என் மலர்tooltip icon

    ஜார்கண்ட்

    • 609 பேர் ஆண்கள். 73 பேர் பெண்கள், 3 பேர் மாற்று பாலினத்தினர் என 683 வேட்பாளர்கள் போட்டி.
    • 1.37 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க 15,344 வாக்கு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 சட்டமன்ற தொகுதிகளில் முதற்கட்டமாக 43 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    காலை 9 மணி வரை 43 சட்டமன்ற தொகுதிகளில் 13 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சிம்தேகா தொகுதியில் அதிகபட்சமாக 15.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. ராஞ்சியில் 12.06 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. சேரைகேலா-கர்சவான் தொகுதியில் 14.62 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

    ராஞ்சியில் உள்ள ஏடிஐ வாக்கு மையத்தில் ஆளுநர் சந்தோஷ் குமார் கங்வார் வாக்களித்தார்.

    43 தொகுதிகளில் மொத்தம் 683 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன் மற்றும் முன்னாள் எம்.பி. கீதா கோரா ஆகியோர் களத்தில் உள்ளனர். 683 வேட்பாளர்களில் 609 பேர் ஆண்கள். 73 பேர் பெண்கள், 3 பேர் மாற்று பாலினத்தினர்.

    43 தொகுகளில் 17 பொதுத்தொகுதியாகும். 20 பழங்குடியினர் தொகுதியாகும். 6 எஸ்.சி. தொகுதியாகும்.

    1.37 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க 15,344 வாக்கு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    43 தொகுதிகளில் 1.37 கோடி வாக்காகளர்கள் வாக்களிக்க உள்ளனர். 

    • ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
    • முதன்முறையாக வாக்களிக்கப் போகும் எனது இளம் நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 43 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது.

    முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன் மற்றும் முன்னாள் எம்பி கீதா கோரா உட்பட மொத்தம் 683 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

    இந்த தொகுதிகளில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறும்.

    இந்நிலையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பதிவில்,

    ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த ஜனநாயக திருவிழாவில் முழு ஆர்வத்துடன் வாக்களிக்குமாறு அனைத்து வாக்காளர்களையும் கேட்டுக்கொள்கிறேன்.

    முதன்முறையாக வாக்களிக்கப் போகும் எனது இளம் நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் நவம்பர் 20-ந்தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளதுடன், நவம்பர் 23-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

    • ஜார்க்கண்ட் மாநிலத்தில் 43 தொகுதிகளுக்கு முதற்கட்டமாக தேர்தல்.
    • வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார்.

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்டமாக இன்று 43 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது.

    அதேபோல் வயநாடு  மக்களவை தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வாக்குப்பதிவுகள் தொடங்கின.

    அதேபோல் பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான வாக்குப்பதிவும் தொடங்கியது.

    விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். முதன்முறையாக அவர் அரசியலில் நேரடியாக களம் இறங்கியுள்ளார்.

    வருகிற 23 ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    • ஹேமந்த் சோரனின் ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி மீண்டும் ஆட்சியை பிடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது.
    • காந்தே தொகுதியில் கல்பனா சோரன் போட்டியிடுகிறார்

    ஜார்கண்ட் தேர்தல்  

    81 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட ஜார்கண்ட் மாநிலத்தில் நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது. நாளை முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் நேற்றுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற ஹேமந்த் சோரனின் ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி மீண்டும் ஆட்சியை பிடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது.

     

    கூட்டணி 

    கடந்த 2019 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் மற்றும் லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தள கூட்டணி மீண்டும் இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியாக களமிறங்குகிறது. அனைத்து ஜார்கண்ட் மாணவர் சங்கம், ஐக்கிய ஜனதா தளம், அனைத்து ஜார்கண்ட் மாணவர் சங்கம் ஆகியவற்றுடன் பாஜக களமிறங்குகிறது. சம்பாய் சோரன் சரைகேலா தொகுதியில் பாஜக வேட்பாராளராக நிற்கிறார்.

     அமலாக்கத்துறை பதிந்த நில முறைகேடு தொடர்பான இரண்டு வருட பழைய வழக்கில் கடந்த ஜனவரியில் மக்களவை தேர்தல் சமயத்தில் ஹேமந்த் சோரன் திடீரென கைது செய்யப்பட்டார். அதன்பின் ஜூன் மாதம் ஜாமினில் வெளிவந்தார். ஹேம்நாத் சோரன் சிறையில் இருந்த சமயத்தில் முதல்வராக இருந்த சம்பாய் சோரன் சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் பாஜகவுக்கு தாவினார்.

    கல்பனா சோரன்

    இதனால் ஹேமந்த் சோரன் கட்சி பின்னடைவு என்று கூறப்படுகிறது. சம்பாய் சோரன் அரசு நிர்வாகத்தை கவனித்து வந்தாலும் ஹேம்நாத் சோரன் ஜனவரியில் கைது செய்யப்பட்டதில் இருந்து கட்சி தலைமையில் ஹேமந்த் சோரன் மனைவி கல்பானா சோரன் தீவிரமாக செயல்பட்டு வந்தார். இந்த மக்களவை தேர்தலில் முக்தி மோர்ச்சா கட்சியின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ள கல்பனா முர்மு சோரன் [39 வயது] உருவெடுத்துள்ளார்.

    இந்த தேர்தலில் பாஜகவின் முக்கிய பிரசாரமாக வங்கதேச ஊடுருவல், இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, லவ் ஜிகாத், லேண்ட் ஜிகாத் ஆகியவை பயனப்டுத்தப்பட்டுள்ளது. பாஜக கட்டமைக்கும் இந்த வியூகத்துக்கு எதிராக ஆளும் ஹேம்ந்த் சோரன் கட்சி பழங்குடியின அடையாளம், மாநிலம் உரிமைகள், ஆகியவற்றை முன்னிறுத்தி தனது பிரசாரத்தை மேற்கொண்டது. முக்கியமாக பழங்குடியின பெண்களிடையே ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் தனது பிரசாரங்களின்மூலம் அதிக செல்வாக்கை பெற்றவராக திகழ்கிறார். 

     

     

    கட்சியின் முகம்

    எனவே இந்த தேர்தலில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் முகமாககாந்தே தொகுதியில் போட்டியிடும் கல்பனா சோரன் மாறியுள்ளார் ஜார்கண்டில் கட்சி செயல்படுத்திய சமூக நலத் திட்டங்களை பிரதானதப்படுத்தி கல்பனா சோரன் மேடைகள் தோறும் பேசினார். சமூக நலத் திட்டங்களை செயல்படுத்தியதாலேயே தனது கணவர் சிறையில் அடைக்கப்பட்டார் என்ற குற்றச்சாட்டையும் முன்னிறுத்தினார்.

     

    அரசியல் உரைகளாக அல்லாமல் பழங்குடியின பெண்களை சென்று சேரும் வகையில் எளிமையாக கல்பனா சோரன் பேசியது பெரும் வரவேற்பை பெற்றது. கணவர் ஹேமந்த் சோரனை போலல்லாது தனது பேச்சு குறித்த திட்டமிடல் கல்பனாவிடம் உள்ளதாக ஆங்கில ஊடங்கங்கள் கூறுகின்றன.

    இதனால் தங்கள் தொகுதியிலும் அவர் பேச வேண்டும் என்ற கோரிக்கைகளும் வந்தன என இந்தியா டுடே கள நிலவரம் கூறுகிறது. நேற்றைய தினம் இறுதிக்கட்ட கட்ட பிரசாரத்தில் கல்பனா சோரனின் ஹெலிகாப்ட்டர் தரையிறங்க  அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அவர் போன் மூலமே பிரசார மைக்கில் உரையாற்றிய சம்பவமும் நிகழ்ந்துள்ளது. 

     81 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 41 இடங்கள் வேண்டிய நிலையில் ஹேமந்த் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணி 41- 44 இடங்களிலும், பாஜக 36-39 இடங்களிலும், இதர கட்சிகள் 3-4 இடங்களிலும் வெல்ல வாய்ப்புள்ளதாக லோகபால் கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது .

    • மத்திய அமைச்சர் அமித் ஷாவும் தனது பிரசாரங்களில் அதையே மீண்டும் மீண்டும் பேசி வந்தார்.
    • யோகி ஆதித்யநாத் உருவாக்கிய இந்த கோஷம் பிரதமர் மோடியாலும் மேடைகளில் உச்சரிக்கப்பட்டது

     ஜார்கண்ட் தேர்தல்  

    81 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட ஜார்கண்ட் மாநிலத்தில் நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது. நாளை முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் நேற்றுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற ஹேமந்த் சோரனின் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி மீண்டும் ஆட்சியை பிடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது.

    ஹேமந்த் சோரன்  - சம்பாய் சோரன் 

    சட்ட விரோதமாகச் சுரங்கம் குத்தகை எடுத்ததாகவும், அதன் மூலம் பண பலன்களை அடைந்ததாகவும் அமலாக்கத்துறை பதிந்த நில முறைகேடு தொடர்பான இரண்டு வருட பழைய வழக்கில் கடந்த மக்களவை தேர்தல் சமயத்தில் ஹேமந்த் சோரன் திடீரென கைது செய்யப்பட்டார்.

    அந்த சமயத்தில் ஜார்கண்ட் முதல்வராக கட்சியின் மூத்த தலைவர் சம்பாய் சோரன் பணியாற்றினார். 5 மாதங்கள் கடந்த ஜூன் வாக்கில் ஹேம்நாத் சோரன் ஜூலையில் மீண்டும் முதல்வரானார். இதைத்தொடர்ந்து சட்டமன்றத் தேர்தல் சம்பாய் சோரன் கடைசி நேரத்தில் பாஜக பக்கம் தாவியது பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

    கூட்டணி 

    கடந்த 2019 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் மற்றும் லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தள கூட்டணி மீண்டும் இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியாக களமிறங்குகிறது. அனைத்து ஜார்கண்ட் மாணவர் சங்கம், ஐக்கிய ஜனதா தளம், அனைத்து ஜார்கண்ட் மாணவர் சங்கம் ஆகியவற்றுடன் பாஜக களமிறங்குகிறது. சம்பாய் சோரன் சரைகேலா தொகுதியில் பாஜக வேட்பாளராக நிற்கிறார்.

    பாஜக தேர்தல் வியூகம் 

    இந்த தேர்தலில் பாஜகவின் முக்கிய பிரசாரமாக வங்கதேச ஊடுருவல், இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, லவ் ஜிகாத், லேண்ட் ஜிகாத் ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளது. அசாம் பாஜக முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா ஜார்கண்ட் தேர்தல் பொறுப்பு தலைவராக இந்த கருத்துக்களை தீவிரமாக மக்களிடையே பரப்ப முயற்சி மேற்கொண்டார்.

     

     

    சட்டவிரோதமாக உள்ளே நுழைந்த வங்கதேச முஸ்லிம்களும், ஜார்கண்டில் உள்ள முஸ்லிம்களும் பழங்குடியின பெண்களைத் திருமணம் செய்வது லவ் ஜிகாத் என்றும் திருமணத்தின் மூலம் அவ்வாறு பெறப்படும் நிலம் லேண்ட் ஜிகாத் என்று பாஜக பிரசாரம் செய்தது. மத்திய அமைச்சர் அமித் ஷாவும் தனது பிரசாரங்களில் அதையே மீண்டும் மீண்டும் பேசி வந்தார். பாஜக ஆதரவு அல்லாத இந்துக்களைக் குறிவைத்து பதேங்கே தோ கதேங்கே [ஒன்றுபட்டால் பாதுகாப்பு தனியாக இருந்தால் வெட்டப்படுவீர்கள்] என்ற கோஷமும் பிரத்தமானதாக பாஜக மேடைகளில் ஒலித்தது. 

     

    உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உருவாக்கியவர் ஆவார். கோஷம் பிரதமர் மோடியாலும் மேடைகளில் உச்சரிக்கப்பட்டது. மகாராஷ்டிர தேர்தலிலும் இந்த கோஷமே பாஜகவால் முன்னிறுத்தப்படுகிறது. ஆனால் இது இந்து மதத்தினர் தாங்கள் ஆபத்தில் இருப்பதுபோன்ற போலியான பிம்பத்தை உருவாகும் உளவியல் தாக்குதல் என கார்கே உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் முன்வைக்கின்றனர். ஜார்கண்ட் இஸ்லாமியர்களுக்கு மட்டும்தான் சொந்தமா என்ற கேள்வியையும் யோகி பிரசாரத்தில் எழுப்புயிருந்தார்.

     

    ஜார்கண்டில் முந்தைய தேர்தல்களில் பழங்குடியினரிடையே கிறிஸ்துவ ஆதிக்கத்தை முன்னிறுத்தி பாஜக தனது பிரசார வியூகங்களை வகுத்துச் செயல்பட்ட நிலையில் இந்த தேர்தலில் இஸ்லாமிய ஆதிக்கம் என்பதை நோக்கி பாஜக மக்களைத் திருப்பும் வியூகத்துடன் செயல்பட்டது. ஆனால் பாஜக கூறும் இஸ்லாமிய மக்களின் எண்ணிக்கை அதிகரித்தல் என்பதை நிரூபிக்கும் வகையிலான புள்ளிவிவரங்கள் எதுவும் இல்லை என எதிர்க்கட்சிகள் மறுக்கின்றன.

    • லவ் ஜிஹாத், லேண்ட் ஜிகாத் மூலம் நம் மீது தாக்குதல் நடக்கிறது, முஸ்லிம்களுக்கு மட்டுமே ஜார்கண்ட் கிடையாது என்று யோகி ஆதித்யநாத் பேசினார்.
    • எம்எல்ஏக்களை ஆட்டுமந்தையாக வைத்திருந்து, ஆகாரம் கொடுத்து, கடைசியில் அவர்க்ளுக்கு மோடி விருந்தாக்குவார்.

    81 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட ஜார்கண்ட் மாநிலத்தில் நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது. நாளை முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் நேற்றுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. எனவே அரசியல் தலைவர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    ஜார்கண்ட் மாநிலம் தால்தோன்கஞ்ச் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்த உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், ஜார்கண்ட் முஸ்லிம்களுக்கு மட்டுமே சொந்தம் கிடையாது, லவ் ஜிஹாத், லேண்ட் ஜிகாத் மூலம் நம் மீது தாக்குதல் நடக்கிறது, நாம் ஒன்றுபட்டால்தான் பாதுகாப்பு, பிரிந்திருந்தால் வெட்டப்படுவோம் [batenge to katenge] என்று பேசினார்.

    இதற்கிடையே காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஜார்கண்டில் தனது பிரசாரத்தின்போது பேசுகையில், உண்மையான யோகி பதேங்கே தோ கதேங்கே என்றல்லாம் பேச மாட்டார்கள். அவர் ஆட்டுத் தோல் போர்த்திய ஓநாய் என்று யோகி ஆதித்யநாத்தை விமர்சித்தார்.

     

    தொடர்ந்து பேசிய கார்கே, மோடி ஜி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளைக் கவிழ்த்து வருகிறார். எம்.எல்.ஏக்களை ஆடுகளைப் போல் காசு கொடுத்து வாங்கி வரும், அவர்களை ஆட்டுமந்தையாகவே நடத்தி, அவர்க்ளுக்கு ஆகாரம் அளித்து கடைசியில் அவர்களை மோடி  விருந்தாக்குவார் என்று விமர்சித்தார்.

    மேலும் அம்பானி, அதானி ஆகிய இருவருக்காகவே மட்டுமே மோடி - அமித் ஷா ஆட்சி நடத்துகின்றனர். இவர்கள் நால்வர் மட்டுமே நாட்டை ஆட்டிப்படைகின்றனர். வாயால் மட்டும் தேசபக்தியை பேசும் பாஜக நாட்டை பிளவுபடுத்தும் வேலையை செய்து வருகிறது என்று குற்றம்சாட்டினார் 

    • ஜார்கண்ட் மாநிலத்தில் நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது.
    • இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஹேமந்த் சோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா [ஜெ.எம்.எம்] கட்சி ஆட்சியில் உள்ளது.

    கடந்த மக்களவை தேர்தலில் பாஜகவின் என்டிஏ கூட்டணியை எதிர்க்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சேர்ந்து இந்தியா கூட்டணியை உருவாகின. இதில் தமிழகத்தில் திமுக, உ.பி.யில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி, டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி, மகாராஷ்டிராவில் சரத் பவார் என்சிபி, உத்தவ் தாக்கரே சிவசேனா, பீகாரில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் இதில் அங்கம் வகிக்கின்றன.

    இந்த கூட்டணி மக்களவை தேர்தலில் ஆட்சியை பிடிக்கவில்லை என்றாலும் என்சிஏ கூட்டணியை திணறடிக்கும் அளவுக்கு கணிசமான வெற்றியை பதிவு செய்தது. இதனால் தனிப்பெரும்பான்மை இழந்த பாஜக ஆட்சி அமைக்க கூட்டணி கட்சிகளை சார்ந்திருக்கவேண்டிய நிலையும் ஏற்பட்டது. மக்களவை தேர்தலுக்கு பின்னும் தொடரும் இந்தியா கூட்டணி சார்பில் உமர் அப்துல்லாவின் தேசியவாத காங்கிரஸ் காஷ்மீரில் ஆட்சியைப் பிடித்தது.

    இந்நிலையில் தற்போது மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. 288 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிராவில் வரும் நவம்பர் 20 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 81 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட ஜார்கண்ட் மாநிலத்தில் நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது.

    இரண்டு மாநிலங்களிலும் அரசியல் கட்சிகள், கூட்டணியின் தேசிய தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜார்கண்ட் மாநிலத்தைப் பொறுத்தவரை இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஹேம்நாத் சோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா [ஜெ.எம்.எம்] கட்சி ஆட்சியில் உள்ளது.

    தற்போது வங்கதேச ஊடுருவல், அதிகரிக்கும் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட தனது அஸ்திரங்களை பயன்படுத்தி பாஜக தேர்தல் பிரசாரம் செய்து வருகிறது. பழங்குடியின அடையாளம் என்பதை முன்னிறுத்தி ஹேமந்த் சோரன் பிரச்சாரம் செய்கிறார்.

     

    இந்நிலையில் பீகாரில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் ;லாலு பிரசாத் யாதவ் ஜார்கண்டில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். சாத்ரா [Chatra] தொகுதியில் நிற்கும் தனது கோதர்மா [Koderma] பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் லாலு உரையாற்றினார்.

    அப்போது பேசிய அவர், இந்தியா கூட்டணி ஒன்றுபட்டுள்ளது. எல்லோருக்கும் இந்தியா கூட்டணியை தெரிந்துள்ளது. ஆனால் நரேந்திர மோடி என்று ஒன்றும் இல்லை, யார் நரேந்திர மோடி, பாஜகவை நீங்கள் தூக்கி எறிய வேண்டும் என்று பேசினார். 

    • ஜார்க்கண்டில் முதற்கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்றுயுடன் முடிகிறது.
    • அங்கு சுமார் 5 கி.மீ. தூரம் வாகன பேரணி சென்று பிரதமர் மோடி வாக்கு சேகரித்தார்.

    ராஞ்சி:

    ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு வரும் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    முதல்கட்ட வாக்குப்பதிவுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது. இதனால் அரசியல் கட்சியினர் அங்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே, சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் மோடி ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு 3 முறை வருகை தந்துள்ளார். நேற்று மட்டும் இரு இடங்களில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பிரதமர் மோடி உரையாற்றினார்.

    ஜார்க்கண்டில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கத்தில் தேர்தல் பணிகளில் பா.ஜ.க.வினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் 5 கிலோமீட்டர் தூரத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வாகனப் பேரணியில் ஈடுபட்டார். வழிநெடுக பா.ஜ.க. தொண்டர்கள் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    ராஞ்சி, ஹடியா, கன்கோ, ஹிஜ்ரி உள்ளிட்ட 4 சட்டசபை தொகுதிகளில் இந்த ரோடு ஷோ நடைபெற்றது. இதில் மொத்தம் 2 லட்சம் பா.ஜ.க.வினர் பங்கேற்றதாக கூறப்படுகிறது.

    ராஞ்சி தொகுதியில் போட்டியிடும் சி.பி.சிங் பிரதமர் மோடியுடன் வாகனத்தில் இருந்தார். தொடர்ந்து 6 முறை இந்தத் தொகுதியில் வெற்றி பெற்ற இவர், முன்னாள் மந்திரியாகவும் பதவி வகித்துள்ளார்.

    • ஜார்க்கண்டில் முதல் கட்ட வாக்குப்பதிவு வரும் 13-ம் தேதி நடைபெற உள்ளது.
    • ஜார்க்கண்ட் மாநிலம் பக்மாரா நகரில் காங்கிரஸ் சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது.

    ராஞ்சி:

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டசபைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு வரும் 13-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட பரப்புரையில் தலைவர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

    இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலம் பக்மாரா நகரில் காங்கிரஸ் சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

    ஏழைகள், விவசாயிகள், தலித்துகள், பிற்படுத்தப்பட்ட மக்கள் மற்றும் பழங்குடியினரிடம் பிரதமர் நரேந்திர மோடி செல்வதில்லை.

    அவர் எந்த ஒரு ஏழையின் திருமணத்துக்கும் சென்றதில்லை. ஆனால், அம்பானி இல்ல திருமணத்துக்குச் சென்றுள்ளார்.

    நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வருவதால் தாய்மார்களும், சகோதரிகளும் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

    நரேந்திர மோடி அனைத்தையும் ஜி.எஸ்.டி.யின் கீழ் கொண்டு வந்துள்ளார். நாட்டின் ஏழை மக்களிடம் இருந்து பணம் பறிக்கும் வழியாகவே முழு வரி கட்டமைப்பும் உள்ளது.

    விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களை கொல்லும் ஆயுதங்களாக பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி ஆகியவை உள்ளன.

    நாட்டின் சமூகக் கட்டமைப்பை துல்லியமாக பிரதிபலிக்கும் வகையில் மறு சீரமைப்பை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

    • ஐந்து வருடங்களில் 11 லட்சம் ரேசன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டன.
    • ஐந்து ஆண்டுகளில் 13 ஆயிரம் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டது ஏன்?.

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் 81 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. முதற்கட்ட தேர்தல் வருகிற 13-ந்தேதியும், 2-ம் கட்ட தேர்தல் வருகிற 20-ந்தேதியும் நடக்கிறது.

    தற்போது முதலமைச்சராக இருக்கும் ஹேமந்த் சோரனின் கட்சியான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. பா.ஜ.க. சில கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளது.

    தற்போது தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. அமித் ஷா, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் ஜார்க்கண்டில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டனர். அதேவேளையில் ஹேமந்த் சேரன் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    இந்த நிலையில் கோழைத்தனமான ஆங்கிலேயர்களைப் போல் பின்னால் இருந்து தாக்குவது ஏன் என பா.ஜ.க.-வை ஹேமந்த் சோரன் விமர்சித்துள்ளார்.

    இது தொடர்பாக ஹேமந்த் சோரன் கூறியதாவது:-

    உங்களுக்கு தைரியம் இருந்தால் முன்னால் இன்று மோதவும். கோழைத்தனமான ஆங்கிலேயர்களை போன்று பின்னால் இருந்து தாக்குவது ஏன்?.

    எனக்கு எதிராக சில நேரங்களில் அமலாக்கத்துறை, சில நேரங்களில் சிபிஐ, சில நேரங்களில் ஒரு அமைப்பு, சில நேரங்களில் வேறு யாரோ... என ஏவப்பட்டது. தற்போது என்னுடைய பெயரை களங்கப்படுத்த கோடிக்கணக்கில் செலவழிக்கப்படுகிறது. விசித்திரமான நிலைமை.

    பா.ஜ.க. இதற்கு முன்னதாக 5 வருடங்கள் ஆட்சியில் இருந்தது. அப்போது பள்ளிகளை மூடியது. ரேசன் கார்டுகளை ரத்து செய்தது. ஜார்க்கண்ட் பொது சேவை ஆணையம் (JPSC) தேர்வை நடத்தவில்லை. பா.ஜ.க. மத்தியில் 11 வருடங்கள் ஆட்சியில் இருந்து வருகிறது. ஜார்க்கண்டில் 5 வருடம் இருந்துள்ளது. அவர்களை டபுள் என்ஜின் அரசு என்று அழைத்துக் கொள்கிறார்கள். பிறகு ரகுபார் ஆட்சியில் யானை மட்டும் ஏன் ஐந்து வருடங்கள் பறந்தது?. ஐந்து ஆண்டுகளில் 13 ஆயிரம் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டது ஏன்?. ஐந்து வருடங்களில் 11 லட்சம் ரேசன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டன.

    ஏன் ஐந்து வருடத்தில் ஒரு ஜே.பி.எஸ்.சி. தேர்வு கூட நடத்தப்படவில்லை?. வயது முதிர்ந்த பெண்கள் மற்றும் விதவைகள் உதவித்தொகை ஏன் உயர்த்தப்படவில்லை. ஐந்து வருடங்களில் ஏன் பெற முடியவில்லை? ஏன் பட்டினியால் நூற்றுக்கணக்கானோர் இறந்தனர்?. ஏன் இளைஞர்கள் சைக்கிள்கள் தயாரித்து வாழைப்பழம் விற்பனை செய் வலியுறுத்தப்பட்டது?.

    மீண்டும் தனது அரசு தேர்வு செய்யப்பட்டால் மக்களுக்காகவும் ஒவ்வொரு ஜார்க்கண்ட் மக்களின் நலனுக்காகவும் தொடர்ந்து பணியாற்றுவோம்.

    இவ்வாறு ஹேமந்த் சோரன் விமர்சனத்தை வீசியுள்ளார்.

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 2.6 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1.31 கோடி ஆண் வாக்காளர்களும், 1.29 கோடி பெண் வாக்காளர்களும் உள்ளனர்.

    2020-ல் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 30 இடங்களிலும், பா.ஜ.க. 25 இடங்களிலும் வெற்றி பெற்றன. காங்கிரஸ் 16 இடங்களில் வெற்றி பெற்றது.

    2014-ல் பா.ஜ.க. 37 இடங்களில் வெற்றி பெற்றது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 19 இடங்களிலு், காங்கிரஸ் 6 இடங்களிலும் வெற்றி பெற்றது.

    • காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணியில் சமாஜ்வாடிக்கு தொகுதிகள் ஒதுக்கவில்லை.
    • அகிலேஷ் யாதவ் 21 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார்.

    81 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் மாநில சட்டசபைக்கு வருகிற 13, 20-ந்தேதிகளில் இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் கூட்டணிக்கும் பா.ஜனதா கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    இந்த நிலையில் இந்தியா கூட்டணியில் உள்ள சமாஜ்வாடி கட்சி ஜார்க்கண்ட்டில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. தொகுதி எதுவும் ஒதுக்காததால் அந்த கட்சி 21 இடங்களில் போட்டியிடுகிறது.

    இதற்கான வேட்பாளர்களையும் அறிவித்துவிட்டது. இதில் 7 முதல் 8 தொகுதிகளில் சமாஜ்வாடி வெற்றிபெறும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் ரஞ்சன் யாதவ் தெரிவித்துள்ளார்.

    • ஜார்க்கண்டில் இரு கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
    • முதல் மந்திரி ஹேமந்த் சோரன் புதிய வாக்குறுதிகளை வெளியிட்டார்.

    ராஞ்சி:

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் இரு கட்டங்களாக (நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

    இந்நிலையில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா சார்பில் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் முதல் மந்திரி ஹேமந்த் சோரன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    ஜார்க்கண்டில் பொது சிவில் சட்டம் மற்றும் என்.ஆர்.சி போன்றவை தேவையில்லை.

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் முந்தைய பா.ஜ.க. ஆட்சியின்போது 11 லட்சம் ரேசன் கார்டுகள் நீக்கப்பட்டன. இதனால் ஏராளமான பழங்குடியின மக்கள், தலித் மக்கள் பசி பட்டினியால் உயிரிழந்தனர்.

    எங்கள் ஆட்சியில் ஒவ்வொருவரும் தங்கள் உரிமைகளுக்கு ஏற்ப ரேசன் மற்றும் பென்சன் பெறுகிறார்கள்.

    மாநிலத்தில் மீண்டும் எங்கள் அரசு அமைந்தவுடன், பொது விநியோகத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு ஒரு நபருக்கு 5 கிலோ உணவு தானியத்துக்குப் பதிலாக 7 கிலோ உணவு தானியம் வழங்கப்படும்.

    ஓய்வூதியத் தொகை உயர்த்தி வழங்கப்படும். கூடுதலாக 10 லட்சம் பேர் பொது விநியோக திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள்.

    மையன் சம்மான் யோஜனா திட்டத்தின் கீழ் பெண் பயனாளிகளுக்கு மாதம் 2,500 ரூபாய் நிதி வழங்கப்படும் என தெரிவித்தார்.

    ×