search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Telangana campaign"

    • ஊழல் நிறைந்த அரசை சந்திரசேகர ராவ் நடத்துகிறார்.
    • சந்திரசேகர ராவ் அரசு திருடிய பணத்தின் தொகை ஏழைகளின் வங்கி கணக்கிற்கு மாற்றப்படும்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி முகாமிட்டு தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.

    அவர் சங்கரெட்டியில் பேரணியாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது மூதாட்டி ஒருவர் ராகுல் காந்தியிடம் வந்து தான் தீவிர காங்கிரஸ் தொண்டர் என அறிமுகம் செய்தார்.

    மேலும் பல ஆண்டுகளுக்கு முன்பு இந்திரா காந்தி பற்றி எழுதிய பாடலை ராகுல் காந்தி முன்பு பாடி காட்டி அசத்தினார்.

    இதனைக் கண்டு வியந்த ராகுல் காந்தி தனது பாட்டிக்கு அர்ப்பணிக்கப்பட்ட பாடலை தொடர்ந்து பாடுமாறு மூதாட்டியை ஊக்குவித்தார்.

    இந்த சம்பவம் ராகுல் காந்தி பேரணியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    தொடர்ந்து அண்டோலில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் ராகுல் காந்தி பேசியதாவது:-

    நான் தெலுங்கானா மாநிலத்தில் இளைஞர்களை அதிக அளவில் சந்தித்தேன். அவர்கள் தேர்வுக்கான பயிற்சிக்காக அதிக பணம் செலவு செய்கிறார்கள்.

    ஒவ்வொரு முறையும் பி ஆர் எஸ் அரசு வினாத்தாள் கசிவில் ஈடுபடுகிறது. மாநிலத்தில் 8000 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். நாட்டிலேயே மிகவும் ஊழல் நிறைந்த அரசை சந்திரசேகர ராவ் நடத்துகிறார்.

    இது பிரபுத்துவ அரசாங்கமாக செயல்படுகிறது. தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். சந்திரசேகர ராவ் அரசு திருடிய பணத்தின் தொகை ஏழைகளின் வங்கி கணக்கிற்கு மாற்றப்படும். தெலுங்கானா போராட்டத்தில் உயிரிழவர்களின் குடும்பத்திற்கு 250 சதுர அடி நிலத்தை காங்கிரஸ் வழங்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.






    • கொல்லப்பூர் சட்டமன்ற தொகுதியில் சிரிஷா போட்டியிடுகிறார்.
    • எதிர்க்கட்சிகள் அவருக்கு நிதி உதவி செய்வதாக ஆளும் கட்சி குற்றம் சாட்டி உள்ளது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், மஹபூப் நகரை சேர்ந்தவர் சிரிஷா என்ற பரெலக்கா. பட்டதாரி பெண்ணான இவர் எருமை மாடுகளை வளர்த்து வருகிறார்.

    சில மாதங்களுக்கு முன்பு சிரிஷா தான் வளர்த்து வரும் மாடுகளுக்கு மத்தியில் வீடியோ எடுத்து, எருமை மாடுகளால் எப்படி வருமானம் கிடைக்கிறது, தன்னால் எப்படி படிப்பை தொடர முடிகிறது என விவரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.

    ஆயிரகணக்கான வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் சிரிஷாவின் வீடியோவை பார்த்து அவருடன் சமூக வலைத்தளத்தில் இணைந்தனர்.

    இந்த நிலையில் கொல்லப்பூர் சட்டமன்ற தொகுதியில் சிரிஷா போட்டியிடுகிறார். மனு தாக்கல் செய்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    முதலில் சிரிஷாவின் தேர்தல் பிரசாரத்தை கண்டு ஆளும் மற்றும் எதிர்க்கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் அலட்சியம் காட்டினர்.

    நாளுக்கு நாள் சிரிஷாவிற்கு சமூக வலைதளங்களில் ஆதரவு பெருகி வந்தது. ஆதரவு பெருகி வருவதால் அவரை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்கள் அதிர்ச்சி அடைந்து தூக்கத்தை தொலைத்தனர்.

    தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்த சிரிஷா மற்றும் அவரது சகோதரரை சரமாரியாக தாக்கினர். சிரிஷா ரத்த காயங்களுடன் கதறி அழும் வீடியோ சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இதனால் மேலும் அவருக்கு ஆதரவு பெருகியது.

    தனக்கு அரசியல் கட்சிகளால் ஆபத்து உள்ளதாக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு பெற்றார்.

    பல்வேறு தரப்பில் இருந்து சிரிசாவுக்கு ஆதரவு குவிந்து வரும் நிலையில் எதிர்க்கட்சிகள் அவருக்கு நிதி உதவி செய்வதாக ஆளும் கட்சி குற்றம் சாட்டி உள்ளது.

    தற்போது சிரிஷாவிற்கு சமூக வலைத்தளங்களில் சமூக ஆர்வலர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர்.

    அவருக்கு மவுசு அதிகரித்து வருகிறது. அவரை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

    • பாரதிய ஜனதா வேட்பாளர்கள் கடவுளால் தேர்வு செய்யப்பட்டவர்கள்.
    • புலனாய்வு அமைப்புகளை தவறாக பயன்படுத்துவது வெளிப்படையாக தெரிகிறது.

    சென்னை:

    தெலுங்கானாவில் வருகிற 30-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்தநிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் கூறி இருப்பதாவது-

    மத்திய புலனாய்வு அமைப்புகளை ஆளும் பாரதிய ஜனதா தனது சாதகத்திற்கு பயன்படுத்தி கொள்கிறது. இத்தகைய அமைப்பினர் தெலுங்கானாவில் குறைந்தது 4 காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்தல் பிரசாரத்தின் போது விசாரணைக்கு அழைத்ததுடன், அவர்களின் வீடுகளில் சோதனை நடத்தி உள்ளனர். ஆனால் இதுவரை பா.ஜனதா வேட்பாளர் யாரையும் புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த வில்லை. இதன்மூலம் புலனாய்வு அமைப்புகளை தவறாக பயன்படுத்துவது வெளிப்படையாக தெரிகிறது.

    பாரதியஜனதா வேட்பாளர்கள் கடவுளால் தேர்வு செய்யப்பட்டவர்கள். அவர்களுக்கு தெய்வ ஆசீர்வாதம் உண்டு. ஒரு வேளை பாரதியஜனதா ஆட்சி அமைந்தால் தெலுங்கானா மக்களை அவர்கள் நேரடியாக சொர்க்கத்துக்கு கூட அழைத்து செல்வார்கள்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • அரசியல் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • தெலுங்கானாவின் எதிர்காலம் குறித்து அனைவருக்கும் சந்தேகம் உள்ளது.

    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தில் சந்திரசேகரராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டீரிய சமீதி கட்சி ஆட்சி நடந்து வருகிறது. அம்மாநில சட்டசபை தேர்தல் வருகிற 30-ந் தேதி நடக்கிறது. அங்கு அரசியல் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, தெலுங்கானாவில் சோமாஜி குடாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    உங்கள் (தெலுங்கானா மக்கள்) வாக்குகள் ஒரு எம்.எல்.ஏ. அல்லது அரசாங்கத்தின் தலைவிதியை மட்டும் தீர்மானிக்காது. தெலுங்கானா மற்றும் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். ஒவ்வொரு கட்சியின் செயல்திறனையும் ஆய்வு செய்த பின்னரே வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அனைத்து கட்சிகளையும் ஆய்வு செய்தவுடன் நீங்கள் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதாவுக்கு வாக்களிப்பீர்கள் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது.

    சந்திரசேகரராவின் 10 ஆண்டு ஆட்சியை திரும்பி பார்க்கும்போது, ஒரு காலத்தில் வருவாய் உபரி மாநிலமாக இருந்து தற்போது லட்சக்கணக்கான கோடி ரூபாய் கடன் வைத்திருப்பதை காண்கிறோம்.

    இங்கு இளைஞர்கள் மனமுடைந்து போயுள்ளனர். விவசாயிகள், தலித்துக்கள், பிற்படுத்தப்பட்டோர் ஏமாற்றமடைந்துள்ளனர். தெலுங்கானாவின் எதிர்காலம் குறித்து அனைவருக்கும் சந்தேகம் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×