என் மலர்
அரியலூர்
- தொழிற்சாலை மூலம் 15 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என தெரிகிறது.
- பெரம்பலூரில் நடைபெறும் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திலும் அவர் பங்கேற்று பேசுகிறார்.
சென்னை:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த செப்டம்பர் மாதம் சிகாகோ சென்றிருந்த போது அரியலூர் மாவட்டத்தில் 'டீன்ஷூஸ்' நிறுவன காலணி தயாரிக்கும் தொழிற்சாலை அமைப்பதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதை செயல்படுத்துவதற்காக 15-ந் தேதி அரியலூர் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டீன்ஷூஸ் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.
ஜெயங்கொண்டம் மகிமைபுரம் பகுதியில் 130 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழில்பேட்டை வளாகத்தில் டீன்ஷூஸ் குழுமத்தின் இண்டஸ்ட்ரியல் இந்தியா பிரைவேட் லிமிடெட் சார்பில் ரூ.1000 கோடி முதலீட்டில் இந்த தொழிற்சாலை அமைய உள்ளது.
இந்த தொழிற்சாலை மூலம் 15 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என தெரிகிறது. அன்றைய தினம் அரியலூரில் நடைபெறும் அரசு விழாவில் அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களை சேர்ந்த பயனாளிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்கி, முடிவுற்ற பணிகளை திறந்து வைக்கிறார்.
பெரம்பலூரில் நடைபெறும் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திலும் அவர் பங்கேற்று பேசுகிறார்.
- உடையார்பாளையம் உதவி கலெக்டர் அலுவலகத்தில் பேச்சு வார்த்தையில் நடந்தது.
- இந்த மோதலில் கொளஞ்சி மனைவி தேவகி, காமராஜ் மனைவி சரோஜா ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள குவாகம் கிராமம் வெற்றி தெருவை சேர்ந்தவர் கொளஞ்சி. இவரது மனைவி தேவகி (வயது 40). குவாகம் ஒன்றிய அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர். அதே பகுதியை சேர்ந்தவர் காமராஜ். அவரது மனைவி சரோஜா (55) குவாகம் ஒன்றிய தி.மு.க. கவுன்சிலர்.
கொளஞ்சி மற்றும் காமராஜ் ஆகியோருக்கு இடையே அரசியல் முன் பகை இருந்து வந்தது. கொளஞ்சி வீட்டின் எதிர்ப்புறம் மாரியம்மன் கோவில் ஒன்று உள்ளது அதன் அருகே ஒரு காலி மனை உள்ளது.
இந்த மனையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு கொளஞ்சி மண் கொட்டினார். அப்போது காமராஜ் அந்த இடம் கோவிலுக்கு சொந்தமானது எனக் கூறி மண் கொட்ட எதிர்ப்பு தெரிவித்தார். அதன் தொடர்ச்சியாக இரு தரப்பினருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இது குறித்து குவாகம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் உடையார்பாளையம் உதவி கலெக்டர் அலுவலகத்தில் பேச்சு வார்த்தையில் நடந்தது. அதில் பிரச்சனைக்குரிய இடம் கொளஞ்சிகே சொந்தம் என உதவி கலெக்டர் உத்தரவிட்டார். இதனால் கொளஞ்சி நேற்று காலிமனையில் மண் நிரவ ஆரம்பித்தார். அப்போது மீண்டும் இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது.
தகவல் அறிந்த குவாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர். அப்போது போலீசாரின் முன்னிலையில் இரு தரப்பினரும் மாறி மாறி கல்லால் தாக்கி கொண்ட னர். அப்போது கொளஞ்சி மற்றும் அவரது தரப்பைச் சேர்ந்த நபர்களின் வீடுகள் மீது நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டது. மேலும் வீடுகள், 4 பைக்குகள் ஒரு கார் அடித்து நொறுக்கப்பட்டன. உடனே போலீசார் இருதரப்பை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டவர்களை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
சம்பவ இடத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் தாக்குதலில் வெடித்த, வெடிக்காத நாட்டு வெடிகுண்டுகளை தடயவியல் நிபுணர் குமாரவேல் தலைமையிலான போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த மோதலில் கொளஞ்சி மனைவி தேவகி, காமராஜ் மனைவி சரோஜா ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் காயம் அடைந்த இருதரப்பை சேர்ந்த 5 பெண்கள் உட்பட 7 பேர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று திரும்பினர்
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட கொளஞ்சி தரப்பில் கந்தசாமி, தனவேல், அனிதா, ஆனந்தி ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
காமராஜ் தரப்பில் காமராஜ், திரிசங்கு, பாலச்சந்திரன்,சங்கர், பரமசிவம், சூர்யா, உட்பட 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மோதலை தவிர்ப்பதற்காக அங்கு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
- கும்பலை சேர்ந்தவர்கள் பல்வேறு இணைய எண்களில் இருந்து பேசியுள்ளனர்.
- போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், செந்துறையை அடுத்த இலுப்பையூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் கருணாமூர்த்தி (வயது 50). இவர் உரம் மற்றும் பூச்சி மருந்து விற்பனை கடை நடத்தி வருகிறார்.
இந்தநிலையில், இவரை கடந்த ஆண்டு மே மாதம் மர்ம ஆசாமி ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசுகையில், வேவ் எப்.எக்ஸ். என்ற இணையதளத்தில் முதலீடு செய்தால் தினமும் வருமானம் வரும் என்றும், குறுகிய காலத்தில் அதிக லாபம் பெறலாம் என்றும் ஆசை வார்த்தை கூறியுள்ளார். பின்னர் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் பல்வேறு இணைய எண்களில் இருந்து பேசியுள்ளனர்.
இவர்களது பேச்சை நம்பிய கருணாமூர்த்தி மர்ம ஆசாமிகள் கூறிய பல்வேறு வங்கிக்கணக்குகளில் ரூ.71 லட்சத்து 28 ஆயிரத்து 770 செலுத்தியுள்ளார். பின்னர் அவர்கள் பணத்தை மோசடி செய்ததால் மனமுடைந்த கருணாமூர்த்தி அரியலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் கடந்த மே மாதம் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில், போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் உத்தரவின்படி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு மற்றும் இணைய குற்றப்பிரிவு) விஜயராகவன், சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா, சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதில், மோசடியில் ஈடுபட்டவர்கள் கோவை மாவட்டம், போத்தனூரை சேர்ந்த ரியாஸ்கான் (27), குனியமுத்தூரை சேர்ந்த ரம்யா (28), பாப்பநாயக்கன்புதூரை சேர்ந்த மகேஸ்வரி (47) என தெரியவந்தது.
இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 23 ஆயிரம், 4 செல்போன்கள், 1 மடிக்கணினி, 2 வங்கிக்கணக்கு புத்தகம், 4 ஏ.டி.எம். கார்டுகள், 4 சிம் கார்டுகள், 2 காசோலை புத்தகம், 4 போலி முத்திரை சீல்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், இந்த மோசடியில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்று அரியலூர் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான பெண் உள்பட 3 பேரும் தமிழகம் முழுவதும் நெட் ஒர்க் அமைத்து பலரிடம் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். அதன் அடிப்படையில் விசாரணை துரிதப்படுத்தப்பட்டு உள்ளது.
கைதானவர்களின் இணையதளத்தில் பதிவு செய்து பணத்தை இழந்தவர்கள் குறித்த விவரத்தை சேகரிக்கவும், இந்த இணையதளத்தை முடக்கவும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மேலும் இணையதளம் மூலம் பணத்தை இழந்தவர்கள் சைபர் கிரைம் மற்றும் உள்ளூர் போலீசாரை தொடர்பு கொள்லலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் இந்த மோசடியில் வேறு சிலருக்கும் தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது குறித்தும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இதுபோன்று சிறிய முதலீடு மூலம் அதிக லாபம் பெறலாம் என்று கூறும் யாரையும் நம்பி பணம் அளிக்க வேண்டாம், இணைய மோசடிக்காரர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும். மேலும் உங்கள் வங்கி தொடர்பான தகவல்கள், ஓ.டி.பி.யை யாரிடமும் கூற வேண்டாம் என்று சைபர் கிரைம் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
- எதிர்க்கட்சிகள் வேண்டுமென்று குறை கூறுகிறார்கள்
- பண்பாடு தெரிந்தவர்கள், அதன் அருமை, பெருமை தெரிந்தவர்களுக்கு தான் புரியும்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் செந்துறையில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், தனியாருக்கு சொந்தமான இருசக்கர வாகனங்கள் மொபைல் ஆப் மூலம் நாடு முழுவதும் வாடகைக்கு இயக்கப்பட்டு வருகிறது. இந்த வாகனங்களால் தமிழகத்தில் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுவதாக சமூக அலுவலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். அதனை அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
வெள்ளத்தடுப்பு பணிகளை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தியது. எதிர்க்கட்சிகள் வேண்டுமென்று குறை கூறுகிறார்கள் என்றார். தமிழ்த்தாய் வாழ்த்து குறித்து சீமான் தெரிவித்த கருத்து குறித்து நிருபர்கள் கேட்டபோது, தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் மனோன்மணியம் சுந்தரனார் காலத்தில் பாடப்பட்டு தமிழக அரசு அதனை ஏற்று அதிகாரப்பூர்வமாக நடைமுறைப்படுத்தி வருகிறது. அந்த பண்பாடு தெரிந்தவர்கள், அதன் அருமை, பெருமை தெரிந்தவர்களுக்கு தான் புரியும். அவரை (சீமான்) போன்றவர்கள் வெறும் போலி அரசியல்வாதிகள். எந்த நேரத்தில் எதையாவது ஒன்றை பரபரப்பு செய்திகளுக்காக பேசுவார்கள். எனவே அவர்களை மக்கள் புறம் தள்ளுவார்கள் என்று அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
- குழந்தைகள் சிறப்பு மருத்துவமனை உள்ளதால் எந்த நேரமும் கூட்டம் நிறைந்திருக்கும்.
- டாக்டரிடமும், மருத்துவமனை பணியாளர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அரியலூர்:
அரியலூர் நகரின் மையப்பகுதியில் அரசு கல்லூரியும், அரசு மருத்துவக்கலூரிக்கு செல்லும் சாலையில் தனியார் மருத்து வமனை அமைந்துள்ளது. இது குழந்தைகள் சிறப்பு மருத்துவமனை உள்ளதால் எந்த நேரமும் கூட்டம் நிறைந்திருக்கும்.
இந்த சாலையில் இரவு பகலாக மக்கள் மிக அதிகமாக சென்று வருவார்கள். இந்த நிலையில் ஆயுதபூஜை அன்று இரவு பூஜையை முடித்துவிட்டு சீக்கிரமாக மருத்துவமனையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டனர். மறுநாள் காலையில் சுமார் 10 மணியளவில் மருத்துவமனையை திறந்தபோது பின்பக்க கதவு உடைத்து உள்ளே நுழைந்து மேஜையின் பூட்டை உடைத்து உள்ளேயிருந்த
விலை உயர்ந்த மருந்து, மாத்திரைகள், பணத்தை திருடிசென்றுவிட்டனர். இதன் மதிப்பு ரூ.30 ஆயிரம் ஆகும்.
தகவல் அறிந்த அரியலூர் போலீசார் விரைந்து சென்று மோப்ப நாய் உதவியுடன் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். டாக்டரிடமும், மருத்துவமனை பணியாளர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சி.சி.டி.வி. கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து தீவிர விசாரனை மேற்கொண்டுள்ளனர். அரியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இச்சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
- மாணவர்கள் 5 பேரும் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- இல்லம் தேடி கல்வி திட்ட ஆசிரியர் மட்டுமே பள்ளியில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அரியலூர் மாவட்டம் குணமங்கலம் பகுதியில் அரசு தொடக்க பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளியில் 3 ஆம் வகுப்பு படிக்கும் 4 மாணவர்களும் 5 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவரும் கள்ளிப்பால் கள்ளிச் செடியை உடைத்து, அதில் இருந்து வெளியேறிய பாலை சுவைத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளிப்பால் குடித்ததை குறித்து மாணவர்கள் கூறியதை அடுத்து 5 பேருக்கும் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் போராட்டம் காரணமாக இல்லம் தேடி கல்வி திட்ட ஆசிரியர் மட்டுமே பள்ளியில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
- பாக்கும், பலா மரங்களும் மிக நல்ல முறையில் வளர்ந்து மகசூல் கொடுக்கிறது.
- எல்லா பயிரும் இங்கும் விளையும். மஞ்சள் மிக நல்ல முறையில் வளர்ந்து வருகிறது.
அரியலூர் மாவட்டம் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை ஒட்டி நிற்கும் பகுதி. அரியலூர் மாவட்டத்திற்குள் ஒரு சிலப் பகுதிகள் டெல்டா பகுதிக்குள் வந்தாலும் பெரும்பாலானப் பகுதிகள் வானம் பார்த்த பூமியாகவே இருக்கிறது. அரியலூர் மாவட்டத்திற்குள் செல்லும் போதே டெல்டா மாவட்டங்களில் இருக்கும் பசுமையான நிலப்பரப்பு சற்றே மாற துவங்குவதை கவனிக்க முடியும். அங்கு மலைப் பகுதிகளில் விளையும் மர வாசனை பயிர்கள் விளையும் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அதனை சாத்தியப்படுத்தி நம்மை வியக்க வைக்கிறார் அரியலூர் மாவட்ட விவசாயி ஒருவர்.
மழை இல்லாத காலங்களில் வறட்சி வந்து விளையாடும் மாவட்டத்தில் தன் நிலத்தை வளம் கொழிக்கும் குளிர்ச்சி பகுதியாக மாற்றியிருக்கிறார் முன்னோடி விவசாயி கே.ஆர். பழனிச்சாமி. அரியலூர் மாவட்டத்தில் ஆண்டிமடம், கருக்கை கிராமத்தில் அமைந்துள்ளது இவரின் பண்ணை. 5 அரை ஏக்கர் பரப்பளவில் வறண்டு கிடக்கும் பகுதியில் புதிதாக உதித்த கொடைக்கானல் போல குளுமையாக அமைந்துள்ளது இவரது "நற்பவி வளர்சோலை" இயற்கை பண்ணை.

பழனிசாமி, சமவெளியில் மரவாசனை பயிர்கள் சாத்தியமா என்ற கேள்வியோடு தொடங்கி இன்று அதில் வெற்றிகரமாக சாதித்துள்ளார். கடந்த 15 வருடங்களாக இயற்கை விவசாயம் செய்து வரும் இவரிடம், பண்ணையில் உள்ள பயிர்கள் என்னென்ன என கேட்ட போது, பூரிப்போடு பேசினார் "என்னுடைய 5 அரை ஏக்கர் தோட்டத்தில் மொத்தம் 2 ஆயிரம் டிம்பர் மரங்கள் இருக்கின்றன. இதில் தேக்கு, மஹோகனி, வேங்கை, செம்மர, படாக், கடம்பு, கடம்பில் அனைத்து ரகங்கள் என கிட்டத்தட்ட 30 வகையான டிம்பர் மரங்கள் இருக்கின்றன, நிறைய மூலிகைகள் இங்கு உள்ளது.
இதற்கிடையே மர வாசனை பயிர்களான ஏலக்காய், கிராம்பு, ஜாதிக்காய், மிளகு, சர்வ சுகந்தி மூலிகை பயிர் என பல வகை உண்டு. மேலும் பாக்கு, கொய்யா, சப்போட்டா, ஆவக்கோடா, சாத்துக்கொடி, பைனாப்பிள், லிட்சி, பன்னீர் பழம், எல்லாமும் இருக்கிறது. ஹனி ஜாக், கேரளா வகைகள் உள்ளிட்ட 22 வகையான பலாப்பழ மரங்கள் இருக்கின்றன." என அவர் சொல்லும் போது, இவர் பண்ணையில் என்ன தான் இல்லை என்று வியப்பாக இருந்தது.

மலை பிரதேசத்திலும், குளிர் பிரதேசத்திலும் மட்டுமே வளரும் என நம்பப்பட்ட மரங்கள் இந்த சமவெளியில் எப்படி சாத்தியம் என நாம் ஆச்சரியத்துடன் கேட்ட போது, விரிவாக பேசத் தொடங்கினார் "இந்த கேள்வி ஆரம்பத்தில் எனக்கும் இருந்தது. ஆனால் இன்று இதில் நான் வெற்றி பெற்றிருக்கிறேன். இதற்கு காரணம் சமவெளியில் இந்த பயிர்கள் வளர தேவையான சூழலை நான் உருவாக்கியிருக்கிறேன். இங்கே கொடைக்கானல் போன்ற ஒரு குளுமையான சூழலை நாம் உருவாக்கியிருக்கிறோம். அதனால் அங்கு வளரும் எல்லா பயிரும் இங்கும் விளையும். மஞ்சள் மிக நல்ல முறையில் வளர்ந்து வருகிறது.
இங்கு பாக்கும், பலா மரங்களும் மிக நல்ல முறையில் வளர்ந்து மகசூல் கொடுக்கிறது. குறிப்பாக பலா மரங்களுக்கு மழை மேகங்களை ஈர்க்கும் தன்மை இருப்பதாக சொல்கிறார்கள். விஞ்ஞான ரீதியாக உண்மையா தெரியாது, ஆனால் என் நிலம் இந்த மரங்களால் குளுமையாக இருக்கிறது. இங்கு எத்தனை நீர் சேர்ந்தாலும் ஒரு போதும் தேங்குவதில்லை. அத்தனை நீரையும் மண் உறிஞ்சி கொள்ளும் அளவும் மண் கண்டம் மிகச் சிறப்பாக உள்ளது.
மேலும் இங்கு உழவில்லா விவசாயம் செய்கிறேன். இரசாயனங்கள், பூச்சிக் கொல்லிகள், களைக்கொல்லிகள் என எதுவும் பயன்படுத்துவது இல்லை. மாறாக மாட்டு எரு, பஞ்சக்கவ்யம், மீன் கரைசல் போன்ற இயற்கை இடுப்பொருட்களே பயன்படுத்துகிறேன். இதனால் மண் வளமாக, உயிரோட்டமாக இருக்கிறது. பொதுவாக எங்கள் ஊர் பக்கம் முந்திரி பயிர் தான் பிரதான பயிராக இருக்கும், ஆனால் என் நிலத்தில் அனைத்து வகையான பயிர்களும் வருகின்றன. நான் உருவாக்கிய இந்த மாற்றம், நான் உருவாக்கிய இந்த சூழலாலே சாத்தியம்" என உறுதியாக சொன்னார்.

இந்தப் பண்ணை மூலம் அவருக்கு கிடைக்கும் வருவாய் மற்றும் சந்தைப்படுத்துதல் தொடர்பாக அவர் பயன்படுத்தும் உத்திகள் குறித்து நாம் கேட்ட போது, வெற்றிப் புன்னகையோடு பேசத் தொடங்கினார் "என்னிடம் இப்போது 15 ஆண்டுகள் பழமையான டிம்பர் மரங்கள் இருக்கின்றன, இவற்றை இனியும் பல வருடங்களுக்கு வெட்டும் எண்ணம் எனக்கு இல்லை. இது என் தலைமுறை கடந்து வருபவர்களுக்கு நான் உருவாக்கியிருக்கும் மிகப் பெரிய சொத்து. இதை வெட்டாமல் ஊடுபயிர் மூலம் என் வருவாயை ஈட்டி வருகிறேன். உதாரணமாக, கேரளா போன்ற இடங்களில் மட்டுமே விளையும் என சொல்லப்படும் 'எக்ஸாடிக் பழ வகைகளில்' ஒன்றான 'குடம் புளி' இப்போது காய்ப்புக்கு வந்திருக்கிறது. மேலும் இங்கிருக்கும் 100 பலா மரங்களிலிருந்து 2 இலட்சம் வரை வருமானம் வருகிறது. மிளகு சாகுபடியில், பைனாப்பிள் சாகுபடியில் எனப் பல வழிகளில் எனக்கு வருமானம் வருகிறது. மாதத்திற்கு இந்த நிலத்திலிருந்து குறைந்தது 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை நிரந்தர வருமானம் வருகிறது.
மேலும் எங்கள் நிலம் கும்பகோணத்திலிருந்து விருதாச்சலம் செல்லும் பிரதான சாலையில் அமைந்திருப்பதால், எங்கள் நிலத்தின் முன்பாகவே ஒரு இயற்கை அங்காடி வைத்திருக்கிறோம். அங்கு வருபவர்கள் எங்கள் நிலத்தை பார்த்து இது இயற்கை விவசாயம் மூலம் விளைவிக்கப்பட்ட பொருட்கள் என்பதை தெரிந்து கொண்டு நல்ல விலைகொடுத்து பொருட்களை வாங்கி செல்கிறார்கள்." என்றார் உற்சாகமாக.
எனவே கலப்பினப் பயிர்கள், மலையினப் பயிர்கள், வாசனைப் பயிர்கள் என அனைத்து ரகங்களும் ஒரே இடத்தில் சாத்தியமா என்றால் சாத்தியம் என்பதை அடித்து சொல்கிறார். மேலும் அவருடைய அனுபவத்தை ஈஷா காவேரி கூக்குரல் சார்பில் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி திருப்பூர் தாராபுரத்தில் "சமவெளியில் மர வாசனைப் பயிர்கள் சாத்தியமே" எனும் மாபெரும் கருத்தரங்கில் நேரடியாக பகிர்ந்து கொள்ள இருக்கிறார்
இவரைப் போலவே இன்னும் பல முன்னோடி விவசாயிகள், வேளாண் வல்லுனர்கள் மற்றும் விஞ்ஞானிகள் என பல அறிஞர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு தங்கள் அனுபவத்தை பகிர உள்ளனர்.
இக்கருத்தரங்கில் கலந்து கொள்ள விரும்புவோர் 94425 90079 / 94425 90081 என்ற எண்ணை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
- மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அரியலூரில் நேற்று நடைபெற்றது.
- தி.மு.க.வும், பா.ஜ.க.வும் வேறு வேறு அல்ல.
அரியலூர்:
நாம் தமிழர் கட்சியின் அரியலூர், பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அரியலூரில் நேற்று நடைபெற்றது. இதில், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சிறப்புரையாற்றினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க.வும், பா.ஜ.க.வும் வேறு வேறு அல்ல. 2 கட்சிகளுக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. தங்கள் கட்சியில் 100 சதவீதம் இந்துக்கள் இருப்பதாக பா.ஜ.க.வினர் கூறுகின்றனர். தி.மு.க.வில் 90 சதவீத இந்துக்கள் இருப்பதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார்.
எனவே, இரண்டுக்கும் 10 சதவீதம்தான் வித்தி யாசம். விஜய் தனது கட்சி மாநாட்டுக்கு என்னை அழைக்க மாட்டார். அழைக்கவும் கூடாது. அவரது கட்சியின் தொடக்க விழாவுக்கு, மற்றவர்களை அழைக்க மாட்டார்.
நாம் தமிழர் கட்சி எப்போதும் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் என்று நான் முடிவெடுத்து இருக்கிறேன். ஆனால், தேர்தல் காலத்தில் கட்சி நிர்வாகிகள் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதைப் பொறுத்து, கூட்டணி குறித்து யோசிப்பேன்.
2026-ல் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்காக, 50 தொகுதி களில் வேட்பாளர்களை தேர்வு செய்துவைத்து உள்ளேன். ஆனால் செய்தியாளர்களிடம் இது குறித்து இதுவரை நான் தெரிவிக்கவில்லை.
இவ்வாறூ அவர் கூறினார்.
- கரும்புகை வெளியேறியதால் ஆய்வகத்தில் இருந்த 19 மாணவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.
- மூச்சு திணறல் காரணமாக மாணவர்கள் அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் தேளூர் அரசு உயர்நிலைப்பள்ளி ஆய்வகத்தில் கணினி வெடித்து விபத்து ஏற்பட்டது.
கரும்புகை வெளியேறியதால் ஆய்வகத்தில் இருந்த 19 மாணவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. அருகே இருந்த அறைகளுக்கும் கரும்புகை பரவியதால் அங்கிருந்த மாணவர்களும் பாதிக்கப்பட்டனர்.
மூச்சு திணறல் காரணமாக மாணவர்கள் அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
- சென்னையில் தற்போது தாழ்தள பேருந்துகள் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.
- எச்.ராஜா தொடர்ந்து மக்களால் ஒதுக்கி தள்ளப்பட்டவர்.
அரியலூர்:
அரியலூரில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற விழாவில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
போக்குவரத்து துறையின் மூலம் சென்னையில் தற்போது தாழ்தள பேருந்துகள் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. மின்சார பேருந்துகள் வாங்குவதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது. டெண்டர் முடிவுற்ற பிறகு மின்சாரப் பேருந்துகள் செயல்பாட்டிற்கு வர உள்ளது.
சென்னையில் கையடக்க கருவியோடு டிக்கெட் வழங்குகின்ற கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்பிறகு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்திலும் மற்ற போக்குவரத்துக் கழகங்களிலும் அடுத்தடுத்த கட்டங்களில் அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எங்களை போன்ற தொண்டர்கள் எல்லாம் உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணை முதல்வராக வேண்டும் என்று காத்திருக்கிறோம்.
பா.ஜ.க.வின் மூத்த தலைவர் எச்.ராஜா தான் தமிழ்நாட்டுக்கு பெரும் தீங்கானவர். உதயநிதி செயல்பாட்டை மக்கள் அறிவார்கள். அதனால் தான் அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டப்பேரவை உறுப்பினராகி அமைச்சராகி உள்ளார்.
ஆனால் எச்.ராஜா தொடர்ந்து மக்களால் ஒதுக்கி தள்ளப்பட்டவர். எடப்பாடி பழனிச்சாமி ஒரு அடிப்படை அரசியல் கூட தெரியாமல் முதல்வரானவர். நாணயம் வெளியீடு என்பது ஒரு அரசு விழா. அரசு விழா நடைபெறும் போது மத்திய அரசு, மாநில அரசு இணைந்து பங்கேற்புடன் நடைபெற்று உள்ளது.
தி.மு.க. சார்ந்த நிகழ்வுகள் நடைபெறும் போது அதில் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்பது வழக்கமாக உள்ளது.
எடப்பாடி பழனிச்சாமி தனது முதுகை முதலில் பார்க்கட்டும். பிறகு மற்றவர்களை விமர்சிக்கட்டும். காய்ந்த மரம் கல்லடிபடும் என்ற அடிப்படையில் ஆளுங்கட்சியை எல்லோரும் விமர்சிப்பது வழக்கம்.
அதுபோல சீமான் விமர்சிக்கிறார். ஊடக வெளிச்சம் வர வேண்டும் என்பதற்காக தரக்குறைவான விமர்சனங்களை சொல்கிறார். அவர்களெல்லாம் மக்களால் ஒதுக்கி தள்ளப்படுவார்கள்.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
- போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் பாபு தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- 120 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து உடையார்பாளையம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சில பகுதிகளில் கள்ளத்தனமாக அரசு மது பாட்டில் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் பாபு தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகம் ஏற்படும் அளவிற்கு நின்று கொண்டிருந்த ஒருவரை விசாரணை செய்த போது திடீரென ஓட தொடங்கினார். அவரை விரட்டி பிடித்து விசாரணை செய்ததில் அவர் கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து அவரிடம் இருந்து 120 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து அவரை கைது செய்து விசாரணை செய்ததில் அவர் நத்தவெளியை சேர்ந்த கலியபெருமாள் மகன் இளவரசன் என்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவர் தொடர்ந்து கள்ளத்தனமாக மது பாட்டில் விற்பனை செய்து வருகிறார் என கூறப்படுகிறது.
- 2 மான்கள் துப்பாக்கியால் சுட்டதில் இறந்து கிடந்தது.
- மான்களை மீட்டு வனத் துறையினரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை பெரிய ஏரி பகுதியில் ஏராளமான மான்கள் வசிக்கின்றன. இந்த பகுதியில் நேற்று துப்பாக்கியால் சுடும் சத்தம் பல முறை கேட்டது. இதனையடுத்து அங்கிருந்த சிலர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த போது அங்கு 2 மான்கள் துப்பாக்கியால் சுட்டதில் இறந்து கிடந்தது தெரிய வந்தது. போலீசார் வருவதை அறிந்து வேட்டை கும்பல் மான்களை அங்கேயே போட்டுவிட்டு ஓட்டம்பிடித்தது விசாரணையில் தெரிய வந்தது. இதனை அடுத்து அந்த மான்களை மீட்டு வனத் துறையினரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
இதனைத் தொடர்ந்து மான்களை சுட்டு வேட்டை யாடியது யார்? வேட்டைக்கு பயன்படுத்தியது நாட்டு துப்பாக்கியா? அல்லது லைசன்ஸ் துப்பாக்கியா? என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து மான்களை பிரேத பரிசோதனை செய்த பிறகு அதில் உள்ளது பால்ரஸ் குண்டா அல்லது துப்பாக்கி குண்டா என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல் தெரிய வேண்டும் என மாவட்ட வன அலுவலர் இளங்கோவன் தெரிவித்தார்.
இந்த பகுதியில் மான்களை வேட்டையாடிய சம்பவம் மிகப்பெரிய பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இன்று அதிகாலை அதே பகுதியில் ஒரு மான் விபத்தில் சிக்கி உயிர் இழந்தது. இதுகுறித்து செந்துறை போலீசார் மற்றும் வனத்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






