என் மலர்tooltip icon

    மகாராஷ்டிரா

    • பாலம் கட்டும் பணியில் ஈடுபட்ட ராட்சத இயந்திரம் சரிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்தனர்.
    • உயிரிழந்த 17 பேரில் 2 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

    சென்னை:

    மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் சம்ருதி விரைவு சாலையின் 3-ம் கட்ட கட்டுமானப்பணி நடைபெற்று வந்தது. இந்த பாலம் கட்டும் பணியில் ஈடுபட்ட ராட்சத இயந்திரம் சரிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்தனர்.

    உயிரிழந்த 17 பேரில் 2 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

    கிருஷ்ணகிரியை சேர்ந்த சந்தோஷ் மற்றும் திருவள்ளூரை சேர்ந்த கண்ணன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

    • ராட்சத இயந்திரம் சரிந்ததால் விபத்து ஏற்பட்டது
    • விபத்து நடைபெற்ற இடத்தில் மீட்பு பணி நடைபெற்று வருகிறது

    மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் சம்ருதி எக்ஸ்பிரஸ் சாலையில் சாபுர் என்ற இடத்தில் 3-ம் கட்ட பணி நடைபெற்று வந்தது.

    இரண்டு தூண்களுக்கு இடையில் கான்கிரீட் தளத்தை தூக்கி வைப்பதற்காக கிர்டர் (ராட்சத இயந்திரம்) பயன்படுத்தப்படும். திடீரென அந்த ராட்சத இயந்திரம் சரிந்துள்ளது. இதில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 14 பேர் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 3 பேர் காயம் அடைந்தனர்.

    சம்பவ இடத்திற்கு போலீசார், தீயணைப்பு வீரர்கள் விரைந்துள்ளனர். அவர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மும்பை- நாக்பூரை இணைக்கும் எக்ஸ்பிரஸ் சாலையாக இந்த சாலை கட்டப்பட்டு வருகிறது. இந்த சாலை நாக்பூர், வாசிம், வர்தா, அகமதாபாத், பல்தானா, அவுரங்கபாத், அமாரவதி, ஜல்னா, நாஷிக் மற்றும் தானே மாவட்டங்களை கடந்து செல்கிறது. மகாராஷ்டிரா மாநில அரசால் இந்த சாலை கட்டப்பட்டு வரும் இந்த சாலைக்கு சம்ருதி மஹாமார்க் என பெயரிடப்பட்டுள்ளது.

    பின்னர் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வரை 17 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

    • ஆஷஸ் தொடரில் முதல் 2 போட்டிகளை ஆஸ்திரேலியா வென்றது.
    • 3-வது மற்றும் 5-வது போட்டியில் இங்கிலாந்து வென்றது.

    மும்பை:

    இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மோதிய ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதையடுத்து, ஆஷஸ் தொடர் 2-2 என சமனில் முடிந்தது.

    2001-ம் ஆண்டுக்கு பிறகு சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்ததில்லை என்ற சிறப்பை இங்கிலாந்து தக்கவைத்துக் கொண்டது.

    முதல் இரு டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. 4-வது டெஸ்ட் மழையால் டிராவில் முடிந்தது.

    இந்நிலையில், ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணியின் செயல்பாட்டை இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.

    இதுதொடர்பாக, சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இந்த ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி 2-0 என பின்னிலை வகித்தது. அதிலிருந்து மீண்டு 2-2 என சமநிலையில் இருப்பது டெஸ்ட் கிரிக்கெட்டின் அழகுக்கு ஒரு மரியாதை.

    இங்கிலாந்து அணியின் மீண்டு எழும் திறன் அவர்களின் மன உறுதியைக் காட்டுகிறது.

    இயற்கை அன்னை எங்களுக்கு ஒரு தொடர் முடிவை மறுத்திருக்கலாம். ஆனால் அது இந்த நம்பமுடியாத விளையாட்டின் உணர்வைக் குறைக்கவில்லை.

    இந்தத் தொடர் நீண்ட நாட்களாக நினைவில் நிற்கும் தொடராக அமைந்துவிட்டது என பதிவிட்டுள்ளார்.

    • அயர்லாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
    • இந்திய அணியின் கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    மும்பை:

    இந்திய அணி அயர்லாந்துக்கு சென்று 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ஆகஸ்ட் 18-ம் தேதி டி20 தொடர் தொடங்குகிறது.

    இந்நிலையில், அயர்லாந்து தொடருக்கான இந்திய அணியில் நட்சத்திர வீரர் பும்ரா சேர்க்கப்பட்டிருக்கிறார். சீனியர் வீரர்கள் பலருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய கேப்டனாக பும்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். சி.எஸ்.கே. வீரர் ருத்ராஜ் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல் சி.எஸ்.கே. அணியின் ஷிவம் துபேவிற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

    ஜெய்ஸ்வால், திலக் வர்மா, விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன், ஜித்தேஷ் சர்மா, சுழற்பந்து வீச்சாளராக வாஷிங்டன் சுந்தர், ஷபாஸ் அகமத், ரவி பிஷ்னோய் ஆகியோரும் அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

    அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம்பிடித்துள்ள இந்திய வீரர்களின் விவரம் வருமாறு:

    ஜஸ்பிரித் பும்ரா (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட் (துணை கேப்டன்) யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், சஞ்சு சாம்சன் (வி.கீப்பர்), ஜிதேஷ் சர்மா, ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ஷபாஸ் அகமது, ரவி பிஷ்னோய், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், ஆவேஷ்கான்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இந்த துயர சம்பவம் நடைபெற்றுள்ளது
    • துப்பாக்கிச்சூட்டில் துணை சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரும் உயிரிழப்பு

    ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் இருந்து மகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பைக்கு தினமும் ஜெய்ப்பூர் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. வழக்கம்போல் நேற்று மதியம் 2 மணிக்கு அந்த எக்ஸ்பிரஸ் ரெயில் ஜெய்ப்பூரில் இருந்து மும்பை நோக்கி புறப்பட்டது. ரட்லம், வதோதரா, சூரத் வழியாக அந்த ரெயில் மும்பைக்கு வந்து கொண்டு இருந்தது. 17 மணி நேர பயணத்தை நிறைவு செய்ய நெருங்கி கொண்டு இருந்த நிலையில் அதிகாலை 5.20 மணிக்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    அப்போது அந்த ரெயில் வாபி-சூரத் ரெயில் நிலையங்களுக்கு இடையே வந்து கொண்டிருந்தது. பல்கர் எனும் ரெயில் நிலையத்தை கடந்தபோது பி-5 ரெயில் பெட்டியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரெயில்வே பாதுகாப்புப்படை போலீஸ்காரர் சேத்தன் சிங்கிற்கும், அவரது உயர் அதிகாரியான சப்-இன்ஸ்பெக்டர் திக்ராம் மீனாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது. ஏற்கனவே அவர்கள் இருவருக்கும் இடையே முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

    இன்று அதிகாலை ஏற்பட்ட மோதலில் சேத்தன் சிங் கண் இமைக்கும் நேரத்துக்குள் தனது துப்பாக்கியை எடுத்து சுட தொடங்கினார். தானியங்கி துப்பாக்கி வகையை சேர்ந்த அந்த துப்பாக்கியில் இருந்து சரமாரியாக குண்டுகள் பாய்ந்தன.

    இதில் ரெயில்வே பாதுகாப்பு சப்-இன்ஸ்பெக்டர் திக்ராம் மீனா மீது குண்டுகள் பாய்ந்தன. அவர் பயங்கர அலறல் சத்தத்துடன் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். சம்பவ இடத்திலேயே அவர் உயிர் பிரிந்தது.

    துப்பாக்கிச்சூடு சத்தம் மற்றும் அலறல் சத்தம் கேட்டு பி.5 பெட்டியில் தூங்கிக் கொண்டிருந்த பயணிகள் அலறியடித்து எழுந்தனர். அதற்குள் போலீஸ்காரர் சேத்தன் சிங் அந்த பெட்டியில் இருந்து வெளியேறி தப்பி ஓடினார். அருகில் இருந்த பெட்டிக்குள் சென்ற அவரை பயணிகள் மடக்கினார்கள்.

    இதையடுத்து துப்பாக்கியை காட்டி போலீஸ்காரர் சேத்தன் சிங் மிரட்டினார். ஒரு பயணியை அவர் பிணை கைதி போல் பிடித்துக்கொண்டு, "அருகில் வந்தால் இவரை சுட்டுக்கொன்று விடுவேன்" என்றும் மிரட்டினார். இதனால் பயணிகள் ஒரு நிமிடம் செய்வது அறியாமல் திகைத்தனர்.

    இதற்கிடையே அவரை பயணிகள் பிடிக்க முயற்சி செய்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர் மீண்டும் தனது தானியங்கி ரக துப்பாக்கியால் சரமாரியாக சுட தொடங்கினார். இதனால் பயணிகள் அலறியடித்துக் கொண்டு ஓடினார்கள்.

    என்றாலும் 3 பயணிகள் மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. அவர்களும் ரத்த வெள்ளத்தில் துடிக்க துடிக்க சரிந்தனர். ஓடும் ரெயில் பெட்டிக்குள்ளேயே அந்த 3 பயணிகளும் இறந்தனர். இதனால் அந்த ரெயில் பெட்டி முழுவதும் பரபரப்பும், பதட்டமும் நிலவியது.

    கண் இமைக்கும் நேரத்துக்குள் 4 பேரை அடுத்தடுத்து அந்த ரெயில்வே பாதுகாப்பு வீரர் சுட்டுக் கொன்றதால் மற்ற பயணிகள் உதவி கேட்டு அலறினார்கள். இதனால் அருகில் உள்ள பெட்டிகளில் இருந்த பயணிகளும் ஓடிவந்தனர். சிறிது நேரத்தில் ஓடும் ரெயில் முழுவதும் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது.

    இதையடுத்து போலீஸ்காரர் சேத்தன் சிங் தப்பி செல்லும் முயற்சிகளில் ஈடுபட்டார். பல்கர் ரெயில் நிலையத்தை கடந்து தகிசர் ரெயில் நிலையம் அருகில் அந்த ரெயில் மெல்ல சென்று கொண்டிருந்தபோது சேத்தன் சிங் ரெயில் பெட்டிக்குள் இருந்த சங்கிலியை பிடித்து இழுத்தார்.

    ரெயில் நின்றதும் அவர் துப்பாக்கியுடன் ரெயிலில் இருந்து இறங்கி மீரா சாலையில் ஓட்டம் பிடித்தார். ஆனால் அதற்குள் மற்ற ரெயில்வே பாதுகாப்புப்படை போலீசார் அவரை சுற்றி வளைத்தனர். சாமர்த்தியமாக அவரை பிடித்து கைது செய்தனர். அவர் வைத்து இருந்த துப்பாக்கி உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டது.

    துப்பாக்கி சூடு நடத்தியது பற்றி போலீஸ்காரர் சேத்தன் சிங்கிடம் எந்த பதட்டமும் இல்லாமல் காணப்பட்டார். அவரை போலீசார் போரிவலி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். முதல்கட்ட விசாரணையில் போலீஸ்காரர் சேத்தன் சிங் கடந்த சில தினங்களாக மனநல பாதிப்புடன் இருந்தது தெரிய வந்துள்ளது.

    மும்பையில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் பல்கர் ரெயில் நிலையம் அருகே ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்த போதுதான் துப்பாக்கி சூடு நடந்தது. இதனால் பயணிகள் சுமார் ஒரு மணி நேரம் பீதியுடன் அதே ரெயிலில் மும்பை வந்து சேர்ந்தனர்.

    ரெயிலுக்குள் சுட்டுக்கொல்லப்பட்ட 4 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக கண்டிவலி மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது. ரெயில்வே பாதுகாப்பு வீரரே பயணிகளை சுட்டுக்கொன்று இருப்பது பயணிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மும்பை ரெயில்வே போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • எதிர்க்கட்சிகளின் 2வது ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது.
    • 26 கட்சிகள் பங்கேற்ற எதிர்க்கட்சிகளின் அணிக்கு 'இந்தியா' என பெயரிடப்பட்டது.

    மும்பை:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக பலமான கூட்டணி அமைக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன. முதல் ஆலோசனை கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவிலும், 2-வது கூட்டம் பெங்களூருவிலும் நடந்தன.

    26 கட்சிகள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் அணிக்கு 'இந்தியா' என பெயரிடப்பட்டது. மேலும், தொடர்ந்து கூட்டங்கள் நடத்தி தேர்தல் வியூகங்கள் உள்ளிட்டவற்றை வகுப்பது குறித்து முடிவு செய்யப்பட்டது.

    இதற்கிடையே, இந்தியா கூட்டணியின் அடுத்த கூட்டம் ஆகஸ்டு மாதம் 25 மற்றும் 26-ம் தேதிகளில் மும்பையில் நடைபெறும் என தகவல் வெளியானது.

    இந்நிலையில், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை மந்திரி ராம்தாஸ் அத்வாலே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், பீகார் முதல் மந்திரியான நிதிஷ்குமார் எப்போது வேண்டுமானாலும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு திரும்பி வருவார்.

    தற்போதைய சூழ்நிலையில் நிதிஷ்குமார் மகிழ்ச்சியாக காணப்படவில்லை. எதிர்க்கட்சி கூட்டணிகள் அடுத்த கூட்டம் நடைபெறும் மும்பைக்கு அவர் நிச்சயம் செல்ல மாட்டார் என தெரிவித்தார்.

    • புகை வருவதை கவனித்த டிரைவர், உடனடியாக பேருந்தை நிறுத்தினார்.
    • மின்கசிவு காரணமாக தீப்பற்றியிருக்கலாம் என கருதப்படுகிறது.

    தானே:

    மகாராஷ்டிர மாநிலம் தானே நகரில் இன்று காலையில் சுமார் 50 பயணிகளுடன் அரசு பேருந்து சென்றுகொண்டிருந்தது. நார்போலியில் இருந்து சேந்தனி கோலிவாடா பகுதிக்கு சென்ற அந்த பேருந்து காலை 8.30 மணியளவில் மத்திய மைதானத்தின் அருகே சென்றபோது திடீரென தீப்பிடித்தது.

    என்ஜின் பகுதியில் இருந்து புகை வருவதை கவனித்த டிரைவர், உடனடியாக பேருந்தை நிறுத்தினார். பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுப்படுத்தினர். இந்த விபத்தில் பேருந்தின் ஒரு பகுதி சேதமடைந்தது. மின்கசிவு காரணமாக தீப்பற்றியிருக்கலாம் என கருதப்படுகிறது.  பேருந்து உடனடியாக நிறுத்தப்பட்டு பயணிகள் வெளியேற்றப்பட்டதால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

    • காயம் அடைந்தவர்கள் புல்தானா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • விபத்து காரணமாக அந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மகாராஷ்டிரா மாநிலம் ஹிங்கோலை பகுதியை சேர்ந்த பக்தர்கள் சிலர் ஒரு ஆம்னி பஸ்சில் அமர்நாத் யாத்திரைக்கு சென்றனர். பின்னர் அவர்கள் ஹிங்கோலிக்கு திரும்பினர். பஸ் மல்காபூர் பகுதியில் உள்ள நந்தூர் நாகா மேம்பாலத்தில் வந்தபோது அந்தவழியாக நாசிக் நோக்கி தனியார் ஆம்னி பஸ் சென்றது. இந்த பஸ் முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றது.

    அப்போது எதிர்பாராதவிதமாக 2 ஆம்னி பஸ்களும் நேருக்குநேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 20 பேர் பலத்த காயம் அடைந்தனர். சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து பலியானவர்கள் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். காயம் அடைந்தவர்கள் புல்தானா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லேசான காயம் அடைந்த 32 பயணிகளுக்கு அருகிலுள்ள குருத்வாராவில் முதலுதவி அளிக்கப்பட்டது. விபத்து காரணமாக அந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • பேட்டிங் செய்யும் விதத்தை பார்க்கும்போது 4 அல்லது 5-வது வரிசைக்கு ஒரு நல்ல தேர்வாக இருக்க முடியும்.
    • அதேவேளையில் அதிக பந்துகளை எதிர்கொள்ள வேண்டியிருப்பதால் ஒரு நாள் போட்டி வடிவம் வேறுபட்டது.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணி வீரர் சூர்யகுமார் யாதவ், 20 ஓவர் போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஆனால் ஒரு நாள் போட்டிகளில் ரன் குவிக்க திணறி வருகிறார்.

    தற்போது அவர் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறார்.

    இந்நிலையில் ஒருநாள் போட்டியில் 4-வது வரிசைக்கு சூர்யகுமார் யாதவ் பொருத்தமானவர் என்று இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆர்.பி.சிங் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    வருகிற 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் அய்யருடன் 4-வது இடத்துக்கு ஒரு நல்ல தேர்வாக இருப்பார். சூர்யகுமார் யாதவ் பொருத்தமாக இருந்தால் அவருக்கு போட்டிகளில் விளையாட வாய்ப்பு கொடுக்க வேண்டும். மேலும் நிச்சயமாக ஒரு நல்ல தேர்வாக இருப்பார்.

    அவர் பேட்டிங் செய்யும் விதத்தை பார்க்கும்போது 4 அல்லது 5-வது வரிசைக்கு ஒரு நல்ல தேர்வாக இருக்க முடியும். 20 ஓவர் கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவின் தற்போதைய ஆட்டம் மிகவும் சிறப்பாக உள்ளது.

    அதேவேளையில் அதிக பந்துகளை எதிர்கொள்ள வேண்டியிருப்பதால் ஒரு நாள் போட்டி வடிவம் வேறுபட்டது. இதனால் சூர்யகுமார் யாதவ் தனது ஆட்ட திட்டத்தை கொஞ்சம் மாற்ற வேண்டும்.

    அவருக்கு ஒருநாள் போட்டிகளில் அனுபவம் இல்லாவிட்டாலும் அவரது திறமையை வெளிப்படுத்த போதுமான வாய்ப்புகளை வழங்குவது முக்கியம். வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக்கை நீண்ட கால விருப்ப வீரராக நீங்கள் நினைத்தால் அதற்கேற்ப அவர் மெருகூட்டப்பட வேண்டும். ஒருவரை ஒரு போட்டியில் விளையாட வைத்துவிட்டு இரண்டு போட்டிகளுக்கு வெளியே உட்கார வைக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • லாரியை முந்தி செல்ல முயன்றபோது விபத்து
    • காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்

    மகாராஷ்டிரா மாநிலத்தில் இரண்டு பேருந்துகள் மோதிய விபத்தில் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து புல்தானா மாவட்டத்தில் இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் நடைபெற்றுள்ளது.

    புல்தான் மாவட்டத்தின் மல்காபுர் நகரில் உள்ள மேம்பாலத்தில் அமர்நாத் யாத்திரை முடித்த பக்தர்கள் ஒரு பேருந்தில், ஹிங்கோலி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது நாஷிக் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து, லாரியை முந்தி செல்ல முயன்றபோது, ஹிங்கோலி நோக்கி சென்ற பேருந்து மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 20 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    • எனக்கு எனது தந்தை மற்றும் மக்களின் ஆசிர்வாதம் உள்ளது.
    • எனது நாடு, எனது குடும்பம் என்று கூறுவது தான் உண்மையான இந்துத்வா ஆகும்.

    மும்பை :

    முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவை அவரது கட்சியின் பத்திரிகையான 'சாம்னா' ஆசிரியர் சஞ்சய் ராவத் எம்.பி. பேட்டி கண்டார். அவரது பேட்டி 2-வது நாளாக சாம்னாவில் வெளியானது. அதில் உத்தவ் தாக்கரே கூறி இருப்பதாவது:-

    அயோத்தியில் கடந்த 1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிப்பு சம்பவத்திற்கு பெறுப்பேற்க பா.ஜனதா தயாராக இல்லை. இந்த நிலையில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பெருமையை மட்டும் பா.ஜனதா எப்படி சொந்தம் கொண்டாட முடியும். சுப்ரீம் கோர்ட்டு தான் உண்மையில் ராமர் கோவில் பிரச்சினைக்கு தீர்வை கொண்டு வந்தது.

    நீங்கள் (பா.ஜனதா) என்னை ஒழித்துக்கட்ட விரும்பினால் அதை செய்யுங்கள். அப்போது என்ன நடக்கிறது என்று பார்ப்போம். எனக்கு எனது தந்தை மற்றும் மக்களின் ஆசிர்வாதம் உள்ளது.

    எனது நாடு, எனது குடும்பம் என்று கூறுவது தான் உண்மையான இந்துத்வா ஆகும். வயதை காரணம் காட்டி சரத்பவாரை ஓய்வு பெற வலியுறுத்தும் அஜித்பவாரின் கூற்று ஏற்றுக்கொள்ள முடியாதது. இதுபோன்ற பேச்சுகள் நமது மகாராஷ்டிரா பாரம்பரியத்திற்கு எதிரானது.

    எனது தந்தையும் சிவசேனா நிறுவனருமான மறைந்த பால் தாக்கரே தான் பிரதமர் நரேந்திர மோடியையும், மத்திய மந்திரி அமித்ஷாவையும் காப்பாற்றினார். ஒருவரின் உதவி இப்படி தான் திரும்ப கிடைக்கும் என்பதை என்னால் அறிந்துகொள்ள முடிந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    2002-ம் ஆண்டு குஜராத் கலவரத்திற்கு பிறகு அப்போதைய துணை பிரதமர் எல்.கே. அத்வானியிடம் பேசி குஜராத் முதல்-மந்திரியாக இருந்த மோடியை பதவியில் இருந்து நீக்காமல் காப்பாற்றியது பால் தாக்கரே தான் என உத்தவ் பாலாசாகேப் சிவசேனா கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

    • சமீப காலமாக பலர் நூதன முறையில் திருமண விழாக்களை வடிவமைக்க விரும்புகிறார்கள்.
    • சிலர் கடலில் கூட திருமணம் செய்து கொள்கிறார்கள்.

    மும்பை :

    கோவில்களில் நடந்த திருமணங்கள் மண்டபங்களுக்கு மாறிய நிலையில், சமீப காலமாக பலர் நூதன முறையில் திருமண விழாக்களை வடிவமைக்க விரும்புகிறார்கள். சிலர் கடலில் கூட திருமணம் செய்து கொள்கிறார்கள். இந்தநிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் சுடுகாட்டில் வினோத திருமணம் அரங்கேறி உள்ளது.

    அகமதுநகர் மாவட்டம் ரகாதா பகுதியை சேர்ந்தவர் கங்காதர் கெய்க்வாட். இவர் 20 ஆண்டுகளாக ரகாதாவில் உள்ள சுடுகாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மகள் மயூரி திருமணம் தான் அவர் வேலை செய்து வரும் சுடுகாட்டிலேயே நடந்து உள்ளது. திருமணத்தில் குடும்பத்தினர், ஊர் மக்கள், சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு மணமக்களை மனதார வாழ்த்தினர்.

    மகளின் திருமணத்தை சுடுகாட்டில் நடத்தியது குறித்து கங்காதர் கெய்க்வாட் கூறுகையில், "நான் 20 ஆண்டுகளாக இங்கு தான் உள்ளேன். எனது மகள் இங்கு தான் வளர்ந்தாள். இங்கு இருந்து தான் படித்தாள். எங்களுக்கு எல்லாவற்றையும் கொடுத்தது இந்த சுடுகாடு தான். எனவே தான் இங்கேயே திருமணத்தை நடத்தினோம்" என்றார்.

    இதற்கிடையே அகமதுநகரில் சுடுகாட்டில் நடந்த திருமணம் மூடப்பழக்கத்துக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்து இருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர்.

    மனிதர்கள் தங்கள் பயணத்தை முடித்து கொள்ளும் சுடுகாட்டில் இருந்து இந்த தம்பதி இல்லற வாழ்க்கையை தொடங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×