என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • காயம் அடைந்தவர்கள் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • விபத்து குறித்து தகவல்களை அறிந்துகொள்ள உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருவள்ளூர்:

    மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு பாக்மதி விரைவு ரெயில் சென்றுகொண்டிருந்தது. திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே ரெயில் வந்துகொண்டிருந்தபோது, அங்கு ஏற்கனவே நின்றுகொண்டிருந்த சரக்கு ரெயிலின் பின்னால் வேகமாக வந்து மோதியதில் விபத்து ஏற்பட்டது.

    இதில் ரெயில் பெட்டிகள் தடம் புரண்டு 2 பெட்டிகள் எரிந்தன. பயணிகள் விரைவு ரெயிலின் 7 பெட்டிகள் தடம் புரண்டன.

    தகவலறிந்த அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், போலீசார் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தால் சென்னை சென்ட்ரலில் இருந்து டெல்லி செல்லும் தமிழ்நாடு விரைவு ரெயில், தன்பந்த் விரைவு ரெயில் ஆகியவை நிறுத்தப்பட்டுள்ளன.

    விபத்து குறித்து தகவலுக்கு 044-25330952, 044-25330953, 044-24354995 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், ரெயில் விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    • காயம் அடைந்தவர்கள் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • விபத்து குறித்து தகவல்களை அறிந்துகொள்ள உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருவள்ளூர்:

    மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு பாக்மதி விரைவு ரெயில் சென்றுகொண்டிருந்தது. திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே ரெயில் வந்துகொண்டிருந்தபோது, அங்கு ஏற்கனவே நின்றுகொண்டிருந்த சரக்கு ரெயிலின் பின்னால் வேகமாக வந்து மோதியதில் விபத்து ஏற்பட்டது.

    வேகமாக மோதியதால் ரெயில் பெட்டிகள் தடம் புரண்டு 2 பெட்டிகள் எரிந்தன. பயணிகள் விரைவு ரெயிலின் 7 பெட்டிகள் தடம் புரண்டன.

    தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், போலீசார் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்து காரணமாக சென்னை சென்ட்ரலில் இருந்து டெல்லி செல்லும் தமிழ்நாடு விரைவு ரெயில், தன்பந்த் விரைவு ரெயில் ஆகியவை நிறுத்தப்பட்டுள்ளன.

    விபத்து குறித்து தகவல்களை அறிந்து கொள்வதற்காக 044-25330952, 044-25330953, 044-24354995 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்துகொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், ரெயில் விபத்து நடந்த இடத்தில் அமைச்சர் நாசர் நேரில் சென்று ஆய்வு செய்தார். மீட்பு பணிகளையும் முடுக்கி விட்டுள்ளார்.

    • விபத்து குறித்து தகவல்களை அறிந்துகொள்ள உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • சென்னை சென்ட்ரலில் இருந்து செல்லும் விரைவு ரெயில்கள் நிறுத்தம்

    திருவள்ளூர்:

    மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு பாக்மதி விரைவு ரெயில் சென்றுகொண்டிருந்தது. திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே ரெயில் வந்துகொண்டிருந்தபோது, அங்கு ஏற்கனவே நின்றுகொண்டிருந்த சரக்கு ரெயிலின் பின்னால் வேகமாக வந்து மோதியதில் விபத்து ஏற்பட்டது.

    வேகமாக மோதியதால் ரெயில் பெட்டிகள் தடம் புரண்டு 2 பெட்டிகள் எரிந்தன. பயணிகள் விரைவு ரெயிலின் 4 ஏசி பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாகத் தகவல் வெளியாகியது.

    விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள், போலீசார் மற்றும் உள்ளூர்வாசிகள் சம்பவ இடத்திகு விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர்.

    இந்த விபத்து காரணமாக சென்னை சென்ட்ரலில் இருந்து டெல்லி செல்லும் தமிழ்நாடு விரைவு ரெயில், தன்பந்த் விரைவு ரெயில் ஆகியவை நிறுத்தப்பட்டுள்ளன.

    இந்நிலையில், விபத்து குறித்து தகவல்களை அறிந்து கொள்வதற்கான உதவி எண்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    044-25330952, 044-25330953, 044-25354995 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்துகொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

    • திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே சரக்கு ரெயில் மீது பயணிகள் ரெயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
    • இரு ரெயில்களும் மோதிக்கொண்டதில் இரண்டு பெட்டிகளில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

    திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே சரக்கு ரெயில் மீது பயணிகள் ரெயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இரு ரெயில்களும் மோதிக்கொண்டதில் இரண்டு பெட்டிகளில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

    ஆந்திரா நோக்கிச் சென்ற மைசூரு தர்பங்கா எக்ஸ்பிரஸ் ரெயில் கவரப்பேட்டை ரெயில் நிலையத்துக்கு அருகே  வந்தபோது அங்கு நின்றுகொண்டிருந்த  சரக்கு ரெயில் மீது மோதியதில் இரண்டு ஏசி  பெட்டிகளில் தீப்பற்றியுள்ளது.

    பெட்டிகளில் பற்றியுள்ள தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். ரெயிலில் பயணித்த பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    • சென்னையில் சார்ஜா புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
    • விமானம் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தது.

    திருச்சியில் இருந்து ஷார்ஜா புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, விமானம் திருச்சிக்கே திரும்பியது.

    141 பயணிகளுடன் திருச்சியில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்க முடியாமல் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கும் அதிகமாக வானத்தில் வட்டமடித்த நிலையில், விமானம் பத்திரமாக தரையிறங்கியது.

    விமானத்தில் பயணத்தவர்கள் அனைவரும் பத்திரமாக உள்ளனர். இந்த நிலையில், நடுவானில் வட்டமடித்த விமானத்தில் நடந்த திக் திக் நிமிடங்களை பயணிகள் விவரித்தனர். அப்போது பேசிய பயணி ஒருவர், நாங்கள் ஷார்ஜாவை நோக்கி பயணம் செய்வதாகவே நினைத்தோம். என்ன நடந்தது என்றே தெரியவில்லை."

    "விமானத்தில் ஏற்பட்ட கோளாறு பற்றி எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை. அதன்பிறகு தான் விமானம் தரையிறங்குவதில் பிரச்சினை உள்ளது என்று கூறினர். மேலும், பதட்டம் அடையாமல் சீட் பெல்ட் அணிந்து கொள்ள அறிவுறுத்தினர்."

    "சிறிது நேரத்திற்கு விமானத்தின் மின் விளக்குகள் பலமுறை அணைந்து, மீண்டும் எரிந்தன. பிறகு விமானம் தரையிறங்கியது," என்று தெரிவித்தார். 

    • தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து விமானம் திருச்சிக்கே திரும்பியது.
    • ஒரு மணி நேரமாக வானத்தில் வட்டமடித்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

    திருச்சியில் இருந்து சார்ஜா புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, விமானம் திருச்சிக்கே திரும்பியது.

    தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் தரையிறங்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாக விமானம் கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக வானத்தில் வட்டமடித்துக் கொண்டிருந்தது.

    141 பயணிகளுடன் திருச்சியில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்க முடியாமல் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கும் அதிகமாக வானத்தில் வட்டமடித்த நிலையில், விமானம் பத்திரமாக தரையிறங்கியது. 

    • தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து விமானம் திருச்சிக்கே திரும்பியது.
    • ஒரு மணி நேரமாக வானத்தில் வட்டமடித்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. It is said to be hovering in the sky for an hour.

    திருச்சியில் இருந்து சார்ஜா புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, விமானம் திருச்சிக்கே திரும்பியது.

    விமானத்தின் ஹைட்ராலிக்குகளில் பிரச்சினை ஏற்பட்டதால், அதன் சக்கரங்கள் உள்ளே இழுக்க முடியவில்லை. இதன் காரணமாக விமானம் தரையிறங்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் விமானம் கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக வானத்தில் வட்டமடித்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

    141 பயணிகளுடன் திருச்சியில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்க முடியாமல் வானத்தில் வட்டமடித்துக் கொண்டிருக்கிறது. விமானத்தில் எரிபொருள் குறைந்த பிறகு அதனை தரையிறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி விமான நிலையத்தில் ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பத்துக்கும் அதிக ஆம்புலன்ஸ்கள் விமான நிலையத்தில் தயார் நிலையில் உள்ளன. மேலும், நான்கு தீயணைப்பு வாகனங்களும் விமான நிலையத்தில் தயார் நிலையில் உள்ளன.

    • முரசொலி செல்வம் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
    • முக்கிய பிரமுகர்கள் முரசொலி செல்வம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மருமகன் முரசொலி செல்வம் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

    மறைந்த முரசொலி செல்வத்தின் உடல் சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்ககாக வைக்கப்பட்டு இருந்தது. அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், பொது மக்கள் மற்றும் பலர் அஞ்சலி செலுத்தினர்.

    முக்கிய பிரமுகர்கள் முரசொலி செல்வம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து முரசொலி செல்வத்தின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. பெசன்ட் நகர் மின்மயானம் வந்தடைந்த முரொசலி செல்வம் உடலுக்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முரசொலி செல்வம் மறைவுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நேரில் வந்து இரங்கல் தெரிவித்தார்.
    • முரசொலி செல்வம் உடலுக்கு தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை அஞ்சலி செலுத்தினார்.

    முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மருமகனான முரசொலி செல்வம் வயது மூப்பு, உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

    இவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், திரைப்பிரபலங்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    அதன்படி, முரசொலி செல்வம் உடலுக்கு விசிக தலைவர் திருமாவளவன் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.

    பிறகு, செய்தியளர்களிடம் பேசிய திருமாவளவன், "முதலமைச்சரின் மு.க.ஸ்டாலினின் மனசாட்சியாக திகழ்ந்தவர் முரசொலி செல்வம். அவரது மறைவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது" என்றார்.

    முரசொலி செல்வம் மறைவுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நேரில் வந்து இரங்கல் தெரிவித்தார்.

    முரசொலி செல்வம் உடலுக்கு தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை அஞ்சலி செலுத்தினார்.

    முரசொலி செல்வம் உடலுக்கு மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி அஞ்சலி செலுத்தினார். பிறகு பேசிய அவர், "கலைஞரின் எண்ண ஓட்டங்களை எழுத்தில் பிரதிபலிப்பவராக இருந்தார் முரசொலி செல்வம்" என்றார்.

    முரசொலி செல்வம் உடலுக்கு முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவர் கருணாஸ் நேரில் அஞ்சலி செலுத்தினார். பிறகு பேசிய அவர், " "திராவிட சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்ட அனைத்து தொண்டர்களுக்கும் இது பேரிழப்பு" என்றார்.

    முரசொலி செல்வம் உடலுக்கு நடிகரும், இயக்குநருமான தியாகராஜன் அஞ்சலி செலுத்தினார். பிறகு பேசிய அவர், " நான் பொன்னர் சங்கர் படம் எடுத்தபோது 5 வருடங்களாக கலைஞரோடு இருந்தேன். அப்போது எனக்கு நிறைய ஆலோசனைகளை வழங்கியவர் முரசொலி செல்வம். அந்த நாட்களை மறக்கவே முடியாது" என்றார்.

    முரசொலி செல்வத்தின் உடலுக்கு நடிகர்கள் விஜயகுமார், அருண் விஜய் அஞ்சலி செலுத்தினர். பிறகு பேசிய விஜயகுமார், " தலைவர் கலைஞருக்கு பக்கபலமாக இருந்து கடைசி வரை பணியாற்றியவர் முரசொலி செல்வம்" என்றார்.

    மூத்த பத்திரிக்கையாளர் முரசொலி செல்வத்தின் உடல் இன்று மாலை 4 மணியளவில் தகனம் செய்யப்படுகிறது.

    • திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில், நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
    • நாளை மற்றும் 13, 16-ந்தேதிகளில் கனமழை பெய்யும் எனவும் கூறியுள்ளது.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யும்.

    தேனி, தென்காசி, விருதுநகர், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். மேலும் திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில், நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32°-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25°-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32°-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25°-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    இதனிடையே தமிழ்நாட்டில் இன்று மற்றும் 14, 15 ஆகிய நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மேலும் நாளை மற்றும் 13, 16-ந்தேதிகளில் கனமழை பெய்யும் எனவும் கூறியுள்ளது.

    • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்புகள் விற்பனையில் சிறப்பு சலுகைகள்.
    • பல்வேறு இனிப்புகள் அடங்கிய காம்போ ஆஃபர்களை ஆவின் நிர்வாகம் அறிமுகம்.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்புகள் விற்பனையில் சிறப்பு சலுகைகளை ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    அதன்படி, பல்வேறு இனிப்புகள் அடங்கிய காம்போ ஆஃபர்களை ஆவின் நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

    அதில், மைசூர்பாகு 250 கி, மிக்சர் 200 கி, ஆவின் குக்கீஸ் 80 கி, ரூ.10 சாக்லேட் -1 அடங்கிய காம்போ ரூ.300க்கு விற்கப்படுகிறது.

    இதேபோல், நெய் பாதுஷா 250 கி, பாதாம் மிக்ஸ் 200 கி, குலாப் ஜாமூன் 250 கி, மிக்சர் 200 கி, ரூ.10 சாக்லேட் -1 காம்போ ரூ.500க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    தொடர்ந்து, காஜு பிஸ்தா ரோல் 250 கி, காஜூ கட்லி 250 கி, நெய் பாதுஷா 250 கி, முந்திரி அல்வா 250 கி ஆகிய இனிப்புகள் அடங்கிய காம்போ ரூ.900க்கு சிறப்பு சலுகையில் விற்பனையாகிறது.

    • நண்பர்களான விஜி, வசந்தகுமார், ராகுல் 3 பேரும் ஒரே பைக்கில் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
    • பைக் மீது கண்டெய்னர் லாரி மோதியதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே பைக் மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

    நண்பர்களான விஜி, வசந்தகுமார், ராகுல் 3 பேரும் ஒரே பைக்கில் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

    பைக் மீது கண்டெய்னர் லாரி மோதியதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்தவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×