என் மலர்
இந்தியா

மணிப்பூர் முதல்-மந்திரி வீடு அருகே வெடிகுண்டு கண்டுபிடிப்பு
- மணிப்பூரில் ஒரு ஆண்டுக்கு மேலாக வன்முறை நீடித்து வருகிறது.
- வெடிக்காத மோட்டார் வெடிகுண்டு ஒன்று கிடந்தது.
இம்பால்:
மணிப்பூர் மாநிலத்தில் குக்கி மற்றும் மைதேயி சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் கடந்த ஆண்டு மே மாதம் கலவரமாக வெடித்தது. அம்மாநிலத்தில் ஒரு ஆண்டுக்கு மேலாக வன்முறை நீடித்து வருகிறது. சமீபத்தில் மீண்டும் கலவர சம்பவங்கள் அதிகரித்து உள்ளன.
இந்த நிலையில் மணிப்பூர் முதல்-மந்திரி பிரேன் சிங்கின் வீடு அருகே வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரின் லுவாங்ஷாங்பாம் பகுதியில் முதல்-மந்திரி வீடு அருகே வெடிக்காத மோட்டார் வெடிகுண்டு ஒன்று கிடந்தது. அதை போலீசார் கைப்பற்றினர்.
நேற்றிரவு ராக்கெட் மூலம் வெடிகுண்டு வீசப்பட்ட தாகவும், ஆனால் அது வெடிக்கவில்லை என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






