என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "3டி கோவில்"

    • அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ரோபோக்கள் உதவியுடன் கோவில் வடிவமைக்கப்பட்டு வருகிறது.
    • உள்நாட்டில் உருவாக்கப்பட்ட பொருட்களை கொண்டு கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், சித்திபேட்டை மண்டலம், புருகுபள்ளி டவுன்ஷிப் வளாகத்தில் 3,800 சதுர அடி பரப்பளவில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் 3டி பிரிண்டிங் கோவில் கட்டப்பட்டு வருகிறது.

    இந்த கோவில் வளாகத்தில் 30 அடி உயரத்தில் விநாயகர், சிவன், பார்வதிக்கு 3 பகுதிகளாக மிகப்பெரிய அளவில் தனித்தனியாக சன்னதிகள் கட்டப்பட்டு வருகின்றன.

    ஐதராபாத்தை சேர்ந்த அப்சுஜா இன்ப்ராடெக் நிறுவனத்தின் மேற்பார்வையில் சிம்ப்ளி போர்ஸ் கிரியேஷன் நிறுவனத்துடன் இணைந்து கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.

    அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ரோபோக்கள் உதவியுடன் கோவில் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

    தற்போது விநாயகர், சிவன் கோவில்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இன்னும் சில நாட்களில் பார்வதி தேவி கோவில் கட்டி முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    உள்நாட்டில் உருவாக்கப்பட்ட பொருட்களை கொண்டு கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இது உலகிலேயே முதல் மிகப்பெரிய அளவில் 3டி கோவில் என தெரிவித்தனர்.

    • லியோ பில்லஸ் மூலம் ஸ்லாப்கள் மற்றும் தரை வழக்கமான தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.
    • கோவில் மழை, பனி, நிலநடுக்கம் என எந்த வகையான சீற்றத்தையும் தாங்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், ஐதராபாத், சித்தி பேட்டை, முருகு பள்ளியில் 3டி வடிவிலான உலகிலேயே முதன்மையான கோவில் ஒன்றை கட்டி உள்ளனர்.

    இந்த தனித்துவமான அமைப்பை 3டி பிரிண்ட் எடுக்க சுமார் 3 மாதங்கள் ஆனது. 4 ஆயிரம் சதுர அடி பரப்பில் 35.5 அடி உயரம் கொண்ட 3 கோபுரங்கள் உள்ளது.

    இதேபோல் விநாயகருக்கு ஒரு கருவறையும் சிவபெருமானுக்கு ஒரு கருவறையும் தாமரை வடிவில் பார்வதி தேவிக்கு ஒரு கருவறை என 3 கருவறைகள் கட்டப்பட்டுள்ளன.

    இந்த கோவில் 3டி பிரின்டிங் வசதியுடன் உள்நாட்டு பொருட்கள் மற்றும் மென்பொருட்களை பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது. லியோ பில்லஸ் மூலம் ஸ்லாப்கள் மற்றும் தரை வழக்கமான தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த கோவிலை கட்டி முடிக்க 6 மாதங்கள் ஆனது.

    இந்த கோவில் மழை, பனி, நிலநடுக்கம் என எந்த வகையான சீற்றத்தையும் தாங்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது என கூறினர். 

    ×