என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • ஒட்டப்பிடாரத்தில் வட்டார கல்வி அலுவலக கட்டிடம் கட்ட ஊரக வளர்ச்சி துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
    • நடப்பாண்டு கூடுதலாக ரூ.1000 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பள்ளி மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.

    சென்னை:

    சட்டப்பேரவையில் கேள்விநேரத்தின் போது ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம். சி.சண்முகையா ஒட்டப்பிடாரத்தில் வட்டார கல்வி அலுவலக கட்டிடம் கட்ட அரசு முன்வருமா? என கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:-

    தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் வட்டார கல்வி அலுவலக கட்டிடம் கட்ட ஊரக வளர்ச்சி துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும், பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளுக்கும் தேவையான வசதிகள் செய்யப்படும்.

    ரூ.7500 கோடியில் 16 ஆயிரம் புதிய வகுப்பறைகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. அதில் ரூ. 2,487 கோடியில் ஸ்மார்ட் வகுப்பறைகள், பள்ளி சுற்றுச்சுவர், ஆய்வகங்கள் உள்பட 3603 வகுப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

    3,601 வகுப்பறைகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. நடப்பாண்டு கூடுதலாக ரூ.1000 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பள்ளி மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அதிமுக ஆட்சியில் எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை ஒருவாரம் சஸ்பெண்ட் செய்தனர்.
    • யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் எந்த பொறுப்பில் இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் கூறியுள்ளார்.

    சென்னை:

    சட்டசபை வளாகத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * சட்டசபையை முடக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி நினைக்கிறார்.

    * கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக பேச வாய்ப்பு மறுக்கப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி கூறியது அப்பட்டமான பொய்.

    * அதிமுக ஆட்சியில் எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை ஒருவாரம் சஸ்பெண்ட் செய்தனர்.

    * யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் எந்த பொறுப்பில் இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் கூறியுள்ளார்.

    * கள்ளச்சாராய விவகாரத்தில் திமுக அரசு உண்மையை மறைக்கவில்லை.

    * பாராளுமன்ற தேர்தலில் 40-க்கு 40 தொகுதிகளிலும் தோல்வி அடைந்ததால் சபையை முடக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார்.

    * கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு அவசியம் ஏற்படவில்லை. உரிய முறையில் சிபிசிஐடி விசாரித்து வருகிறது.

    * சாத்தான்குளம் விவகாரத்தில் அப்போதைய முதல்வரே உண்மையை மறைத்தார். நாங்கள் இப்போது எதையும் மறைக்கவில்லை.

    * நாங்கள் ஏன் கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு துணைபோக வேண்டும்? அதனால் எங்களுக்கு என்ன ஆதாயம்?

    * கள்ளச்சாராயத்தை தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மெத்தனால் கலவையால் தான் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

    * கள்ளுக்கடைகளை தற்போது திறக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அவசியம் ஏற்பட்டால் பின்னர் பார்க்கலாம்.

    * டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்றது பற்றி தகவல் தெரிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நெல்லையப்பர் கோவில் தேர் 28-28 அகலம் மற்றும் 80 அடி உயரம் கொண்ட தேர்.
    • அனைத்து தேர்களுக்கும் இணைப்பு பகுதியில் இணைப்புச் சங்கிலி இருக்கும்.

    சென்னை:

    சட்டசபையில் வினாக்கள் விடைகள் நேரத்தில் பேசிய அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியதாவது:-

    நெல்லையப்பர் கோவில் தேர் 28-28 அகலம் மற்றும் 80 அடி உயரம் கொண்ட தேர். நேற்று தேர்வடத்தை நெம்புகோல் தருவதற்கு முன்னதாக பக்தர்கள் பக்தி பரவசத்தில் ஒரே நேரத்தில் இழுத்ததன் காரணமாகவே தேர்வடம் அருந்தது. மாறாக திருச்செந்தூரில் தேர்வடம் தயாராக இருந்த நிலையில் அதனை இணைத்து 9:30 மணியளவில் வெற்றிகரமாக 5 சுவாமிகள் ஊர்வலம் எடுத்துச்செல்லப்பட்டது.

    மேலும், அனைத்து தேர்களுக்கும் இணைப்பு பகுதியில் இணைப்புச் சங்கிலி இருக்கும். நெல்லையப்பர் தேர் 450 டன் கொண்ட தேர். அதற்கான வடம் கயிறால் கட்டினால் தான் இழுக்க முடியும். அதுமட்டுமின்றி அதிக எடை கொண்ட தேருக்கு கயிறினால் தான் வடம் அமைக்கப்படும்.

    இவ்வாறு அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார்.

    • குட்கா, போதை பாக்குகள் மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
    • போதை புகையிலை பொருட்கள் கடத்தி வந்த புனாமா ராம் சவுத்ரியை போலீசார் கைது செய்தனர்.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் டோல்கேட் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையில் எஸ்.எஸ்.ஐ. கருப்புசாமி உள்ளிட்ட பெருந்துறை போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்பொழுது அந்த வழியாக திருப்பூர் நோக்கி வந்த ஒரு சொகுசு காரை போலீ சார் மடக்கி நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த காரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, போதை பாக்குகள் மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது குறித்து காரை ஓட்டி வந்தவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    இதில் அவர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த புனாமா ராம் சவுத்ரி (வயது 39) என்பதும், தற்போது இவர் திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் தங்கி இருப்பதும் தெரிய வந்தது. மேலும் அவர் அவினாசி, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மளிகை கடைகள், பெட்டி கடைகளுக்கு நேரடியாக போதை புகையிலை மற்றும் போதை பாக்கு பொட்டலங்களை விநியோகம் செய்து வருவதை தொழிலாக வைத்திருப்பதும் தெரிய வந்தது.

    இதையடுத்து அவர் கொண்டு வந்த 400 கிலோ எடையுள்ள ரூ.3.22 லட்சம் மதிப்புள்ள குட்கா மற்றும் போதை புகையிலை பொருட்களையும், காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் போதை புகையிலை பொருட்கள் கடத்தி வந்த புனாமா ராம் சவுத்ரியை போலீசார் கைது செய்தனர்.

    இதை தொடர்ந்து பெருந்துறை போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • கள்ளச்சாராய விவகாரம் தெரிந்த உடன் 24 மணிநேரத்தில் முதலமைச்சர் சிறப்பாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்துள்ளார்.
    • சாராய வியாபாரி கண்ணுக்குட்டி தி.மு.க. பிரமுகர் இல்லை.

    சென்னை:

    கள்ளச்சாராய விவகாரத்தில் தொடர்புள்ளதாக தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான உதயசூரியன் மற்றும் வசந்தம் கார்த்திகேயன் மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

    இந்நிலையில், சட்டசபை வளாகத்திற்கு வெளியே தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான உதயசூரியன் மற்றும் வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    * உண்மைக்கு மாறானவற்றை கூறும் ராமதாஸ், அன்புமணி ராமதாசுக்கு கண்டனம்.

    * கள்ளச்சாராய விவகாரம் தெரிந்த உடன் 24 மணிநேரத்தில் முதலமைச்சர் சிறப்பாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்துள்ளார்.

    * கள்ளச்சாராயம் குடித்து பலியோனோரின் குடும்பத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறார் அன்புமணி ராமதாஸ்.

    * இறந்தவர்கள் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறாமல் அங்கு சென்றும் மலிவான அரசியல் செய்கிறார் அன்புமணி.

    * எங்கள் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் நாங்கள் அரசியலில் இருந்து விலக தயார். அதேபோல் அவர்கள் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க தவறினால் பொது வாழ்க்கையில் இருந்து விலகுவார்களா?

    * சாராய வியாபாரி கண்ணுக்குட்டி தி.மு.க. பிரமுகர் இல்லை. வீட்டில் தி.மு.க. ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தால் கண்ணுக்குட்டி தி.மு.க பிரமுகராகிவிடுவாரா?

    * ராமதாஸ், அன்புமணி மீது மானநஷ்ட வழக்கு தொடருவோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • புதுவை மாநிலம் நல்லவாடு பகுதி கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
    • போலீசார், தாழங்குடா மீனவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    கடலூர்:

    கடலூர் தாழங்குடாவை சேர்ந்த மீனவர்கள் சஞ்சய் குமார், இளம் பரிதி, வடிவேல், கனகராஜ் ஆகியோர் பைபர் படகில் மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் புதுவை மாநிலம் நல்லவாடு பகுதி கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது மற்றொரு படகில் 4 பேர் இவர்களது படகு அருகில் வந்தனர். பின்னர் தாழங்குடா மீனவர்களிடம் குடிநீர் வேண்டும் என கேட்டு, தாங்கள் கொண்டு வந்த காலி பாட்டிலை வழங்கினார்கள். மேலும், நீங்கள் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என கேட்டனர். நாங்கள் தாழங்குடாவை சேர்ந்த மீனவர்கள் என பதில் கூறிவிட்டு, பாட்டிலில் நீரை நிரப்பி கொண்டிருந்தனர்.

    இதனை கேட்டு ஆத்திரமடைந்த 4 பேரும், நாங்கள் புதுவை மாநிலம் வீராம்பட்டினம் மீனவர்கள், இந்த பகுதியில் வந்து நீங்கள் ஏன் மீன்பிடிக்கிறீர்கள்? மீன்பிடிப்பதற்கு யார்? உங்களுக்கு அனுமதி அளித்தனர்? உங்கள் படகை சிறை பிடித்து எங்கள் ஊருக்கு இழுத்து செல்ல போகிறோம் என கூறினர். அப்போது திடீரென்று அவர்களிடமிருந்த கயிறை தாழங்குடா மீனவர்களின் படகில் கட்டினார்கள்.

    இதனால் அதிர்ச்சியடைந்த தாழங்குடா மீனவர்கள், எங்கள் படகில் எதற்கு கயிறு கட்டுகிறீர்கள்? கடலில் மீன் பிடிப்பதற்கு யாரிடம் அனுமதி கேட்க வேண்டும் என கேட்டனர். அப்போது வீராம்பட்டினம் மீனவர்கள் சஞ்சய்குமாரை தாக்கினர். இதில் சஞ்சய் குமார் பலத்த காயமடைந்தார். மேலும், தாழங்குடா மீனவர்களின் படகில் இருந்த மீன்களை பறித்தனர்.

    இதனால் அதிர்ச்சிடைந்த தாழங்குடா மீனவர்கள், தங்கள் படகில் கட்டப்பட்டிருந்த கயிறை அறுத்து விட்டு, பின்னர் அங்கிருந்து படகில் தப்பி கடலூர் பகுதிக்கு வந்தனர். பலத்த காயமடைந்த சஞ்சய்குமாரை கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இத்தகவல் அறிந்த போலீசார், தாழங்குடா மீனவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும், இதில் சம்மந்தப்பட்ட வீராம்பட்டினம் மீனவர்கள் யார்? என்பது குறித்து கடலூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • அரசியல் தலைவர்கள் மற்றும் திரைபிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    • பொதுவாழ்வில் இணைந்துள்ள விஜய், பூரண நலனுடன் பல்லாண்டு மக்கள் சேவை புரிய வாழ்த்துகிறேன்.

    சென்னை :

    நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் இன்று தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் திரைபிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் விஜய்-க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தமிழ்த் திரையுலகத்தின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான அன்புச் சகோதரர் விஜய்க்கு எனது இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

    பொதுவாழ்வில் இணைந்துள்ள விஜய், பூரண நலனுடன் பல்லாண்டு மக்கள் சேவை புரிய வாழ்த்துகிறேன் என கூறியுள்ளார்.


    • மக்களின் உயிர் மீது முதல்வருக்கு அக்கறை இல்லை.
    • தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம், கஞ்சா விற்பனை முற்றிலுமாக பரவி இருக்கிறது.

    ஊட்டி:

    மத்திய தகவல் ஒளிபரப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரத்துறை இணை மந்திரி எல்.முருகன் நீலகிரி மாவட்டத்திற்கு வந்தார்.

    அவருக்கு பா.ஜ.க மற்றும் கூட்டணி கட்சியினர் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தி.மு.க அரசின் நிர்வாக சீர்கேடு காரணமாக இன்றைக்கு கள்ளக்குறிச்சியில் 50க்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை பலி கொடுத்திருக்கிறது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் நடந்து 2 நாட்களை கடந்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்னும் மக்களை வந்து பார்க்கவில்லை. மக்களின் உயிர் மீது முதல்வருக்கு அக்கறை இல்லை.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள்ளச்சாராய விவகாரத்தில் நேரடியாக பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அமைச்சர் முத்துசாமி ராஜினாமா செய்ய வேண்டும்.

    கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த முடியாத செயலிழந்த அரசாக, இந்த தி.மு.க அரசாங்கம் இருந்து கொண்டிருக்கிறது.

    கள்ளச்சாராயம் விற்பனை செய்த குற்றவாளிகளின் வீடுகளில் தி.மு.க.வைச் சேர்ந்தவர்களின் படங்கள் தான் இடம்பெற்றுள்ளது. இதனால் இக்குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம், கஞ்சா விற்பனை முற்றிலுமாக பரவி இருக்கிறது. தி.மு.க அரசு மக்களை போதைப் பொருட்களால் அழித்துக் கொண்டிருக்கிறது. கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக ஜனநாயக முறைப்படி சட்டசபையில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பும்போதும், அதற்கு பதிலளிக்க தி.மு.க.வினர் தயக்கம் காட்டி வருகின்றனர்.

    இதனால் வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.விற்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும். வருகிற உள்ளாட்சி தேர்தல், சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெறுவோம் என நம்பிக்கையாக இருக்க வேண்டும். அதற்காக தற்போது இருந்தே வேலைகளை தொடங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • 8, சிங்காரப்பேட்டையில் 9, மத்தூரில் 2, சாமல்பட்டியில் 1 கடைகள் என மொத்தம், 26 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
    • குட்கா விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

    சிங்காரப்பேட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை போலீஸ் உட்கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை விற்ற 26 கடைகளுக்கு நேற்று சீல் வைக்கப்பட்டது.

    ஊத்தங்கரை போலீஸ் டி.எஸ்.பி., பார்த்திபன் தலைமையில், போலீசார் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுடன் இணைந்து, ஊத்தங்கரையில் 6 கடைகளும், கல்லாவியில் 8, சிங்காரப்பேட்டையில் 9, மத்தூரில் 2, சாமல்பட்டியில் 1 கடைகள் என மொத்தம், 26 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

    இதில், உணவு பாதுகாப்பு துறை ஆய்வாளர்கள் முத்துக்குமார், முத்து மாரியப்பன், ராஜசேகர், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஊத்தங்கரை கந்தவேல், சிங்காரப்பேட்டை சந்திரகுமார், மத்தூர் பாலமுருகன், கல்லாவி எஸ்.ஐ., அன்பழகன், ஊத்தங்கரை எஸ்.ஐ., கணேஷ்பாபு, மற்றும் போலீசார் பலர் கலந்து கொண்டு சீல் வைத்தனர்.

    மேலும் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

    • மாநாட்டில் பங்கேற்க விரும்பும் உள்நாட்டினருக்கு ரூ.500, வெளிநாட்டினருக்கு ரூ.1000 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
    • முருக பக்தர்கள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பாளர்களாக கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆகஸ்ட் 24 மற்றும் 25ந் தேதிகளில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் உலகம் முழுவதிலும் உள்ள சமய பெரியோர்கள், ஆன்மீக அன்பர்கள், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த மாநாட்டிற்காக வரும் சிறப்பு அழைப்பாளர்கள் வெளிநாட்டு பக்தர்களை தங்க வைப்பதற்காக பழனி மற்றும் திண்டுக்கல்லில் உள்ள தனியார் தங்கும் விடுதிகள், கோவிலுக்கு சொந்தமான தங்கும் விடுதிகளில் உள்ள அனைத்து அறைகளும் ஆகஸ்ட் 23ந் தேதி முதல் 26ந் தேதி வரை முன்பதிவுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

    இந்த மாநாட்டில் பங்கேற்க விரும்பும் முருக பக்தர்கள் மற்றும் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிக்க பிரத்தியேக இணையதளம் கடந்த மே 28ந் தேதி தொடங்கப்பட்டு தற்போது வரை பதிவுகள் நடைபெற்று வருகின்றன.

    மாநாட்டில் பங்கேற்க விரும்பும் உள்நாட்டினருக்கு ரூ.500, வெளிநாட்டினருக்கு ரூ.1000 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து முருக பக்தர்கள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பாளர்களாக கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    பதிவு செய்த பங்கேற்பாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை தவிர மாநாட்டை காண வரும் முருக பக்தர்களுக்கு தனி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் முத்தமிழ் முருகன் மாநாட்டை முன்னிட்டு பழனி கோவிலின் புகைப்படங்களை முப்பரிமாண காட்சி மூலம் பக்தர்கள் பார்க்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பழனி மலை, படிப்பாதை, யானைப்பாதை, மலைக்கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள கோவில்கள், மலைக்கோவிலின் உள் மற்றும் வெளி பிரகாரம், தங்க கோபுரம், ராஜகோபுரம் உள்ளிட்ட சன்னதிகளை முப்பரிமாண காட்சிகளில் பார்க்கும்போது நேரில் கோவிலுக்கு சென்று சுற்றி பார்க்கும் உணர்வை பக்தர்களுக்கு ஏற்படுத்தும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    • மருத்துவமனையில் 140 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
    • கவலைக்கிடமாக இருந்த 5 பேரின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55ஆக உயர்ந்துள்ளது.

    இந்நிலையில் கள்ளக்குறிச்சி மருத்துவமனை தலைவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

    விஷ முறிவுக்கான மருந்து போதிய அளவில் இருப்பு உள்ளது. சிகிச்சையில் இருப்பவர்களுக்கு அனைத்து வித பரிசோதனைகளும் மேற்கொள்கிறோம். உரிய மனநல ஆலோசனைக்கு பிறகே வீட்டுக்கு அனுப்புவோம் என்று கூறினார்.

    இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,

    கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 140 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். 56 சிறப்பு மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கவலைக்கிடமாக இருந்த 5 பேரின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது.

    அரசின் ஆணைப்படி பாதிக்கப்பட்டு இறந்த அனைவருக்கும் இழப்பீடு வழங்கப்படும்.

    கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்று வரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 6 பேர் ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

    • வாணியம்பாடியில் இருந்து பெங்களூருக்கு தினசரி 45 பஸ்கள் 90 நடைகளில் இயக்கப்படும்.
    • மலைப்பாதையாக உள்ளதால் கனரக பஸ்கள் இயக்க முடியாது.

    சென்னை:

    சட்டசபையில் கேள்வி நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமார் பேசுகையில், வாணியம்பாடியில் இருந்து வெலதிகா மணிபெண்டா வழியாக பெங்களூரு, கோலார் தங்க வயல் மற்றும் சித்தூருக்கு பஸ்கள் இயக்க அரசு ஆவன செய்யுமா? என கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது:-

    வாணியம்பாடியில் இருந்து பெங்களூருக்கு தினசரி 45 பஸ்கள் 90 நடைகளில் இயக்கப்படும்.

    மேலும், வெலதிகாமணி பெண்டாகிராமம் தமிழக ஆந்திர மாநில எல்லையில் வருவதால் இரண்டு மாநிலத்திற்கு இடையே இயக்க ஒப்பந்தம் ஏற்பட்ட பின்பே பஸ்களை இயக்க முடியும். மலைப்பாதையாக உள்ளதால் கனரக பஸ்கள் இயக்க முடியாது. தற்போது வாணியம்பாடியில் இருந்து மினி பஸ் மட்டும் இயக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×