என் மலர்
பீகார்
- டேங்கரில் இருந்த சுமார் 200 பீர் பெட்டிகள் கலால் காவல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
- பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்கள் அருணாச்சல பிரதேசத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது
பீகார் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. இதனால் அம்மாநிலத்தில் கள்ளச்சாராய விற்பனை பெருமளவில் அதிகரித்துள்ளது. கள்ளச்சாராயம் குடித்து பலர் அம்மாநிலத்தில் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், பீகார் மாநிலத்தில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை கடத்தி வந்த பெட்ரோலிய டேங்கர் லாரியை அதிகாரிகள் பிடித்துள்ளனர்.
பெட்ரோலிய டேங்கர் லாரியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை கடத்தி கொண்டு வரப்பட்டதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். லாரியின் ஓட்டுநர் தப்பித்து ஓடிய நிலையில் நாகாலாந்து மாநில பதிவு எண் கொண்ட டேங்கர்லாரியை போலீசார் கைப்பற்றினர்.
இந்துஸ்தான் பெட்ரோலிய டேங்கரில் இருந்த சுமார் 200 பீர் பெட்டிகள் கலால் காவல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்கள் அருணாச்சல பிரதேசத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பீகாரில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளதால் அடிக்கடி சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் மாநிலத்திற்குள் கொண்டு வரப்படுகின்றன. சில சமயங்களில் ஆம்புலன்ஸ்களில் கூட மதுபாட்டில்கள் கொண்டு வந்த சம்பவங்களும் நடந்துள்ளன.
- பீகாரில் கள்ளச்சாராய விற்பனை பெருமளவில் அதிகரித்துள்ளது.
- ஜார்கண்ட் மாநிலத்தின் எல்லை பகுதியில் இருந்து பீகாருக்குள் வரும் வாகங்களையே போலீசார் சோதனை செய்தனர்.
பீகார் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. இதனால் அம்மாநிலத்தில் கள்ளச்சாராய விற்பனை பெருமளவில் அதிகரித்துள்ளது.
அண்மையில் கூட பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் 37 பேர் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மாற்றுத்திறனாளி ஒருவர் தனது செயற்கை கால்களுக்குள் மது பாட்டில்களை மறைத்து வைத்து கடத்திய போது போலீசில் பிடிபட்டுள்ள சம்பவம் பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பங்கா மாவட்டத்தில் ஜார்கண்ட் மாநிலத்தின் எல்லை பகுதியில் இருந்து பீகாருக்குள் வரும் வாகனங்களை போலீசார் சோதனை செய்து வந்தனர். அப்போது மகேஷ்குமார் என்ற மாற்றுத்திறனாளி இளைஞர் ஸ்கூட்டியில் அவ்வழியே வந்துள்ளார்.
போலீசாரை பார்தததும் பதட்டப்பட்ட அந்த இளைஞரை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அப்போது அவர் அணிந்திருந்த செயற்கை காலில் மறைத்து வைத்திருந்த வெளிநாட்டு ரக மதுபாட்டில்களை போலீசார் கைப்பற்றினர்.
பின்னர் அவரின் ஸ்கூட்டியை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 15 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து மதுபாட்டில்களை சட்டவிரோதமாக கடத்தி வந்த மாற்றுத்திறனாளி இளைஞரை கைது செய்த போலீசார் இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஷூ கவரை அமைச்சர் அணிந்திருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.
- இப்போது நீங்கள் பீகாரின் சுகாதார அமைப்பை கற்பனை செய்து பாருங்கள்.
பீகார் சுகாதாரத்துறை அமைச்சர் மங்கள் பாண்டே பெகுசராய்யில் உள்ள சதார் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த சுகாதார பணியாளர்கள் அமைச்சருக்கு சர்ஜிக்கல் தொப்பியை கொடுப்பதற்கு பதிலாக ஷூ கவரை கொடுத்துள்ளனர். அமைச்சரும் அதனை கவனிக்காமல் ஷூ கவரை தலையில் அணிந்துள்ளார்.
ஷூ கவரை அமைச்சர் அணிந்திருந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாக தேஜஸ்வி யாதவ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "கீழ்கண்ட படத்தில் இருப்பவர் பீகாரின் சுகாதாரத் துறை அமைச்சர் மங்கள் பாண்டே. சர்ஜிக்கல் தொப்பிக்கு பதிலாக ஷூ கவரை சுகாதார ஊழியர்கள் அவருக்கு கொடுத்துள்ளனர். அமைச்சரும் எதுவும் தெரியாமல் ஷூ கவரை அணிந்துள்ளார். இப்போது நீங்கள் பீகாரின் சுகாதார அமைப்பை கற்பனை செய்து பாருங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
- ரூ.30,000 கோடி மதிப்புள்ள கள்ளச்சாராய பொருளாதாரம் பீகாரில் இயங்கி வருகிறது.
- பீகாரின் மூலை முடுக்கெங்கும் மதுக்கடைகளை திறந்த நிதிஷ்குமார் தற்போது மகாத்மா வேஷம் போடுகிறார்.
பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் இதுவரை 37 பேர் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து முதல்வர் நிதிஷ்குமாரை எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தேஜஸ்வி யாதவ் அவரது எக்ஸ் பதிவில், "பூரண மதுவிலக்குதான் நிதிஷ்குமாரின் மிகப்பெரிய ஊழல். சுமார் ரூ.30,000 கோடி மதிப்புள்ள கள்ளச்சாராய பொருளாதாரம் பீகாரில் இயங்கி வருகிறது. நிதிஷ்குமாரின் கட்சியினர்தான் இதன்மூலம் அதிக பலன்களை பெற்று வருகின்றனர். தனது முதல் இரு ஆட்சிக்காலத்தில் பீகாரின் மூலை முடுக்கெங்கும் மதுக்கடைகளை திறந்தவர் தற்போது மகாத்மா வேஷம் போடுகிறார்.
தேசிய குடும்ப சுகாதார ஆய்வு அறிக்கையின்படி, பீகாரில் மது தடை செய்யப்பட்டிருந்தாலும், மகாராஷ்டிராவை விட பீகாரில் அதிகமானோர் மது அருந்துகின்றனர்.
தற்போது பீகாரில் 15.5 சதவீதம் பேர் மது அருந்துகின்றனர். மது விற்பனைக்கு தடை இல்லாத மகாராஷ்டிராவில் வெறும் 13.9 சதவீதம் பேர் தான் மது அருந்துகின்றனர்.
பீகாரில் கள்ளச்சாராயம் தொடர்பாக சராசரியாக ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 275 ரெய்டுகள் நடத்தப்படுகின்றன. அதாவது பீகார் காவல்துறையும் மதுவிலக்கு துறையும் ஒவ்வொரு மாதமும் சுமார் 2 லட்சம் இடங்களிலும், ஒவ்வொரு ஆண்டும் 24 லட்சம் இடங்களிலும் சோதனை நடத்துகின்றன. ஆனால் இதற்குப் பிறகும், சட்டவிரோத கள்ளச்சாராய விற்பனை தடையின்றி தொடர்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.
- கள்ளச்சாராயம் காய்ச்சியது தொடர்பாக 8 பேரை கைது செய்து போலீசார் விசாரணை.
- மாகர் மற்றும் அவுரியா ஊராட்சியைச் சேர்ந்த 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்.
பீகார் மாநிலம் சிவான் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் நேற்று 4 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில், காலை நிலவரப்படி கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்கள் எண்ணிக்கை உயர்ந்தது. அதன்படி, சிவான் மற்றும் சரண் மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்தவர்களில், மேலும் 12 பேர் பலியானதால் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், ஏற்கனவே 20 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை 28ாகு உயர்ந்துள்ளது.
கள்ளச்சாராயம் காய்ச்சியது தொடர்பாக 8 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், மாகர் மற்றும் அவுரியா ஊராட்சியைச் சேர்ந்த 2 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளச்சாராயம் குடித்து சுமார் 49 பேர் கடும் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பலவர உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
- கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
- கள்ளச்சாராயம் காய்ச்சியது தொடர்பாக 8 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பீகார் மாநிலம் சிவான் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் நேற்று 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. சிவான் மற்றும் சரண் மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்தவர்களில் 20 பேர் உயிரிழந்தனர்.
மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் மேலும் 12 பேர் பலியானதால் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
கள்ளச்சாராயம் காய்ச்சியது தொடர்பாக 8 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அவசர சிகிச்சை பிரிவில் நின்றுக் கொண்டிருந்தவரை பார்த்து டாக்டர்கள் திகைத்தனர்.
- வினோத காட்சியை மக்கள் பதிவு செய்து கொண்டிருந்தனர்.
பீகார் மாநிலம் பாகல்பூரை சேர்ந்த நபரை உலகின் மிக விஷ பாம்புகளில் ஒன்று கடித்தது. பாம்பு கடிப்பட்ட நபர் அடுத்து செய்த விஷயத்தை யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது.
பிரகாஷ் மண்டல் என்ற நபர், தன்னை கடித்த விஷ பாம்பின் வாயை பிடித்து, கழுத்தில் சுற்றிக் கொண்டு நேரடியாக மருத்துவமனைக்குச் சென்றார். பாம்பு கடித்த நிலையில், அதனை கையில் வைத்துக் கொண்டு அவசர சிகிச்சை பிரிவில் நின்றுக் கொண்டிருந்த நபரை பார்த்து டாக்டர்களும், நோயாளிகளும் திகைத்தனர்.
சிறிது நேரம் காத்திருந்த நபர் வலி தாங்க முடியாமல், கையில் பாம்பை வைத்துக் கொண்டு அங்கேயே படுத்துக் கொண்டு சிகிச்சைக்காக காத்திருந்தார். மருத்துவமனை வளாகத்தில் நடக்கும் வினோத காட்சியை மக்கள் பதிவு செய்து கொண்டிருந்தனர்.

நோயாளிகளின் உதவியாளர்கள் அந்த நபரின் கையிலிருந்து பாம்பு தப்பித்துவிட்டால், எதுவும் நடக்கலாம் என்று பயந்து தூரத்தில் நின்று கொண்டிருந்தனர். வளாகத்தில் உள்ள அனைவரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அங்கிருந்த வேறொரு நபர் பிரகாஷின் கையைப் பிடித்து அவரை ஒதுக்குப்புறமான பகுதிக்கு அழைத்துச் சென்றார்.
கையில் பாம்பை வைத்திருக்கும் நபருக்கு எப்படி சிகிச்சையளிக்க முடியும் என்ற அச்சம் கலந்த குழப்பத்தில் மருத்துவர்கள் காணப்பட்டனர். இதைத் தொடர்ந்து சிகிச்சைக்கு தொடர்ந்து தாமதமானதை அடுத்து பிரகாஷ் அந்த பாம்பை விடுவித்துள்ளார். அவருக்கு அதன்பிறகு சிகிச்சை அளிக்கப்பட்டதா, அவரின் தற்போதைய நிலை கேள்விக்குறியாகவே உள்ளது.
- முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கை மர்ம நபர்கள் சுட்டுக்கொலை செய்துள்ளனர்.
- பாபா சித்திக் கொலைக்கு பிரபல தாத்தா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுள்ளது
மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் மும்பையில் நேற்றைய தினம் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
48 வருட காலமாக காங்கிரசில் இருந்துவந்த பாபா சித்திக் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் ஆட்சியில் பங்கு வகிக்கும் அஜித் பவார் தேசியவாத கட்சிக்குத் தாவினார்.
பாந்த்ரா கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ள தனது மகன் ஜீஸ்ஹான் அலுவலகத்தில் இருந்து வெளியே வரும்போது பாபா சித்திக்கை மர்ம நபர்கள் சுட்டுக்கொலை செய்துள்ளனர்.
இந்நிலையில் பாபா சித்திக் கொலை வழக்கில் தர்மராஜ் ராஜேஷ் காஷ்யப் (19), குர்மாயில் பல்ஜித் சிங் (23) ஆகிய 2 பேரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த இருவருடன் இணைந்து குற்றத்தில் ஈடுபட்ட 3 ஆவது நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பாபா சித்திக் கொலைக்கு பிரபல தாத்தா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுள்ளது. நாடு முழுவதும் உள்ள பல ரவுடிகளுடன் லாரன்ஸ் பிஷ்னோய்க்கு தொடர்பு உள்ளது.
இருப்பினும், இந்த கொலையில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுக்கு தொடர்பு இருப்பதை போலீசார் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.
இந்நிலையில், சட்டம் அனுமதித்தால், லாரன்ஸ் பிஷ்னோயின் ஒட்டுமொத்த கும்பலையும் 24 மணி நேரத்தில் அழித்துவிடுவேன் என்று பீகார் எம்பி பப்பு யாதவ் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக பேசிய பப்பு யாதவ், "சிறையில் இருக்கும் ஒரு குற்றவாளி (லாரன்ஸ் பிஷ்னோய்) அரசாங்கத்திற்கு சவால் விடுகிறான். மக்களைக் கொன்று கொண்டிருக்கிறான், எல்லோரும் அமைதியாக இதை பார்த்து கொண்டிருக்கிறோம்.
பஞ்சாபி பாடகர் சித்து மூஸ் வாலா மற்றும் கர்னி சேனா தலைவரின் கொலையில் பிஷ்னோய் முக்கியப் பங்கு வகித்துள்ளார். தற்போது பாபா சித்திக் கொலை வழக்கில் அவன் சம்பந்தப்பட்டுள்ளான்" என்று தெரிவித்துள்ளார்.
- தீய எண்ணம் கொண்டவர்கள் அனைவரும் அழிக்கப்பட வேண்டும்.
- தீயவர்களுக்கு எதிராக செயல்பட பெண்களை ஊக்கப்படுத்தினார்.
பீகார் மாநிலம் சீதாமர்ஹி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற விஜயதசமி கொண்டாட்டத்தின் போது பாஜக எம்எல்ஏ மிதிலேஷ் குமார் சிறுமிகளுக்கு வாள்களை வழங்கினார்.
சீதாமர்ஹி நகரில் உள்ள கப்ரோல் சாலையில் நடைபெற்ற பூஜை ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், "எங்கள் சகோதரிகளை யாரேனும் தீயவர்கள் தொடத் துணிந்தால், அவரது கை இந்த வாளால் வெட்டப்படும்."
"நம் சகோதரிகள் கைகளை வெட்டும் அளவுக்கு உருவாக்க வேண்டும், தேவை இருப்பின் நான் மற்றும் நாம் அனைவரும் இதை செய்ய வேண்டும். நம் சகோதரிகளுக்கு எதிராக தீய எண்ணம் கொண்டவர்கள் அனைவரும் அழிக்கப்பட வேண்டும்," என்று தெரிவித்தார்.

மிதிலேஷ் குமார் தனது முயற்சிக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். மேலும் தீயவர்களுக்கு எதிராக செயல்பட மக்களை குறிப்பாக பெண்களை ஊக்கப்படுத்தினார். இதைத் தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு வாள்கள் வழங்கப்பட்டன.
பூஜைக்கு வந்த இடத்தில் சட்டமன்ற உறுப்பினர் மிதிலேஷ் குமார் பல துப்பாக்கிகள், வாள்கள் மற்றும் பிற ஆயுதங்களை வைத்து வணங்கினார். சிதாமர்ஹி தொகுதியின் பாஜக எம்எல்ஏ-வான மிதிலேஷ் குமார் நவராத்திரியின் தொடக்கத்தில் பல துர்கா பூஜை பந்தல்களுக்குச் சென்று வாள்களை விநியோகித்தார்.
நவராத்திரியின் போது ஆயுத வழிபாடு இந்து சமூகத்தின் ஒரு பிரிவினரிடையே ஒரு பாரம்பரியம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- கழிவறையில் இருந்த தண்ணீர் பைப்புகள், பேட்மிட்டன் தரைவிரிப்புகள், தண்ணீர் பவுண்டைன் அலங்கார விளக்குகள், சோபாக்களை காணவில்லை
- சிசிடிவி கேமராக்களின் ஹார்ட் டிஸ்க்குகளும் காணாமல் போயுள்ளது என்றும் பாஜக தெரிவிக்கிறது.
பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம்[RJD] கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ். இவர் கடந்த 2022 ஆகஸ்ட் முதல் 2024 ஜனவரி வரை பீகாரின் துணை முதல்வராக இருந்தார். அந்த பதவியில் இருந்து விலகியதும் துணை முதல்வர் பங்களாவை காலி செய்யும்போது அங்கிருந்த சோபா, ஏசி உள்ளிட்டவற்றை திருடிச் சென்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ள பாஜக, தேஜஸ்வி இல்லத்தை காலி செய்து செல்லும்போது போயிருந்த ஏசி, லைட்கள், கழிவறையில் இருந்த தண்ணீர் பைப்புகள், பேட்மிட்டன் கோர்ட்டில் விரிக்கப்பட்டிருந்த தரைவிரிப்புகள், தண்ணீர் பவுண்டைன் அலங்கார விளக்குகள், சோபாக்கள் உள்ளிட்டவை எடுத்துக்கொண்டு சென்றாக கூறியுள்ளது.

மொத்தத்தில் அங்கிருந்து செல்லும்போது தேஜஸ்வி அனைத்தையும் உடன் எடுத்து சென்றுள்ளார், இது அவரின் வளர்ப்பு எப்படி இருக்கிறது என்பதைக் காட்டுகிறது, அரசு சொத்தை எப்படித் திருட வேண்டும் என்பதைச் செய்து காட்டியுள்ளார் என்று பீகார் பாஜக ஊடக தலைவர் தானிஷ் சாடியுள்ளார்.
தற்போது பீகாரின் துணை முதல்வராக பதவியேற்றுள்ள பாஜகவை சேர்ந்த சாம்ராட் சவுத்ரி அந்த பங்களாவுக்கு நவராத்திரியில் குடியேறுவதாக இருந்தது. ஆனால் அதை சென்று பார்க்கும்போது அனைத்தும் காணாமல் போயுள்ளது தெரியவந்ததாகவும், அதை நிரூபிக்க முடியாதபடி சிசிடிவி கேமராக்களின் ஹார்ட் டிஸ்க்குகளும் காணாமல் போயுள்ளது என்றும் பாஜக தெரிவிக்கிறது.

இதற்கிடையே பாஜக பொய்கள் மூலம் கீழ்த்தரமான அரசியலைச் செய்துவருவதாக ஆர்.ஜே.டி கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மக்களவை தேர்தலுக்கு முன்னர் ஐக்கிய ஜனதா தள தலைவரும் பெயர் முதல்வருமான நிதிஷ் குமார், ஆர்.ஜே.டி- இந்தியா கூட்டணியில் இருந்து பாஜக கூட்டணிக்கு தாவியது குறிபிடித்தக்கது.
- மக்களவைத் தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முக்கிய காரணமாக இருந்தவர் நிதிஷ் குமார்.
- புகழ் பெற்ற சோசியலிசவாதியும் பீகாரின் முதல்வருமான நிதிஷ் குமார் அவர்களுக்கு..
மத்தியில் ஆளும் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜனதா தள கட்சித் தலைவரும் பீகார் முதல்வருமான நிதஷ் குமாருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தத்தொடங்கியுள்னர்.
கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முக்கிய காரணமாக இருந்தவர் நிதிஷ் குமார். இந்நிலையில் இன்று நடக்க ஜனதா தள கட்சி நிர்வாகிகள் கூட்டத்தை ஒட்டி சோட்டு சிங் என்ற முக்கிய தலைவர் இந்த போஸ்டர்கள், கட் அவுட்கள் மூலம் நிதிஷ் குமாருக்கு பாரத ரத்னா வழங்கப்பட வேண்டும் என்ற தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். இவை கட்சி அலுவலகம் உட்பட வழிநெடுக வைக்கப்பட்டுள்ளன.

அதில் நிதிஷ் குமாருடன் கட்சியை சேர்ந்த தலைவர்கள் படங்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் புகழ் பெற்ற சோசியலிசவாதியும் பீகாரின் முதல்வருமான நிதிஷ் குமார் அவர்களுக்கு பாரத ரத்னா வழங்கப்பட வேண்டும் என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் அவர் மாநிலத்துக்கு செய்தவையும் அதில் பட்டியலிடப்பட்டுள்ளது. இதன் புடைபடங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறன.
- 2014 மக்களவை தேர்தலில் பாஜகவின் வெற்றிக்கு வியூகம் வகுத்துக்கொடுத்தவர் பிரசாந்த் கிஷோர்
- பாஜக ஆட்சிக்கு வந்த பின்பு ஒட்டு மொத்த தேசத்தின் செல்வமும் குஜராத் பக்கம் திரும்பியது.
அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை வகுக்கும் நிபுணர் பிரசாந்த் கிஷோர் தனது சொந்த மாநிலமான பீகாரில் நேற்று முன்தினம் காந்தி ஜெயந்தி அன்று ஜென் சுராஜ் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார். பீகாரில் ஆளும் நிதிஷ் குமாரின் ஜனதா தளம் மற்றும் லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் மீது கடுமையான விமர்சனங்களைத் தெரிவித்து வரும் பிரசாந்த் கிஷோர் பிரதமர் மோடி மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

2014 மக்களவை தேர்தலில் பாஜகவின் வெற்றிக்கு வியூகம் அமைத்து குஜராத் முதல்வராக இருந்த மோடி இந்தியப் பிரதமர் ஆவதில் முக்கிய பங்காற்றிய பிரசாந்த் கிஷோர் தற்போது மோடி குறித்து கூறியுள்ள கருத்துக்கள் கவனம் பெற்று வருகிறது.
கட்சி தொடக்க விழாவின்போது அவர் பேசியதாவது, குஜராத்தின் வளர்ச்சிக்கு மோடி நிறைய செய்திருக்கிறார் என்ற எண்ணத்தில்தான் அவரது பேச்சுகளைக் கேட்டு என்னைப் போன்றவர்கள் பாஜகவுக்கு வாக்களித்தோம்.

ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்த பின்பு ஒட்டு மொத்த தேசத்தின் செல்வமும் குஜராத் பக்கம் திரும்பியது. பீகார் மக்கள் வேலை வேறு மாநிலங்களுக்குப் படையெடுத்துச் செல்கின்றனர். குஜராத்தின் வளர்ச்சிக்காக மக்கள் வாக்களித்தால் பீகார் மக்கள் எப்படி வளர்ச்சி பெற முடியும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.






