என் மலர்tooltip icon

    அரியானா

    • பேன்சி நம்பர் அவற்றின் இலக்கங்கள், எழுத்துக்களின் வரிசைகளுக்காக தேர்வு செய்யப்படுகின்றன.
    • பேன்சி நம்பர்களைப் பெறுவதற்கு அரியானா போக்குவரத்து துறை ஆன்லைன் வாயிலாக ஏலம் நடத்துகிறது.

    சண்டிகர்:

    எளிய முறையில் நினைவில் வைத்துக் கொள்ளும் வகையில் பேன்சி நம்பர் கொண்ட நம்பர் பிளேட்களை வாங்குகின்றனர்.

    இந்த வகையிலான பேன்சி நம்பர் அவற்றின் இலக்கங்கள், எழுத்துக்களின் வரிசைகளுக்காக தேர்வு செய்யப்படுகின்றன. இவை தனிப்பட்ட விருப்பத் தேர்வுகள், அதிர்ஷ்ட எண்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகின்றன.

    இதற்கிடையே, வாகனங்களுக்கான பேன்சி நம்பர்களைப் பெறுவதற்கு அரியானா போக்குவரத்து துறை ஆன்லைன் வாயிலாக ஏலம் நடத்துகிறது.

    இந்நிலையில், அரியானாவில் ஒவ்வொரு வாரமும் விஐபி மற்றும் பேன்சி எண்கள் ஏலம் நடத்தப்படுகிறது. வெள்ளிக்கிழமை மாலை 5 மணி முதல் திங்கள் காலை 9 மணி வரை, ஏலதாரர்கள் தங்களுக்கு விருப்பமான எண்ணுக்கு விண்ணப்பிக்கலாம். பின்னர் புதன்கிழமை மாலை 5 மணிக்கு முடிவுகள் அறிவிக்கப்படும் வரை ஏலம் நடைபெறும்.

    இந்த ஏலம் அதிகாரப்பூர்வ fancy.parivahan.gov.in போர்ட்டலில் முழுவதுமாக ஆன்லைனில் நடைபெறுகிறது. இந்த வாரம், ஏலத்திற்கு வந்த அனைத்து எண்களிலும், HR88B8888 என்ற பதிவு எண்ணின் அடிப்படை ஏல விலை ரூ. 50,000 என நிர்ணயிக்கப்பட்டது. இது ஒவ்வொரு நிமிடமும் அதிகரித்துக்கொண்டே இருந்தது, பின்னர் மாலை 5 மணிக்கு ரூ. 1.17 கோடிக்கு முடிவு செய்யப்பட்டது.

    இதன் மூலம் HR88B8888 என்ற எண் இந்தியாவின் மிகவும் விலையுயர்ந்த கார் பதிவு எண்ணாக ரூ.1.17 கோடிக்கு மாறியுள்ளது.

    இதுபோன்ற எண்களை பெரும்பாலும் அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் ஏலத்தில் எடுப்பதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஹர்த்திக் ரதி, விளையாட்டு மைதானத்தில் தனியாக பயிற்சி செய்து கொண்டிருந்தார்.
    • ஹர்த்திக் ரதி மீது கம்பம் சரிந்து விழும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.

    அரியானா மாநிலம் ரோக்தக் பகுதியை சேர்ந்தவர் ஹர்த்திக் ரதி (வயது 16). இவர் தேசிய அளவிலான கூடைப்பந்து வீரர்.

    இந்த நிலையில் ஹர்த்திக் ரதி, விளையாட்டு மைதானத்தில் தனியாக பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் கூடைப்பந்து வளையத்தில் தொங்க முயற்சித்தார்.

    இதில் அந்த கம்பம் திடீரென்று வளைந்து சரிந்து ஹர்த்திக் மீது விழுந்தது. படுகாயம் அடைந்த அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    ஹர்த்திக் ரதி மீது கம்பம் சரிந்து விழும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. மேலும், தடகள வீரருக்கு மரியாதை செலுத்தும் வகையில் அரியானா ஒலிம்பிக் சங்கம் அடுத்த மூன்று நாட்களுக்கு விளையாட்டு நிகழ்வுகளை நிறுத்தி வைத்துள்ளது.

    • இரவு 12 மணிக்கு மனைவியை எழுப்பி பிறந்தநாள் கேக்கை வெட்ட வைக்கலாம் என்று நினைத்தார்.
    • இரவு 11 மணிக்கு அலாரம் அடித்ததும், சத்தம்கேட்டு எழுந்த மனைவி அதனை ஆப் செய்துவிட்டு தூங்கினார்.

    பொதுவாக நமக்கு நெருங்கியவர்களின் பிறந்தநாளில் அவர்களுக்கு தெரியாமல் இன்ப அதிர்ச்சியூட்டும் விதமாக திடீரென வாழ்த்து தெரிவிப்போம். அந்த வகையில் கணவர் ஒருவர் தனது மனைவியின் பிறந்தநாளுக்கு அவருக்கு தெரியாமல் முன்கூட்டியே பிரிட்ஜில் கேக் வாங்கி வைத்தார்.

    இரவு 12 மணிக்கு மனைவியை எழுப்பி பிறந்தநாள் கேக்கை வெட்ட வைக்கலாம் என்று நினைத்தார். இவரது மனைவியோ இரவு 9½ மணிக்கே தூங்கிவிட்டார். பின்னர் இவரும் செல்போனில் படம் பார்த்துக்கொண்டே ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்று விட்டார்.

    இதையடுத்து இரவு 11 மணிக்கு அலாரம் அடித்ததும், சத்தம்கேட்டு எழுந்த மனைவி அதனை ஆப் செய்துவிட்டு தூங்கினார். இந்நிலையில் காலையில் எழுந்து பிரிட்ஜை திறந்த மனைவிக்கு கேக்கை பார்த்ததும் அதிர்ச்சி. அப்போது அவர் கோபப்படாமல் சிரித்தபடி கணவர் தனக்காக செய்ததை நினைத்து சந்தோஷப்பட்டார். இதையடுத்து கேக் வெட்டுவதுபோன்ற வீடியோ எடுத்து தனது கணவருக்கு காண்பித்தார்.

    இந்த வீடியோவை அவர் சமூக வலைதளங்களில் பதிவிட லட்சக்கணக்கானோரின் விருப்பங்களை பெற்று வைரலாகி வருகிறது.



    • அயோத்தி ராமர் கோவிலில் இன்று கொடியேற்றப்பட்டது.
    • குருஷேத்திர மண்ணில் பாஞ்சஜன்ய நினைவுச்சின்னம் திறக்கப்பட்டது.

    சண்டிகர்:

    சீக்கிய மத குருவான தேஜ் பகதூரின் சிறப்பு நாணயம் மற்றும் தபால் தலை வெளியிடும் விழா அரியானா மாநிலத்தின் குருஷேத்திரத்தில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று சிறப்பு நாணயம் மற்றும் தபால் தலையை வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:

    இன்று இந்தியாவின் பாரம்பரியத்தின் அற்புதமான நாள். காலை அயோத்தியில் இருந்தேன். மாலை, பகவத்கீதை நகரமான குருஷேத்திரத்தில் இருக்கிறேன்.

    ஸ்ரீ குரு தேஜ் பகதூரின் 350வது தியாக நாளில் நாம் அனைவரும் இங்கு அஞ்சலி செலுத்துகிறோம்.

    ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்ற கோடிக்கணக்கான மக்களின் விருப்பம் நிறைவேற வேண்டும் என வேண்டிக் கொண்டேன். அந்த வேண்டுதல் நிறைவேறியுள்ளது. அன்றே ராமர் கோவிலுக்கு ஆதரவான தீர்ப்பு வந்தது.

    இன்று அயோத்தி ராமர் கோவிலில் கொடியேற்றப்பட்ட நிலையில், சீக்கிய சமூகத்தினரிடம் இருந்து ஆசிகளை பெறும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது.

    குருஷேத்திர மண்ணில் இன்று பாஞ்சஜன்ய நினைவுச்சின்னம் திறக்கப்பட்டது.

    குரு தேஜ் பகதூர் உண்மை, நீதி மற்றும் நம்பிக்கையைப் பாதுகாப்பதை தனது மதமாக கருதினார். அதற்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார்.

    நாம் அமைதியையே விரும்புகிறோம். பாதுகாப்பில் சமரசத்தை அல்ல. இதற்கு சிறந்த உதாரணம் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை என தெரிவித்தார்.

    • ஸ்கை டைவிங் சாகசத்தை செய்த சுஹாத் சிங்கின் செயல் நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
    • மேகங்களைத் தொட்ட பிறகு "நான் தைரியத்தைக் கண்டேன்" என்று முதியவர் கூறினார்.

    அரியானாவைச் சேர்ந்த சுஹாத் சிங் என்ற 80 வயது முதியவர்ஸ்கை டைவிங் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகியது.

    80 வயதில் 15,000 அடி உயரத்தில் இருந்து குறித்து ஸ்கை டைவிங் சாகசத்தை செய்த சுஹாத் சிங்கின் செயல் நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

    அந்த வீடியோவில், ஸ்கை டைவிங் சாகசத்தை செய்வதற்கு முன்பு முன்பு அவர் சிரித்தது முதல் மேகங்களைத் தொட்ட பிறகு "நான் தைரியத்தைக் கண்டேன்" என்று சொல்வது என அந்த எல்லா தருணங்களும் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

    ஆர்வம், தைரியம் மற்றும் சிறிது பைத்தியக்காரத்தனம் ஆகியவை வயதைப் பொருட்படுத்தாமல், மனதை இளமையாக வைத்திருக்கும் என்பதற்கு இந்த வீடியோ ஒரு உதாரணமாக அமைந்துள்ளது.

    • வீட்டில் தூங்கிகொண்டிட்ருந்த்த சப்னா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    • அங்கு வந்த குற்றவாளிகள், போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினர்.

    அரியானா மாநிலம் ரோஹ்தக்கின் காஹ்னி கிராமத்தை சேர்ந்த 23 வயதான ஆட்டோ ஓட்டுநர் சூரஜை, சப்னா (23 வயது) தனது குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து மணந்தார்.

    இந்த தம்பதியருக்கு ஒரு மகள் உள்ளார். இதுநாள் வரை காஹ்னி கிராமத்திலிருந்து விலகி வாழ்ந்து வந்த தம்பதி அண்மையில் மீண்டும் கிராமத்திற்கு திரும்பினர்.

    இந்நிலையில் கடந்த புதன்கிழமை இரவு 9:40 மணியளவில், சப்னாவின் சகோதரர் சஞ்சு மற்றும் அவரது மூன்று நண்பர்கள் தம்பதியின் வீட்டிற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

    இதில் வீட்டில் தூங்கிகொண்டிட்ருந்த்த சப்னா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சூரஜின் சகோதரர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு உள்ளானார். தாக்குதல் நடந்த நேரத்தில் சூரஜ் வீட்டில் இல்லாததால் உயிர்த்தப்பினார்.

    அங்கிருந்து தப்பிய கும்பல் அன்றைய இரவே சூரஜையும், லடோத்-போஹர் சாலையில் வைத்து கொல்ல திட்டமிட்டுள்ளதாகவும், அவரை வழிமறிக்கத் தயாராகி வருவதாகவும் கிடைத்த தகவலை அடுத்து, போலீசார் அங்கு சென்றனர்.

    அங்கு வந்த குற்றவாளிகள், போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். தற்காப்புக்காக போலீசார் நடத்திய பதிலடி தாக்குதலில், நான்கு குற்றவாளிகளும் காயமடைந்தனர்.

    குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு, சிகிச்சைக்காக ரோஹ்தக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.   

    • சம்பவத்தில் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
    • ஆதாரங்கள் அடிப்படையில் அல்பலா குழும தலைவர் ஜவாத் அகமது சித்திக்கை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.

    டெல்லி செங்கோட்டை அருகே கடந்த வாரம் திங்கள்கிழமை நடந்த கார் குண்டுவெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று இருவர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.

    இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) விசாரித்து வருகிறது. இது தற்கொலைப்படை தாக்குதல் என NIA நேற்று அறிவித்தது. சம்பவத்தில் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    குண்டுவெடிப்புக்குக் காரணமான டாக்டர் உமர் உன் நபி உட்படப் கைது செய்ப்பட்ட மருத்துவர்கள் பணியாற்றிய அரியானாவின் அல்பலா பல்கலைக்கழகம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுத்தன.

    இந்நிலையில் டெல்லி போலீசார் பதிந்த எப்ஐஆரின் அடிப்படையில் நேற்று அல்பலா பல்கலைக்கழகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

    இதன்போது சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள் அடிப்படையில் அல்பலா குழும தலைவர் ஜவாத் அகமது சித்திக்கை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.

    பரிதாபாத்தில் உள்ள அல்பலா பல்கலைக்கழகம், யுஜிசி அங்கீகாரத்தைப் பொய்யாகக் கோரியுள்ளது என்றும் அல்பலா பல்கலைக்கழகம் யுஜிசி மானியங்களைப் பெற தகுதியற்றது என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பல்கலைக்கழக அறக்கட்டளையின் மூலம் திரட்டப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நிதி அவரது குடும்பத்திற்குச் சொந்தமான நிறுவனங்களுக்குத் திருப்பி விடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

    • இது தற்கொலைப்படை தாக்குதல் என NIA அறிவித்தது.
    • பாதாள உலகில் இருந்தாலும், அவர்களைத் தேடி கண்டுபிடித்து கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்வோம்.

    டெல்லி செங்கோட்டை அருகே கடந்த வாரம் திங்கள்கிழமை நடந்த கார் குண்டுவெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று இருவர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.

    இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) விசாரித்து வருகிறது. இது தற்கொலைப்படை தாக்குதல் என NIA நேற்று அறிவித்தது. சம்பவத்தில் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    இந்நிலையில் அரியானாவில் நேற்று நடைபெற்ற வடக்குமண்டல கவுன்சில் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில், "டெல்லி குண்டுவெடிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகள், பாதாள உலகில் இருந்தாலும், அவர்களைத் தேடி கண்டுபிடித்து கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்வோம்.

    அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை, நம் நாட்டில் இதுபோன்ற தாக்குதலை யாரும் நினைத்துப் பார்க்கக்கூடத் துணியக்கூடாது என்ற செய்தியை உலகுக்குக் காட்டும்'' என்று தெரிவித்தார். 

    • இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ஷபாலி வர்மா 87 ரன்கள் விளாசியதுடன், 2 விக்கெட்டும் வீழ்த்தினார்.
    • அரியானாவைச் சேர்ந்த ஷபாலி வர்மாவுக்கு சொந்த ஊரில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    சண்டிகர்:

    சமீபத்தில் நடந்த பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் முறையாக மகுடம் சூடியது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் இந்திய இளம் வீராங்கனை ஷபாலி வர்மா 87 ரன்கள் விளாசியதுடன், 2 விக்கெட்டும் வீழ்த்தி ஆட்ட நாயகியாக ஜொலித்தார்.

    அரியானாவைச் சேர்ந்த ஷபாலி வர்மாவுக்கு சொந்த ஊரில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், அவர் நேற்று அரியானா முதல் மந்திரி நயாப் சிங் சைனியைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது அவரது சாதனையைப் பாராட்டி ரூ.1½ கோடியை ஊக்கத்தொகையாக வழங்கினார்.

    மேலும் அரியானா மாநில பெண்கள் ஆணையத்தின் தூதராகவும் நியமிக்கப்பட்டார்.

    ஷபாலியின் சாதனை, அரியானா மாநிலத்தின் அனைத்து மகள்களுக்கும் உத்வேகம் அளிக்கிறது. உங்களது அற்புதமான செயல்பாட்டின் மூலம் தேசத்தின் பெயரை பிரகாசிக்க செய்வதில் நீங்கள் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகிறேன் என நயாப் சிங் சைனி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியுள்ளார்.

    • ஜம்மு-காஷ்மீர் டாக்டரின் லாக்கரில் துப்பாக்கி, வெடிபொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
    • அவர் கொடுத்த தகவலின்பேரல் அரியானாவில் 2500 கிலோ ஆர்.டி.எக்ஸ். வெடிமருந்து சிக்கியது.

    ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் துணை ராணுவப் படையினர் மற்றும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த அதீல் அகமது ராதர் என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் டாக்டர் ஆவார்.

    காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள டாக்டர் அதீல் அகமதுவுக்கு சொந்தமான லாக்கரில் போலீசார் சோதனை நடத்தினார்கள். அங்கு பதுக்கி வைத்திருந்த ஏ.கே.47 ரக துப்பாக்கி மற்றும் பிற வெடிபொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதையடுத்து அவரிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் தீவிரவாதிகளுடன் சதித் திட்டத்தில் ஈடுபட்டு இந்தியாவில் பல இடங்களில் தாக்குதல் நடத்துவதற்காக ஆர்.டி.எக்ஸ். வெடிமருந்துகளை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

    இந்த வெடிமருந்துகளை அரியானா மாநிலம் பரீதாபாத்தில் பதுக்கி வைத்திருந்ததாக டாக்டர் அதீல் அகமது ராதர் தெரிவித்தார். இதையடுத்து அவர் சொன்ன இடத்துக்கு சென்று போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 300 கிலோ ஆர்.டி.எஸ். வெடிமருந்து பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இது சக்தி வாய்ந்த வெடிமருந்து ஆகும். அதை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான டாக்டர் அதீல் அகமது தற்போது போலீஸ் காவலில் உள்ளார்.

    இந்தியாவை தகர்ப்பதற்காக ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை சேமித்து வைப்பதிலும், ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்வதிலும் அதீல் அகமது முக்கிய பங்காற்றி உள்ளார். இது தொடர்பாக அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    போலீசாரின் தீவிர விசாரணையில் புல்வாமா மாவட்டத்தில் உள்ள கோவில் பகுதியை சேர்ந்த முசாமில் ஷகீல் என்ற மற்றொரு டாக்டருக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இவர் வாடகைக்கு இருந்த வீட்டில் 2563 கிலோ வெடிபொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    சமீப ஆண்டுகளாகவே காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் அவ்வப்போது வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. அங்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ள வெடிமருந்துகளை விட தற்போது கைப்பற்றி இருப்பது அதிகம் ஆகும். இந்த நிலையில் டாக்டர்கள் அதீல் அகமது, முகாமில் ஷகீல் ஆகிய 2 பேரையுமே போலீசார் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த 2 டாக்டர்களும் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளான ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் கஸ்வத்-உல்-ஹிந்த் ஆகிய அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது. கைதான டாக்டர்களுக்கு வேறு யாருடன் எல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது தொடர்பான விசாரணை தீவிரப்படுத் தப்பட்டுள்ளது.

    ஜம்மு காஷ்மீருக்கு வெளியே அரியானா பகுதியில் வெடிபொருட்கள், ஆயுதங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதால் இந்த விவகாரத்தில் மேலும் பலர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும், இன்னும் பதுக்கி வைக்கப்பட்டுள்ள வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துஉள்ளன.

    • அவரது வீட்டின் வெளியே ஒரு கும்பல் கூச்சல் போட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்துகொண்டிருந்தது.
    • ரமேஷ் குமார் அவர்களை கண்டித்து சத்தம் போடாமல் இருக்க கூறியுள்ளார்.

    அரியானா மாநிலத்தில் துணை காவல் ஆய்வாளர் ஒருவர் வீட்டின் வெளியே அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.

    ஹிஸார் பகுதியில் வசித்து வரும் அரியானா காவல்துறையின் துணைஆய்வாளராகப் (SI) பணியாற்றி வந்த 57 வயதான ரமேஷ் குமார் அடுத்த ஜனவரியில் ஓய்வு பெற இருந்தார்.

    இந்நிலையில் நேற்று இரவு சுமார் 11 மணியளவில், அவரது வீட்டின் வெளியே ஒரு கும்பல் கூச்சல் போட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்துகொண்டிருந்தது.

    ரமேஷ் குமார் அவர்களை கண்டித்து சத்தம் போடாமல் இருக்க கூறியுள்ளார். இதையடுத்து அங்கிருந்து சென்ற அந்த கும்பல் சிறிது நேரத்தில் மீண்டும் திரும்பி வந்தது.

    ரமேஷ் குமாரை அவரின் வீட்டின் வெளியே வைத்து செங்கல் மற்றும் தடிகளால் அந்த கும்பல் தாக்கியுள்ளது. தலையில் பலத்த காயம் அடைந்த ரமேஷ் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இந்தச் சம்பவம் குறித்து 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் 5 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

    ரமேஷ் குமரை தாக்கியவர்கள் அதே குடியிருப்பு பகுதியில் வசிப்பவர்கள் என்று தெரியவந்துள்ளது. குற்றவாளிகள் பயன்படுத்திய ஒரு கார் மற்றும் ஸ்கூட்டரையும் காவல்துறை கைப்பற்றியுள்ளது.

    உயிரிழந்த ரமேஷ் குமாருக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளது குறிப்பிடத்தக்கது.  

    • அரியானா தேர்தலில் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு.
    • பீகாரை பற்றி சொல்வதற்கு ஏதுமில்லை. ஆகவே, கதையை அரியானாவுக்கு மாற்றுகிறார்.

    வாக்கு திருட்டு தொடர்பாக தன்னிடம் ஹைட்ரஜன் குண்டு உள்ளது. அதை பயன்படுத்தினால், மோடி ஆட்டம் கண்டுவிடுவார் என ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று அரியானாவில் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டதாக குற்றம்சாட்டினார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தேசிய மற்றும் மாநில அளவில் நடந்த வாக்கு திருட்டு மோசடி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அரியானா தேர்தலில் முறைகேடு நடைபெற்றது. காங்கிரசின் வெற்றியை பா.ஜனதாவின் வெற்றியாக மாற்றம் செய்ய திட்டம் வகுக்கப்பட்டது.

    அரியானாவில் ஒரே நபர் 10 வாக்குச்சாவடியில் 22 முறை வாக்களித்து உள்ளார். 22 முறை வாக்களித்த நபரின் புகைப்படம் பிரேசிலை சேர்ந்த மாடல் ஒருவருடையது.

    அரியானாவில் மொத்த வாக்காளர்களில் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டு உள்ளன. மொத்த வாக்குகளில் 12.5 சதவீத வாக்குகள் திருடப்பட்டுள்ளது. 8-ல் ஒரு வாக்கு அரியானா தேர்தலில் திருடப்பட்டது. முகவரியே இல்லாமல் 93 ஆயிரம் வாக்குகள் இருந்தது.

    ஒரே நபர் வெவ்வேறு அடையாள அட்டைகளை பயன்படுத்தி வாக்கு அளித்துள்ளனர். பாதாஸ்பூர் என்ற இடத்தில் 14 முறை ஒருவர் வாக்கு அளித்துள்ளார். வாக்கு திருட்டால்தான் அரியானாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

    ஜனநாயகத்தை அழிப்பதில் பா.ஜனதாவின் புதிய ஆயுதம் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.) ஆகும். மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் இதே மோசடி நடந்தது. அனைத்து கருத்து கணிப்பும் காங்கிரசுக்கே வெற்றி என கூறின. மோசடிகள் நடக்காமல் இருந்தால் அரியானாவில் காங்கிரஸ் வெற்றி பெற்று இருக்கும்.

    வாக்கு திருட்டு விவகாரத்தில் தேர்தல் ஆணையம் பொய் சொல்கிறது. முக்கிய கண்காணிப்பு கேமரா ஆவணங்களை தேர்தல் ஆணையம் அழித்து உள்ளது. முறைகேடுகளால்தான் கண்காணிப்பு கேமரா காட்சிகளை தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை. போலி புகைப்படங்களை நீக்கும் மென்பொருள் வசதி தேர்தல் ஆணையத்திடம் உள்ளது. ஒரே நபர் ஒரே நாளில் பல வாக்குகளை அளிக்க தேர்தல் ஆணையம் எப்படி அனுமதித்தது? வாக்கு திருட்டின் மூலம் பீகாரிலும் ஆட்சியை பிடிக்க பா.ஜனதா திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் வாக்கு திருட்டு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகிறது.

    வாக்கு திருட்டில் ஈடுபடும் மோடியும், அமித் ஷாவும் பதவியில் இருக்க தகுதியற்றவர்கள். பிரதமர் மோடி ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கிவிட்டார். வாக்கு திருட்டு ஒரு தொகுதியிலோ ஒரு மாவட்டத்திலோ மட்டும் அல்ல நாடு முழுவதும் நடக்கிறது.

    இவ்வாறு ராகுல்காந்தி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

    இதற்கு பாஜக தலைவரும், மத்திய அமைச்சருமான கிரண் ரிஜிஜு பதில் அளித்துள்ளார். கிரண் ரிஜிஜு "தேர்தல் பீகாரில் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் ராகுல் காந்தி அரியானா பற்றி கதைகளை சொல்லிக் கொண்டிருக்கிறார். பீகாரை பற்றி சொல்வதற்கு ஏதுமில்லை. ஆகவே, கதையை அரியானாவுக்கு மாற்றுகிறார்" எனத் தெரிவித்துள்ளார்.

    ×