என் மலர்tooltip icon

    ஜார்கண்ட்

    • ரெயில் பெட்டி தடம் புரண்டதை அதிகாரி உறுதிப்படுத்தி இருக்கிறார்.
    • விரைவில் இந்த பாதை சரி செய்யப்பட்டு, இயல்பு நிலை திரும்பும்.

    ஜார்க்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டத்தில் பயணிகள் ரெயிலின் பெட்டி ஒன்று டிரக் மீது மோதியதால் தடம் புரண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ரெயில் பெட்டி தடம் புரண்டதை அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தி இருக்கிறார்.

    மதுப்பூர்-ஜசிதி பிரிவில் ரோஹினி நவாடி ரயில்வே கிராசிங்கில் இன்று பிற்பகல் 2 மணியளவில் நடந்த இந்த சம்பவம் அரங்கேறியது. இந்த சம்பவத்தின் போது நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்று அதிகாரி தெரிவித்தார்.

    "கேட்ஸ்மேன் ஒரு லெவல் கிராசிங்கின் தடையை குறைத்துக்கொண்டிருந்தபோது, டிரக் அதைக் கடந்து ரெயிலில் மோதியது. முதல் பெட்டியின் நான்கு சக்கரங்கள் தடம் புரண்டன. எனினும், உயிர் சேதமோ காயமோ ஏற்படவில்லை," என்று கிழக்கு ரெயில்வேயின் சி.பி.ஆர்.ஓ. கௌசிக் மித்ரா தெரிவித்தார்.

    கிரேன் உதவியுடன் ரெயில் பெட்டியை தூக்குவதற்கு ஒரு குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும், விரைவில் இந்த பாதை சரி செய்யப்பட்டு, இயல்பு நிலை திரும்பும் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

    • ஜார்க்கண்ட் தேர்தலை ஒட்டி பாஜக வெளியிட்ட விளம்பர வீடியோ ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
    • பாஜகவின் இந்த விளம்பர வீடியோவிற்கு ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி எதிர்ப்பு தெரிவித்தார்.

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2-வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 13 அன்று நடைபெற்றது.

    இந்நிலையில் ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலை ஒட்டி பாஜக வெளியிட்ட விளம்பர வீடியோ ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரன் ஆட்சி காலத்தில் இந்து குடும்பத்தின் வீட்டிற்குள் கும்பலாக நுழையும் முஸ்லிம் மக்கள் அந்த வீட்டை ஆக்கிரமிப்பு செய்வது போல பாஜகவின் இந்த விளம்பர வீடியோவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

    அதாவது ஜார்க்கண்ட் மாநிலத்தில் முஸ்லிம் மக்கள் சட்டவிரோதமாக ஊடுருவி இந்துக்களுக்கு ஆபத்து விளைவிக்கிறார்கள் என்ற பாஜகவின் வெறுப்பு பிரசாரத்தின் ஒரு பகுதியாக இந்த விளம்பர வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

    பாஜகவின் இந்த விளம்பர காணொளிக்கு ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி எதிர்ப்பு தெரிவித்தார்.

    பாஜகவின் இந்த விளம்பர வீடியோ தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

    இதனையடுத்து, தேர்தல் விதிமுறைகளை மீறி முஸ்லிம் மக்களை தவறாக சித்தரிக்கும் வகையில் சமூக வலைத்தளத்தில் பாஜக வெளியிட்ட தேர்தல் பரப்புரை விளம்பரத்தை நீக்கக் கோரி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    • பா.ஜ.க.-வின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு வாக்காளர்கள் மயங்கிவிடக் கூடாது.
    • பாஜக-வின் முழக்கம் மாநிலத்தில் நிலவும் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைப்பதை நோக்கமாகக் கொண்டது.

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2-வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு 20-ந்தேதி நடைபெற இருக்கும் நிலையில் பாஜக தலைவர்கள், இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பிரதமர் மோடி தனது பிரசாரத்தில் ஜார்க்கண்டின் மண், மக்கள், உணவு (Mati, Beti, Roti) ஆகியவற்றை பா.ஜ.க. காப்பாற்றும் என்ற கோஷத்தை கூறி வருகிறார்.

    இந்த நிலையில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோர்ன் இன்று இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளரும், மந்திரியுமான தீபிகா பாண்டே சிங்கை ஆதித்து பிரசாரம் மேற்கொண்டார்.

    அப்போது பா.ஜ.க., Mati, Beti and Roti கோஷத்தை அரசியல் ஆதாயத்திற்காக மக்களை தவறாக வழிநடத்துகிறது என்றார்.

    பா.ஜ.க.-வின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு வாக்காளர்கள் மயங்கிவிடக் கூடாது. பாஜக-வின் முழக்கம் மாநிலத்தில் நிலவும் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைப்பதை நோக்கமாகக் கொண்டது. இது பதட்டத்தைத் தூண்டுவதற்கு அக்கட்சியின் தவறான முயற்சி.

    மிகப்பெரிய வெற்றியை பெற இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க வேண்டும். மாநிலத்தை சீர்குலைக்கவும், ஒற்றுமையை சீர்குலைக்கவும் கடந்த ஓராண்டாக பாஜக சதி செய்து வருகிறது.

    ஜார்க்கண்ட் மக்கள் நம்பிக்கையைப் பொருட்படுத்தாமல் ஒன்றாக பண்டிகைகளை கொண்டாடுகின்றனர். மேலும் இந்த உணர்வு தொடர இந்தியா கூட்டணி வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும். ஒவ்வொரு வருடமும் திருவிழாக்கள் வரும், ஆனால் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல்கள் வரும் என்று ஹேமந்த் சோரன் தெரிவித்தார்.

    • பிரதமர் மோடியின் ஹெலிகாப்டரில் கோளாறு ஏற்பட்டதால், அவர் இருந்த பகுதியில் வான்பகுதியை பயன்படுத்ததடை.
    • ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் புறப்படுவதற்கு இரண்டு மணி நேரம் தாமதம் ஆனது.

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் வருகிற 20-ந்தேதி 2-ம் கட்ட தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக பா.ஜ.க. தலைவர்கள் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    நேற்று பிரதமர் மோடி ஜார்க்கண்ட் சென்றிருந்தார். அவருடைய ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. அப்போது ராகுல் காந்தியும் ஜார்க்கண்டில் இருந்தார். இதனால் பிரதமர் மோடி இருக்கும் வான்பகுதிகளில் பறக்க தடைவிதிக்கப்பட்டது. இதனால் ராகுல் காந்தி இரண்டு மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.

    இன்று அமித் ஷாவிற்காக நான் 20 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டியிருந்தது என மல்லிகார்ஜூன கார்கே விமர்சித்திள்ளார்.

    இது தொடர்பாக மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது:-

    நேற்று பிரதமர் மோடி அவருடைய விமானத்தில் இருந்து கொண்டிருக்கும்போது, ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் வேண்டுமேன்றே இரண்டு மணி நேரம் காக்க வைப்பட்டது. இன்று அமித் ஷா ஜார்க்கண்ட் வந்திறங்கியதால் என்னுடைய ஹெலிகாப்டர் இரண்டு மணி நேரம் தாமதம் ஆனது. அவர் செல்லக்கூடிய வழி வேறு. நான் செல்லக்கூடிய வழி வேறு.

    ராகுல் காந்தி மக்களவை எதிர்க்கட்சி தலைவர். கேபினட் மந்திரிகளுக்கு இணையான ரேங்க் கொண்டவர். நானும் அதேபோல்தான். ஆனால் விமான நிலையத்தின் ஒதுக்கப்பட்ட ஓய்வறை பிரதமர் மோடிக்காக என அதிகாரிகள் தெரிவித்தனர். பிரதமர் மோடிக்காக கழிவறையை கூட ஒதுக்க முடியுமா? என கேள்வி கேட்க விரும்புகிறேன்.

    இவ்வாறு மல்லியார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

    • ஜார்க்கண்ட் மாநிலத்தில் 38 தொகுதிகளுக்கு 2-வது கட்டமாக 20-ந்தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது.
    • நவம்பர் 23-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் 81 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. முதற்கட்ட தேர்தல் ஏற்கனவே கடந்த 13-ந்தேதி 43 தொகுதிகளுக்கு நடந்து முடிந்துவிட்டது. 38 தொகுதிகளுக்கு வருகிற 20-ந்தேதி நடைபெற இருக்கிறது.

    பா.ஜ.க. தலைவர்களும், இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களும் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். ஜார்க்கண்ட் மாநிலத்திற்குள் ஊடுருபவர்கள் தொடர்பான பிரச்சனை தேர்தல் பிரசாரத்தில் பிரதானதாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடியினரின் மக்கள் தொகை குறைந்து வருவதற்கு ஹேமந்த் சோரன்தான் முக்கிய காரணம். அவர் ஊடுருவல்காரர்களை அனுமதிக்கிறார். இதற்கு ஹேமந்த் சோரன் பொறுப்பேற்க வேண்டும். பிரதமர் மோடி ஜன்ஜதியா கவுரவ் வர்ஷ் (Janjatiya Gaurav Varsh) உள்ளிபட்ட பல்வேறு திட்டங்களை அவர்களுக்கு அறிவித்து பழங்குடியினரின் பெருமைமை மீட்டெடுத்தார் என பா.ஜ.க. தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    • ஆளும் கட்சி எம்.எல்.ஏ.வுக்கு இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை.
    • ஆளும் கட்சி எம்.எல்.ஏ.வான அவர் பா.ஜ.க.வில் இணைந்தார்.

    ராஞ்சி:

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 81 சட்டசபை தொகுதிகளுக்கு 2 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. 43 தொகுதிகளுக்கு முதல் கட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் 65 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

    இரண்டாம் கட்ட தேர்தல் வரும் 20-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 23-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

    அங்கு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டணியில் காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் உள்ளன.

    இதற்கிடையே, அம்மாநிலத்தின் பகூர் மாவட்டம் லிதிபரா தொகுதி எம்.எல்.ஏ.வாக ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியை சேர்ந்த தினேஷ் வில்லியம்ஸ் மராண்டி செயல்பட்டு வந்தார். அவருக்கு இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

    இந்நிலையில், தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படாததால் ஆளும் கட்சி எம்.எல்.ஏ. தினேஷ் வில்லியம்ஸ் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் நேற்று இணைந்தார்.

    லிதிபரா தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த பா.ஜ.க. மூத்த தலைவரும் மத்திய மந்திரியுமான சிவராஜ் சிங் சவுகான் முன்னிலையில் தினேஷ் பா.ஜ.க.வில் இணைந்தார்.

    பா.ஜ.க.வில் இணைந்துள்ள தினேஷுக்கு நடப்பு தேர்தலில் லிதிபரா தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • பிரதமர் மோடி ஜார்கண்டின் தியோகர் பகுதியில் பிரசாரம் செய்தார்
    • ராகுல் காந்தியின் பிரசாரத்தை சீர்குலைக்க பாஜக முயன்றதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

    ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது. கடந்த 13 ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவானது வரும் நவம்பர் 20 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சித் தலைவர்கள் அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    அந்த வகையில் மக்களை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஜார்கண்டில் பிரசாரம் செய்ய வந்துள்ளார். இந்நிலையில் ஹெலிகாப்டர் மூலம் பிரசாரதிற்காக கோடா பகுதியில் இருந்து ராகுல் காந்தி கிளம்ப முற்பட்டார்.

    ஆனால் அவரது ஹெலிகாப்டர் அங்கு பரப்பதற்கு வான் போக்குவரத்து கட்டுப்பாடு (ATC அறையிலிருந்து ஏர் கிளியரன்ஸ் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் ராகுல் காந்தி பிரசாரம் செல்வதில் 45 நிமிடங்கள் வரை தாமதம் ஏற்பட்டது.

    பிரதமர் மோடி ஜார்கண்டின் தியோகர் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது ராகுல் காந்தியின் பிரசாரத்தை சீர்குலைக்கவே பாஜக வேண்டுமென்றே இதைச் செய்துள்ளதாகக் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இதனையடுத்து பாஜக மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்குக் காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இரண்டாம் கட்ட வாக்குப்பதிவானது வரும் நவம்பர் 20 ஆம் தேதி நடைபெற உள்ளது.
    • புறப்படும்போதே விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

    ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது. கடந்த 13 ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவானது வரும் நவம்பர் 20 ஆம் தேதி நடைபெற உள்ளது.

    இதனையொட்டி பாஜகவுக்கு பிரசாரம் செய்ய பிரதமர் மோடி ஜார்கண்ட் பயணமாகியுள்ளார். பிரசாரம் முடிந்த  பின்னர் ஜார்கண்ட் மாநிலம் தியோகரில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி டெல்லி புறப்பட்டுள்ளார்.

    ஆனால் புறப்படும்போதே விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. எனவே அவர் டெல்லி திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    • ஊழலையும், பணக்கட்டுகளையும் பார்க்க வேண்டுமானால் ஜார்க்கண்டுக்கு வாருங்கள்.
    • டயருக்குள் கட்டுக்கட்டாக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

    ராஞ்சி:

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்திமோர்ச்சா கட்சி ஆட்சி நடந்து வருகிறது.

    இந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள 81 சட்டசபை தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த 13-ந்தேதி 43 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது.

    மீதம் உள்ள 38 தொகுதிகளுக்கு வருகிற 20-ந்தேதி 2-ம் கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அங்கு தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் ஜார்க்கண்ட்- பீகார் எல்லையில் உள்ள கிரிதிஹ் மாவட்டத்தில் வருமான வரித்துறையினரும், போலீசாரும் சேர்த்து வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த ஒரு வாகனத்தை சோதனை செய்தனர். அப்போது வாகனத்தில் உதிரியாக ஒரு டயர் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அந்த டயரை சோதனை செய்தபோது டயருக்குள் கட்டுக்கட்டாக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

    மொத்தம் ரூ.50 லட்சம் மதிப்புள்ள பண கட்டுகளை டயருக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை கண்ட அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த பணம் எதற்காக மறைத்து வைத்து கடத்தி செல்லப்படுகிறது? வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக கொண்டு செல்லப்பட்டதா? என விசாரணை நடந்து வருகிறது.

    இந்த நிலையில் டயருக்குள் பதுக்கி பணம் கொண்டு செல்லப்பட்டதை அதிகாரிகள் கைப்பற்றிய வீடியோவை ஜார்க்கண்டில் கோடா தொகுதி பாஜக எம்.பி. நிசிகாந்த் துபே எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

    வீடியோவுடன் அவரது பதிவில், ஆளும் ஜார்க்கண்ட் முக்திமோச்சா மற்றும் அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் சேர்ந்து மாநிலத்தில் ஊழல் செய்கின்றனர் என பதிவிட்டுள்ளார்.

    மேலும் ஊழலையும், பணக்கட்டுகளையும் பார்க்க வேண்டுமானால் ஜார்க்கண்டுக்கு வாருங்கள். வருமானவரித்துறையும், தேர்தல் அதிகாரிகளும் கிரிதிக் தொகுதியில் ரூ.50 லட்சம் பணத்தை கைப்பற்றி உள்ளனர் என பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • 43 தொகுதிகளில் மொத்தம் 683 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
    • வாக்காளர்கள் அதிக அளவில் வந்து வாக்கு செலுத்தினர்.

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 சட்டமன்ற தொகுதிகளில் முதற்கட்டமாக 43 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. 43 தொகுதிகளில் மொத்தம் 683 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

    முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன் மற்றும் முன்னாள் எம்.பி. கீதா கோரா ஆகியோர் களத்தில் உள்ளனர். வாக்குப்பதிவு தொடர்பாக மாவோயிஸ்டுகள் எச்சரிக்கை விடுத்த போதிலும், வாக்காளர்கள் அதிக அளவில் வந்து வாக்கு செலுத்தினர்.

    முதற்கட்ட வாக்குப் பதிவு நிறைவடைந்த நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி 64.86 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மொத்த வாக்குகள் பதிவானது பற்றிய முழு தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை.

    • ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதற்கட்டமாக 43 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
    • மதியம் 3 மணி வரை 59.28 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 சட்டமன்ற தொகுதிகளில் முதற்கட்டமாக 43 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    43 தொகுதிகளில் மொத்தம் 683 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன் மற்றும் முன்னாள் எம்.பி. கீதா கோரா ஆகியோர் களத்தில் உள்ளனர்.

    இந்நிலையில் மதியம் 3 மணி வரை 59.28 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    இதனிடையே ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனி தனது மனைவி சாக்ஷியுடன் வந்து வாக்களித்தார்.

    • 43 தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • காலை 9 மணி வரை 13 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 சட்டமன்ற தொகுதிகளில் முதற்கட்டமாக 43 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    காலை 9 மணி வரை 43 சட்டமன்ற தொகுதிகளில் 13 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். சிம்தேகா தொகுதியில் அதிகபட்சமாக 15.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. ராஞ்சியில் 12.06 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. சேரைகேலா-கர்சவான் தொகுதியில் 14.62 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

    இந்த நிலையில் 11 மணி வரை 29.3 சதவீதம் வாக்குகள் பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ராஞ்சியில் உள்ள ஏடிஐ வாக்கு மையத்தில் ஆளுநர் சந்தோஷ் குமார் கங்வார் வாக்களித்தார்.

    43 தொகுதிகளில் மொத்தம் 683 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன் மற்றும் முன்னாள் எம்.பி. கீதா கோரா ஆகியோர் களத்தில் உள்ளனர். 683 வேட்பாளர்களில் 609 பேர் ஆண்கள். 73 பேர் பெண்கள், 3 பேர் மாற்று பாலினத்தினர். 43 தொகுகளில் 17 பொதுத்தொகுதியாகும். 20 பழங்குடியினர் தொகுதியாகும். 6 எஸ்.சி. தொகுதியாகும். 1.37 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க 15,344 வாக்கு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 43 தொகுதிகளில் 1.37 கோடி வாக்காகளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

    ×