என் மலர்
மணிப்பூர்
- வன்முறையை கட்டுப்படுத்த தவறியதாக கூறி, மாநில அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
- வன்முறை மற்ற மாவட்டங்களுக்கும் பரவத் தொடங்கிய நிலையில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இம்பால்:
மணிப்பூரில் பழங்குடியின அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் மெய்தி மற்றும் குகி இன மக்களுக்கு இடையே நிலவி வந்த மோதல் தொடர்ந்து நீடிக்கிறது. கடந்த ஆண்டு மே மாதம் ஏற்பட்ட பெரும் கலவரத்திற்கு பிறகு, பாதுகாப்பு படைகள் குவிக்கப்பட்டு வன்முறை ஓரளவு தணிந்தது. எனினும் குகி மற்றும் மெய்தி இனத்தை சேர்ந்த குழுக்கள் பரஸ்பரம் தாக்குதல்களில் ஈடுபடுவதால் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஜிரிபம் மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த படுகொலைகளைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் பதற்றம் அதிகரித்துள்ளது. வன்முறையை கட்டுப்படுத்த தவறியதாக கூறி, மாநில அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. மந்திரி, எம்.எல்.ஏ.க்களின் வீடுகளுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். வன்முறை மற்ற மாவட்டங்களுக்கும் பரவத் தொடங்கிய நிலையில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இம்பால் பள்ளத்தாக்கில் உள்ள இம்பால் கிழக்கு மற்றும் மேற்கு, பிஷ்னுபூர், தவுபால் மற்றும் காக்சிங் மாவட்டங்களில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பாதுகாப்பிற்காக கூடுதலாக மத்திய பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டனர். இம்பால் பள்ளத்தாக்கில் உள்ள 5 மாவட்டங்கள் மற்றும் காங்போப்கி, சுராசந்த்பூர் மாவட்டங்களில் இணையதளம், மொபைல் டேட்டா சேவை நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் ஊரடங்கு உத்தரவையும் மீறி இன்று ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, மணிப்பூரில் நிலவும் பாதுகாப்பு நிலைமை மற்றும் பாதுகாப்பு படையினரின் நிலைநிறுத்தம் குறித்து தொடர்ந்து இரண்டாவது நாளாக ஆய்வு செய்தார். மேலும் அங்கு கூடிய விரைவில் அமைதி மற்றும் சட்டம்ஒழுங்கை மீட்டெடுப்பதில் கவனம் செலுத்துமாறு உயர் அதிகாரிகளுக்கு அமித் ஷா உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனிடையே வடகிழக்கு மாநிலத்தின் தற்போதைய "கொந்தளிப்பான" சூழ்நிலையை கையாள்வதில் மாநில அரசுக்கு உதவுவதற்காக சுமார் 5 ஆயிரம் துணை ராணுவப் படையினரை மத்திய உள்துறை அமைச்சகம் மணிப்பூருக்கு அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- அவரது 2 குழந்தை, மனைவி, மாமியார், மனைவியின் சகோதரியும் அவரது மகளும் கடத்தப்பட்டவர்கள் ஆவர்.
- முதலமைச்சர் வீடு முற்றுகை இடப்பட்டது. 2 அமைச்சர்கள், பாஜக எம்எல்ஏக்கள் 3 பேரின் வீடுகள் சூறையாடப்பட்டன.
மணிப்பூரில் கடந்த வாரம் முதல் ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்களால் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கடந்த நவம்பர் 7 ஆம் தேதி ஜிர்பாம் மாவட்டத்தில் ஆசிரியை எரித்துக் கொல்லப்பட்டார்.

தொடர்ந்து கடந்த திங்கள்கிழமை தலைநகர் இம்பாலில் இருந்து 220 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜிர்பாம் மாவட்டத்தின் போரோபெக்ரா பகுதியில் மெய்தேய் சமூகத்தைச் 2 முதியவர்கள் முதியவர்கள் உயிருடன் எரிக்கப்பட்டனர். 6 பேரை குக்கி கிளர்ச்சியாளர்கள் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றனர்.

அவர்கள் 6 பெரும் அவர்களால் கொலை செய்யப்பட்டதை அரசுத் தரப்பு அதிகாரிகள் நேற்று உறுதி செய்தனர். கடத்தப்பட்டவர்கள், நிவாரண முகாமில் தங்கியிருந்த லைசாராம் ஹெரோஜித் என்பவரது குடும்பத்தினர் ஆவர். அவரது 2 குழந்தை, மனைவி, மாமியார், மனைவியின் சகோதரியும் அவரது மகளும் கடத்தப்பட்ட 6 பேர் ஆவர். மணிப்பூர் அசாம் எல்லைப்பகுதிக்கு இவர்கள் கடத்தப்பட்டனர்.
கடத்தப்பட்டவர்களில் மூன்று பேரின் உடல்கள் கடந்த வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. அது லைசாராமின் 8 மாத குழந்தை, அவரது மனைவியின் சகோதரியும் அவரது 8 வயது மகள் ஆகியோரது உடல்கள் ஆகும். லைசாராம் மனைவியின் உடல் இன்னும் தேடப்பட்டு வருகிறது. கொல்லப்பட்டது தனது குடும்பத்தினர் தான் என லைசாராம் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும் தலை இல்லாத 2 வயது குழந்தை மற்றும் அரை நிர்வாணமாக அழுகிய நிலையில் மூதாட்டி [லைசாராம் மாமியார்] உடல்கள் ஜிர்பாம் அருகில் உள்ள ஆற்றில் மிதந்தன என்று போலீஸ் இன்று தெரிவித்துள்ளது.

லைஸாராம் 2 வயது குழந்தையின் தலை இல்லாத உடல் உடைந்த மரக்கிளைகளில் குத்தி வைக்கப்பட்ட நிலையில் ஆற்றில் மிதந்ததாக நேரில் கண்டவர்கள் கூறியதாக என்டிடிவி களத் தகவல்கள் கூறுகின்றன. குழந்தைகியின் கைகள் உடலில் இருந்து தொலைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் 6 பேரும் கொல்லப்பட்ட செய்தி நேற்று மணிப்பூர் பள்ளத்தாக்கு முழுவதும் பரவியதால் போராட்டங்கள் வெடித்துள்ளன. முதலமைச்சர் வீடு முற்றுகை இடப்பட்டது. 2 அமைச்சர்கள், பாஜக எம்எல்ஏக்கள் 3 பேரின் வீடுகள் சூறையாடப்பட்டன. 5 மாவட்டங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- தேசிய மக்கள் கட்சிக்கு 7 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.
- ஜே.பி. நட்டாவுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் கூறியுள்ளது.
தொடர் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் பா.ஜ.க. தலைமையிலான அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக தேசிய மக்கள் கட்சி (NPP) அறிவித்தது. நெருக்கடியை தவிர்க்கவும், இயல்பு நிலையை மீட்டெடுக்கவும் பிரேன் சிங் ஆட்சி முழுமையாக தவறிவிட்டது என தேசிய மக்கள் கட்சி தெரிவித்துள்ளது.
60 உறுப்பினர்களைக் கொண்ட மணிப்பூர் சட்டசபையில் தேசிய மக்கள் கட்சிக்கு 7 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். கடந்த சில நாட்களில், மணிப்பூரில் நிலைமை மேலும் மோசமடைந்து, பல அப்பாவி உயிர்கள் பலியாகியுள்ளன.
மாநிலத்தில் உள்ள மக்கள் "பெரும் துன்பங்களுக்கு ஆளாகியுள்ளனர்" என்று தேசிய மக்கள் கட்சி பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் கூறியுள்ளது.
"பிரேன் சிங் தலைமையிலான மணிப்பூர் மாநில அரசு நெருக்கடியைத் தீர்க்கவும், இயல்பு நிலையை மீட்டெடுக்கவும் முற்றிலும் தவறிவிட்டது என்பதை நாங்கள் உறுதியாக உணர்கிறோம்."
"தற்போதைய சூழ்நிலையை மனதில் கொண்டு, தேசிய மக்கள் கட்சி மணிப்பூர் மாநிலத்தில் பிரேன் சிங் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை உடனடியாக வாபஸ் பெற முடிவு செய்துள்ளது" என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
- முதல்வர் பைரன் சிங்கின் மருமகன், அமைச்சர்கள் இருவர் வீடுகள் சூறையாடப்பட்டன
- ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை [AFSPA] திரும்பப்பெற பரிசீலனை செய்ய மாநில அரசு வலியுறுத்தியது.
மணிப்பூரில் கடந்த வாரம் முதல் வன்முறை சம்பவங்கள் மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளன. ஜிர்பாம் மாவட்டத்தில் கிராமங்களில் உள்ள வீடுகள் ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டன. 31 வயதான ஆசிரியை ஒருவர் கடந்த நவம்பர் 7 ஆம் தேதி உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார்.
தொடர்ந்து கடந்த திங்கள் கிழமை ஜிர்பாமில் மெய்த்தேய் இனத்தை சேர்ந்த எரித்துக் கொல்லப்பட்ட 2 முதியவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. மேலும் அன்றைய தினம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் மற்றும் 3 பெண்கள் என 6 பேர் மயமாகினர்.

அவர்கள் கடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்திக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் 6 உடல்கள் கண்டெடுக்கப்பட்டது. இது மாயமானவர்களின் உடல்கள் என்று சந்தேகிக்கப்படும் நிலையில் இந்த செய்தி காட்டுத் தீயாக மணிப்பூர் முழுவதும் பரவியது. இதனால் கொதித்தெழுந்த மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இம்பால் பள்ளத்தாக்கில் 5 மாவட்டங்களில் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது.
நேற்றைய தினம் முதல்வர் பைரன் சிங்கின் மருமகன், அமைச்சர்கள் இருவர் மற்றும் 3 எம்எல்ஏக்கள் வீடுகள் சூறையாடப்பட்டன. சொத்துக்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. மேலும் பா.ஜ.க. எம்.எல்.ஏ சபம் கொஞ்சகேசு, சபம் நிஷிகந்தா, ஆர்.கே.லிமோ ஆகியோரின் வீடுகளும் சூறையாடப்பட்டன.
நிலைமையை கட்டுப்படுத்த 5 மாவட்டங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கண்ணீர் புகைகுண்டுகளை வீசி போலீஸ் போராட்டக்காரர்களை கலைக்க முயற்சிக்கிறது. இந்த சூழலில் முதல்-மந்திரி பைரன் சிங்கின் வீட்டை போராட்டக்காரர்கள் முற்றுகையிட முயற்சித்தது.
இதனால், பாதுகாப்பு படையினர் அந்த பகுதியில் குவிக்கப்பட்டனர். அவர்கள், ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் மாநிலத்தில் ஆறு காவல்நிலையத்தில் மீண்டும் அமல்படுத்தப்பட்ட ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை [AFSPA] திரும்பப்பெற பரிசீலனை செய்யுமாறு மத்திய அரசுக்கு, மாநில அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதற்கிடையே மணிப்பூரில் மீண்டும் ஏற்பட்டிருக்கும் பதற்றம் மற்றும் போராட்டம் மிகவும் கவலை அளிப்பதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி மணிப்பூருக்கு சென்று அங்கு சட்ட ஒழுங்கு மற்றும் அமைதி ஏற்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
- உயிரிழந்தவர்களுக்கு நீதி கேட்டு 5 மாவட்டங்களில் போராட்டம் வெடித்துள்ளது.
- பா.ஜ.க. எம்.எல்.ஏ சபம் கொஞ்சகேசு, சபம் நிஷிகந்தா, ஆர்.கே.லிமோ ஆகியோரின் வீடுகள் சூறையாடப்பட்டன
மணிப்பூரில் கடந்த வருடம் தொடங்கிய கலவரத்தின் நீட்சியாக கடந்த வாரம் முதல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. தலைநகர் இம்பாலில் இருந்து 120 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜிர்பாம் மாவட்டத்தில் மார் பழங்குடி சமூகத்தினர் அதிகம் வசிக்கும் அரமாய் தெங்கோல் பகுதியில் உள்ள கிராமத்தில் கடந்த நவம்பர் 7 ஆம் தேதி புகுந்த கிளர்ச்சியாளர்கள் வீடுகளுக்கு தீ வைத்தனர்.
31 வயது ஆசிரியை ஒருவரை உயிருடன் தீ வைத்து எறிந்தனர். தொடர்ந்து கடந்த திங்கள் கிழமை அன்று ஜிர்பாம் 3 குழந்தைகள் உட்பட 6 பேர் மாயமாகினர். தீ வைத்து எரிக்கப்பட்ட 2 மெய்த்தேய் முதியவர்கள் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மாயமானவர்கள் தேடப்பட்டு வந்த நிலையில் போரோபெக்ராவில் இருந்து 16 கி.மீ. தொலைவில் ஒரு பெண் மற்றும் 2 குழந்தைகளின் உடல்கள் நேற்று இரவு கண்டுபிடிக்கப்பட்டன.
இன்றைய தினம் மேலும் 3 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக உள்ளூர் போலீஸ் அதிகாரி தெரிவித்தார். இந்த 6 உடல்களும் மாயமானவர்களின் உடல்கள் என்று கருதப்படுகிறது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த செய்தி பரவியதால் உயிரிழந்தவர்களுக்கு நீதி கேட்டு 5 மாவட்டங்களில் போராட்டம் வெடித்துள்ளது. மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு கூடுதல் காவல்துறையும், துணை ராணுவப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
இம்பால் பள்ளத்தாக்கு பகுதியில் போராட்டம் நடைபெற்று வருகிறது., இம்பாலில் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் மார்க்கெட்டுக்கு செல்லும் சாலைகளை மறித்து பெண்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். 2 அமைச்சர்கள் மற்றும் 3 எம்.எல்.ஏக்களின் வீடுகளை முற்றுகையிட்டு போராட்டக்காரர்கள் சூறையாடியுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து பா.ஜ.க. எம்.எல்.ஏ சபம் கொஞ்சகேசு, சபம் நிஷிகந்தா, ஆர்.கே.லிமோ ஆகியோரின் வீடுகள் சூறையாடப்பட்டன. நிலைமை கட்டுப்படுத்த முடியாமல் உள்ளதால் இம்பால் மேற்கு மாவட்டத்தில் மீண்டும் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- 3 பெண்களின் உடல்களும், மேலும் 1 பெண் மற்றும் 2 குழந்தைகளின் உடல்களும் கொண்டுவரப்பட்டது
- பாதுகாப்பு படைக்கு அனைத்து அதிகாரமும் வழங்கும் AFSPA சட்டம் அமல் படுத்தப்பட்டுள்ளது.
இனக்கலவரத்தால் துண்டாடப்பட்டு வரும் மணிப்பூரில் ஒரு வருடம் ஆகியும் இயல்பு நிலை திரும்பவில்லை. குக்கி மற்றும் மெய்தேய் இனத்தைச் சேர்ந்த ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள் அங்குள்ள கிராமங்களை எரித்தும் மக்களை கொலை செய்தும் கடத்திச் செல்வதுமாக வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த வாரம் முதல் தலைநகர் இம்பாலில் இருந்து 120 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜிர்பாம் மாவட்டத்தில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. ஜிர்பாமில் மார் பழங்குடி சமூகத்தினர் அதிகம் வசிக்கும் அரமாய் தெங்கோல் பகுதியில் உள்ள கிராமத்தில் கடந்த நவம்பர் 7 ஆம் தேதி புகுந்த கிளர்ச்சியர்கள் வீடுகளுக்கு தீ வைத்தனர்.
மேலும் மூன்று குழந்தைகளுக்கு தாயான 31 வயது ஆசிரியை ஒருவரை சித்ரவதை செய்து உயிருடன் எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து கடந்த திங்களன்று ஜிர்பாம் பகுதியில் மெய்த்தேய் இனத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட 6 பேர் காணாமல் போயினர். உயிருடன் எரிக்கப்பட்ட இரண்டு மெய்த்தேய் முதியவர்களின் சடலமும் அன்றைய தினம் கண்டெடுக்கப்பட்டது.
இந்நிலையில் அவர்கள் கடத்தப்பட்டு 5 நாட்கள் கழித்து, காணாமல் போனவர்கள் என சந்தேகிக்கப்படும் 3 பேரின் உடல்கள் மணிப்பூர்-அசாம் எல்லையின் ஜிரி நதி மற்றும் பராக் நதி சங்கமிக்கும் இடத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். அவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக நேற்று இரவு அசாம் சில்கார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே சில்கார் மருத்துவமனைக்கு 3 பெண்களின் உடல்களும், மேலும் 1 பெண் மற்றும் 2 குழந்தைகளின் உடல்களும் கொண்டுவரப்பட்டுள்ளதாக என்டிடிவி களத் தகவல் தெரிவிக்கிறது. அழுகிய நிலையில் உள்ள உடல்களை அடையாளம் காணும் பணி நடந்து வருவதாக கூறப்படுகிறது.
கடத்தப்பட்ட 6 பேரில் லாய்ஷராம் ஹெரோஜித் என்ற மாநில அரசு கீழ்நிலை ஊழியரின் மனைவி, 2 குழந்தைகள், மாமியார் மற்றும் மனைவியின் சகோதரி ஆகியோர் அடங்குவர். எனவே உடல்களை அடையாளம் காண அவர் விரைத்துள்ளார் என்று தகவல் தெரிவிக்கிறது. இவர்கள் அனைவரும் மெய்த்தேய் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகரித்து வரும் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த மத்திய அரசு கூடுதலாக 2000 மத்திய ஆயுதக்காவல் படை வீரர்களை மணிப்பூருக்கு அனுப்பி வைத்துள்ளது.
மேலும் மணிப்பூரில் உள்ள அனைத்து பாதுகாப்பு படையினரும் நிலைமையை கட்டுப்படுத்த முடுக்கி விடப்பட்டுள்ளனர் என்றும் அமைதியை மீட்டெடுக்க தேவையான நடவடிக்கை எடுக்குமாறு அவர்ளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
மணிப்பூரில் 6 மாவட்டங்களில் எந்த தடையும் இன்றி பாதுகாப்பு படை சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்க அதிகாரம் வழங்கும் AFSPA சட்டம் அமல் படுத்தப்பட்டுள்ளது
- மர்ம கும்பல், வீட்டுக்கு தீ வைத்து தப்பி செல்லும் வீடியோவும் இணையத்தில் பரவியது.
- வலது தொடையின் மேல்பகுதி வழியாக 2 cm x 1 cm அளவில் திறந்து முடிகிறது.
மணிப்பூர் கலவரம்
ஒரு வருட காலமாக கலவரத்தால் துண்டாடப்பட்டு வரும் மணிப்பூரில் சமீப நாட்களாகத் தாக்குதல் சம்பவங்களும் உயிரிழப்புகளும் அதிகரித்த வண்ணம் உள்ளன. பெண்கள் நிர்வாணமாக ஊர்வலம் நடத்திச் செல்லப்படுவது, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், கொலைகள் என சுமார் 240 பேர் கொல்லப்பட்டனர். 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் முகாம்களில் தஞ்சம் அடைந்தனர்.
இந்நிலையில் குக்கி மற்றும் மெய்தேய் ஆகிய இரு சமூகங்களைச் சேர்ந்த ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள் கடந்த வாரம் முதல் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். மணிப்பூர் தலைநகர் இம்பால் -இல் இருந்து 120 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜிர்பாம் மாவட்டத்தில் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
வன்முறைச் சம்பவங்கள்
அப்பகுதியில் உள்ள கிராமங்களில் நுழைந்து வீடுகளுக்குத் தீ வைப்பது, கிராமத்தினரைச் சித்திரவதை செய்து கொல்வது என வெறிச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். நிலைமையைச் சமாளிக்க முடியாமல் பாதுகாப்புப் படை திணறி வருவதால் கூடுதலாக 2000 மத்திய ஆயுதக் காவல் படையினரை மணிப்பூருக்கு அனுப்ப மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை 11 கிளர்ச்சியாளர்களைப் பாதுகாப்பு [படை கொன்றுள்ளது.
கடந்த திங்களன்று ஜிர்பாம் பகுதியில் இரண்டு முதியவர்கள் உயிருடன் தீ வைத்து எரிக்கப்பட்டனர். மூன்று குழந்தைகள் உட்பட 6 பேர் காணாமல் போயினர். முன்னதாக ஜிர்பாமில் பகுதியில் குகி-ஜோ சமூகத்துடன் தொடர்புடைய மார் பழங்குடி சமூகத்தினர் அதிகம் வசிக்கும் அரமாய் தெங்கோல் பகுதியில் கடந்த நவம்பர் 7 ஆம் தேதி கிளர்ச்சியாளர்கள் புகுந்து அங்கிருந்த வீடுகளை தீ வைத்து எரித்தனர்.
ஆசிரியை
இந்த வன்முறைக்குப் பின்னர் அன்றைய இரவு மார் சமூக பெண்ணான ஜொசாங்கிம் (வயது 31) என்பவரின் உடல் நேற்றிரவு கண்டெடுக்கப்பட்டது. டியூ ஆங்கில ஜூனியர் உயர்நிலை பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்திருக்கிறார். இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
வீட்டுக்குள் ஆயுதங்களுடன் வந்த மெய்தி கிளர்ச்சிக்குழுவை சேர்ந்த சிலர் தன்னுடைய மனைவியை பாலியல் பலாத்காரம் செய்து நள்ளிரவு 9 மணியளவில் உயிருடன் தீ வைத்து கொளுத்தி விட்டு வீட்டில் இருந்த பொருட்களை கொள்ளையடித்ததாக ஆசிரியையின் கணவர் போலீசில் புகார் அளித்திருந்தார்.
பயங்கரவாத குழுவை சேர்ந்த சிலர், அவருடைய மனைவியை பாலியல் பலாத்காரம் செய்து, நேற்றிரவு 9 மணியளவில் உயிருடன் தீ வைத்து கொளுத்தி விட்டனர். அவர்களுடைய வீட்டில் வைத்து நடந்த இந்த சம்பவத்திற்குப் பின்னர், அந்த குழுவினர், வீட்டில் இருந்த பொருட்களைக் கொள்ளையடித்து விட்டு, தீ வைத்து கொளுத்தி விட்டு சென்றது என எப்.ஐ.ஆரில் தெரிவித்து உள்ளார். மர்ம கும்பல், வீட்டுக்கு தீ வைத்து தப்பி செல்லும் வீடியோவும் இணையத்தில் பரவியது.
இந்நிலையில் உயிரிழந்த ஆசிரியையின் பிரேத பரிசோதனை அறிக்கையின்மூலம் உறைய வைக்கும் உண்மைகள் வெளிவந்துள்ளன. அவரின் உடல் அசாமில் உள்ள சில்சார் [Silchar] மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைத்து பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
போஸ்ட் மார்ட்டம்
அதன்படி ஆசிரியையும் உடலில் 99 சதவீதம் தீக்காயங்கள் இருந்தன. எலும்பு பகுதிகள் எரிந்தும்,உடைந்தும், முகத்தின் ஒரு பகுதியும் சில பகுதிகள் தொலைந்தும் உள்ளது. கையின் மேல் வலது மூட்டு மற்றும் கீழ் மூட்டு காணாமல் போயுள்ளது. அவரது மண்டை ஓடு கடுமையாக எரிந்தும் உடைந்து நொறுங்கி தனியாக பிரிந்த நிலையிலும் காணப்பட்டுள்ளது.
கழுத்து திசுக்கள் கருகியுள்ளன. அவர் சித்திரவதை செய்யப்பட்டதற்கு சாட்சியாக வலது தொடையின் பின்புறத்தில் 1 cm x 0.75 cm அளவில் தொடங்கும் துளைவலது தொடையின் மேல்பகுதி வழியாக 2 cm x 1 cm அளவில் திறந்து முடிகிறது.
இடது தொடையில் இறக்கப்பட்ட 5 cm நீளமான இரும்பு ஆணி கண்டெடுக்கப்பட்டுள்ளது. மூன்றாம் டிகிரி தீ காயங்கள் அதிர்ச்சியில் அவரது உயிர் பிரிந்துள்ளது. உடல் எரிந்தும் சில பாகங்கள் தொலைந்தும் உள்ளதால் ஆசிரியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை
- எரித்துக்கொலை செய்யப்பட்ட முதியவர்களின் உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன
- கிளர்ச்சியாளர்கள் குழுவைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஒரு வருட காலமாக கலவரத்தால் துண்டாடப்பட்டு வரும் மணிப்பூரில் சமீப நாட்களாக தாக்குதல் சம்பவங்களும் உயிரிழப்புகளும் அதிகரித்த வண்ணம் உள்ளன. குக்கி மற்றும் மெய்தேய் இனக்குழுக்களிடையே அரசின் பழங்குடியின அந்தஸ்து முடிவால் வெடித்த சண்டை கடந்த வருடம் மே மாதம் கலவரமாக மாறியது.
கிறிஸ்தவர்கள் அதிகம் உள்ள குக்கி சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணமாக ஊர்வலம் அழைத்துச்செல்லப்பட்ட வீடியோ வெளியாகி நாட்டையே உலுக்கியது. தொடர்ந்து பாலியல் வன்கொடுமை சம்பவங்களும் கொலைகளும் அரங்கேறின. 200 க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர்.
கலவரத்தால் பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி தற்காலிக முகாம்களில் தஞ்சம் அடைந்தனர். ஒன்றரை வருடத்திற்கு நூலாகியும் இன்னும் மணிப்பூரில் இயல்பு நிலை திரும்ப வில்லை. இந்நிலையில் இரு சமூகங்களைச் சேர்ந்த ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்றைய தினம் ஜிர்பாம் பகுதியில் 13 பேர் நேற்று மாயமானதாகவும், இதில் ஐந்து பேர் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாகவும் மூன்று குழந்தைகள் உட்பட ஆறு பேரை இன்னும் காணவில்லை என்றும் கூறப்படுகிறது. மெய்தேய் இனத்தைச் சேர்ந்த முதியவர்கள் இருவர் உயிருடன் எரித்து கொலை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அவர்களின் உடல்கள் தற்போது கைப்பற்றப்பட்டுள்ளன. இதற்கிடையே பாதுகாப்புப் படையினருக்கும் கிளர்ச்சியாளர்களும் இடையே துப்பாக்கி சண்டை நடந்துள்ளது. இதில் கிளர்ச்சியாளர்கள் குழுவைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

எனவே நிலைமை கையை மீறியுள்ளதால் கூடுதலாக 20 மத்திய ஆயுதக் காவல்படை [CAPF] கம்பெனிகளை மணிப்பூருக்கு அனுப்ப மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் சுமார் 2000 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். உடனடியாக இவர்களை மணிப்பூர் அனுப்ப நேற்று இரவு இந்த அவசர உத்தரவை பிறப்பித்ததாக மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- அடிக்கடி மோதல் சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டே தான் இருக்கின்றன.
- பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர்.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து மெய்தி மற்றும் குகி சமூகத்தினர் இடையே மோதல் நீடித்து வருகிறது. கலவரத்தை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இருந்த போதிலும், அவ்வப்போது இரு தரப்பினர் இடையே அடிக்கடி மோதல் சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டே தான் இருக்கின்றன.
இந்நிலையில், மணிப்பூர் மாநிலத்தின் ஜிரிபம் மாவட்டத்தில் பயங்கரவாத அமைப்பின் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்புப் படையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்புப்படையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலுக்கு பாதுகாப்புப் படையினரும் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 11 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
உயிரிழந்த 11 பயங்கரவாதிகளும் குக்கி சமூகத்தை சேர்ந்தவர்கள் என முதற்கட்ட தகவல்களில் தெரியவந்துள்ளது.
- வீடுகளை விட்டு தப்பியோடிய மக்கள், அருகிலுள்ள வனப்பகுதியில் தஞ்சமடைந்தனர்.
- தாக்குதலில் வேறு யாரும் காயமடைந்தனரா? என்ற தகவலும் உடனடியாக வெளியாகவில்லை.
இம்பால்:
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பெரும்பான்மையாக (53 சதவீதம்) உள்ள மைதேயி சமூகத்தினா் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வருகின்றனா். இதற்கு குகி, நாகா பழங்குடியினா் எதிர்ப்பு தெரிவிப்பதே மோதலுக்கான பிரதான காரணமாகும்.
மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த ஆண்டு மே மாதம் பெரும் கலவரம் மூண்டது. அப்போது, ஏராளமான வீடுகளுக்கு தீவைக்கப்பட்டன. இதனால் இடம்பெயா்ந்த மக்கள், அரசின் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.
இக்கலவரத்துக்குப் பிறகு இரு சமூகத்தினருக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன. இரு சமூகத்தினா் சார்ந்த பயங்கரவாதிகளும் ஆயுதமேந்தி தாக்குதலில் ஈடுபடுவதால் உயிர்ச்சேதம் தொடா்ந்து ஏற்பட்டு வருகிறது. இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து விட்டனா்.
இந்நிலையில், மலைப் பகுதி மாவட்டமான ஜிர் பாமில் குகி-ஸோ பழங்குடியினா் வசிக்கும் ஜைரான் ஹமா் கிராமத்துக்குள் நேற்று முன்தினம் ஆயுதங்களுடன் புகுந்த பயங்கரவாதிகள், அங்குள்ள வீடுகளுக்கு தீ வைத்தனா்.
இதில் 17 வீடுகள் தீக்கிரையாகின. கிராம மக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினா். இதனால், வீடுகளை விட்டு தப்பியோடிய மக்கள், அருகிலுள்ள வனப்பகுதியில் தஞ்சமடைந்தனா்.
இத்தாக்குதலில் பெண் ஒருவா் உயிரிழந்ததாக பழங்குடியின அமைப்பினா் தெரிவித்தனா். அந்த பெண் எதிர் தரப்பு கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்து மிக கொடூரமாக தாக்கப்பட்டு பிறகு எரித்து கொல்லப்பட்டார் என தகவல்கள் வெளியாகின. இதனால் மணிப்பூரில் பதட்டம் நிலவுகிறது.
மேலும், தாக்குதலில் வேறு யாரும் காயமடைந்தனரா? என்ற தகவலும் உடனடியாக வெளியாகவில்லை. இது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸ் அதிகாரி ஒருவா் தெரிவித்தார்.
- இந்த கல்லூரியானது ராஜ் பவனுக்கு 100 மீட்டர்கள் மட்டுமே தொலைவில் உள்ளது
- இம்பால் பகுதியில் உள்ள பல கல்வி நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூலித்து வருகின்றன
கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் சண்டையிடும் கிளர்ச்சியாளர்களால் பரபரப்பான சூழல் தொடர்ந்து நிலவி வருகிறது. இந்நிலையில் தலைநகர் இம்பாலில் உள்ள ஆளுநர் மாளிகையான ராஜ் பவன் அருகே உள்ள ஜி.பி. மகளிர் கல்லூரியின் வாசலில் இன்று காலை கையெறிகுண்டு கிடந்துள்ளது.
முதலமைச்சர் அரசு இல்லத்திலிருந்தும், மணிப்பூர் காவல்துறை தலைமையகத்திலிருந்தும் 300 மீட்டர் தொலைவில் இந்த கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியானது ராஜ் பவனுக்கு 100 மீட்டர்கள் மட்டுமே தொலைவில் உள்ளது. மற்ற அரசு கட்டடங்களான முதலமைச்சர் அலுவலகம் மற்றும் மணிப்பூர் காவல்துறை தலைமையகம் ஆகியவற்றில் இருந்து 300 மீட்டர் தொலைவில் உள்ளது.

கையெறி குண்டு குறித்து தகவல் கிடைத்தவுடன் காலவத்துறையினர் சுற்றி வளைத்தனர், அங்கு விரைந்த வெடிகுண்டு நிபுணர்கள் அதை பாதிப்பு இல்லாமல் அகற்றினர். அந்த கையெறிகுண்டுடன் கடிதம் ஒன்றும் இருந்துள்ளது.
அதில் பாசிச கல்வி முறை அடியோடு ஒழியட்டும். ஏழை வர்க்க மாணவர்களின் இலவச கல்வி உரிமைகள் இயக்கம் ஓங்கட்டும் என்று எழுதப்பட்டுள்ளது. இம்பால் பகுதியில் உள்ள பல கல்வி நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூலித்து வருவதால் அவற்றுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் இந்த சம்பவம் அமைத்துள்ளது.
- சோதனையில் துப்பாக்கி, வெடிமருந்துகள், மீட்கப்பட்டன.
- 6 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மணிப்பூர்:
மணிப்பூர் மாநிலம் கிழக்கு இம்பாலில் தடை செய்யப் பட்ட காங்லீபாக் கம்யூனிஸ்டு அமைப்பின் (மக்கள் போர்க்குழு) 6 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதை மணிப்பூர் போலீசார் இன்று தெரிவித்தனர்.
அவர்கள் சட்டவிரோத ஆயுதப் பரிவர்த்தனை மற்றும் பொதுமக்கள் அரசு, தனியார் நிறுவனங்களில் மிரட்டி பணம் பறித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.
அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், டெட்டனேட்டர்கள், 9 மி.மீ. பிஸ்டல், 3 வெடிகுண்டுகள், 4 சக்கர வாகனம், 2 மோட்டார் சைக்கிள், 6 செல்போன்கள் மீட்கப்பட்டன.
போங்பால் கிராமத்தில் நடத்தப்பட்ட மற்றொரு சோதனையில் துப்பாக்கி, வெடிமருந்துகள், மீட்கப்பட்டன.






