என் மலர்
இந்தியா
- தமிழக அரசுக்கு விடுவிக்க வேண்டிய கல்வி நிதியை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தோம்.
- தமிழ்நாட்டில் நடைபெறும் ரெயில்வே பணிகளை விரைவுப்படுத்த வலியுறுத்தினேன்.
சென்னை:
தமிழக சட்டசபையில் நேற்று பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், என்னுடைய அன்பான வேண்டுகோள். ஏனென்றால், எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேசும்போது நாங்கள் என்றைக்கும் இரு மொழிக்கொள்கை விஷயத்தில் ஒற்றுமையாக இருப்போம் என்ற உறுதியைத் தந்திருக்கிறார்.
எதிர்க்கட்சி தலைவர் டெல்லிக்கு சென்றிருப்பதாக செய்தி வந்திருக்கிறது. டெல்லிக்கு சென்றிருக்கும் நேரத்தில் யாரை சந்திக்கப்போகிறார் என்ற அந்த செய்தியும் வந்திருக்கிறது. அப்படி சந்திக்கும் நேரத்தில் இது குறித்து (மொழிக்கொள்கை) அவர் அங்கே வலியுறுத்த வேண்டும் என்ற வேண்டுகோளை வைக்கிறேன் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமித் ஷாவுடனான சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில்,
* தமிழக அரசுக்கு விடுவிக்க வேண்டிய கல்வி நிதியை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தோம்.
* தமிழகத்தில் இருமொழி கொள்கையை தொடர வேண்டும் என வலியுறுத்தினேன்.
* பாராளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பை தமிழ்நாட்டிற்கு எந்தவிதத்திலும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் நடத்த வேண்டும்.
* தமிழ்நாட்டில் நடைபெறும் ரெயில்வே பணிகளை விரைவுப்படுத்த வலியுறுத்தியுள்ளதாக கூறினார்.
- 215 கேன்களில் 7525 லிட்டர் எரிசாராயம் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
- எரிசாராயத்தை கடத்தி வந்த 2 பேரை கைது செய்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடக மாநிலத்திலிருந்து ஓசூர் வழியாக சென்ற லாரியை சோதனை செய்தபோது அதில் தர்பூசணி பழங்களுக்கு நடுவே எரிசாராயம் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. 215 கேன்களில் 7525 லிட்டர் எரிசாராயம் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
தர்பூசணி பழங்களுக்கு இடையே எரிசாராயம் மறைத்து வைக்கப்பட்டு கேரளாவிற்கு கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
எரிசாராயத்தை கடத்தி வந்த 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கோதாவரி, காவேரி இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்.
- மக்களின் பிரச்சனையை பேசதான் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தோம்.
சென்னை:
டெல்லியில் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசிய அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* கோதாவரி, காவேரி இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்.
* காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படுவதாக அடிக்கடி செய்திகள் வெளியிடப்படுகின்றன. உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி, மத்திய அரசு கர்நாடக அரசை வலியுறுத்த வேண்டும். எக்காரணம் கொண்டும் மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு துணை நிற்க கூடாது.
* உச்சநீதிமன்ற தீர்ப்புபடி, முல்லைப்பெரியாறு அணையை பலப்படுத்தி, நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
* தமிழ்நாட்டில் நடந்த டாஸ்மாக் ஊழல் குறித்து சி.பி.ஐ. முழுமையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினோம்.
* தமிழ்நாட்டில் சீர்கெட்டுள்ள சட்டம் ஒழுங்கு, போதைப்பொருள் நடமாட்டம் எல்லாவற்றையும் சுட்டிக்காட்டி தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்துள்ளோம்.
* அமித்ஷாவுடன் கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை. மக்களின் பிரச்சனையை பேசதான் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தோம்.
* தேர்தல் நெருங்கும்போது தான் கூட்டணி குறித்து பேசுவோம் என்றார்.
முன்னதாக, பா.ஜ.க.வுடன் கூட்டணியா என்ற கேள்விகளுக்கு பா.ஜ.க.வுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற எடப்பாடி பழனிசாமி தற்போது தேர்தல் நெருங்கும்போது தான் கூட்டணி குறித்து பேசுவோம் எனக்கூறுவது, அதிமுக-பாஜக கூட்டணி உறுதியாகி உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருகின்றனர்.
- 10 நாட்களுக்கு முன்பாக 2 வாலிபர்கள் குடிவந்துள்ளனர்.
- குடும்பத்தினர் வீட்டில் இல்லாததால் அனைவரும் உயிர் தப்பினர்.
திருப்பூர்:
திருப்பூர் கொங்கு மெயின் ரோடு ரங்கநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் சேகர் , பில்டிங் காண்ட்ராக்டர். இவர் கடந்த 50 ஆண்டுகளாக இப்பகுதியில் குடியிருந்து வருகிறார். 4 வீடுகள் வைத்திருக்கும் இவர் முதல் 2 வீடுகளில் தனது குடும்பத்துடன் தங்கி வருகிறார்.
மீதமுள்ள 2 வீடுகளை வாடகைக்கு கொடுத்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் குடும்பத்துடன் ஒருவர் கடைசி வீட்டிற்கு குடிவந்துள்ளார்.10 நாட்களுக்கு முன்பாக ராஜபாளையத்தைச் சேர்ந்த அலெக்ஸ் மற்றும் மதுரையை சேர்ந்த சக்திவேல் என்ற 2 வாலிபர்கள் குடிவந்துள்ளனர்.
பிரிண்டிங் நிறுவனத்தில் பணியாற்றும் இவர்களுக்கும் அருகில் உள்ள குடும்பத்தினருக்கும் இடையே லேசான வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் பேச்சுவார்த்தை நடத்திய வீட்டின் உரிமையாளர் சேகர், குடும்பத்தினருக்கு ஆதரவாக பேசுவதாக எண்ணிய வாலிபர்கள் இருவரும் நேற்று இரவு மது போதையில் அரிவாளுடன் சேகரின் வீட்டிற்கு சென்று கதவை உடைத்து டி.வி., சின்டெக்ஸ் டேங்க், கதவு ஜன்னல்களை பட்டா கத்தியால் வெட்டி சேதப்படுத்தினர். அப்போது சேகர் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டில் இல்லாததால் நல்வாய்ப்பாக அனைவரும் உயிர் தப்பினர்.
இதுகுறித்து சேகர் திருப்பூர் வடக்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி அலெக்ஸ் மற்றும் சக்திவேலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
வாடகைக்கு குடி வந்த 10-ம் நாள் உரிமையாளர் வீட்டை பட்டா கத்தி கொண்டு இளைஞர்கள் சூறையாடிய சம்பவத்தின் சிசிடிவி., காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி திருப்பூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- கிராம சபை, ஜனநாயக அமைப்பின் அடித்தளமாகும்.
- சட்டமன்ற, பாராளுமன்ற தீர்மானத்திற்கு இணையான அதிகாரம் கிராம சபை தீர்மானத்திற்கும் உண்டு.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
உலக தண்ணீர் நாளை (மார்ச் 22) ஒட்டி வருகிற 29-ந்தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய பொருள் பட்டியலை தமிழ்நாடு அரசு அளித்துள்ளது. அவற்றில் முதலாவதாக உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருளினைப் பற்றி விவாதித்தல்" என்பது அளிக்கப்பட்டுள்ளது.
உலக தண்ணீர் நாள் கிராமசபை கூட்டம் தமிழ்நாட்டின் நீர் நிலைகளை பாதுகாப்பதற்கான ஒரு நல்வாய்ப்பாக அமைந்துள்ளது. இதனை பயன்படுத்தி, அந்தந்த ஊராட்சிகளின் நீர்நிலைகளை 2017 சதுப்புநில விதிகளின் கீழ் அறிவிக்கை செய்யக்கோரும் தீர்மானத்தினை உங்கள் ஊர் கிராமசபையில் நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
கிராம சபை, ஜனநாயக அமைப்பின் அடித்தளமாகும். இந்திய அரசு, தமிழ்நாடு அரசு போன்றே மற்றுமொரு அதிகாரமிக்க அமைப்பு கிராம ஊராட்சி அரசு ஆகும். சட்டமன்ற, பாராளுமன்ற தீர்மானத்திற்கு இணையான அதிகாரம் கிராம சபை தீர்மானத்திற்கும் உண்டு. எனவே, தமிழ்நாட்டின் நீர் வளங்களை காப்பாற்றும் நோக்கில் மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.
வாருங்கள், அனைவரும் ஒன்றிணைந்து நீர்நிலைகளைக் காப்போம். தமிழ்நாட்டின் எதிர்காலத்தை வளமாக அமைப்போம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் மெதுவாக குறைந்து வருகிறது.
- தற்போது தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
சேலம்:
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த ஜனவரி மாதம் 28-ந் தேதியுடன் நிறுத்தப்பட்டது. ஆனாலும் குடிநீர் தேவைக்காக தொடர்ந்து வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் மெதுவாக குறைந்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துஉள்ளது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 108.22 அடியாக இருந்தது. அணைக்கு நேற்று வினாடிக்கு 1073 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று வினாடிக்கு 1235 கனஅடியாக அதிகரித்து காணப்படுகிறது. அணையில் இருந்து குடிநீருக்காக 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 75.90 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- “என் தம்பி கருப்பசாமி பாண்டியன் உருவம்தான் கருப்பு. உள்ளமோ வெள்ளை” என்று எம்.ஜி.ஆரால் பாராட்டிப் போற்றப்பட்டவர்.
- எங்களுக்குள் அரசியலுக்கு அப்பாற்பட்டதோர் இணக்கமான நட்பு பேணப்பட்டு வந்ததை அனைவரும் அறிவார்கள்.
சென்னை:
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் தளகர்த்தர்களில் ஒருவரும், அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும், ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அ.தி.மு.க. முதல் மாவட்டச் செயலாளர் என்கிற பெருமைக்குரிய வருமான ஆருயிர்ச் சகோதரர் வீ.கருப்பசாமி பாண்டியன் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.
தமது 26-வது வயதிலேயே ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். தொடர்ந்து பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் பணி ஆற்றியவர்.
"என் தம்பி கருப்பசாமி பாண்டியன் உருவம்தான் கருப்பு. உள்ளமோ வெள்ளை" என்று எம்.ஜி.ஆரால் பாராட்டிப் போற்றப்பட்டவர்.
1980-களில் நானும், அவரும் மாவட்ட அரசியலில் எதிரும் புதிருமாகப் பணியாற்றிய நெருப்புப் பொறி பறந்த காலகட்டத்தில்கூட எங்களுக்குள் அரசியலுக்கு அப்பாற்பட்டதோர் இணக்கமான நட்பு பேணப்பட்டு வந்ததை அனைவரும் அறிவார்கள்.
50 ஆண்டு காலமாக நெல்லை மாவட்ட அரசியல் களத்தில் சிறந்ததோர் ஆளுமையாக வலம் வந்து, நெல்லைச் சீமைத் தொண்டர்களால் "நெல்லை நெப்போலியன்" எனப் போற்றப்பட்ட சகோதரர் வீ.கருப்பசாமி பாண்டியன் மறைவுக்கு ம.தி.மு.க. சார்பில் ஆர்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தலையை கெட்டியாக பிடித்து கொண்டு கழுத்தில் சரமாரியாக குத்து விட்டார்.
- விடாமல் அவரை அடித்து உதைத்து புரட்டி எடுத்தார்.
அரியானா மாநிலம், ஹிகார் பகுதியை சேர்ந்தவர் ஸ்வீட்டி பூரா. குத்துச்சண்டை வீராங்கனை. இவரது கணவர் தீபக் ஹூடா. கபடி வீரர்.
தனது கணவர் கூடுதல் வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதாகவும், தன்னை துஷ்பிரயோகம் செய்வதாக கூறி கோர்ட்டில் விவாகரத்துக்கு மனு தாக்கல் செய்தார்.
மேலும் ஹிகார் போலீசில் கணவர் மீது புகார் செய்தார். இந்த வழக்கு தொடர்பாக விளக்கம் அளிக்க நேற்று முன்தினம் தீபக் ஹூடா தனது குடும்பத்தினருடன் போலீஸ் நிலையத்திற்கு வந்தார்.
போலீசார் அவரிடம் விசாரணை நடத்திக் கொண்டு இருந்தனர். அப்போது ஸ்வீட்டி பூராவும் தனது குடும்பத்தினருடன் போலீஸ் நிலையத்திற்கு வந்தார்.

போலீஸ் நிலையத்தில் இருந்த தனது கணவரை கண்ட ஸ்வீட்டி பூரா திடீரென ஆவேசம் அடைந்தார். தனது கணவரின் தலையை கெட்டியாக பிடித்து கொண்டு கழுத்தில் சரமாரியாக குத்து விட்டார்.
இதில் ஸ்வீட்டியின் கணவர் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார். விடாமல் அவரை அடித்து உதைத்து புரட்டி எடுத்தார்.
இதனைக் கண்டு திகைத்துப் போன போலீசார் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஸ்வீட்டியை விலக்கி விட்டனர்.
ஸ்வீட்டி தாக்கியதில் அவருடைய கணவர் கழுத்தில் 3 இடங்களில் காயம் ஏற்பட்டு உள்ளது. ஸ்வீட்டி தனது கணவருக்கு சரமாரியாக குத்து விட்ட வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி பரப்பரப்பை ஏற்படுத்தியது.
- எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லி சென்றிருந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் 3 முக்கிய கோவில்களில் வழிபாடு செய்து உள்ளார்.
- ஓ.பன்னீர்செல்வம் திருவேற்காடு கருமாரியம்மன் கோவில், பாடி சிவன் கோவில், திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில்களில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் நேற்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை அவரது வீட்டில் சந்தித்து பேசினார். சந்திப்பின்போது, பாராளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு, மும்மொழி கொள்கை விவகாரம் குறித்தும் இரு தலைவர்களும் பேசியதாக தெரிகிறது.
இந்நிலையில் அ.தி.மு.க.வில் அணிகள் இணைப்பிற்காக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று 3 முக்கிய கோவில்களில் வழிபாடு செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லி சென்றிருந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் 3 முக்கிய கோவில்களில் வழிபாடு செய்து உள்ளார்.
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, எடப்பாடி பழனிசாமி சந்திப்பு குறித்து ஓ.பன்னீர்செல்வத்துக்கு முன்னரே தெரியும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஓ.பன்னீர்செல்வம் திருவேற்காடு கருமாரியம்மன் கோவில், பாடி சிவன் கோவில், திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில்களில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
இன்று காலை செய்தியாளர்களின் கேள்விக்கு எல்லாம் நன்மைக்கே என ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்தது குறிப்பிடத்தக்கது.
- தொடர் மழை பெய்யும்போது மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்.
- கடந்த 22-ந்தேதி பாதுகாப்பு கருதி மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.
கல்லிடைக்குறிச்சி:
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பிரதான அருவியான மணிமுத்தாறு அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். இங்கு குளித்து மகிழ்வதற்காக நெல்லை மாவட்டம் மட்டும் அல்லாமல் அண்டை மாவட்டங்கள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை, ஊத்து, காக்காச்சி, நாலுமுக்கு உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்யும்போது மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். அந்த காலகட்டங்களில் அருவியில் குளிக்க வனத்துறையினர் தடைவிதிப்பது வழக்கம்.
அந்த வகையில் கடந்த வாரம் அருவிகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்து வந்ததால் கடந்த 22-ந்தேதி பாதுகாப்பு கருதி மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.
இந்நிலையில் இன்று காலை முதல் நீர்வரத்து சீரானதால், அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி வழங்கியது. 4 நாட்கள் தடைக்கு பின்னர் அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- மர்ம நபர்கள் கடத்தி செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- எரிசாராயத்தை மினி லாரியுடன் பறிமுதல் செய்த போலீசார்.
ஓசூர்:
கர்நாடகா மாநிலத்தில் இருந்து தமிழகம் மற்றும் ஆந்திரா, கேரளாவிற்கு அடிக்கடி மதுபான வகைகள், எரிசாரயம், குட்கா பொருட்கள் சாதாரண ஆட்கள் என்ற போர்வையில் கார், இருசக்கர வாகனங்களில் மர்ம நபர்கள் கடத்தி செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து கோவை மண்டல மது விலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் காமராஜ் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் உதயசந்திரன் தலைமையில் ஏட்டு மதிவாணன், அமலாக்க பிரிவு போலீசார் நேற்று ஓசூர்-சேலம் பை பாஸ் சாலையில் நடத்தப்பட்ட சோதனையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக வந்த ஒரு மினி லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது, அதில் 215 கேன்களில், 7,525 லிட்டர் எரிசாரியம் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இதனை கர்நாடக மாநிலம் உப்பள்ளியில் இருந்து பெங்களூர்-ஓசூர் வழியாக கேரளாவிற்கு கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து எரிசாராயத்தை மினி லாரியுடன் பறிமுதல் செய்த போலீசார் அதனை கடத்தி வந்த சயாத் மற்றும் பாபுராஜ் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- கருப்பசாமி பாண்டியன் மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.
- தமிழ்நாடு சட்டமன்றத்தில் உடனடியாக இரங்கல் தீர்மானம் கொண்டு வந்துள்ளோம்.
சென்னை :
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன். கருப்பசாமி பாண்டியன் 1977-இல் ஆலங்குளம், 1980-இல் பாளையங்கோட்டை, 2006-இல் தென்காசி தொகுதிகளில் இருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணியாற்றியவர் ஆவார்.
நீண்டகாலம் அவையின் உறுப்பினராக இருந்த அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்தில் உடனடியாக இரங்கல் தீர்மானம் கொண்டு வந்துள்ளோம்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், அரசியல் இயக்கங்களைச் சேர்ந்த நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.






