என் மலர்
தெலுங்கானா
- தெலுங்கானாவில் ஏழு வாக்குறுதிகளை அளித்து காங்கிரஸ் தேர்தலை சந்திக்கிறது.
- கர்நாடகாவில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
தெலுங்கானாவில் வருகிற 30-ந்தேதி சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை பிடிக்க பிஆர்எஸ் (சந்திரசேகர ராவ்) தீவிர பிரசாரம் செய்து வருகிறது. அதேவேளையில் காங்கிரஸ் முதல் முறையாக ஆட்சியை பிடிக்க வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் பா.ஜனதாவை வீழ்த்த முக்கியமான ஐந்து வாக்குறுதிகளை அளித்தது. மக்களும் காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் அமர்த்தினர்.
தற்போது காங்கிரஸ் கட்சி "கர்நாடகா மாடல்" என மற்ற மாநில தேர்தலின்போது பயன்படுத்தி வருகிறது. அந்த வகையில்தான் தெலுங்கானாவில் முக்கியமான ஏழு வாக்குறுதிகளை அளித்துள்ளது.
ஆனால் சந்திரசேகர ராவின் பாரதிய ராஷ்டிரிய சமிதி, கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி தேர்தலின்போது அளித்த முக்கியமான வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. காங்கிரஸ் பொய் சொல்கிறது என பிரசாரம் செய்து வருகிறது. அதேபோல்தான் பா.ஜனதாவும் பிரசாரம் செய்து வருகிறது.
நேற்று காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது சித்தராமையா கூறும்போது "செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சிகளில், கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி அளித்த முக்கிய ஐந்து வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனச் சொல்வதை நான் பார்த்தேன்.

பா.ஜனதா தலைவர்கள், பிஆர்எஸ் தலைவர் மற்றும் மற்ற தலைவர்களும் சொல்கிறார்கள். இது உண்மை அல்ல. நாங்கள் மே மாதம் ஆட்சிக்க வந்தோம். நாங்கள் கேபினட் அறைக்குள் சென்றதும், ஐந்து வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான முடிவை எடுத்தோம். அதே நாள் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதற்கு சற்று நேரம் எடுத்துக் கொண்டது. அவ்வளவுதான்" என்றார்.
119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானாவில் பிஆர்எஸ்- காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. சந்திரகேசர ராவ் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். ஒரு தொகுதியில் காங்கிரஸ் வலுவான வேட்பாளரை நிறுத்தியுள்ளது.
- ஊழல் செய்யும் அரசாங்கத்தை கே. சந்திரசேகர ராவ் நடத்தி வருகிறார்.
- சந்திரசேகர ராவின் குடும்பத்தினர் வசம் தான் உள்ளது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெலுங்கானா மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.
அந்த வகையில், அந்தோல் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிராசார கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, தெலுங்கானா முதலமைச்சர் மற்றும் பி.ஆர்.எஸ். கட்சி தலைவர் கே. சந்திரசேகர ராவ்- தனது கட்சி மாநிலத்திற்காக என்ன செய்துள்ளது என்பதை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என்று தெரிவித்து இருக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், நாட்டிலேயே மிகவும் ஊழல் செய்யும் அரசாங்கத்தை கே. சந்திரசேகர ராவ் நடத்தி வருகிறார். இவரது ஆட்சியில் பணம் கொட்டும் இலாகாக்கள் அனைத்தும் சந்திரசேகர ராவின் குடும்பத்தினர் வசம் தான் உள்ளது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இதோடு காங்கிரஸ் கட்சி தெலுங்கானாவில் ஆட்சிக்கு வந்ததும், காங்கிரஸ் அளித்திருக்கும் ஆறு வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான சட்டம் முதல் சட்டமன்ற கூட்டத்திலேயே இயற்றப்பட்டு விடும், அவை நிறைவேற்றப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
"தெலுங்கானாவில் தற்போது நில பிரதிநிதித்துவ அரசு மற்றும் மக்கள் அரசிடையேயான போட்டி நிலவி வருகிறது. உங்களது முதலமைச்சர் காங்கிரஸ் கட்சி என்ன செய்திருக்கிறது என கேட்கிறார். ஆனால், காங்கிரஸ் என்ன செய்தது என்பதை விட, கே சந்திரசேகர ராவ் என்ன செய்திருக்கிறார் என்பதே கேள்வியாக இருக்க வேண்டும்," என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
- தெலுங்கானாவில் வரும் 30-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.
- அங்கு ஆட்சியைப் பிடிக்க பிஆர்எஸ் கட்சி தீவிரமாக தேர்தல் வேலை செய்துவருகிறது.
ஐதராபாத்:
தெலுங்கானாவில் வருகிற 30-ந்தேதி சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதனால் தேசிய தலைவர்கள் தெலுங்கானாவில் சூறாவளி பிரசாரம் செய்ய இருக்கிறார்கள்.
தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை பிடிக்க பிஆர்எஸ் கட்சி தீவிரமாக தேர்தல் வேலை செய்து வருகிறது.
இந்நிலையில், ஊழலில் மூழ்கித் திளைக்கும் காங்கிரஸ் கட்சி ஊழல் பற்றி பேசலாமா? என ராகுல் காந்திக்கு முதல் மந்திரி மகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், ராகுல் காந்திக்கு வரலாறு தெரியாது, அவர் 'பப்பு'. இன்று ராகுல் காந்தி வந்திருந்த இடம், அதே நிஜாமாபாத் தான். ராகுல் காந்தியின் பெரியப்பா நேரு அவர்கள் ஆந்திரா மற்றும் தெலுங்கானா இடையே கட்டாயத் திருமணம் செய்து வைத்தார். இங்குள்ள மக்களுக்கு காங்கிரசின் வரலாறு முழுமையாக தெரியும். தெலுங்கானா வரலாறு பற்றி ராகுல் காந்திக்கு இருக்கும் அறிவிற்காக வருத்தப்படுகிறேன். இன்று ஊழல் பற்றி ராகுல் காந்தி பேசினால் மக்கள் சிரிப்பார்கள். ஏனெனில் காங்கிரஸ் கட்சி ஊழலில் மூழ்கி கிடக்கிறது என கடுமையாக சாடினார்.
- அரசியல் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
- தெலுங்கானாவின் எதிர்காலம் குறித்து அனைவருக்கும் சந்தேகம் உள்ளது.
ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலத்தில் சந்திரசேகரராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டீரிய சமீதி கட்சி ஆட்சி நடந்து வருகிறது. அம்மாநில சட்டசபை தேர்தல் வருகிற 30-ந் தேதி நடக்கிறது. அங்கு அரசியல் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, தெலுங்கானாவில் சோமாஜி குடாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உங்கள் (தெலுங்கானா மக்கள்) வாக்குகள் ஒரு எம்.எல்.ஏ. அல்லது அரசாங்கத்தின் தலைவிதியை மட்டும் தீர்மானிக்காது. தெலுங்கானா மற்றும் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். ஒவ்வொரு கட்சியின் செயல்திறனையும் ஆய்வு செய்த பின்னரே வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அனைத்து கட்சிகளையும் ஆய்வு செய்தவுடன் நீங்கள் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதாவுக்கு வாக்களிப்பீர்கள் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது.
சந்திரசேகரராவின் 10 ஆண்டு ஆட்சியை திரும்பி பார்க்கும்போது, ஒரு காலத்தில் வருவாய் உபரி மாநிலமாக இருந்து தற்போது லட்சக்கணக்கான கோடி ரூபாய் கடன் வைத்திருப்பதை காண்கிறோம்.
இங்கு இளைஞர்கள் மனமுடைந்து போயுள்ளனர். விவசாயிகள், தலித்துக்கள், பிற்படுத்தப்பட்டோர் ஏமாற்றமடைந்துள்ளனர். தெலுங்கானாவின் எதிர்காலம் குறித்து அனைவருக்கும் சந்தேகம் உள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தெலுங்கானா சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு 30-ந்தேதி நடைபெற இருக்கிறது.
- தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை பிடிக்க பிஆர்எஸ் கட்சி தீவரமாக தேர்தல் வேலை செய்து வருகிறது.
தெலுங்கானாவில் வருகிற 30-ந்தேதி சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ராஜஸ்தான் சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் நேற்றுடன் முடிவடைந்தது. இதனால் தேசிய தலைவர்கள் தெலுங்கானாவில் சூறாவளி பிரசாரம் செய்ய இருக்கிறார்கள்.
இந்த நிலையில் சந்திரசேகர ராவின் மகளும், அம்மாநில எம்.எல்.சி.யுமான கே. கவிதா கூறியதாவது:-
கடந்த 10 ஆண்டுகளாக அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி எங்களுடன் நட்பாக இருக்கிறது. நாங்கள் ஒருபோதும் கூட்டணி அமைத்தது கிடையாது. அவர்களுடன் நட்பு முறையில் அணுகுகிறோம்.
பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகளை பொறுத்தவரை, மற்ற அரசியல் கட்சி அதிகாரத்திற்கு வருவதை அவர்கள் விரும்புவதில்லை. பி.ஆர்.எஸ் கட்சியின் வளர்ச்சி நாடு முழுவதும் பெருகி வருகிறது. தெலுங்கானா மாநிலம் காரணமாக நாட்டின் ஒட்டுமொத்த அரசியல் முறையும் விவசாயிகளை பற்றி சிந்திக்க தொடங்கியது. எங்கள் வளர்ச்சியை இரு கட்சிகளாலும் ஜீரணிக்க முடியவில்லை. நாங்கள் யாருடைய பி டீம் அல்ல. நாங்கள் தெலுங்கானா மக்களுடைய அணி.
- நவம்பர் 22-ந் தேதி காலை 9 மணி முதல் நேற்று காலை 9 மணி வரை ரூ.12.16 கோடி மதிப்பிலான பணம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
- நேற்றைய நிலவரப்படி 8,574 கிலோ கஞ்சா, 479 கஞ்சா செடிகள், 30 கிலோ மஜ்ரிவாலா கலந்த சாக்லேட் பார்கள், 3 கிலோ கஞ்சா எண்ணெய் கைப்பற்றப்பட்டு உள்ளது
தெலுங்கானா சட்டமன்றத் தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் அக்டோபர் 9-ந் தேதி அறிவித்தது. அதன்படி வருகின்ற 30-ந் தேதி தெலுங்கானா சட்டமன்றத்திற்கு தேர்தல் நடைபெற உள்ளது.
அதன்படி அக்டோபர் 9-ந் தேதி முதல் தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்தது. இதையடுத்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் வாக்காளர்களுக்கு பணம் பரிசு பொருட்கள் வழங்குவது தடுக்கும் விதமாக மாநில முழுவதும் ஆங்காங்கே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
வாகன தணிக்கையின் போது 2 லட்சத்து 96 ஆயிரத்து 595 கிலோ அரிசி, 9,207 யூனிட் குக்கர்கள், 88 ஆயிரத்து 496 புடவைகள், 18,576 கடிகாரங்கள், 7 லட்சத்து 24 ஆயிரத்து 713 செல்போன்கள், 86 ஆயிரத்து 113 தையல் ஏந்திரங்கள், 86 ஆயிரத்து 115 மின்விசிறிகள், 40 டிவிக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதிகபட்சமாக நவம்பர் 22-ந் தேதி காலை 9 மணி முதல் நேற்று காலை 9 மணி வரை ரூ.12.16 கோடி மதிப்பிலான பணம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
நேற்றைய நிலவரப்படி 8,574 கிலோ கஞ்சா, 479 கஞ்சா செடிகள், 30 கிலோ மஜ்ரிவாலா கலந்த சாக்லேட் பார்கள், 3 கிலோ கஞ்சா எண்ணெய் கைப்பற்றப்பட்டு உள்ளது. போதைப் பொருட்கள் கடத்தலின் மதிப்பு ரூ.35.09 கோடியாகும். இலவச பொருட்கள் மற்றும் இதர பொருட்களின் மதிப்பு ரூ.81.18 கோடி ஆகும். மாநிலம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 87.23 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
அக்டோபர் 9-ந் தேதி முதல் நேற்று வரை ரூ 260 கோடி மதிப்பிலான ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தெலுங்கானா சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் நேற்று வரை மொத்தம் ரூ.669 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- லியோ பில்லஸ் மூலம் ஸ்லாப்கள் மற்றும் தரை வழக்கமான தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.
- கோவில் மழை, பனி, நிலநடுக்கம் என எந்த வகையான சீற்றத்தையும் தாங்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத், சித்தி பேட்டை, முருகு பள்ளியில் 3டி வடிவிலான உலகிலேயே முதன்மையான கோவில் ஒன்றை கட்டி உள்ளனர்.
இந்த தனித்துவமான அமைப்பை 3டி பிரிண்ட் எடுக்க சுமார் 3 மாதங்கள் ஆனது. 4 ஆயிரம் சதுர அடி பரப்பில் 35.5 அடி உயரம் கொண்ட 3 கோபுரங்கள் உள்ளது.
இதேபோல் விநாயகருக்கு ஒரு கருவறையும் சிவபெருமானுக்கு ஒரு கருவறையும் தாமரை வடிவில் பார்வதி தேவிக்கு ஒரு கருவறை என 3 கருவறைகள் கட்டப்பட்டுள்ளன.
இந்த கோவில் 3டி பிரின்டிங் வசதியுடன் உள்நாட்டு பொருட்கள் மற்றும் மென்பொருட்களை பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது. லியோ பில்லஸ் மூலம் ஸ்லாப்கள் மற்றும் தரை வழக்கமான தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த கோவிலை கட்டி முடிக்க 6 மாதங்கள் ஆனது.
இந்த கோவில் மழை, பனி, நிலநடுக்கம் என எந்த வகையான சீற்றத்தையும் தாங்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது என கூறினர்.
- தெலுங்கானாவில் வரும் 30-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
- பிஆர்எஸ், காங்கிரஸ், பா.ஜ.க. இடையே கடும் போட்டி நிலவுகிறது.
ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலத்தில் வரும் 30-ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. பி.ஆர்.எஸ்., காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய கட்சிகளுக்கு இடையே நேரடி போட்டி நிலவி வருகிறது.
தெலுங்கானாவில் காங்கிரசுக்கு ஆதரவு அளிப்பதாக தி.மு.க. அறிவித்துள்ளது.
இந்நிலையில், முதல் மந்திரி கே.சி.ஆர். மக்களைச் சந்திக்காமல் பண்ணை வீட்டில் முடிவுகளை எடுக்கிறார் என காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பேசுகையில், இது முக்கியமான தேர்தல். இந்த தேர்தலில் ஊழலுக்கு எதிராகப் போராடுகிறோம். நீங்கள் விரும்பிய வளர்ச்சி நடக்கவில்லை. சாலை சரியில்லை, பாசனமும் நடக்கவில்லை. ஆனால், கே.சி.ஆர். கவலைப்படவில்லை. அவர் தனது பண்ணை வீட்டில் அமர்ந்து அனைத்து முடிவுகளையும் எடுக்கிறார், மக்களைச் சந்திப்பதில்லை என தெரிவித்தார்.
- கர்நாடகா மாடல் என மற்ற மாநிலங்களில் கூறி வரும் காங்கிரஸ், உத்தரவாத திட்டங்களை நிறைவேற்றுவதில் தோல்வி.
- தெலுங்கானா மக்களை ஏமாற்றுவதற்கான 6 உத்தரவாத திட்டங்களை காங்கிரஸ் கட்சி அதன் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
தெலுங்கானாவில் வருகிற 30-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. சந்திரசேகர ராவ் தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை பிடிக்க வியூகம் வகுத்துள்ளார். அவரிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் நினைக்கிறது. இதற்கிடையே தெலுங்கானாவில் காலூன்ற பா.ஜனதா விரும்புகிறது.
மூன்று கட்சிகளின் முக்கிய தலைவர்கள் தெலுங்கானாவில் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்ததில் இருந்து, கர்நாடக மாடல் என மற்ற மாநிலங்களிலும் பிரசாரம் செய்து வருகிறது.
இந்த நிலையில் கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும், பா.ஜனதா தலைவரும்மான எடியூரப்பா தெலுங்கானாவில் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது எடியூரப்பா கூறியதாவது:-
கர்நாடகாவில் நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, ஐந்து முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் எனத் தெரிவித்த காங்கிரஸ், அதை நிறைவேற்றாமல் கர்நாடக மக்களை ஏமாற்றியுள்ளது.
கர்நாடகா மாடல் என மற்ற மாநிலங்களில் கூறி வரும் காங்கிரஸ், உத்தரவாத திட்டங்களை நிறைவேற்றுவதில் தோல்வியடைந்துள்ளது. இதன் மூலம் கர்நாடகா மக்களை ஏமாற்றியுள்ளது.
தெலுங்கானா மக்களை ஏமாற்றுவதற்கான 6 உத்தரவாத திட்டங்களை காங்கிரஸ் கட்சி அதன் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் பொய்கள் மற்றும் வெற்று வாக்குறுதிகளால் ஏமாற வேண்டாம் என தெலுங்கானா மக்களை கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
- பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
- வழக்கு பதிவு செய்து மின்வாரிய அதிகாரிகள் மற்றும் லைன் மேனை கைது செய்தனர்.
பெங்களூரு:
கடலூர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (24). இவர் பெங்களூருவில் உள்ள ஒரு பர்னிச்சர் ஷோரூமில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சவுந்தர்யா (23). இவர்களுக்கு சுவிஷா என்ற 9 மாத பெண் குழந்தை இருந்தது. இவர்கள் பெங்களூரு காடுகோடி அருகே உள்ள ஏ.கே.கோபால் காலனி என்ற பகுதியில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை கொண்டாட சந்தோஷ்குமார் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் சொந்த ஊரான கடலூருக்கு வந்தார். அங்கு தீபாவளி பண்டிகையை கொண்டாடிய அவர் பின்னர் மீண்டும் நேற்று முன்தினம் இரவு பெங்களூருவுக்கு குடும்பத்துடன் சென்றார்.
நேற்று அதிகாலை 5 மணி அளவில் அவர்கள் பெங்களூருவுக்கு சென்றனர். பின்னர் சந்தோஷ்குமார் தனது குடும்பத்துடன் சவுந்தர்யாவின் தாய் வீட்டிற்கு நடந்து சென்றார். முதலில் சவுந்தர்யா தனது குழந்தையை தூக்கிக் கொண்டு சென்றார். அவர்களை தொடர்ந்து சந்தோஷ்குமார் சென்றார்.
அப்போது அந்த பகுதியில் 11 கே.வி. திறன் கொண்ட மின் வயர் அறுந்து கிடந்தது. இதை கவனிக்காமல் சவுந்தர்யா மிதித்து விட்டார். இதில் அவரையும், அவரது குழந்தையையும் மின்சாரம் தாக்கியது. பின்னர் திடீரென அவர்களது உடலில் தீப்பற்றியது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சந்தோஷ்குமார் தனது மனைவி மற்றும் குழந்தையை காப்பாற்ற முயன்றார். ஆனால் முடியவில்லை.
இதையடுத்து மின்வாரியத்துக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பின்னர் மீட்பு குழுவினர் வந்து பார்த்தபோது மின்சாரம் தாக்கி தீ பிடித்ததில் சவுந்தர்யா தனது குழந்தையுடன் இறந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் பற்றி தெரிய வந்ததும் கர்நாடக மாநில எரிசக்தி துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ், லைன்மேன் மஞ்சுநாத், உதவி பொறியாளர் சேத்தன், உதவி செயற்பொறியாளர் ராஜண்ணா ஆகிய 3 பேரையும் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார். மேலும் பலியான சவுந்தர்யாவின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அறிவித்தார். மேலும் இதுதொடர்பாக காடுகோடு போலீசார் மின்வாரியத்தினர் மீது அலட்சியத்தால் மரணம் விளைவித்ததாக வழக்கு பதிவு செய்து மின்வாரிய அதிகாரிகள் மற்றும் லைன் மேனை கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இதுகுறித்து சவுந்தர்யாவின் கணவர் சந்தோஷ்குமார் கூறியதாவது:-
தீபாவளி பண்டிகை முடிந்து சொந்த ஊரில் இருந்து நேற்று காலை தான் பெங்களூரு வந்தோம். அதிகாலை 5 மணி அளவில் நாங்கள் சவுந்தர்யாவின் தாய் வீட்டிற்கு நடந்து சென்றோம். அப்போது பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. முதலில் எனது மனைவியும், குழந்தையும் சென்றனர். அவர்களை பின்தொடர்ந்து நான் சென்றேன். அப்போது அறுந்து கிடந்த மின் கம்பியை பனிப்பொழிவின் காரணமாக கவனிக்காமல் எனது மனைவி மிதித்தார். இதில் தூக்கிவீசப்பட்டதில் என் கண்முன்னே எனது மனைவியும், குழந்தையும் தீப்பிடித்து இறந்து விட்டனர். பெங்களூரு போன்ற சாப்ட்வேர் நிறுவனங்கள் நிறைந்த பெரு நகரங்களில் மின்சார கம்பிகள் அறுந்து கிடக்கும் என்று ஒருபோதும் நான் நினைக்கவில்லை என்று உருக்கமாக கூறினார்.
மின்வாரியத்தின் அலட்சியத்தை கண்டித்து நேற்று மதியம் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அப்போது இந்த விவகாரம் குறித்து எரிசக்தி துறை அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் வீட்டு முன்பு போராட்டம் நடத்துவோம் என்று அறிவித்தனர். மேலும் இதுகுறித்து அவர்கள் கூறும்போது, 11 கே.வி. திறன் கொண்ட மின் வயர் அதிகாலை 1.30 மணி முதல் அறுந்து கிடந்துள்ளது. இதுகுறித்து எந்த வித முன் எச்சரிக்கையும் செய்யாமல் மின்சார துறையினர் அலட்சியத்துடன் செயல்பட்டுள்ளனர் என்றும் குற்றம் சாட்டினர்.
- பா.ஜ.கவுடன் ரகசிய தொடர்பு வைத்துள்ள சந்திரசேகரராவ் கட்சி அரசை தூக்கி எறியுங்கள்.
- மக்கள் காங்கிரஸ் கட்சியை தேர்ந்தெடுக்க வேண்டும். தெலுங்கானாவில் சந்திரசேகரராவ் அரசு முழுமையாக தோல்வியடைந்துவிட்டது.
தெலுங்கானா மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று பிரசாரம் செய்தார்.
அப்போது ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தில் ஆஸ்கார் விருது பெற்ற நாட்டு பாடல் பாடினார். அதில் வருவது போல் தெலுங்கானாவில் ரகசிய தொடர்பு உள்ளது என கூறினார்.
தெலுங்கானா மாநிலத்தில் பா.ஜ.க, சந்திரசேகரராவின் பிஆர்எஸ் மற்றும் ஒவைசி கட்சிகள் ஒரு கூட்டணியாக செயல்பட்டு வருகின்றன.
நாட்டு நாட்டு பாடலைப் போல் அவர்களுக்குள் ரகசிய தொடர்பு உள்ளது. நாட்டு நாட்டு பாடலை ரசியுங்கள். ஆனால் பா.ஜ.கவுடன் ரகசிய தொடர்பு வைத்துள்ள சந்திரசேகரராவ் கட்சி அரசை தூக்கி எறியுங்கள்.
பாராளுமன்றத்தில் பல்வேறு முக்கிய விவகாரங்களில் பா.ஜ.கவுக்கு ஆதரவாக சந்திரசேகர ராவ் கட்சி செயல்பட்டுள்ளது. அந்த கட்சிகள் இடையே ரகசிய கூட்டணி உள்ளதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
சந்திரசேகர ராவ் கட்சி மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. அவர்களை எந்த விசாரணை அமைப்பும் விசாரிக்க பிரதமர் அனுமதிக்க மாட்டார். மேலும் தெலுங்கானாவில் நடைபெறும் ஊழல்கள் குறித்து ஒரு வார்த்தை கூட பிரதமர் பேசமாட்டார்.
அதே நேரத்தில் தவறுகள் எதுவும் செய்யாத காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் பிற எதிர்க்கட்சியினர் மீது விசாரணை அமைப்புகளை பிரதமர் ஏவி விடுவார், ரகசிய கூட்டணியில் அங்கம் வகிக்கும் மற்றொரு கட்சியைச் சேர்ந்த அசாதுதீன் ஒவைசி வட மாநிலங்கள் வரை வந்து தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்துவார்.
ஆனால் தெலுங்கானாவில் 19 தொகுதிகளுக்கு மேல் போட்டியிடமாட்டார் .
ஏனென்றால் தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் கட்சியை ஆதரிக்கிறார் .நீங்கள் அந்த 3 கட்சிகளில் எதற்கு வாக்களித்தாலும் அவர்கள் தங்களை பலப்படுத்திக் கொள்வார்கள்.
எனவே மக்கள் காங்கிரஸ் கட்சியை தேர்ந்தெடுக்க வேண்டும். தெலுங்கானாவில் சந்திரசேகரராவ் அரசு முழுமையாக தோல்வியடைந்து விட்டது.
அவரால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தர முடியவில்லை.
அவரது குடும்பத்தில் உள்ளவர்களுக்காக அரசியல் அதிகாரத்தை பெறுவது பகிர்ந்து அளிப்பதில் தான் அவரது கவனம் உள்ளது.
இனி அவர்களுக்கு ஓய்வு கொடுங்கள் மாநிலத்திற்கு நன்மை வேண்டுமென்றால் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து வாக்களியுங்கள். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 2 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவோம்.
மேலும் தெலுங்கானா போராட்டத்தின் போது உயிரிழந்த குடும்பத்தினர் ஒருவருக்கு வேலை வழங்குவோம். மக்களுக்காக அளித்த வாக்குகளை நிறைவேற்ற காங்கிரஸ் தயாராக உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
- கடந்த சட்டசபை தேர்தவில் 19 காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
- நான் காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது 2018 மற்றும் 2019 தேர்தலில் நான் போட்டியிடவில்லை.
ஐதராபாத்:
தென்னிந்திய சினிமாக்களில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் நடிகை விஜயசாந்தி. பாரதிய ஜனதாவில் தனது அரசியல் பயணத்தை தொடங்கிய இவர், பின்பு அம்மா தெலுங்கானா என்ற பெயரில தனிக்கட்சியை தொடங்கினார்.
அதன்பிறகு தனது கட்சியை தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியுடன் இணைத்துக்கொண்டார். பின்பு கடந்த 2014-ம் ஆண்டு அந்த கட்சியில் இருந்து வெளியேறிய நடிகை விஜயசாந்தி, காங்கிரசில் சேர்ந்தார். காங்கிரசில் தொடர்ந்து கட்சி பணியாற்றி வந்த அவர், கடந்த 2020-ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் மீண்டும் இணைந்தார்.
அதில் தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்த வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகி மீண்டும் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். காங்கிரசில் அவர் தேர்தல் பிரசார குழு தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் நடிகை விஜயசாந்தி காங்கிரசுக்கு சென்றிருப்பது, பாரதிய ஜனதா கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகி மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தது குறித்து நடிகை விஜயசாந்தி கூறியிருப்பதாவது:-
எனது அரசியல் தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவுக்கு எதிரான போராட்டம். ஆனால் பாரதிய ஜனதாவும், பி.ஆர்.எஸ்.(பாரத் ராஷ்டிர சமிதி)-ம் ரகசிய உறவில் உள்ளனர். அதனால் தான் சந்திரசேகரராவ் ஊழல் செய்ததற்கான ஆதாரங்கள் இருந்தும், மத்திய அரசு அவரிடம் விசாரணை கூட நடத்தவில்லை.
இப்போது அவருக்கு எதிராக கடுமையாக போராடுவது காங்கிரஸ் மட்டும் தான். அதனால் தான் காங்கிரசில் சேர்ந்துள்ளேன். கடந்த சட்டசபை தேர்தவில் 19 காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். 2019-ல் அவர்களில் 12 பேர் பி.ஆர்.எஸ்.-ல் சேர்ந்தனர்.
அப்போது சந்திரசேகர ராவுக்கு எதிராக காங்கிரசால் போராட முடியாது என்பது தெரிந்ததால், பாரதிய ஜனதாவில் சேர்ந்தேன். தற்போது ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்கிரஸ் பலமாக போராடி வருகிறது.
நான் காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது 2018 மற்றும் 2019 தேர்தலில் நான் போட்டியிடவில்லை. வருகிற லோக்சபா தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து கட்சி தான் முடிவு செய்யும். சந்திரசேகரராவ் என்னை பின்தொடர்ந்து அழிக்க பார்க்கிறார்.
இவ்வாறு நடிகை விஜயசாந்தி கூறியிருக்கிறார்.






