என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • விஜய்(வயது32)ர் சிங்காரவேலர்(35). 2 பேரும் நேற்று முன்தினம் இரவு, தனித்தனி மோட்டார் சைக்கிளில் சேத்தூர் சாலை அருகே சென்றனர். சிங்காரவேலு மற்றொரு மோட்டார் சைக்கிள் வேகமாக வருவதை கவனிக்காமல் கடந்து உள்ளார்
    • இருவருடைய மோட்டார்சைக்கிளும் பயங்கரமாக மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு சாலையில் சாய்ந்தனர்,

     

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த சேத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜய்(வயது32) மற்றும் தாமனங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சிங்காரவேலர்(35). 2 பேரும் நேற்று முன்தினம் இரவு, தனித்தனி மோட்டார் சைக்கிளில் சேத்தூர் சாலை அருகே சென்றனர். அப்பொழுது திடீரென்று சாலையின் மறு பக்கத்திற்க்கு செல்ல முயன்ற விஜய், சாலையில் இடது புறம் சிங்காரவேலு மற்றொரு மோட்டார் சைக்கிள் வேகமாக வருவதை கவனிக்காமல் கடந்து உள்ளார். இதனால், வேகமாக வந்த சிங்காரவேலு மோட்டார் சைக்கிள், விஜய் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு சாலையில் சாய்ந்தனர்

    . கண் இமைக்கும் நேரத்தில் நடந்துமுடிந்த இந்த விபத்தை நேரில் பார்த்த அப்பகுதி பொதுமக்கள், இருவரையும் மீட்டு காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு இருவருக்கும் லேசான காயத்துடன் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இது குறித்து, காரைக்கால் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் 2 மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட சி.சி.டி.வி காட்சி தற்போது வைரலாகி வருகிறது.

    • தமிழகம் முழுவதும் உள்ள அரசு மாநகர பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர்.
    • இளம் விதவை உதவித்தொகை ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

    புதுச்சேரி:

    தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் ஆட்சிப்பொறுப்பேற்றவுடன், மகளிருக்கான கட்டணமில்லா பஸ் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

    இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அரசு மாநகர பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைமுறைப்படுத்தி உள்ள பெண்களுக்கான இலவச பேருந்து பயணம் திட்டத்தை தமிழக அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.

    வேலைக்கு செல்லக்கூடிய பெண்கள் மட்டுமின்றி வீடுகளில் உள்ளவர்கள் அருகில் உள்ள பகுதிக்கு செல்லவும் உதவியாக இருப்பதால் இத்திட்டத்துக்கு அதிகமாக வரவேற்பு கிடைத்துள்ளது.

    இந்நிலையில் புதுச்சேரியில் அரசு பேருந்துகளில் பெண்கள் இனி இலவசமாக பயணம் செய்யலாம் என்று சட்டசபையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது:-

    தனியார் பங்களிப்போடு கூட்டுறவு சர்க்கரை ஆலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். இளம் விதவை உதவித்தொகை ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

    காரைக்காலில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.7,500 வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திரு. பட்டினம் தொகுதியில் மேலவாஞ்சூர் கிராமத்தில் தனியார் கப்பல்துறைமுகத்தில் அளவுக்கு அதிகமாக நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டது .
    • அதன் துகள்கள்காற்றில் பரவியதால் கிராம மக்கள் உணவு உண்ண முடியாமலும், துணிகளை காயவைக்க முடியாமலும், மூச்சு திணறலாலும் பாதிக்கப்பட்டனர்

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த திரு. பட்டினம் தொகுதியில் மேலவாஞ்சூர் கிராமத்தில் தனியார் கப்பல் துறைமுகம் கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து இயங்கி வருகிறது. கடந்த சில வாரமாக, இந்த துறைமுகத்தில் அளவுக்கு அதிகமாக நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டது. அதன் துகள்கள் சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு காற்றில் பரவியதால் கிராம மக்கள் உணவு உண்ண முடியாமலும், துணிகளை காயவைக்க முடியாமலும், மூச்சு திணறலாலும் பாதிக்கப்பட்டனர் இதனைக் கண்டித்து 300-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நேற்று முன்தினம் துறைமுக வாயிலில் முற்றுகை போராட்டம் செய்தனர். இதனை அடுத்து காரைக்கால் மாவட்ட கலெக்டர் முகம்மது மன்சூர், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன் மற்றும் சுற்றுச்சூழல், மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் தனியார் கப்பல் துறைகத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.   தொடர்ந்து, மேலவாஞ்சூர், கீழவாஞ்சூர், வடக்குவாஞ்சூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு நேரில் சென்று அங்குள்ள மக்களிடம் கருத்துகளை கேட்டனர். அப்போது கிராம மக்கள், தங்கள் வீட்டு சமையல் பாத்திரங்கள், துணிகள், வீடுகளில் படிந்த அளவுக்கு அதிகமான நிலக்கரி துகள்களை காட்டினர். இதற்கு நிரந்தர தீர்வு காணும்படி கண்ணீர்மல்க புகார் அளித்தனர்.

    சுற்றுசூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் உரிய ஆய்வு மேற்கொண்டு அறிக்கை அளிக்கும்படி கலெக்டர் உத்தரவிட்டார்.

    • நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தால் நோயாளிகள் பயனடைந்து வருகின்றனர்.
    • புதுவையில் திட்டம் தோல்வி என சொல்லக்கூடாது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை விரிவுபடுத்தும் நிலையில் உள்ளோம்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் கேள்விநேரத்தின்போது நடந்த விவாதம் வருமாறு:

    பிஆர்.சிவா(சுயே): சுகாதாரத்துறையில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் புதுவை, காரைக்காலில் எத்தனை பேர் பயனடைந்துள்ளனர்? பழைய காப்பீடு திட்டத்தின் கீழ் மஞ்சள் மற்றும் சிவப்பு ரேஷன்கார்டுதாரர்களுக்கு வருமான சான்றிதழ் அடிப்படையில் காப்பீடு திட்டத்தை அமல்படுத்த அரசு முன்வருமா?

    முதலமைச்சர் ரங்கசாமி: ஆயுஷ்மான் காப்பீடு திட்டத்தில் புதுவையில் ரூ.20 கோடியே 25 லட்சத்தில் 34 ஆயிரத்து 327 பயனாளிகள் பயனடைந்துள்ளனர். காரைக்காலில் ரூ.2 கோடியே 54 லட்சத்தில் 2 ஆயிரத்து 417 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.

    இதைத்தொடர்ந்து எதிர்கட்சி வரிசையிலிருந்த தி.மு.க.-காங்கிரஸ் மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தால் புதுவையில் எந்த நோயாளிகளும் பயனடைவதில்லை.

    இந்த திட்டம் முறையாக புதுவையில் செயல்படுத்தவில்லை. இதனால் பலர் உரிய காலத்தில் நிதி கிடைக்காமல் இறந்துள்ளனர் என சரமாரியாக ஒரே நேரத்தில் குற்றம் சாட்டி பேசினர்.

    இதனால் சபையில் கடும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. சபாநாயகர் ஏம்பலம் செல்வம், உறுப்பினர்கள் தனித்தனியாக கருத்து தெரிவிக்கும்படி கூறினார்.

    எதிர்கட்சித்தலைவர் சிவா:-பிரதமர் மிகுந்த நல்லெண்ணத்தோடு கொண்டு வந்திருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் புதுவையில் அதிகாரிகள் முறையாக இதை செயல்படுத்தவில்லை. இதற்கான காப்பீடு அட்டையை மருத்துவமனைகளில் காண்பிக்கும் போது தூக்கி வீசி விடுகின்றனர். புதுவையில் இத்திட்டம் தோல்வியடைந்துள்ளது.

    கல்யாணசுந்தரம் (பா.ஜனதா): தவறு செய்த அதிகாரிகள் மீதுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். என் தொகுதியில் உள்ள மருத்துவமனையில் இத்திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கின்றனர்.

    வி.பி.ராமலிங்கம் (பா.ஜனதா): நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தால் நோயாளிகள் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தில் குறைபாடுகள் இருந்தால் அதை களைய அரசு முழு முயற்சி எடுக்க வேண்டும்.

    முதலமைச்சர் ரங்கசாமி: திட்டம் தோல்வி என சொல்லக்கூடாது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை விரிவுபடுத்தும் நிலையில் உள்ளோம். அனைவருக்குமான சுகாதார திட்டத்தின் கீழ் அனைத்து ரேஷன்கார்டு தாரர்களையும் உள்ளடக்கும் காப்பீடு திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது.

    இவ்வாறு விவாதம் நடந்தது.

    • திருநள்ளாறில், இடப்பிரச்சனை காரணமாக, தம்பி, அவரது மனைவியை தாக்கிய அக்கா மற்றும் அவரது மகள் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்
    • பன்னீர்செல்வம்(வயது56). இவர் வீட்டு வாசலில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவருக்கும், இவரது அக்கா கலா(58) என்பவருக்கும் இடையே கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இடப்பிரச்சனை உள்ளது.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த திருநள்ளாறில், இடப்பிரச்சனை காரணமாக, தம்பி, அவரது மனைவியை தாக்கிய அக்கா மற்றும் அவரது மகள் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். காரைக்காலை அடுத்த திருநள்ளாறு தென்னங்குடி பகுதியைச்சேர்ந்தவர் பன்னீர்செல்வம்(வயது56). இவர் வீட்டு வாசலில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவருக்கும், இவரது அக்கா கலா(58) என்பவருக்கும் இடையே கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இடப்பிரச்சனை உள்ளது. கோர்ட்டிலும் இது தொடர்பான வழக்கு உள்ளது. இந்நிலையில், கலா அடிக்கடி பன்னீர்செல்வம் மற்றும் அவரதுமனைவி வசந்தியையும் ஆபாசமாக திட்டி அடிப்பதும், பிறகு போலீசார் இருதரப்பையும் சமாதானம் செய்து வைப்பதும் வழக்கமாக இருந்து வந்துள்ளது.

    நேற்று முன்தினம், பன்னீர்செல்வம், வீட்டு வாசலில் கொத்தனார் மூலம் வீட்டை பழுது பார்க்கும் வேலையில் இருந்தபோது, அங்கு வந்த கலா மற்றும் அவரது மகள் ரஞ்சிதா, இடப்பிரச்சனை இருக்கும் போது, எப்படி வேலை செய்யலாம் என ஆபசமாக திட்டி, அருகில் கிடந்த தென்னை மட்டை மற்றும் கொத்தனார் கருவியால், பன்னீர்செல்வத்தையும், அவரது மனைவி வசந்தியை தாக்கியதாக கூறப்படுகிறது. காயம் அடைந்த இருவரும் சப்தம் போடவே, இருவருக்கும் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு கலா மற்றும் ரஞ்சிதா இருவரும் அங்கிருந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. காயம் அடைந்த இருவரும், சிகிச்சைக்காக காரைக்கால் ஆஸ்பத்திரிக்கு கொ ண்டுசெ ல்லப்பட்டனர். அங்கு இருவரும் கொடுத்த புகாரின் பேரில், திருநள்ளாறு போலீசார் கலா மற்றும் ரஞ்சிதா மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கிராம மக்கள் உணவு உண்ண முடியாமல், மூச்சு விட முடியாமல் திணறி வருவதாக கூறப்படுகிறது.
    • 300-க்கும் மேற்பட்ட மக்கள், இன்று காலை துறைமுக வாசலில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    காரைக்கால்:

    காரைக்கால் மேலவாஞ்சூர் அருகே தனியார் கப்பல் துறைமுகம் இயங்கி வருகிறது.

    இத்துறை முகத்தில் அளவுக்கு அதிகமாக நிலக்கரி இறக்கப்பட்டதால், சுற்றியுள்ள வடக்கு வாஞ்சூர், மேல வாஞ்சூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். தொடர்ந்து கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியதால், நிலக்கரி இறக்குமதி குறைக்கப்பட்டது. இந்நிலையில் துறைமுக நிர்வாகம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, வேறு ஒருவர் கைக்கு மாறியதால், மீண்டும் நிலக்கரி அளவுக்கு அதிகமாக இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால் நிலக்கரியில் இருந்து வெளியாகும் துகள்கள், சுற்றியுள்ள கிராமங்களில் 24 மணி நேரமும் படிவதால், கிராம மக்கள் உணவு, உடைகளில் அளவுக்கு அதிகமாக படிந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் கிராம மக்கள் உணவு உண்ண முடியாமல், மூச்சு விட முடியாமல் திணறி வருவதாக கூறப்படுகிறது.

    முதியோர்கள் மற்றும் சிறுவர்கள் இதனால் அதிகமாக நோய்வாய்ப்பட்டு வருகின்றனர். இது குறித்து கிராம மக்கள் துறைமுக நிர்வாகத்திடம் பலமுறை எடுத்துக் கூறியும், அவர்கள் காதில் வாங்கிக் கொள்ளாமல் நிலக்கரியை அளவுக்கு அதிகமாக இறக்குமதி செய்து வருகின்றனர்.

    இதனால் ஆத்திரமடைந்த 300-க்கும் மேற்பட்ட மக்கள், இன்று காலை துறைமுக வாசலில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காரைக்கால் திருப்பட்டினம் போலீசார் அமைதி பேச்சுவார்த்தை நடத்தியும், மாவட்ட அளவில் கலெக்டர் அல்லது அதற்கு இணையான அதிகாரிகள் வந்து முறையான தீர்வு காணும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே முற்றுகையை கைவிடுவோம் என கிராம மக்கள் முற்றுகையை தொடர்ந்த வண்ணம் உள்ளனர். இதனால் காரைக்கால் -நாகப்பட்டினம் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

    • புதுவையில் வைரஸ் தொற்று பரவி குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்
    • வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த புதுவை அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

    புதுச்சேரி:

    புதுவையில் வைரஸ் காய்ச்சல் பரவல் காரணமாக 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு நாளை (16-ந்தேதி) முதல் 11 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக புதுவை சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்தவுடன், பள்ளி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம், ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் வைரஸ் தொற்று பரவி குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களிலும் ஆரம்ப பள்ளி முதல் 8-ம் வகுப்பு வரை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை (வியாழக்கிழமை)முதல் 26-ந் தேதி வரை 11 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. தொடர்ந்து இந்த வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த புதுவை அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பரசுராமன் (வயது 30) என்ற வாலிபர், 12 பவுன் போலி தங்க தங்க நகையை, விற்க முயன்ற போது கையும் களவுமாக பிடித்து, காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
    • இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள புவனேஸ்வரியை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் பெரமசாமி பிள்ளை விதியில் ஜுவ்வல்லரி நடத்தி வரும் கைலாஷ் என்பவர் கடையில், கடந்த 10-ந்தேதி, காரைக்கால் சின்னக்கண்ணு செட்டி வீதியைச் சேர்ந்த பரசுராமன் (வயது 30) என்ற வாலிபர், 12 பவுன் போலி தங்க தங்க நகையை, விற்க முயன்ற போது கையும் களவுமாக பிடித்து, காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.பரசுராமனிடம் நடத்திய விசாரணையில், நகையை கொடுத்து விற்கச் சொன்னது திருவாரூர் மாவட்டம் கொல்லாபுரத்தை சேர்ந்த ரிபாத் காமில்தான் (35) என்பதும், இது போன்ற போலி தங்க நகை விற்பனைக்கு உடந்தையாக இருந்தவர் புதுவை போலீஸ் துறையில் சஸ்பெண்ட் ஆன, சப்.இன்ஸ்பெக்டர் ஜெரோம் (38), அவரது நெருங்கிய தோழி (கள்ளகாதலி) புவனேஸ்வரி (35) காரைக்காலைச் சேர்ந்த ரமேஷ் (32) ஆகியோர் உள்ளது தெரியவந்தது. இதில் ரிபாத் காமில்தான், ஜெரோம் மற்றும் ரமேஷை போலீசார் கைது செய்தனர்.  அவர்களிடம் போலீசார் விசாரனை மேற்கொ ண்டபோது, தமிழகம் மற்றும் புதுவையில் பல்வேறு நபர்களை வைத்து இது போன்று போலி நகையை வங்கிகளில் வைத்து பல கோடி ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது. இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள புவனேஸ்வரியை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.       

         காரைக்கால் புதுத்துறையை சேர்ந்த முகமது மைதீன் (35) என்பவர், காரைக்காலில் உள்ள புதுவை பாரதியார் வங்கியில் 30 பவுன் போலி தங்க நகையை வைத்து, கடன் பெற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக வங்கி மேலாளர் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் முகமது மைதீனை நேற்று கைது செய்தனர் .,இந்நிலையில், காரைக்காலில் உள்ள தனியார் நிதி நிறுவனமான கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி லிமிட் வாங்கி கிளையில், காரைக்கால் காமராஜர் நகரை சேர்ந்த தேவதாஸ் (38) என்பவர் கடந்த 2021-ம் ஆண்டு சுமார் 12 பவுன் போலி தங்க செயினை அடமானம் வைத்து ரூ.2 லட்சத்து 95 ஆயிரம் பெற்றுள்ளார். இதுநாள் வரை நகை கடன் பெற்றதுக்கு வட்டி ஏதும் செலுத்தாததால் வங்கி மேலாளர் நகையை பரிசோதித்தார். இதில் அது போலி நகை என தெரியவந்தது. இதுகுறித்து வங்கி மேலாளர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் தேவதாஸை தேடி வருகின்றனர். புவனேஸ்வரி மற்றும் தேவதாஸ் கைது செய்யப்பட்டால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரலாம் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

    • காரைக்கால் ஜுவல்லரி யில் 12 பவுன் போலி தங்க நகையை விற்பனை வழக்கில், ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று சப்- இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்
    • கொல்லாபுரத்தை சேர்ந்த ரிபாத் காமில்தான்(35) போலி தங்க நகையை தயாரித்து விற்பனை செய்ய கொடுத்தது தெரிய வந்தது. ,

    புதுச்சேரி:

    காரைக்கால் ஜுவல்லரி யில் 12 பவுன் போலி தங்க நகையை விற்பனை வழக்கில், ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று சப்- இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக ஒரு பெண்ணை போலீசார் தேடிவருகின்றனர்.  காரைக்கால் ராஜாத்தி நகரில் வசிப்பவர் கைலாஷ். இவர் காரைக்கால் பெரம சாமி பிள்ளை விதியில் ஜுவ்வல்லரி நடத்தி வரு கிறார். இவரது ஜூவல்ல ரிக்கு கடந்த 10-ந் தேதி, காரைக்கால் சின்னக் கண்ணு செட்டி வீதியை சேர்ந்த பரசுராமன் (வயது30) என்ற வாலிபர் சென்று, 12 பவுன்தங்க செயினை எடுத்து கொண்டு பணம் தரும்படி கேட்டுள்ளார். கைலஷ், தனது பெரியப்பா மகன் பாலமுரளிக்கு போன் செய்து விபரத்தை தெரிவித் துள்ளார். பாலமுரளி ஜுவல்லரிக்கு சென்று, நகையை பரிசோதித் துள்ளார்.

    அப்போது, நகையின் மேல்புறம் மட்டும் 916 தங்கத்தால் முலாம் பூசி, உள்ளே செம்பு கம்பி போல் தெரிந்ததை அவர் உறுதி செய்தார். தொடர்ந்து, ஜுவல்லரி கடை உரிமையாளர்கள் சங்கத்தில் இது குறித்து, கைலாஷ் ஆலோசனை செய்து, பரசுராமனை கையும் களவுமாக பிடித்து, காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.   போலீசார் பரசுராமனி டம் நடத்திய விசாரணையில், திருவாரூர் மாவட்டம் கொல்லாபுரத்தை சேர்ந்த ரிபாத் காமில்தான்(35) போலி தங்க நகையை தயாரித்து விற்பனை செய்ய கொடுத்தது தெரிய வந்தது. தொடர்ந்து, ரிபாத் காமிலை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், பல திடுக்கிடும் தகவல் வெளி வந்தது.    இது போன்ற போலி தங்க நகை விற்பனைக்கு உடந்தையாக இருந்தவர் புதுச்சேரி சப்-இன்ஸ்பெக்டர் ஜெரோம் (38), காரைக்காலைச்சேர்ந்த ரமேஷ்(32) மற்றும் அவரது நெருங்கிய தோழியான புவனேஸ்வரி(35) இருப்ப தாக கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், ஜெரோம் மற்றும் ரமேஷை கைது செய்த போலீசார், அவர்க ளிடம் விசாரனை மேற்கொண்ட போது, மேலும் பல திடுக்கி டும் தகவல் வெளிவந்தது.

    அதாவது இந்த கூட்டணி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பல்வேறு வங்கிகளில் இது போ

    • காரைக்காலில் 12 பவுன் போலி நகையை விற்க முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • மிஷனில் வைத்து பார்த்த போது 916 தரம் உள்ள தங்க நகை என காட்டியது.

    புதுச்சேரி:

    காரைக்கால் ராஜாத்தி நகரில் வசிப்பவர் கைலாஷ். இவர் காரைக்கால் பெரம சாமி பிள்ளை விதியில் நடத்தி வருகிறார். இவரது நகைக்கடைக்கு காரைக்கால் சின்னக்கண்ணு செட்டி வீதியைச்சேர்ந்த பரசு ராமன் (வயது30). என்ற வாலிபர் சென்றார். இவர் 12 பவுன்தங்க செயின் தன்னிடம் இருப்ப தாகவும், அவசரத் தேவைக்கு பணம் தேவைப்படுவதால், அதனை எடுத்து கொண்டு பணம் தரும்படி கேட்டுள்ளார். அதன்பேரில், கைலாஷ், நகையை கேரட் சரி பார்க்கும் மிஷனில் வைத்து பார்த்த போது, 916 தரம் உள்ள தங்க நகை என காட்டியது. ஆனால், உரசி பார்க்கும்போது சந்தேகம் எழுந்ததால், தனது பெரி யப்பா மகன் பாலமுரளிக்கு போன் செய்து விபரத்தை தெரிவித்தார். பாலமுரளி அவசரப்பட்டு பணத்தை கொடுத்துவிடாதே, நான் வந்து பார்க்கிறேன் என கூறி, ஜுவல்லரிக்கு சென்று, நகையை பரிசோதித்தார்.

    அப்போது, நகையின் மேல்புறம் மட்டும் 916 தங்கத்தால் முலாம் பூசி, உள்ளே செம்பு கம்பி போல் தெரிந்ததை அவர் உறுதி செய்தார். தொடர்ந்து, ஜுவல்லரியில் தற்போது 12 பவுனுக்கு பணம் இல்லை. நாளை வந்தால் மொத்தமாக தருகிறோம் என கூறி, பரசுராமனை சந்தேகம் வராதபடி சாதுர்யமாக அனுப்பிவைத்தனர். காரைக்கால் மாவட்டத்தில், இது போல் போலி தங்க நகைகளை விற்பனை செய்யும் நபர்கள் சுற்றிவருவதால், ஜுவல்லரி கடை உரிமையாளர்கள் சங்கத்தில் இது குறித்து, கைலாஷ் ஆலோசனை செய்து, பரசுராமை கையும் களவுமாக பிடித்து, போலீ சில் ஒப்படைக்க முடிவு செய்தனர்.

    மறுநாளான பணம் வாங்கும் சந்தோசத்தில் வந்த பரசுராமனை, கைலாஷ் மற்றும் சங்க நிர்வாகிகள் பிடித்து, காரைக்கால் நகர போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் லெனின் பாரதி உத்தரவின் பேரில், சப்-இன்ஸ்பொக்டர்கள் முத்துசாமி, மோகன் மற்றும் போலீசார் நகைக்கடைக்கு சென்று, பரசுராமனை கைது செய்தனர். பரசுராமனிடம் நடத்திய விசாரணையில், நகையை கொடுத்து விற்கச் சொன்னது திருவாரூர் மாவட்டம் கொல்லா புரத்தை சேர்ந்த ஒரு வாலி பர் என்பது தெரிய வந்தது. தொடர்ந்து, அந்த வாலி பரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் காரைக்காலில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

    • இந்தியாவில் புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது.
    • கடந்த ஜனவரி மாதம் 35 பேரும், பிப்ரவரி மாதம் 38 பேரும், இந்த மாதம் தற்போது 2 பேரும் இந்த புதிய வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    புதுச்சேரி:

    இந்தியாவில் புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. 'இன்புளூயன்சா-ஏ' வைரசின் துணை வைரசான 'எச்3 என்2' என்ற இந்த புதிய வைரசால் புதுச்சேரியில் கடந்த 3 மாதங்களில் 85 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு தெரிவித்துள்ளார்.

    இதன்படி கடந்த ஜனவரி மாதம் 35 பேரும், பிப்ரவரி மாதம் 38 பேரும், இந்த மாதம் தற்போது 2 பேரும் இந்த புதிய வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 2 பேர் மட்டும் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ளனர். எச்3 என்2 வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 18 பேர் 5 வயதுக்குட்பட்டவர்கள், 18 பேர் 6 முதல் 15 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • புதுச்சேரி ஆதிதிராவிடர் நலன் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா தலைமை தாங்கினார்.
    • ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாக செலவு செய்யப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்ட நிர்வாகம் மற்றும் ஆதிதிரா விடர் நலம் மற்றும் பழங்குடி யினர் நலத்துறை சார்பில், ரூ.2.80 கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள்வழங்கும் நிகழ்ச்சி காரைக்காலில் சிறப்பாக நடைபெற்றது. காரைக்காலை அடுத்த கோட்டிச்சேரி சிங்காரவேலர் திருமண மண்டபத்தில் நடை பெற்ற இந்நிகழ்ச்சிக்கு, புதுச்சேரி ஆதிதிராவிடர் நலன் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் முகம்மது மன்சூர், மேல்நிலைக் கல்வித் துணை இயக்குனர் ராஜேஸ்வரி, மாவட்டம் முதன்மை கல்வி அதிகாரி ராஜசேகரன், ஆதிதிராவிட நலத் துறையின் உதவி இயக்குனர் மதன்குமார் மற்றும் பயனாளிகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து, 3000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை, திருமண உதவித்தொகை, வீடு கட்டும் திட்டத்திற்கான நிதியுதவி, பாலூட்டும் தாய்மார்களுக்கு நிதி உதவி, நீண்ட நாள் நோய் வாய்ப்பட்டு இருப்பவர்களுக்கு மாதம் ரூ.3000 வீதம் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு உதவித்தொகைகளை, அமைச்சர் வழங்கினார். நிகழ்ச்சியில், கலெக்டர் முகம்மது மன்சூர் பேசுகையில், இந்த ஆண்டு காரைக்கால் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாக செலவு செய்யப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் பட்ஜெட்டில் இத்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்க அமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டும். ஏழை களுக்கான உதவித்தொகை அவர்களுக்கு சரியாக சென்று சேர வேண்டும். கல்விக்காக செலவு செய்வதை யாரும் குறை கூற மாட்டார்கள். சுய உதவி குழுக்கள் மூலம் நிறைய திட்டங்களை ஏழை, எளிய மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றார்.

    ×