search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தெலுங்கானா சட்டமன்ற தேர்தல்: ரூ.669 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்
    X

    தெலுங்கானா சட்டமன்ற தேர்தல்: ரூ.669 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்

    • நவம்பர் 22-ந் தேதி காலை 9 மணி முதல் நேற்று காலை 9 மணி வரை ரூ.12.16 கோடி மதிப்பிலான பணம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
    • நேற்றைய நிலவரப்படி 8,574 கிலோ கஞ்சா, 479 கஞ்சா செடிகள், 30 கிலோ மஜ்ரிவாலா கலந்த சாக்லேட் பார்கள், 3 கிலோ கஞ்சா எண்ணெய் கைப்பற்றப்பட்டு உள்ளது

    தெலுங்கானா சட்டமன்றத் தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் அக்டோபர் 9-ந் தேதி அறிவித்தது. அதன்படி வருகின்ற 30-ந் தேதி தெலுங்கானா சட்டமன்றத்திற்கு தேர்தல் நடைபெற உள்ளது.

    அதன்படி அக்டோபர் 9-ந் தேதி முதல் தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்தது. இதையடுத்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் வாக்காளர்களுக்கு பணம் பரிசு பொருட்கள் வழங்குவது தடுக்கும் விதமாக மாநில முழுவதும் ஆங்காங்கே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

    வாகன தணிக்கையின் போது 2 லட்சத்து 96 ஆயிரத்து 595 கிலோ அரிசி, 9,207 யூனிட் குக்கர்கள், 88 ஆயிரத்து 496 புடவைகள், 18,576 கடிகாரங்கள், 7 லட்சத்து 24 ஆயிரத்து 713 செல்போன்கள், 86 ஆயிரத்து 113 தையல் ஏந்திரங்கள், 86 ஆயிரத்து 115 மின்விசிறிகள், 40 டிவிக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    அதிகபட்சமாக நவம்பர் 22-ந் தேதி காலை 9 மணி முதல் நேற்று காலை 9 மணி வரை ரூ.12.16 கோடி மதிப்பிலான பணம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    நேற்றைய நிலவரப்படி 8,574 கிலோ கஞ்சா, 479 கஞ்சா செடிகள், 30 கிலோ மஜ்ரிவாலா கலந்த சாக்லேட் பார்கள், 3 கிலோ கஞ்சா எண்ணெய் கைப்பற்றப்பட்டு உள்ளது. போதைப் பொருட்கள் கடத்தலின் மதிப்பு ரூ.35.09 கோடியாகும். இலவச பொருட்கள் மற்றும் இதர பொருட்களின் மதிப்பு ரூ.81.18 கோடி ஆகும். மாநிலம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 87.23 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    அக்டோபர் 9-ந் தேதி முதல் நேற்று வரை ரூ 260 கோடி மதிப்பிலான ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தெலுங்கானா சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் நேற்று வரை மொத்தம் ரூ.669 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×