என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
காரைக்கால் திருநள்ளாறில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி வாலிபர் உடல் நசுங்கி பலி
- காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் கூலிதொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
- எதிரே வந்த சரக்கு லாரி எதிர்பாராத விதமாக பழனி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த செல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி (வயது 30). இவர் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் கூலிதொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். வேலை முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த பழனி திருநள்ளாறு அருகே வந்தபோது எதிரே வந்த சரக்கு லாரி எதிர்பாராத விதமாக பழனி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பழனி லாரி டயரில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
உயிரிழந்த பழனியின் உடலை கைப்பற்றிய போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மரிய கிறிஸ்டின் பால் தலைமை யிலான போலீசார் பிரேத பரிசோதனைக்காக காரைக் கால் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பழனிக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் திருமணம் நிச்சயிக்கப்பட்டு தடைபட்ட நிலையில் பழனி உயிரிழந்துள்ள சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அந்த பகுதியில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்க ப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்