துறையினர் தெரிவிக்கின்றனர். மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி கோவை மாவட்ட தொழில்துறையினர் தொடர்ந்து பல்வேறு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகின்றனர்.
சமீபத்தில் கூட சென்னை சென்று, அமைச்சர்களை சந்தித்து பேசினர். ஆனாலும் தொழில் முனைவோரின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படவில்லை. இதையடுத்து மின் கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்து இருந்தனர்.
அதன்படி இன்று கோவை மாவட்டத்தில் உள்ள சிறு, குறு தொழிற்சாலைகளில் கருப்பு கொடி ஏற்றும் போராட்டம் நடந்தது. கோவை இடைய ர்பாளையம், கணபதி, குறிச்சி, சிட்கோ, காளப்பட்டி, நீலாம்பூர் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு தொழிற்சாலைகள் அனைத்திலும் கருப்பு கொடி ஏற்றப்பட்டிருந்தது. அங்கு பணியாற்றியவர்களும் கருப்பு சட்டை அணிந்திருந்தனர்.
மேலும் கோவை மாவட்ட தொழில் முனைவோர்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்தபடி ஊர்வலமாக கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அங்கு கலெக்டரை சந்தித்து தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
இதேபோல் கோவை மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் உள்ள தொழில் நிறுவனங்களிலும் இன்று கருப்பு கொடியேற்றப்பட்டு போராட்டம் நடந்தது.
இதுதொடர்பாக தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்ட மைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் 13 ஆண்டுகளுக்கு பிறகு இன்று 50 ஆயிரம் தொழில் நிறுவனங்களில் கருப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது. அன்று மின்தடைக்கு எதிராக நடைபெற்ற போராட்டம், இன்று மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி நடைபெற்று வருகிறது.
நிலைக்கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். உச்ச பயன்பாட்டு நேர மின் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். மேற்கூரை சூரியஒளி ஆற்றல் உற்பத்திற்கு நெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.
12 கிலோ வாட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு 3பி-யிலிருந்து 3ஏ1 பிரிவின் கீழ் மாற்றுதல், 2 ஆண்டுகளுக்கு மின் கட்டண உயர்வை கைவி டுதல் என்பன 5 கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது. இதில் 12 கிலோவாட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு 3பியில் இருந்து 3ஏ1 பிரிவின் கீழ் மாற்றுதல் என்ற ஒரே ஒரு கோரிக்கையை மட்டும் அரசு நிறைவேற்றியுள்ளது.
மற்ற கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி எங்கள் கூட்டமைப்பில் உள்ள 300-க்கும் மேற்பட்ட தொழில் அமைப்புகள் சார்பில் இன்று கோவை உள்பட தமிழகம் முழுவதும் தொழில் நிறுவனங்களில் கருப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது.
தொழில் நிறுவனத்தில் பணியாற்ற வேண்டியவர்கள் தெருவில் வந்து போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அடுத்த கட்டமாக சென்னையில் வருகிற 16-ந் தேதி 25 ஆயிரம் தொழில் முனைவோர் பங்கேற்கும் மாபெரும் உண்ணாவிரத போரா ட்டம் நடத்தப்படும். எங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் வரை எங்கள் போராட்டம் தொடரும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- ஆசிய பவர் லிப்டிங் போட்டியில் 44 கிலோ எடைப்பிரிவில் தங்கப் பதக்கங்களும் வென்று சாதனை படைத்து உள்ளார்.
- கோவை வடவள்ளியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
கோவை:
சென்னையை சேர்ந்தவர் சாமுண்டீஸ்வரி. இவர் தேசிய அளவிலான வலுதூக்கும் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று பல பதக்கங்களை வென்று உள்ளார்.
குறிப்பாக கடந்த 1991-ம் ஆண்டு சர்வதேச மகளிர் வலுதூக்கும் போட்டியில் 3-வது இடமும், 1992, 1994-ம் ஆண்டுகளில் நடந்த ஆசிய பவர் லிப்டிங் போட்டியில் 44 கிலோ எடைப்பிரிவில் தங்கப் பதக்கங்களும் வென்று சாதனை படைத்து உள்ளார். தொடர்ந்து 1995-ம் ஆண்டு நடந்த ஆசிய பவர்லிப்டிங் போட்டியில் முதலிடம் பெற்று சாதனை படைத்திருந்தார்.
சாமுண்டீஸ்வரியின் கணவர் அசோக் கோவையில் பணியாற்றியதால் அவர்கள் குடும்பத்துடன் இங்கேயே தங்கியிருந்தனர். இந்நிலையில் சாமுண்டீஸ்வரிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக கோவை வடவள்ளியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 53.
சாமுண்டீஸ்வரியின் உடல், அவரது சொந்த ஊரான சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவருக்கு இறுதிச்சடங்குகள் நடக்கிறது. சாமுண்டீஸ்வரிக்கு ஹரிகிருஷ்ணன், மகேஸ்வர் என்ற 2 மகன்களும், காயத்ரி என்ற மகளும் உள்ளனர்.
- தனியார் நிறுவனத்தில் பெண்மணிக்கு மாதந்தோறும் ரூ.70 ஆயிரம் வீதம் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது.
- தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த 2 பேர் மீது வழக்கு
பீளமேடு,
கோவை பொள்ளாச்சி-பாலக்காடு ரோட்டை சேர்ந்த 40 வயது பெண்மணி, பீளமேடு போலீசில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
நான் பீளமேடு பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக வேலைக்கு சேர்ந்தேன். அப்போது எனக்கு மாதந்தோறும் ரூ.70 ஆயிரம் வீதம் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது.
நான் அந்த நிறுவனத்தில் கடந்த 2021 ஆகஸ்டு மாதம் முதல் 2022 செப்டம்பர் மாதம் வரை வேலை பார்த்தேன். இந்த நிலையில் அவர்கள் எனக்கு கடைசி 4 மாதங்கள் சம்பளம் தரவில்லை.
எனவே நான் அந்த நிறுவன மேலாளர்கள் சுதாகர், சின்னகாளை ஆகியோரிடம் நிலுவையில் உள்ள சம்பளப்பாக்கியை வழங்கும்படி கேட்டேன். அப்போது அவர்கள் பாலியல் உல்லாசத்துக்கு இணங்கினால்தான் சம்பளப் பாக்கி தருவோம் என்று மிரட்டினர். இதற்கு நான் ஒப்புக்கொள்ளவில்லை. எனவே ஆத்திரம் அடைந்த 2 பேரும் என்னை தகாத வார்த்தைகள் பேசி பாலியல் ரீதியாக துன்புறுத்தினர்.
எனவே போலீசார் இதுதொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டு உள்ளது.
புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட தனியார் நிறுவன மேலாளர்கள் சுதாகர் மற்றும் சின்ன காளை ஆகிய 2 பேருக்கும் எதிராக 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- சகோதரிக்கு நியாயம் கேட்டு தந்தையுடன் வந்த பெண்ணுக்கு நேர்ந்த அவலம்
- மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
கோவை,
கோவை மாவட்டம் சிறுமுகை அடுத்துள்ள சின்னகள்ளிப்பட்டி அருகே கடுவாய்க்கரையை சேர்ந்தவர் கனகராஜ்(வயது44). இவருக்கு திருணம் ஆகி விட்டது.
இந்த நிலையில் கனகராஜூக்கு அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.2 பேரும் அடிக்கடி சந்தித்து, தங்கள் காதலை வளர்த்தும், ஜாலியாகவும் இருந்து வந்தனர்.
இந்த கள்ளக்காதல் விவகாரம் கனகராஜின் மனைவிக்கு தெரியவரவே அவர் கணவரை கண்டித்து ள்ளார்.
ஆனாலும் அவர் அதனை கண்டு கொள்ளாமல், தனது கள்ளக்காதலை தொடர்ந்தார். இதையடுத்து கனகராஜின் மனைவி தனது தந்தை வீட்டுக்கு சென்று நடந்ததை சம்பவத்தை தெரிவித்தார்.
இதையடுத்து கனகராஜின் மாமனார், தனது இளைய மகளுடன் அங்கு சென்று, ஏன் இப்படி செய்கிறாய் என கேட்டார். அதற்கு நான் அப்படி தான் செய்வேன் என கூறிய கனகராஜ் அவரை தாக்க முயன்றார்.
இதனை அவருடன் வந்த இளையமகள் பார்த்து தடுக்க முற்பட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர், வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து, அவரை வெட்டினார்.
இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- கணவன்-மனைவி இடையே கருத்துவேறுபாடு காரணமாக விரக்தி
- 70 அடிஆழ கிணற்றில் குதித்ததால் வலது கை துண்டானது
பொள்ளாச்சி,
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே மெட்டுவாவி அடுத்த அரசன் காடு பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன்(வயது27).
இவரது மனைவி பவதாரிணி(25). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். தற்போது வீட்டில் இருந்த படி வேலை பார்த்து வருகிறார்.
இவர்கள் 2 பேரும் 6 மாதமாக காதலித்து கடந்த ஆகஸ்டு மாதம் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் 2 பேரும் அரசன் காட்டில் உள்ள கார்த்திகேயனின் தோட்டத்து வீட்டில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் திருமணமான சில நாட்களிலேயே கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவ்வப்போது சண்டையிட்டு வந்தனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று, கார்த்திகேயன் தனது மனைவியிடம் பணம் கேட்டுள்ளார். அவர் தன்னிடம் ரூ.5 ஆயிரம் இருப்பதாக கூறி அதனை கொடுத்துள்ளார். ஆனால் கார்த்திகேயன் மேலும் பணம் வேண்டும் என்று கேட்டதாகவும், அதற்கு அவர் மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ள்ளது.
இதனால் கோபம் அடைந்த பவதாரிணி, வீட்டை விட்டு வெளியில் வந்து, அங்கிருந்த 70 அடி கிணற்றில் குதித்து விட்டார். இதில் அவரது வலது கை துண்டானது.
இதனை பார்த்த கார்த்திகேயன் உடனடியாக கிணத்துக்கடவு தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் விரைந்து வந்து, கிணற்றில் குதித்த பவதாரிணியை மீட்டு சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கல்வீசி தாக்கியதில் 5 வாகனங்கள் சேதம்
- போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை
கோவை,
கோவை சின்னவேடம்பட்டி அருகே அஞ்சுகம் நகர் உள்ளது. இங்கு ஏராளமான பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு இங்கு 5-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் நின்றிருந்தனர். அவர்கள் அனைவரும் அங்கு ஒரத்தில், அமர்ந்து கஞ்சா புகைத்துள்ளனர்.
பின்னர் போதை தலைக்கேறிய நிலையில், குடியிருப்பு பகுதிக்குள் வந்த வாலிபர்கள் திடீரென அதிக சத்தம் எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர். வாக்குவாதம் முற்றவே வாலிபர்கள் ஒருவருக்கொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். மேலும் அங்கு கிடந்த கற்களை எடுத்தும், ஒருவர் மீது ஒருவர் வீசினர்.
தொடர்ந்து அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார், மோட்டார் சைக்கிள்கள் மீதும் கற்களை தூக்கி வீசியதில், 5 வாகனங்கள் சேதம் அடைந்தன.இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, வாலிபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
இந்த பகுதியில் இளைஞர்கள் கஞ்சா போதையில் அடிக்கடி சண்டையிட்டு வருகின்றனர். இதனால் இங்கு ஒருவித அச்சத்துடனேயே இருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே இந்த பகுதியில் கஞ்சா விற்பனையை தடுத்து, இதுபோன்ற இளைஞர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.
- காந்திபுரத்தில் இருந்து எல்.ஐ.சி. சிக்னல் வழியாக ரேஸ்கோர்ஸ் சென்று பின்னர் திருச்சி சாலையை அடைய அறிவுறுத்தல்
- அவிநாசியில் இருந்து காந்திபுரம் செல்லும் பஸ்கள் அண்ணா சிலை சிக்னலில் வலதுபுறம் திரும்பலாம்
கோவை,
கோவை அவினாசி சாலையில் எல்.ஐ.சி. சந்திப்பு முதல் உப்பிலிபாளையம் சிக்னல் வரை மேம்பாலப் பணி மற்றும் பாதாளச் சாக்கடை பணிகள் நடைபெற உள்ளதால் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக போலீசார் அறிவித்து இருந்தனர். இந்த போக்குவரத்து மாற்றம் அமலுக்கு வந்தது.
அதன்படி, அவினாசி சாலை பழைய மேம்பாலத்தில் இருந்து வரும் வாகனங்கள் நஞ்சப்பா சாலை வழியாக பார்க் கேட் ரவுண்டானாவை அடைந்து மத்திய சிறை அருகே செல்லும் சாலை வழியாக எல்.ஐ.சி. சிக்னலை அடைந்து செல்லலாம்.
அல்லது உப்பிலிபாளையம் சிக்னலில் வலதுபுறம் திரும்பி ரெட்கிராஸ், ஹூசூர் சாலை வழியாக எல்.ஐ.சி. சிக்னலை அடைந்து வலதுபுறம் திரும்பிச் செல்லலாம்.
அண்ணா சிலை சந்திப்பில் இருந்து மேம்பாலம் செல்லும் வாகனங்கள் இடதுபுறம் திரும்பி கே.ஜி. மருத்துவமனை ரெட்கிராஸ் வழியாக உப்பிலிபாளையம் சிக்னலை அடைந்து செல்லலாம்.
அண்ணாசிலை சந்திப்பில் இருந்து காந்திபுரம் செல்லும் வாகனங்கள் இடதுபுறம் திரும்பி டாக்டர் பாலசுந்தரம் சாலை, மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி வழியாக செல்ல வேண்டும்.
அவிநாசியில் இருந்து காந்திபுரம் செல்லும் பேருந்துகள் அண்ணா சிலை சிக்னலில் வலதுபுறம் திரும்பியோ அல்லது லட்சுமி மில் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி பாப்பநாயக்கன்பாளையம் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி வழியாகச் செல்லலாம்.
காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து அவிநாசி செல்லும் பேருந்துகள் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி, பாப்பநாயக்கன்பாளையம் லட்சுமி மில் சந்திப்பு வழியாக செல்ல வேண்டும்.
காந்திபுரத்தில் இருந்து திருச்சி செல்லும் வாகனங்கள் பார்க்கேட், எல்.ஐ.சி. சிக்னல், அண்ணா சிலை சிக்னல் வழியாக ரேஸ்கோர்ஸ் சென்று பின்னர் திருச்சி சாலையை அடைந்து செல்லலாம்.
திருச்சி சாலையில் இருந்து வரும் வாகனங்கள் ரேஸ்கோர்ஸ், எல்,ஐ.சி. சிக்னல், பார்க்கேட் வழியாக காந்திபுரம் செல்லலாம். இந்த போக்குவரத்து மாற்றத்துக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கோவை மாநகரப் போக்குவரத்துக் காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இஞ்சிப்பாறை எஸ்டேட்டில் திரியும் கரடியை பிடிக்க கூண்டு வைப்பு
- கரடி நடமாட்டம் குறித்து அறிந்தால் உடனடியாக தகவல் அளிக்க அறிவுறுத்தல்
வால்பாறை,
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள மாணிக்க எஸ்டேட் தேயிலை தோட்டத்தில் ஜித்தினி குமாரி (26), சுமத் குமாரி(25) ஆகிய இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தேயிலை தோட்டத்தில் பதுங்கி இருந்த கரடி, இருவரையும் தாக்கியது. படுகாயமடைந்த இருவரும், வால்பாறை அரசு மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இஞ்சிப்பாறை எஸ்டேட் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கரடிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும், கரடியைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து ஆனைமலை புலிகள் காப்பக துணை கள இயக்குநர் பார்கவ் தேஜா உத்தரவின் பேரில் மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் மணிகண்டன் தலைமையிலான வனத்துறையினர், இஞ்சிப் பாறை எஸ்டேட் பகுதியில் சுற்றித்திரியும் கரடியை பிடிக்க கூண்டு வைத்து கண்காணித்து வருகின்றனர்.
பொதுமக்கள், தேயிலை எஸ்டேட் தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும், கரடி நடமாட்டம் குறித்து தெரிந் தால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
- அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்
- முதலாவதாக சரவணம்பட்டி தனியார் கல்லூரி வளாகத்தில் மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கடன் வழங்கும் விழா நடந்தது.
கோவை,
தமிழக வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆய தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி கோவை மாநகராட்சி பகுதிகளில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
முதலாவதாக சரவணம்பட்டி தனியார் கல்லூரி வளாகத்தில் மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கடன் வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்து மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கடன்களை வழங்கினார்.
பின்னர் கோவை மாநகராட்சி 10-வது வார்டுக்கு உட்பட்ட சர வணம்பட்டி பூந்தோட்டம் நகரில் ரூ.72 லட்சம் மதிப்பீட்டில் ஸ்டெம் பூங்கா அமைக்கும் பணி, கோவை மாநகராட்சி 48-வது வார்டுக்கு உட்பட்ட சத்தி ரோட்டில் ரூ. 2.95 கோடி மதிப்பீட்டில் ஆம்னி பஸ் நிலையம் கட்டும் பணி, 69-வது வார்டுக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் சாலை கிருஷ்ணசாமி சாலை மேற்புறத்தில் மழை நீர் வடிகாலுடன் கூடிய ரூ. 2 கோடியே 18 லட்சம் மதிப்பீட்டில் நடைபாதை கட்டுதல் பணியை தொடங்கி வைத்தார்.
இதேபோன்று 72- வது வார்டுக்கு உட்பட்ட திருவேங்கடம் சாலை முதல் முத்தண்ணன் குளம் வரை ரூ. 1.47 கோடி மதிப்பீட்டில் மழை நீர் வடிகால் கட்டுதல், என்.யு.எச்.எம் நிதியின் கீழ் வ.உ.சி பூங்கா மைதானம் அருகில் உள்ள சாலையில் ஆரோக்கியமான சுகாதாரமான உணவு உள்ள தெரு ரூ. 1 கோடி மதிப்பில் அமைக்கும் பணி, 54 வது வார்டுக்கு உட்பட்ட காமராஜர் சாலை, அவிநாசி சாலை முதல் வரதராஜபுரம் சந்திப்பு வரை ரூ. 4.69 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் கட்டும் பணிகள் உள்ளிட்ட ரூ.13.01 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி, மேயர் கல்பனா, மாநகராட்சி கமிஷனர் பிரதாப், துணை மேயர் வெற்றி செல்வன், தி.மு.க மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக், தொண்டாமுத்தூர் ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.






