search icon
என் மலர்tooltip icon

    ஜம்மு காஷ்மீர்

    • சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு பிரதமர் மோடி முதல் முறையாக காஷ்மீருக்கு சென்றார்.
    • பிரதமரின் வருகையையொட்டி ஸ்ரீநகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவு மத்திய பா.ஜ.க. அரசால் கடந்த 2019-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. இதன்பிறகு பிரதமர் மோடி 2-வது முறையாக கடந்த மாதம் 20-ம் தேதி ஜம்முவுக்கு சென்று ரூ.30,500 கோடி மதிப்பிலான பல்வேறு உள் கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களை தொடங்கி வைத்தார்.

    இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு பிரதமர் மோடி முதல் முறையாக இன்று காஷ்மீருக்கு சென்றார். பிரதமரின் வருகையையொட்டி ஸ்ரீநகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

    ஸ்ரீநகர் பாக்சி மைதானத்தில் நடந்த வளர்ச்சி அடைந்த பாரதம்-வளர்ச்சி அடைந்த ஜம்மு-காஷ்மீர் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். சுமார் ரூ.6,400 கோடி மதிப்பிலான திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார்.

    வேளாண் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக ரூ.5,000 கோடி மதிப்புள்ள திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

    ஸ்ரீநகரில் உள்ள ஹஸ்ரத்பால் ஆலயத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டம் உள்பட உள்நாட்டு சுற்றுலா மற்றும் புனித யாத்திரை புத்துணர்ச்சி, ஆன்மீக பாரம்பரிய விரிவாக்க திட்டத்தின் கீழ் ரூ.1,400 கோடி மதிப்பிலான திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார்.

    நாடு முழுவதும் பரந்த அளவிலான புனித யாத்திரை மற்றும் சுற்றுலா தலங்களை மேம்படுத்தும் சுமார் 43 திட்டங்களையும் பிரதமர் தொடங்கிவைத்தார். தமிழ்நாட்டின் தஞ்சை, மயிலாடுதுறை மாவட்டங்களிலும், புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்திலும் உள்ள நவக்கிரக கோவில்கள், சாமுண்டீஸ்வரி திருக்கோவில் உள்ளிட்டவை இதில் அடங்கும்.

    உங்கள் நாட்டை பாருங்கள், மக்கள் தேர்வு 2024 மற்றும் இந்தியாவுக்கு செல்லுங்கள் எனும் உலக அளவிலான பிரசாரத்தையும் அவர் தொடங்கிவைத்தார்.

    ஜம்மு காஷ்மீரில் அரசு பணிகளுக்கு புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட 1000 பேருக்கு பணி நியமண ஆணைகளையும் பிரதமர் மோடி வழங்கினார். பெண் சாதனையாளர்கள், விவசாயிகள், தொழில் முனைவோர் உள்ளிட்ட பல்வேறு அரசு திட்ட பயனாளிகளுடன் கலந்துரையாடினார்.

    • டிரைவர் இல்லாமல் சரக்கு ரெயில் ஓடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
    • என்ஜின் டிரைவர் சந்தீப்குமாரை பணிநீக்கம் செய்து வடக்கு ரெயில்வே உத்தரவிட்டுள்ளது.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் கதுவா ஸ்டேஷனில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சரக்கு ரெயில் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. ஹேண்ட் பிரேக் போடாமல் டிரைவர் என்ஜினில் இருந்து கீழே இறங்கினார். தண்டவாள பாதை சாய்வாக இருந்ததால் திடீரென அந்த சரக்கு ரெயில் பதான்கோட் நோக்கி ஓடத் தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் மற்றும் ஊழியர்கள் ரெயிலை நிறுத்த முடியாமல் தவித்தனர்.

    சுமார் 80 கி.மீ. தூரம் வரை ஓடிய அந்த சரக்கு ரெயில் பஞ்சாப் முகேரியன் ஹோஷியார்பூரில் அந்த சரக்கு ரெயில் நிறுத்தப்பட்டது.

    இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதால், இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

    இந்நிலையில், டிரைவர் இல்லாமல் சரக்கு ரெயில் ஓடிய சம்பவம் தொடர்பாக என்ஜின் டிரைவர் உள்பட 6 பேரை வடக்கு ரெயில்வே நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது.

    இதுகுறித்த நடத்தப்பட்ட விசாரணையில், சம்பந்தப்பட்ட என்ஜின் டிரைவர் அலட்சியமாக செயல்பட்டதே இச்சம்பவத்திற்கு காரணம் என உறுதி செய்யப்பட்டது. இதனால் என்ஜின் டிரைவர் சந்தீப்குமாரை சஸ்பெண்ட் செய்து வடக்கு ரெயில்வே நிர்வாகம் உத்தரவிட்டது.

    • குல்மார்க்கில் உள்ள பைன் பேலஸ் பிளாட்டினம் என்கிற ஓட்டலில் தீ விபத்து.
    • தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டு வருவதாக போலீசார் தகவல்.

    வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான குல்மார்க்கில் உள்ள ஓட்டல் ஒன்றில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

    குல்மார்க்கில் உள்ள பைன் பேலஸ் பிளாட்டினம் என்கிற ஓட்டலில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்த வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே, தீ கொழுந்துவிட்டு எரிவதை கண்ட அங்கிருந்த மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பனிக்கட்டிகளை தூக்கி எரிந்து தீயை அணைக்க முயன்றனர். இதன் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    இந்நிலையில், தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டு வருவதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜம்மு காஷ்மீரின் கதுவா ஸ்டேஷனில் சரக்கு ரெயில் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது.
    • தண்டவாள பாதை சாய்வாக இருந்ததால் திடீரென அந்த சரக்கு ரெயில் பதான்கோட் நோக்கி ஓடியது

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் கதுவா ஸ்டேஷனில் சரக்கு ரெயில் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. ஹேண்ட் பிரேக் போடாமல் டிரைவர் என்ஜினில் இருந்து கீழே இறங்கியுள்ளார்.

    அப்போது ரெயில் தண்டவாள பாதை சாய்வாக இருந்ததால் திடீரென அந்த சரக்கு ரெயில் பதான்கோட் நோக்கி ஓடத் தொடங்கியது. இதனால் ரெயில் டிரைவர் மற்றும் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ரெயிலை நிறுத்த முடியாமல் தவித்தனர்.

    78 கி.மீ. தூரம் வரை அந்த சரக்கு ரெயில் டிரைவர் இல்லாமல் ஓடிய நிலையில், பஞ்சாப் முகேரியன் ஹோஷியார்பூரில் அந்த சரக்கு ரெயில் நிறுத்தப்பட்டது.

    டிரைவர் இல்லாமல் சரக்கு ரெயில் ஓடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என ஜம்மு கோட்ட ரெயில்வே மேலாளர் தெரிவித்துள்ளார்.

    • கழுத்தில் பேட்டைப் பிடித்து கிரிக்கெட் விளையாடிய அமீரின் வீடியோ அண்மையில் வைரலானது
    • காஷ்மீர் சென்றுள்ள சச்சின் டெண்டுல்கர், அமீரை சந்தித்துப் பேசி, பேட் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.

    2 கைகளையும் இழந்த ஜம்மு காஷ்மீர் பாரா கிரிக்கெட் அணியின் கேப்டன் அமீர் ஹூசைனை இன்று சச்சின் டெண்டுல்கர் நேரில் சந்தித்து பேசினார்.

    கழுத்தில் பேட்டைப் பிடித்து கிரிக்கெட் விளையாடிய அமீரின் வீடியோ அண்மையில் வைரலானபோது, அவரைப் பாராட்டி X தளத்தில் பதிவிட்டிருந்தார் சச்சின்.

    பேட்டி ஒன்றில் சச்சினை சந்திக்க ஆசை என கூறியிருந்தார் அமீர். அதனை நிறைவேற்றும் விதமாக, காஷ்மீர் சென்றுள்ள சச்சின் டெண்டுல்கர், அமீரை சந்தித்துப் பேசி, பேட் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.

    • பிரதமர் மோடி, அமித் ஷாவை ரகசியமாக சந்தித்ததாக குலாம் நபி ஆசாத் குற்றச்சாட்டு.
    • தேவைப்பட்டால் பகலில் சந்திப்பேன். ஏன் இரவில் சந்திக்க வேண்டும்? என பரூப் அப்துல்லா பதிலடி.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் மூத்த அரசியல்  தலைவர்களில் ஒருவர் குலாம் நபி ஆசாத். இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சி என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். மக்களவை தேர்தலில் போட்டியிட மாட்டேன் எனத் தெரிவித்துள்ள குலாம் நபி ஆசாத், கட்சி வேட்பாளர்களுக்காக தேர்தல் பிரசாரம் மேற்கொள்வேன் எனத் தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில்தான் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் தேசிய மாநாடு கட்சியின் தலைவரான பரூக் அப்துல்லா இரவு நேரத்தில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித் ஷாவை ரகசியமாக சந்தித்ததாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

    இதற்கு பரூக் அப்துல்லா பதில் அளித்துள்ளார். குலாம் நபி ஆசாத் குற்றச்சாட்டுக்கு பரூக் அப்துல்லா அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:-

    நான் பிரதமர் மோடி அல்லது உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்திக்க வேண்டும் என்றால், பகல் நேரத்தில் அவர்களை சந்திப்பேன். நான் அவர்களை ஏன் இரவு நேரத்தில் சந்திக்க வேண்டும். பரூப் அப்துல்லா பற்றி அவதூறாக நினைப்பது என்ன காரணம்?. யாரும் அவருக்கு மாநிலங்களை சீட் வழங்காதபோது, நான் அவருக்கு மாநிலங்களை சீட் கொடுத்தேன். ஆனால் இன்று அவர் இதையெல்லாம் பேசுகிறார்.

    அவர்கள் எனது இமேஜை கேவலப்படுத்தவும், ஒவ்வொரு விஷயத்திலும் எனது பெயரை இழுக்கவும் விரும்புகிறார்கள். பிரதமர் மற்றும் மத்திய உள்துறை மந்திரி வீட்டில் அமர்ந்திருக்கும் தங்களது முகவர்களின் பெயர்களை அவர் வெளியிட வேண்டும். அவர் மக்களுக்கு உண்மையைப் புரியும்படி சொல்ல வேண்டும்" என்றார்.

    • 2022-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியில் வந்த குலாம் நபி ஆசாத் புதுக்கட்சி தொடங்கினார்.
    • 2014 மக்களவை தேர்தலில் தோல்வியடைந்த பிறகு போட்டியிடுவதை தவிர்த்து வருகிறார்.

    காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த குலாம் நபி ஆசாத். கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். பின்னர் ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சி என்ற பெயரில் ஜம்மு-காஷ்மீரு் மாநில கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் வருகின்ற மக்களவை தேர்தலில் போட்டியிடமாட்டேன். கட்சி வேட்பாளர்களுக்காக தேர்தல் பிரசாரம் மேற்கொள்வேன். நான் போட்டியிட்டால் அந்த ஒரு இடத்திலேயே முடங்கிவிடுவேன் எனத் தெரிவித்துள்ளார்.

    2014 மக்களவை தேர்தலில் தோல்வியடைந்த பிறகு, மக்களவை தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்து வருகிறார். 2024 தேர்தல் ஜம்மு-காஷ்மீரில் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலுக்காக கட்சி தொண்டர்களை தயார்படுத்தி வருகிறார்.

    ஜம்மு-காஷ்மீரில் மக்களவை தேர்தல் குறித்த நேரத்தில் 100 சதவீதம் நடந்துவிடும். ஆனால் சட்டமன்ற தேர்தலை பற்றி யூகிக்க மட்டுமே முடிகிறது. ஆனால், உச்சநீதிமன்றத்தில் செப்டம்பர் மாதத்திற்குள் நடத்த காலக்கெடு விதித்துள்ளது" என்றார்.

    2022-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியில் வந்த குலாம் நபி ஆசாத், அதன்பின் ஜம்மு-காஷ்மீர மாநிலத்தில் புதுக்கட்சியை தொடங்கியுள்ளார்.

    • மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் கட்சிகள் காங்கிரஸ்க்கு தொகுதிகள் கொடுக்க மறுப்பு.
    • உத்தர பிரதேச மாநிலத்தில் மட்டும் தொகுதி பங்கீடு வெற்றிகரமாக முடிந்துள்ளது.

    பாராளுமன்ற மக்களவை தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்துவதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கின. ஆனால், இந்தியா கூட்டணி உருவாக முக்கிய காரணமாக இருந்த நிதிஷ் குமார் பா.ஜனதாவுடன் இணைந்து விட்டார்.

    காங்கிரஸ் கட்சி இந்த கூட்டணிக்கு தலைமை தாங்குகிறது. இதனால் மாநில கட்சிகளுக்கு தொகுதிகளை பங்கீடு செய்து கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளது. ஆனால் மேற்கு வங்காள மாநிலத்தில் மேற்கு வங்காளத்தில் இரண்டு தொகுதிகள்தான் ஒதுக்க முடியும் என மம்தா அறிவித்தார். இதனால் இரு கட்சிகளும் தனித்து போட்டியிடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இது இந்திய கூட்டணிக்கு முதல் சறுக்கலாக கருதப்பட்டது.

    அதன்பின் அரவிந்த் கெஜ்ரிவால் கட்சி டெல்லியில் காங்கிரஸ்க்கு ஒரு இடம்தான் என அறிவித்தது. மேலும், பஞ்சாபில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடப்போவதாக ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது. இது 2-வது சறுக்கலாக கருதப்படுகிறது.

    மேலும், ஆம் ஆத்மி குஜராத் மற்றும் அசாம் போன்ற மாநிலங்களில் காங்கிரஸிடம் சில தொகுதிகளை கேட்கிறது. நாங்கள் எங்களுடைய வாக்கு சதவீதம் அடிப்படையில்தான் தொகுதிகளை கேட்கிறோம் என்கிறது. இதனால் காங்கிரஸ்- ஆம் ஆத்மி இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை வெற்றி பெறுமா? என்பது தெரியவில்லை.

    இந்த நிலையில்தான் ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாடு கட்சி தனித்து போட்டியிடும் என பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். இது இந்தியா கூட்டணிக்கு மேலும் பின்னடைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஏற்கனவே, மம்தா பானர்ஜி பாராளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 40 தொகுதிகள் கிடைப்பது கூட சந்தேகம்தான் என விமர்சனம் செய்திருந்தார். காங்கிரஸ்க்கு 40 இடங்களாவது கிடைக்க வேண்டிக் கொள்கிறேன் என பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பரூக் அப்துல்லா இவ்வாறு தெரிவித்துள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் இதுதொடர்பாக கூறுகையில் "பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு கட்சிக்கும் அதன் சொந்த வரம்புகளை கொண்டது. தேசிய மாநாடு, பிடிபி கட்சி இந்தியா கூட்டணியின் ஒரு பகுதியாக உள்ளது. அது தொடரும்" எனத் தெரிவித்துள்ளார்.

    80 தொகுதிகள் கொண்ட உத்தர பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ்க்கு 11 இடங்களை வழங்கியுள்ளது சமாஜ்வாடி கட்சி. இதனை காங்கிரஸ் ஏற்றுக் கொண்டுள்ளது.

    • லடாக்கில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்தது.

    லடாக்:

    காஷ்மீரின் ஒரு பகுதியான லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள லே பகுதியில் இன்று அதிகாலை 5.39 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவாகி இருப்பதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

    நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

    • வழக்கமாக பனிக்காலங்களில் விடுதிகளில் தங்கும் இடம் கிடைப்பது அரிது
    • நிலத்தடி நீர் மற்றும் நீர்மின் உற்பத்தி பாதிக்கப்படும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்

    உலகெங்கிலும் இருந்து சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் காஷ்மீர் முன்னணியில் உள்ளது.

    பனிப்பொழிவால் சூழ்ந்த மலைகள், பனிச்சறுக்கு விளையாட்டு, பனியில் குதிரைகளால் இழுக்கப்படும் வண்டியில் பயணித்தல், "போனி ரெய்டு" (pony ride) எனும் குதிரையேற்றம், கேபிள் கார் (cable car) பயணம், படகு வீடு உள்ளிட்டவற்றை அனுபவிக்க மக்கள் அங்கு குவிந்த வண்ணம் இருப்பது வழக்கம்.


    நவம்பர் மாதத்திலிருந்தே சுற்றுலா பயணிகளுக்கு அங்கு தங்க இடம் கிடைப்பது அரிது.

    ஆனால், இவ்வருடம் சுற்றுலா பயணிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

    மலைகள் மற்றும் திறந்தவெளி பிரதேசங்கள் இவ்வருடம் வறண்டு, பிரவுன் நிறமாக காட்சி அளிக்கிறது. பனிச்சறுக்கு பிரதேசங்கள் காலி மைதானங்களாக காட்சி தருகின்றன.

    குடும்பத்தினருடன் உலகெங்கும் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் சாதாரண பிரதேசம் போல் காட்சி தரும் காஷ்மீரை கண்டதும், ஏமாற்றத்துடன் ஓட்டல் அறைகளை காலி செய்து புறப்படுகின்றனர். இத்தகவல் பரவியதால் முன்பதிவு செய்த பல சுற்றுலா பயணிகள் தங்கள் பதிவுகளை ரத்து செய்து விட்டனர்.

    சுற்றுலா மூலம் கிடைக்கும் வருவாய், காஷ்மீர் மக்களுக்கு நீண்ட காலமாக குடும்ப வருமானமாக இருந்து வந்த நிலையில் காஷ்மீரின் சுற்றுலாத் துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

    கடந்த வருடம் சுமார் 1 லட்சம் சுற்றுலா பயணிகளை ஈர்த்த காஷ்மீரில் இவ்வருடம் பாதியளவு கூட பயணிகள் இல்லை.

    மேலும் "பனியில்லாத பருவகாலம்" நீடித்தால், நிலத்தடி நீர் வரத்தும் குறைந்து விடும் என்றும் நீர்மின் உற்பத்தி, மீன் வளம், விவசாயம் உள்ளிட்டவைகளும் நலிந்து விடும் என வானியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

    ஜம்மு-காஷ்மீர் வானிலை மையம், கடந்த 2023 டிசம்பர் மாத மழைப்பொழிவு கடந்தாண்டை விட 79 சதவீதம் குறைந்துள்ளதாகவும், 2024 ஜனவரி மாதம் 100 சதம் குறைந்துள்ளதாகவும் அறிவித்தது.

    90களில் 3 அடி உயரத்திற்கு பனி மூடியிருந்த காஷ்மீர், தற்போது வறண்டிருப்பதை போல் மற்றொரு யூனியன் பிரதேசமான லடாக்கிலும் நிலைமை இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • தால் ஏரி காஷ்மீர் மகுடத்தின் வைரக்கல் என போற்றப்படுகிறது.
    • காஷ்மீரில் கடும் குளிர் நிலவுவதால் புகழ் பெற்ற தால் ஏரி உறைந்தது.

    ஸ்ரீநகர்:

    வடமாநிலங்களில் தற்போது கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் தலைநகர் டெல்லி உள்பட பல்வேறு மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது.

    காஷ்மீரின் ஸ்ரீநகரில் தால் ஏரி அமைந்துள்ளது. உலகளவில் பிரபலமான இந்த ஏரி, சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கம் ஆகும். அதனால்தான் இந்த ஏரி, காஷ்மீர் மகுடத்தின் வைரக்கல் என போற்றப்படுகிறது.

    இந்நிலையில், இத்தகைய சிறப்பு வாய்ந்த தால் ஏரியின் சில பகுதிகள் உறைந்து காணப்படுகிறது.

    குழந்தைகள், மூத்த குடிமக்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிறு வயதிலேயே கிரிக்கேட் ஆர்வம் கொண்டு கடினமாக உழைக்க உறுதியாக இருந்துள்ளார்.
    • பல முயற்சிக்குப் பிறகு அவர் கிரிக்கெட் பேட்டை பிடிக்கத் தொடங்கியுள்ளார்.

    ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த பாரா கிரிக்கெட் வீரர் அமீர் ஹுசைன், பிறப்பால் எல்லோர் போலவும் சாதாரணமாக பிறந்தவர். ஆனால் ஒரு விபத்து அவரை ஊனம் ஆக்கியது. அந்த விபத்தில் தனது இரு கைகளையும் இழந்த பின்னரும் ஊக்கத்துடன் கிரிக்கெட் விளையாடி, பாரா கிரிக்கெட் வீரர் கேப்டனாக திகழ்கிறார். அவரது வாழ்க்கை கதையை பார்க்கலாம்.

    அமீர் 8 வயதாக இருந்தபோது அவரது குடும்பத்திற்கு சொந்தமான மரத்தூள் ஆலையில் தனது தந்தைக்கு மதிய உணவு கொடுக்க சென்றுள்ளார். அவரது தந்தையும், சகோதரரும் ஆலையில் வேலை செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத நேரத்தில் இயந்திரத்திற்குள் அவரது இரண்டு கைகளும் சிக்கி கொண்டன. அவரை இந்திய ராணுவ பிரிவு வந்து மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளது. 

    அந்த விபத்திலிருந்து குணமடைய அவருக்கு 3 வருடம் ஆகியது. இரண்டு கைகளும் இழந்த பின்னர் பல தடைகளை தாண்டி தனது பாட்டியின் உதவியோடு கல்வியை தொடர்ந்துள்ளார். சிறு வயதிலேயே கிரிக்கேட் ஆர்வம் கொண்டு கடினமாக உழைக்க உறுதியாக இருந்துள்ளார். அவரது ஆர்வத்தை கண்டு அவரது கல்லூரி ஆசிரியர் அவருக்கு பாரா கிரிக்கெட்டை அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

    பல முயற்சிக்குப் பிறகு அவர் கிரிக்கெட் பேட்டை பிடிக்கத் தொடங்கியுள்ளார். அதை கன்னத்திற்கும் கழுத்திற்கும் இடையில் வைத்து பேட்டிங் செய்து வருகிறார். தனது கால்களை பயன்படுத்தி தன்னால் முடிந்த வரை பந்தை அதிக தூரம் வீசிகிறார்.

    தனது மன உறுதி மற்றும் பயற்சியின் காரணமாக 2013ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் பாரா கிரிக்கெட் அணியின் கேப்டனாக உயர்ந்துள்ளார்.

    அமீர் ஜம்மு காஷ்மீர் பகுதியில் 100 பேருக்கு தன்னை போல இருக்கும் மாற்றுதிறனாளிக்கு விளையாட்டு பயற்சியாளராக இருந்து வருகிறார்.

    இந்தியாவின் தேசிய கிரிக்கெட் அணிக்காகவும் விளையாட வேண்டும் என்று அமீர் விரும்புகிறார். அண்மையில் துபாய் பிரீமியர் லீக்கில் விளையாடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

    ×