என் மலர்
மகாராஷ்டிரா
- நேற்றிரவு இந்தியா- பாகிஸ்தான் இடையே கடும் டிரோன் தாக்குதல் நடைபெற்றது.
- போர் பதற்றம் காரணமாக பங்குச் சந்தை சரிவை சந்தித்துள்ளன.
இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. நேற்று பாகிஸ்தான் இந்தியாவை நோக்கி சரமாரி டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்தியா அவைகளை நடுவானில் இடைமறித்து வெற்றிகரமாக தாக்கி அழித்தது. இந்தியாவும் பதிலுக்கு டிரோன் தாக்குதல் நடத்தியது.
இதனால் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மும்பை பங்குச் சந்தை குறியீடு எண் சென்செக்ஸ், இந்திய பங்குச் சந்தை குறியீடு எண் நிஃப்டி ஆகியவை தலா 1% வரை சரிவை சந்தித்துள்ளது.
மும்பை பங்குச் சந்தை குறியீடு எண் சென்செக்ஸ் நேற்றைய வர்த்தக முடிவில் 80,334.81 ஆக இருந்தது. இன்று காலை சுமார் 660 புள்ளிகள் சரிந்து 78,968.34 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கியது. குறைந்தபட்சமாக 78,968.34 புள்ளிகளிலும், அதிகபட்சமாக 80,032.93 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 880.34 புள்ளிகள் (1.10 சதவீதம்) சரிந்து 79,454.47 புள்ளிகளில் வர்த்தகம் முடிவடைந்தது.
இந்திய பங்குச் சந்தை குறியீடு எண் நிஃப்டி நேற்றைய வர்த்தக முடிவில் 24,273.80 புள்ளியாக இருந்தது. இன்று காலை 338.05 புள்ளிகள் சரிந்து 23,935.75 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. இன்று குறைந்தபட்சமாக 23,935.75 புள்ளிகளிலும், அதிகபட்சமாக 24,164.25 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 265.80 புள்ளிகள் சரிந்து (1.10 சதவீதம்) 24,008.00 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
ஐசிஐசிஐ வங்கி, பவர் கிரிட், அல்ட்ராடெக் சிமெண்ட், பஜாஜ் பைனான்ஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ், பஜாஜ் பின்செர்வ், அதானி போர்ட்ஸ், மஹிந்திரா அண்டு மஹிந்திரா நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன.
மார்ச் மாதம் வரையிலான 4ஆவது காலாண்டில் 871 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியதாக அறிக்கை வெளியிட்டிருந்து டைட்டன் நிறுவனத்தின பங்கு சதவீதம் வரை உயர்ந்தது. அதேபோல் லார்சன் அண்டு டூர்போ நிறுவன பங்கும் 4 சதவீதம் உயர்ந்தது.
டாட்டா மோட்டார்கள், எஸ்பிஐ, ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டன. ஆசிய மார்க்கெட்டுகளில் பெரும்பாலானவை இன்று ஏற்றம் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
- மும்பை அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி திரில் வெற்றி பெற்றது.
- இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது குஜராத் அணி.
மும்பை:
நடப்பு ஐ.பி.எல். தொடரின் 56-வது லீக் ஆட்டம் மும்பையில் நடந்தது. இதில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த மும்பை 20 ஓவரில் 155 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய லக்னோ அணி 18 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 132 ரன்கள் எடுத்த நிலையில் மழை பெய்ததால் ஆட்டம் தடைபட்டது.
இதையடுத்து, குஜராத் வெற்றிபெற ஒரு ஓவரில் 15 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. குஜராத் கடைசி ஓவரில் 15 ரன் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இந்நிலையில், நடப்பு ஐ.பி.எல். தொடரில் எழுச்சி பெற்றுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறி அசத்தியது.
2வது இடத்தில் ஆர்.சி.பி.யும், 3வது இடத்தில் பஞ்சாப் கிங்சும், 4வது இடத்தை மும்பை இந்தியன்சும், 5வது இடத்தை டெல்லியும், 6வது இடத்தை கொல்கத்தாவும், 7வது இடத்தை லக்னோவும் பிடித்துள்ளன.
- டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 155 ரன்கள் எடுத்தது.
மும்பை:
ஐ.பி.எல். தொடரின் 56வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 155 ரன்கள் எடுத்தது.
ரிக்கெல்டன் 2 ரன்னிலும், ரோகித் சர்மா 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
3வது விக்கெட்டுக்கு வில் ஜாக்ஸ்-சூர்யகுமார் யாதவ் இணைந்து அதிரடியாக விளையாடினர். சிறப்பாக ஆடிய வில் ஜாக்ஸ் அரை சதம் விளாசினார்.
இந்த ஜோடி 71 ரன்கள் சேர்த்த நிலையில், சூர்யகுமார் யாதவ் 35 ரன்னில் அவுட்டானார். வில் ஜாக்ஸ் 53 ரன்னில் ஆட்டமிழந்தார்.
குஜராத் சார்பில் சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மற்றவர்கள் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் களமிறங்கியது. சாய் சுதர்சன் 5 ரன்னில் அவுட்டானார்.
2வது விக்கெட்டுக்கு சுப்மன் கில்லுடன் ஜாஸ் பட்லர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 72 ரன்கள் சேர்த்த நிலையில் பட்லர் 30 ரன்னில் வெளியேறினார்.
அடுத்து கில்லுடன் ரதர்போர்டு ஜோடி சேர்ந்தார். ரதர்போர்டு அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்தார். 14 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்த நிலையில் மழையால் ஆட்டம் சிறிது தடைபட்டது.
மழை நின்று ஆட்டம் தொடங்கிய நிலையில் சுப்மன் கில், ரதர்போர்டு, ஷாருக் கான், ரஷீத் கான் விக்கெட்டுகள் வீழ்ந்தன. மழை மீண்டும் பெய்ததால் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி ஒரு ஓவரில்15 ரன்கள் எடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இறுதியில், குஜராத் அணி வெற்றிக்கு தேவையான ரன்களை எடுத்தது. 8வது வெற்றியைப் பதிவு செய்துள்ள குஜராத் அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது.
மும்பை அணியின் தொடர் வெற்றிக்கு குஜராத் அணி முற்றுப்புள்ளி வைத்தது. மும்பை அணியின் 5வது தோல்வி இதுவாகும்.
- மும்பை பங்குச் சந்தை குறியீடு எண் சென்செக்ஸ் 155.77 புள்ளிகள் சரிவு.
- இந்திய பங்குச் சந்தை குறியீடு எண் நிஃப்டி 81.55 புள்ளிகள் சரிவு
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச் சந்தை குறியீடு எண் சென்செக்ஸ் 155.77 புள்ளிகளும், இந்திய பங்குச் சந்தை குறியீடு 81.55 புள்ளிகளும் சரிவை சந்தித்தன.
மும்பை பங்குச் சந்தை குறியீடு எண் செக்ஸ் நேற்றைய வர்த்தக முடிவில் 80,796.84 புள்ளியாக இருந்தது. இன்று காலை சுமார் 111 புள்ளிகள் உயர்ந்து 80,907.24 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. இன்று அதிகபட்சமாக 80,981.58 புள்ளிகளிலும், குறைந்த பட்சமாக 80,481.03 புள்ளிகளிலும் வர்த்தகமானது.
இறுதியாக 155.77 புள்ளிகள் குறைந்தது சென்செக்ஸ் 155.77 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
இந்திய பங்குச் சந்தை நிஃப்டி நேற்றைய வர்த்தக முடிவில் 24,461.15 புள்ளியாக இருந்தது. இன்று காலை 39 புள்ளிகள் உயர்ந்து 24,500.75 புள்ளியில் வர்த்தகம் தொடங்கியது. இன்று அதிக பட்சமாக 24,509.65 புள்ளிகளிலும், குறைந்த பட்சமாக 24,331.80 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 81.55 புள்ளிகள் குறைந்து 24,379.60 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
- மும்பை பங்குச் சந்தை குறியீடு என் சென்செக்ஸ் 294.85 புள்ளிகள் உயர்ந்தது.
- இந்திய பங்குச் சந்தை குறியீடு எண் நிஃப்டி 114.45 புள்ளிகள் உயர்ந்தது.
மும்பை பங்குச் சந்தை குறியீடு எண் சென்செக்ஸ், இந்திய பங்குச் சந்தை குறியீடு என் நிஃப்டி இன்றைய வர்த்தகத்தில் ஏற்றத்துடன் நிறைவடைந்தது.
மும்பை பங்குச் சந்தை கடந்த வெள்ளிக்கிழமை சென்செக்ஸ் 80,501.99 புள்ளிகளில் நிறைவடைந்தது. இன்று காலை சுமார் 160 புள்ளிகள் உயர்ந்து 80,661.62 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று அதிக பட்சமாக 81,049.03 புள்ளிகளிலும், குறைந்த பட்சமாக 80,657.71 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 294.85 புள்ளிகள் உயர்ந்து 80,796.84 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
இந்திய பங்குச் சந்தை குறியீடு எண் நிஃப்டி கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் 24,346.70 புள்ளிகளில நிறைவடைந்தது. இன்று காலை நிஃப்டி 73 புள்ளிகள் உயர்ந்து 24,419.50 புள்ளிகளில் தொடங்கியது. இன்று அதிக பட்சமாக 24,526.40 புள்ளிகளிலும், குறைந்த பட்சமாக 24,400.65 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 114.45 புள்ளிகள் உயர்நத 24,461.15 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
- நாங்கள் அனைவருமே ஒரு பெண் முதல்வர் இருக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறோம்.
- இந்த விழாவின் போது, பல்வேறு துறைகளில் பணிபுரியும் பிரமுகர்கள் கௌரவிக்கப்படுகிறார்கள்.
அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், மும்பையின் வோர்லியில் உள்ள ஜம்போரி மைதானத்தில் மகாராஷ்டிர மஹோத்சவத்தை ஏற்பாடு செய்துள்ளது.
மே 1 ஆம் தேதி தொடங்கிய இந்த நிகழ்வு மே 4 வரை தொடரும். இந்த விழாவின் போது, பல்வேறு துறைகளில் பணிபுரியும் பிரமுகர்கள் கௌரவிக்கப்படுகிறார்கள்.
இந்த நிகழ்வில் இன்று அஜித் பவாரிடம் மூத்த பெண் பத்திரிகையாளர் ஒருவர், வரும் காலங்களில் மகாராஷ்டிராவின் முதலமைச்சராக ஒரு பெண் வர முடியுமா என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அஜித் பவார், "நாங்கள் அனைவருமே ஒரு பெண் முதல்வர் இருக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறோம். ஆனால் அதற்கு, தற்செயலாக ஏதாவது நடக்க வேண்டும்.
இப்போது பாருங்கள், நானும் பல வருடங்களாக முதலமைச்சராக வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன், ஆனால் விஷயங்கள் ஒருபோதும் பலனளிப்பதில்லை. அந்த நாள் எப்போதாவது வரும்" என்று பெருமூச்செறிந்தார்.
2023 ஆம் ஆண்டு சரத் பவாரின் தேசியவாத கட்சியை உடைத்த அஜித் பவார் பாஜக கூட்டணியில் இணைந்து துணை முதல்வர் ஆனார்.
ஆனால் முதல்வர் ஆக முடியாத ஆதங்கத்தை அவர் பல மேடைகளில் தொடர்ந்து வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
- 2000 ஆயிரம் ரூபாய் திரும்பப் பெறப்படும் என 2023ஆம் ஆண்டு ஆர்பிஐ அறிவித்தது.
- அப்போது 3.56 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து வந்தன.
பிரதமர் மோடி கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் பண மதிப்பிழப்பு செய்யப்பட்டதாக என அறிவித்தார். அதனைத் தொடர்ந்து புதிய 500 ரூபாய், 2 ஆயிரம் ரூபாய் நோட்டு வெளியிடப்பட்டன. 2 ஆயிரம் ரூபாய் நோட்டை ஏழை மக்கள் அதை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்துவது அரிதானதாக இருந்தது.
இந்த நிலையில்தான் கடந்த 2023ஆம் அண்டு மே மாதம் 19ஆம் தேதி 2 ஆயிரம் ரூபாய் திரும்பப் பெறப்படும் என ஆர்.பி.ஐ. அறிவித்தது. 2023ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வைத்திருந்தவர்கள் அதை வங்கிகளில் செலுத்தி, அதற்குப் பதிலாக மாற்றுப் பணம் பெற்றுக்கொண்டனர்.
காலக்கெடு முடிந்த நிலையில், ஆர்பிஐ அலுவலகங்கள், தபால் நிலையங்களில் மாற்றிக் கொள்ளலாம் என ஆர்பிஐ தெரிவித்தள்ளது.
இந்த நிலையில் 2023ஆம் ஆண்டு 19ஆம் தேதி வரை 3.56 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து வந்தன.
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி வரை 6,266 கோடி ரூபாய் இன்னும் வங்கிக்கு திரும்பாமல் வெளியில் உள்ளது என ஆர்பிஐ தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
- குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் தொடங்கியது.
- விரக்தியடைந்த அந்த முதியவர் இறுதியாக தைரியத்தை வரவழைத்து போலீசிடம் புகார் அளித்தார்.
மகாராஷ்டிராவில் முதியவர் ஒருவரிடம் நூதன முறையில் ஆன்லைனில் பணம் பறிக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சத்திரபதி சாம்பாஜி நகரை சேர்ந்த அந்த முதியவர் கடந்த மார்ச் 23 ஆம் தேதி காலை குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் தொடங்கியது.
அப்போது அவரது மொபைலுக்கு தெரியாத எண்ணிலிருந்து ஒரு வாட்ஸ்அப் வீடியோ அழைப்பு வந்தது. அவர் அழைப்பை எடுத்தவுடன், ஒரு இளம் பெண் நிர்வாண நிலையில் அவர் முன் தோன்றினார். அந்த நேரத்தில் அந்த முதியவரும் அரை நிர்வாண நிலையில் இருந்தார். அந்தப் பெண் அந்த வீடியோ அழைப்பைப் பதிவு செய்தார்.
சிறிது நேரம் கழித்து அந்த முதியவருக்கு மற்றொரு அழைப்பு வந்தது, இந்த முறை அழைத்தவரின் பெயர் ஹேமந்த் மல்ஹோத்ரா.
அவர் அந்த முதியவரிடம் அவரது ஆபாச வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிவிட்டதாகக் கூறினார். இதன் பிறகு அழைத்த பிரமோத் ரத்தோட் என்ற மற்றொரு நபர், தன்னை ஒரு போலீஸ் அதிகாரி என்று கூறிக் கொண்டு, முதியவருக்கு அடிக்கடி போன் செய்து, சமரசத்திற்கு உடன்படவில்லை என்றால், சிறையில் அடைப்பேன் என்று மிரட்டினார்.
முதியவரை தொடர்ந்து மிரட்டி, கொஞ்சம் கொஞ்சமாக இந்த கும்பல் ரூ.14 லட்சத்து 66 ஆயிரம் பணம் கரைந்துள்ளது. இந்த முழு சம்பவமும் மார்ச் 23 முதல் ஏப்ரல் 28 வரை நடந்தது.
பணத்தை கொடுத்த பிறகும் மிரட்டல் நின்றபாடில்லை. அவர்கள் மேலும் பணம் கேட்கத் தொடங்கினர். இதனால் விரக்தியடைந்த அந்த முதியவர் இறுதியாக தைரியத்தை வரவழைத்து போலீசிடம் புகார் அளித்தார்.
வழக்குப்பதிவு செய்த போலீசார், மோனி பாட்டீல், ஹேமந்த் மல்ஹோத்ரா, பிரமோத் ரத்தோட், அரவிந்த் சிங் மற்றும் அடையாள தெரியாத 2 நபர்கள் இந்த மோசடியில் ஈடுபட்டதை கண்டறிந்தனர். இதுபோல பல பேரிடம் அவர்கள் மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
- வேவ்ஸ் என்பது ஒவ்வொரு கலைஞருக்கும் படைப்பாளிக்கும் சொந்தமான ஒரு உலகளாவிய தளமாகும்.
- வேவ்ஸ் உச்சி மாநாடு உலகளாவிய கவனத்தை ஈர்க்கிறது.
முதலாவது உலக ஒலி-ஒளி மற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநாடு மும்பையில் இன்று நடந்தது. பிரதமர் மோடி வேவ்ஸ் மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
100-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள், புதுமையாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் ஒரே குடையின் கீழ் கூடியுள்ளனர். திறமை மற்றும் படைப்பாற்றல் கொண்ட உலகளாவிய சுற்றுச்சூழல் அமைப்பிற்கு நாங்கள் அடித்தளம் அமைத்து வருகிறோம்.
வேவ்ஸ் என்பது ஒவ்வொரு கலைஞருக்கும் படைப்பாளிக்கும் சொந்தமான ஒரு உலகளாவிய தளமாகும்.
வேவ்ஸ் உச்சி மாநாடு உலகளாவிய கவனத்தை ஈர்க்கிறது. இந்தியா கோடிக்கணக்கான மக்கள் தொகை கொண்ட நாடாக இருப்பதோடு பில்லியன் கணக்கான கதைகளின் பூமியாகவும் உள்ளது.
இந்தியாவை பிரபலப்படுத்துவதில் இந்திய சினிமா வெற்றிப்பெற்றுள்ளது. இந்தியாவில் உருவாக்கு, உலகத்துக்காக உருவாக்கு என்பதற்கு இதுவே சரியான நேரம்.
இவ்வாறு மோடி பேசினார்.
இந்திய சினிமாவில் 5 பிரபரலங்களின் தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டார். குருதத், பி.பானுமதி, ராஜ் கோஷ்லா, ரித்விக் கடக், சலீம் சவுத்ரி ஆகியோர்களின் தபால் தலை வெளியிடப்பட்டது.
இந்த மாநாட்டில் மத்திய மந்திரி எல்.முருகன், மகாராஷ்டிரா முதல்-மந்திரி பட்னாவிஸ், நடிகர்கள் ரஜினிகாந்த், ஷாருக்கான், அமீர்கான், மோகன்லால், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- பஹல்காம் தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
- இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமைக்கு நான் இ மெயில் செய்துள்ளேன்.
பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதியிடம் பேசினேன் - மஹாராஷ்டிராவை சேர்ந்த இளைஞர்
கடந்த 22-ந் தேதி காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் கொடூர தாக்குதலை நடத்தினர். மிருகத்தனமான இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதனையடுத்து சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் மூன்று பேரின் ஓவியங்கள் வெளியாகின.
இந்நிலையில், இந்த ஓவியங்களில் உள்ள ஒருவருடன் தான் ஜம்மு காஷ்மீரில் பேசியதாக மகாராஷ்டிராவை சேர்ந்த ஆதர்ஷ் ராவத் என்ற இளைஞர் ஒருவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக பேசிய ஆதர்ஷ் ராவத், "ஏப்ரல் 21 அன்று பஹல்காமி மேகி ஸ்டாலில் நான் நின்று கொண்டிருந்தபோது ஒருவர் என்னிடம் நீங்கள் இந்துவா என்று கேட்டார். உங்களை பார்த்தல் காஷ்மீரி போல தெரியவில்லையே என்று கேட்டார்.
இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமைக்கு நான் இ மெயில் செய்துள்ளேன். ஆனால் அவர்களிடம் இருந்து எனக்கு எந்த பதிலும் வரவில்லை. அவர்கள் என்னை அணுகினால் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க நான் தயாராக இருக்கிறேன்" என்று தெரிவித்தார்.
- ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் நிறுவனத்தின் பங்கு இன்றைய வர்த்தகத்தில் 5.27 சதவிதம் உயர்ந்தது.
- சன் பார்மா, டாடா ஸ்டீல், எஸ்பிஐ, ஆக்சிஸ் வங்கி, டாடா மோட்டார்ஸ், லார்சன் அண்டு டூர்போ பங்குகளும் உயர்வு.
பங்குச் சந்தை வர்த்தகத்தில் இன்று மும்பை பங்குச் சந்தை குறியீடு எண் சென்செக்ஸ், இந்திய பங்குச் சந்தை குறியீடு எண் நிஃப்டி ஆகியவை ஏற்றத்துடன் முடிவடைந்தது.
கடந்த இரண்டு வாரங்களில் ஏழு நாட்கள் சரிவை சந்தித்த பங்குச் சந்தை இன்று ஏற்றத்தை கண்டது.
கடந்த வெள்ளிக்கிழமை சென்செக்ஸ் 79,212.53 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை 79,343.63 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. இன்று குறைந்தபட்சமாக 79,341.35 புள்ளிகளிலும், அதிகபட்சமாக 80,321.88 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 1,005.84 புள்ளிகள் உயர்ந்து 80,218.37 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
அதேபோல் இந்திய பங்குச் சந்தை குறியீடு எண் நிஃப்டி 289.15 புள்ளிகள் உயர்ந்து 24,328.50 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் நிறுவனத்தின் பங்கு இன்றைய வர்த்தகத்தில் 5.27 சதவிதம் உயர்ந்தது. மார்ச் மாத காலாண்டில் நிகர லாபம் 2.4 சதவீதம் உயர்ந்துள்ளதாக நிறுவனத்தின் அறிவிப்பு இந்த உயர்வுக்கு காரணமாகும்.
555 கோடி ரூபாய்க்கு எஸ்.எம்.எம். இசுசு நிறுவனத்தை கையகப்படுத்தியதாக அறிவித்ததால் மஹிந்திரா அண்டு மஹிந்திரா நிறுவன பங்கு 2.29 சதவீதம் அதிகரித்தது.
சன் பார்மா, டாடா ஸ்டீல், எஸ்பிஐ, ஆக்சிஸ் வங்கி, டாடா மோட்டார்ஸ், லார்சன் அண்டு டூர்போ, ஐசிசிஐ வங்கி நிறுவன பங்குகளும் உயர்வை சந்தித்தன.
ஹெச்.சி.எல். டெக், அல்ட்ராடெக் சிமெண்ட், நெஸ்லே, இந்துஸ்தான் யுனிலிவர் நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன.
- விவசாயிகள் தற்கொலை விகிதத்திற்குப் பெயர் பெற்றதாக மகாராஷ்டிராவின் விதர்பா பகுதி உள்ளது.
- பெண்கள் உயர்கல்வி கற்பதை சமூகம் எதிர்த்தது.
அதிக விவசாயிகள் தற்கொலை விகிதத்திற்குப் பெயர் பெற்ற மகாராஷ்டிராவின் விதர்பா பகுதியில் உள்ள வறண்ட மற்றும் வறட்சியால் பாதிக்கப்பட்ட யவத்மால் மாவட்டம், இப்போது கொண்டாட்டங்களில் ஈடுபட ஒரு காரணம் கிடைத்துள்ளது.
அங்குள்ள ஒரு ஆட்டோ ஓட்டுநரின் மகள், 2024 ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 142வது இடத்தைப் பிடித்து அசாதாரண சாதனை படைத்துள்ளார்.
அந்த புத்திசாலிப் பெண்ணின் பெயர் அதீப் அனாம். இதன் மூலம், அதீப் தனது மாநிலத்திலிருந்து மதிப்புமிக்க இந்திய நிர்வாகப் பணியில் சேர்ந்த முதல் முஸ்லிம் பெண்மணி ஆனார்.
"பெண்கள் உயர்கல்வி கற்பதை சமூகம் எதிர்த்தது. அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்றும் இலக்கில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் என் தந்தை என்னிடம் கூறினார்" என்று அதீப் அனாம் நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்.






