search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karaikal Port"

    • முன்னாள் எம்.பி ராமதாஸ் வலியுறுத்தல்
    • அரசு இதை ஏற்காமல் மீனவர்களுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் எம்.பி. பேராசிரியர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காரைக்கால் மீனவர்கள் மீன்பிடித் துறைமுகத்தை விரிவாக்கம் செய்து தர 5 ஆண்டாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    புதுவை அரசு இதை ஏற்காமல் மீனவர்களுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. நான் எம்.பி.யாக இருந்த போது மத்திய அரசிடமிருந்து ரூ.47.76 கோடியில் மீன் பிடி துறைமுகம் உருவாக்க ப்பட்டது.

    துறைமுகம் கட்டி 15 ஆண்டாகிறது. இப்போது அங்கு மீன்பிடி படகுகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

    இதனால் படகுகளை நிறுத்த முடியாமல் நெரிசல் ஏற்படுகிறது. மீனவர்களி டையே கடும் போட்டி நிலவி, பிரச்சினைகள் எழுகிறது. எனவே துறைமுகத்தை விரிவாக்கம் செய்வது அவசியம். ஏலம் விடும் கூடம், தகவல் தொடர்பு மையம், மீன்வளத்துறை அலுவலகம், படகுகள் பழுதுபார்ப்பு மையம் அமைக்கலாம். மத்திய அரசு மீன்பிடி துறைமுகங்களை மேம்படுத்த பிரமதரின் மத்திய சம்பவதா என்ற திட்டத்தை கொண்டுவந்துள்ளது.

    100 சதவீத மத்திய அரசு மானியத்துடன் காரைக்காலில் மீன்பிடி துறைமுகத்தை மேம்படுத்தலாம். புதுவைக்கு வரும் மத்திய அமைச்சர்கள் உதவ தயாராக இருப்பதாக தெரிவிக்கின்றனர். இதை பயன்படுத்தி, புதுவை அரசு துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய திட்டம் தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பி ஒப்புதல் பெற்று பணிகளை தொடங்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • காரைக்கால் துறைமுகம் மூலம் ஆண்டுக்கு சராசரியாக ரூ.9.5 கோடி வீதம் 14 ஆண்டுகளில் மொத்தம் ரூ.133.45 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
    • புதிய ஒப்பந்தத்தில் புதுவை அரசுக்கு 10 சதவீத ஈவுத்தொகை வழங்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் 2006-ம் ஆண்டு துறைமுகம் அமைக்க தனியார் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது.

    காரைக்கால் துறைமுகத்திற்காக 600 ஏக்கர் நிலத்தை அரசு ஒதுக்கி தந்தது. துறைமுகத்தின் வருவாயில் ரூ.100-க்கு ரூ.2.6 சதவீதம் அரசுக்கு வழங்க வேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டது.

    மார்க் என்ற தனியார் நிறுவனம் புதுவை அரசுடன் ஒப்பந்தம் செய்து துறைமுகத்தை 2009-ல் தொடங்கியது. கடந்த 14 ஆண்டாக மார்க் நிறுவனம் துறைமுகத்தை நடத்தி வந்தது.

    காரைக்கால் துறைமுகம் மூலம் ஆண்டுக்கு சராசரியாக ரூ.9.5 கோடி வீதம் 14 ஆண்டுகளில் மொத்தம் ரூ.133.45 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

    தனியாருக்கு துறைமுகத்தை வழங்கும்போதே அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அரசின் ஈவுத்தொகையை கூடுதலாக பெற வேண்டும் என்றும், அப்பகுதி இளைஞர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தன.

    இந்த விவகாரம் அவ்வப்போது சட்டசபையிலும் எதிரொலித்து வந்தது. இதனிடையே காரைக்கால் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதி செய்யப்படு வதால் அப்பகுதியில் மக்கள் காற்று மாசுபாடால் பாதிக்கப்படுவதாக புகாரும் எழுந்தது.

    மேலும் காரைக்கால் துறைமுகத்தை இறக்குமதி, ஏற்றுமதியை கண்காணிக்க சரியான அமைப்புகள் இல்லை என்ற குற்றச் சாட்டும் எழுந்தது. காரைக் கால் துறைமுகம் கடத்தல் கேந்திரமாக மாறிவிட்டதாக அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன.

    இதனிடையே காரைக்கால் மார்க் துறைமுக நிறுவனம் தொழில் நஷ்டம் காரணமாக நலிவடைந்து விட்டதாக அறிவித்தது. இதனால் துறைமுகத்தை விற்பனை செய்ய தொழில் தாவா தீர்ப்பாயத்தை அணுகியது.

    இந்த தீர்ப்பாயம் மார்க் நிறுவனம் வங்கிகளில் பெற்ற கடனை ஈடுசெய்யும் வகையில் துறைமுகத்தை தனியாருக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.

    காரைக்கால் துறைமுகத்தை அதானி நிறுவனம் நடத்துவதற்காக முன்வந்துள்ளது.

    இதற்கான ஒப்பந்தம் விரைவில் போடப்பட உள்ளது. இந்த புதிய ஒப்பந்தத்தில் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் வகையில் விதிகளை உருவாக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றன.

    புதிய ஒப்பந்தத்தில் புதுவை அரசுக்கு 10 சதவீத ஈவுத்தொகை வழங்க வேண்டும். காரைக்கால் மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் பெரும் பகுதியை வழங்க வேண்டும். காரைக்கால் மாவட்ட வளர்ச்சிக்கு ஒரு சதவீத நிதி வழங்க வேண்டும் என்பது உட்பட முக்கிய விதிகளை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

    இந்த விதிமுறைகளோடு புதிய ஒப்பந்தந்தை நிறைவேற்ற தலைமை செயலருக்கு முதல்- அமைச்சர் ரங்கசாமி அறிவுறுத்தியுள்ளார்.

    காரைக்கால் துறைமுகச் செயல்பாட்டை மேம்படுத்துவதற்காக ரூ.600 கோடி முதலீடு செய்யப்பட்டு உள்ளதாக துறைமுகத்தின் இயக்குனர் ஜி.ஆர்.கே.ரெட்டி தெரிவித்து உள்ளார்.
    சென்னை:

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் காரைக்கால் துறைமுகம் கடந்த 2009-ம் ஆண்டு ஏப்ரல் 15-ந் தேதி தொடங்கப்பட்டது. தற்போது வரை 53 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை கையாண்டு உள்ளது.

    1,565 வணிகக் கப்பல்களில் இருந்து கோதுமை, சர்க்கரை, சிமெண்ட், உரப்பொருட்கள், நிலக்கரி, எண்ணெய் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு சரக்குகளை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்துள்ளது. இந்த துறைமுகம் 50 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகளை அளித்துள்ளது.

    இந்தநிலையில் துறைமுகச் செயல்பாட்டை மேம்படுத்துவதற்காக ரூ.600 கோடி முதலீடு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் துறைமுகம் எந்திரமயமாக்கப்படுவதால் தானியங்கி முறையில் மொத்த பொருள்களைத் திறமையாக கையாள முடியும். குறிப்பாக கப்பலில் இருந்து சரக்குகளை ஏற்றவும், இறக்கவும் கன்வேயர் மூலமாகச் செயல்படும் தானியங்கி கருவி உதவுகிறது.

    பொருட்கள் எந்தவித சேதாரமும் இன்றி மொத்த சரக்குகளை லாரிகளில் ஏற்றவும், இறக்கவும் முடியும். துறைமுகத்தின் செயல்பாடுகளும் வேகமாக நடப்பதுடன், நெரிசல் குறையும். பொருள்களும் விரைவாக இடம் மாறும். காரைக்கால் மற்றும் நாகப்பட்டினத்தில் வசிக்கும் பொதுமக்கள் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    மேற்கண்ட தகவலை துறைமுகத்தின் இயக்குனர் ஜி.ஆர்.கே.ரெட்டி தெரிவித்து உள்ளார். #tamilnews
    ×