என் மலர்
கிச்சன் கில்லாடிகள்
இந்த நண்டு மிளகு மசாலாவை சாதத்தில் பிசைந்து சாப்பிடவும், இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிடவும் மிகவும் சுவையாக இருக்கும்.
தேவையான பொருள்கள்:
நண்டு - 500 கி
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 2
மஞ்சள் தூள் – ½ தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
அரைத்துக் கொள்ள:
தேங்காய் – 1 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 2 அல்லது 3
பூண்டு – 15 பல்
மிளகு – 1 டேபிள்ஸ்பூன்
சோம்பு – 1 தேக்கரண்டி
கசகசா - 1 தேக்கரண்டி
தாளிக்க:
பட்டை - சிறிய துண்டு
கல் பாசி – சிறிது
சோம்பு – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை – 1 கொத்து
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
செய்முறை:
தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
நண்டு ஓட்டை நீக்கி விட்டு, நன்றாக தண்ணீரில் கழுவி எடுத்து, தேவையான சைஸில் துண்டுகளாக்கி வைக்கவும்.
அரைக்க கொடுத்துள்ளவற்றை சிறிது தண்ணீர் சேர்த்து திக்கான விழுதாக்கி வைத்து கொள்ளவும்.
ஒரு அகலமான வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் தாளிக்கும் பொருட்களை சேர்த்து வறுக்கவும்.
பிறகு வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியவுடன், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
பின், அரைத்த மசாலா சேர்த்து 2 நிமிடங்களுக்கு நன்றாக வதக்கியதும், சுத்தம் செய்து வைத்துள்ள நண்டை சேர்த்து வதக்கவும்.
இத்துடன் மஞ்சள் தூள், உப்பு மற்றும் 1 கப் தண்ணீர் சேர்த்து, நன்றாக கலந்து மூடி வைத்து வகை வைக்கவும். இடையிடையே கிளறி விடவும்.
நண்டு நன்றாக வெந்து தேவையான கிரேவி பதம் வந்ததும் அடுப்பை அணைத்து இறக்கவும்.
சுவையான நண்டு மிளகு மசாலா சாப்பிட தயார்!
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சப்பாத்தி, இட்லி, தோசை, பூரிக்கு தொட்டு கொள்ள சுவையான சூப்பரான காலிபிளவர் குருமாவை செய்வது எப்படி என்று கீழே விரிவாக பார்க்கலாம்.
தேவையான பொருள்கள் :
காலிபிளவர் - 1 சிறியது
தக்காளி - 1
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மல்லித்தூள் - 2 மேஜைக்கரண்டி
சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லித்தழை - சிறிது
வறுத்து பொடிக்க :
பட்டை - 1 இன்ச் அளவு
கிராம்பு - 2
சோம்பு - 1 தேக்கரண்டி
தாளிக்க :
எண்ணெய் - தேவைக்கு
பட்டை - 1/2 இன்ச் அளவு
கிராம்பு - 1
பெரிய வெங்காயம் - 1
கறிவேப்பிலை - சிறிது
அரைக்க :
தேங்காய் துருவல் - அரை கப்
செய்முறை :
வெந்நீரில் முழு காலிபிளவரை போட்டு 10 நிமிடம் மூடி வைக்கவும். 10 நிமிடம் கழித்து காலிபிளவரை எடுத்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, சோம்பு மூன்றையும் பொன்னிறமாக வறுத்து மிக்சியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.
தேங்காயையும் மிக்சியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு போட்டு தாளித்த பின் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமானதும் பட்டை கிராம்பு பொடி, வெட்டி வைத்துள்ள தக்காளியை சேர்த்து நன்கு சுருள வதக்கவும்.
தக்காளி நன்கு சுருள வதங்கியதும் காலிபிளவருடன் ஒரு கை தண்ணீர் தெளித்து வேகும் வரை நன்கு வதக்கவும்.
காலிபிளவர் நன்கு வெந்ததும் மிளகாய் தூள், சீரகத்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கிளறி 2 கப் தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் நன்றாக கொதிக்க விடவும்.
அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
குருமா திக்கானதும் அதில் கொத்தமல்லித் தழையை சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
சுவையான காலிபிளவர் குருமா ரெடி.
* இது சப்பாத்தி, பூரிக்கு தொட்டு கொள்ள சுவையாக இருக்கும்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
இட்லி, சாதம், தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் குடைமிளகாய் சாம்பார். இன்று இந்த சாம்பாரை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
குடைமிளகாய் - 2
சாம்பார் பொடி - 1/2 டேபிள்ஸ்பூன்
வெங்காயம், தக்காளி - தலா 1
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்
புலி பேஸ்ட் - 1/4 டீஸ்பூன்
துவரம் பருப்பு - 1/2 கப்
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - 5
உப்பு - தேவைக்கேற்ப
நெய் - 1 டீஸ்பூன்
செய்முறை
துவரம் பருப்பு நன்றாக வேகவைத்து கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒன்றரை கப் தண்ணீரில் புளி, சாம்பார் பொடி சேர்த்து நன்றாக கரைத்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து அதில் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம், காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின்னர் அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
அடுத்து அதில் குடைமிளகாயை சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் கரைத்து வைத்துள்ள புளி, சாம்பார் பொடி கரைசலை ஊற்றி பொடி வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.
அடுத்து வேகவைத்த துவரம் பருப்பை அத்துடன் சேர்த்து அதற்கு தேவையான உப்பு சேர்த்து 1 நிமிடம் கொதிக்க விடவும்.
இறுதியாக கொத்தமல்லி சேர்த்து 1 டீஸ்பூன் நெய் சேர்க்க சுவை மற்றும் வாசனை அதிகரிக்கும்.
குடைமிளகாய் - 2
சாம்பார் பொடி - 1/2 டேபிள்ஸ்பூன்
வெங்காயம், தக்காளி - தலா 1
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்
புலி பேஸ்ட் - 1/4 டீஸ்பூன்
துவரம் பருப்பு - 1/2 கப்
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - 5
உப்பு - தேவைக்கேற்ப
நெய் - 1 டீஸ்பூன்
செய்முறை
துவரம் பருப்பு நன்றாக வேகவைத்து கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒன்றரை கப் தண்ணீரில் புளி, சாம்பார் பொடி சேர்த்து நன்றாக கரைத்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து அதில் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம், காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின்னர் அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
அடுத்து அதில் குடைமிளகாயை சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் கரைத்து வைத்துள்ள புளி, சாம்பார் பொடி கரைசலை ஊற்றி பொடி வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.
அடுத்து வேகவைத்த துவரம் பருப்பை அத்துடன் சேர்த்து அதற்கு தேவையான உப்பு சேர்த்து 1 நிமிடம் கொதிக்க விடவும்.
இறுதியாக கொத்தமல்லி சேர்த்து 1 டீஸ்பூன் நெய் சேர்க்க சுவை மற்றும் வாசனை அதிகரிக்கும்.
சூப்பரான குடைமிளகாய் சாம்பார் ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
குழந்தைகளுக்கு பூரி என்றால் மிகவும் பிடிக்கும். இன்று பட்டாணியை வைத்து சூப்பரான பட்டாணி ஸ்டஃப்டு பூரி செய்வது எப்படி என்று பார்க்கலாம். இதை செய்வது மிகவும் சுலபம்.
தேவையான பொருட்கள் :
மைதா மாவு - 1 கப்
ரவை - 2 டேபிள்ஸ்பூன்
தயிர் - சிறிதளவு
பச்சை பட்டாணி - 1 கப்
மிளகாய்தூள் - 2 டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் - 2 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
சர்க்கரை - அரை டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைக்கு
செய்முறை:
பட்டாணியை மிக்சியில் அரைத்துக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, ரவையுடன் சிறிதளவு எண்ணெய், உப்பு சேர்த்து பூரி மாவு பதத்துக்கு பிசையவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அரைத்த பட்டாணி கலவையை கொட்டி பொன்னிறமாக வறுத்தெடுக்கவும்.
அதனுடன் மஞ்சள் தூள், கொத்தமல்லி தூள், சீரகத்தூள், மிளகாய் தூள், உப்பு, சர்க்கரை சேர்த்து வதக்கி இறக்கவும்.
மாவு கலவையை பூரிகளாக தேய்த்து அதனுள் பச்சை பட்டாணி பூரண கலவையை வைத்து மூடி எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்து பரிமாறலாம்.
சூப்பரான பட்டாணி பூரி ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
காலையில் மீந்து போன சப்பாத்தியை வைத்து மாலையில் சூப்பரான சப்பாத்தி நூடுல்ஸ் செய்யலாம். இதை குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள்
சப்பாத்தி - 3
வெங்காயம் - 1
சோயா சாஸ் - 1/2 டீஸ்பூன்
சில்லி சாஸ் - 1 டேபிள்ஸ்பூன்
தக்காளி சாஸ் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
செய்முறை
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சப்பாத்தியை நீளவாக்கில் வெட்டி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி கொள்ளவும்
பிறகு இதில் சோயா சாஸ், சில்லி சாஸ், தக்காளி சாஸ், சிறிது உப்பு சேர்த்து குறைந்த தீயில் வதக்கவும்
பிறகு வெட்டியை சப்பாத்தி நூடுல்ஸ் இதனுள் சேர்க்கவும்
குறைந்த தீயில் 2 நிமிடம் வதக்கி குறைந்த தீயில் 2 நிமிடம் மூடி வைத்து இறுதியாக கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
சப்பாத்தி - 3
வெங்காயம் - 1
சோயா சாஸ் - 1/2 டீஸ்பூன்
சில்லி சாஸ் - 1 டேபிள்ஸ்பூன்
தக்காளி சாஸ் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
செய்முறை
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சப்பாத்தியை நீளவாக்கில் வெட்டி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி கொள்ளவும்
பிறகு இதில் சோயா சாஸ், சில்லி சாஸ், தக்காளி சாஸ், சிறிது உப்பு சேர்த்து குறைந்த தீயில் வதக்கவும்
பிறகு வெட்டியை சப்பாத்தி நூடுல்ஸ் இதனுள் சேர்க்கவும்
குறைந்த தீயில் 2 நிமிடம் வதக்கி குறைந்த தீயில் 2 நிமிடம் மூடி வைத்து இறுதியாக கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
விருப்பப்பட்டால் இதனுடன் முட்டை அல்லது விருப்பப்பட்ட காய்கள் சேர்த்து கொள்ளவும்
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
அனைவருக்கும் நிச்சயம் பெருமாள் கோவில் புளியோதரை என்றால் மிகவும் பிடிக்கும். இங்கு பெருமாள் கோவில் புளியோதரை/ஐயங்கார் புளியோதரையை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:
சாதம் - 2 கப்
புளிக்காய்ச்சல்...
நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
தோல் நீக்கிய வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
நாட்டுச்சர்க்கரை - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
புளி - 1 எலுமிச்சை அளவு
உப்பு - தேவையான அளவு
பொடி செய்வதற்கு...
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
மல்லி - 1/2 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் - 2
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
எள் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, பொடி செய்ய கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை இறக்கி குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.
புளியில் 1/2 கப் தண்ணீர் ஊற்றி, 15 நிமிடம் ஊற வைத்து, சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெயை ஊற்றி காய்ந்ததும், வேர்க்கடலை சேர்த்து பொன்னிறமாக வறுத்து பின் கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய், மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.
அடுத்து அதில் உப்பு சேர்த்த, பின் புளிச்சாற்றினை ஊற்றி, 10-15 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
சாதம் - 2 கப்
புளிக்காய்ச்சல்...
நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
தோல் நீக்கிய வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
நாட்டுச்சர்க்கரை - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
புளி - 1 எலுமிச்சை அளவு
உப்பு - தேவையான அளவு
பொடி செய்வதற்கு...
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
மல்லி - 1/2 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் - 2
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
எள் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, பொடி செய்ய கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை இறக்கி குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.
புளியில் 1/2 கப் தண்ணீர் ஊற்றி, 15 நிமிடம் ஊற வைத்து, சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெயை ஊற்றி காய்ந்ததும், வேர்க்கடலை சேர்த்து பொன்னிறமாக வறுத்து பின் கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய், மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.
அடுத்து அதில் உப்பு சேர்த்த, பின் புளிச்சாற்றினை ஊற்றி, 10-15 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
பின் நாட்டுச்சர்க்கரை சேர்த்து கிளறி, எண்ணெய் பிரியும் போது இறக்கி, அதில் சாதத்தை போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி, பின் பொடி செய்து வைத்துள்ளதை சேர்த்து பிரட்டி, மூடி வைத்து, 30 நிமிடம் கழித்து பரிமாறினால், ஐயங்கார் புளியோதரை ரெடி!!!
இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
குழந்தைகளுக்கு கலர்ஃபுல் குடைமிளகாய்களை சேர்த்து பிரியாணி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பாசுமதி அரிசி - 2 கப்
பச்சை, சிவப்பு, மஞ்சள் குடைமிளாய் (நறுக்கியது) - தலா அரை கப்
தக்காளி, வெங்காயம் - தலா 1
எண்ணெய் - 6 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப.
வறுத்துப் பொடிக்க:
துவரம்பருப்பு - கால் கப்
உளுத்தம்பருப்பு - கால் கப்புக்கு கொஞ்சம் குறைவாக
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
தேங்காய்த் துருவல் - 6 டேபிள்ஸ்பூன்.
செய்முறை
தக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பாசுமதி அரிசியை 20 நிமிடம் ஊறவைத்து மூன்றரை கப் தண்ணீர், சிறிதளவு உப்பு சேர்த்து உதிர் உதிராக வேகவைத்து கொள்ளவும்.
வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு துவரம்பருப்பு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்து, இறுதியில் தேங்காய்த்துருவலை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.
இதை மிக்ஸியில் பொட்டு உப்பு சேர்த்து, சற்றுக் கொரகொரப்பாக பொடிக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும்.
அடுத்து அதில் மூன்று வண்ண குடைமிளகாய்களை சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் 2 டேபிள்ஸ்பூன் பொடித்து வைத்த பொடியை சேர்க்கவும்.
அடுத்து அதில் உதிரியாக வடித்த சாதம், கொத்தமல்லியை சேர்ந்துக் கலக்கவும்.
பாசுமதி அரிசி - 2 கப்
பச்சை, சிவப்பு, மஞ்சள் குடைமிளாய் (நறுக்கியது) - தலா அரை கப்
தக்காளி, வெங்காயம் - தலா 1
எண்ணெய் - 6 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப.
வறுத்துப் பொடிக்க:
துவரம்பருப்பு - கால் கப்
உளுத்தம்பருப்பு - கால் கப்புக்கு கொஞ்சம் குறைவாக
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
தேங்காய்த் துருவல் - 6 டேபிள்ஸ்பூன்.
செய்முறை
தக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பாசுமதி அரிசியை 20 நிமிடம் ஊறவைத்து மூன்றரை கப் தண்ணீர், சிறிதளவு உப்பு சேர்த்து உதிர் உதிராக வேகவைத்து கொள்ளவும்.
வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு துவரம்பருப்பு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்து, இறுதியில் தேங்காய்த்துருவலை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.
இதை மிக்ஸியில் பொட்டு உப்பு சேர்த்து, சற்றுக் கொரகொரப்பாக பொடிக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும்.
அடுத்து அதில் மூன்று வண்ண குடைமிளகாய்களை சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் 2 டேபிள்ஸ்பூன் பொடித்து வைத்த பொடியை சேர்க்கவும்.
அடுத்து அதில் உதிரியாக வடித்த சாதம், கொத்தமல்லியை சேர்ந்துக் கலக்கவும்.
சூப்பரான குடைமிளகாய் பிரியாணி ரெடி.
இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
குழந்தைகளுக்கு சத்தான ஸ்நாக்ஸ் கொடுக்க விரும்பினால் டிரை ஃப்ரூட்ஸ் வைத்து இந்த ரெசிபியை செய்து கொடுக்கலாம். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பாதாம் - கால் கப்
முந்திரி - கால் கப்
வறுத்த வேர்க்கடலை - கால் கப்
வறுத்த வெள்ளை எள் - கால் கப்
பொடித்த வெல்லம் - ஒரு கப்
நெய் - ஒரு டேபிள் ஸ்பூன்
செய்முறை
பாதாம், முந்திரி, வறுத்த வேர்க்கடலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அடிகனமான பாத்திரத்தில் நெய் விட்டு உருக்கி, வெல்லம் சேர்த்து கிளறவும்.
வெல்லம் கரைந்ததும் அடுப்பை சிறுதீயில் வைத்து பாதாம், முந்திரி, வேர்க்கடலை, எள் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கிளறவும்.
பிறகு இதை சுத்தமான நெய் தடவிய சமையல் மேடையில் கொட்டி கனமாக தேய்க்கவும்.
பாதாம் - கால் கப்
முந்திரி - கால் கப்
வறுத்த வேர்க்கடலை - கால் கப்
வறுத்த வெள்ளை எள் - கால் கப்
பொடித்த வெல்லம் - ஒரு கப்
நெய் - ஒரு டேபிள் ஸ்பூன்
செய்முறை
பாதாம், முந்திரி, வறுத்த வேர்க்கடலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அடிகனமான பாத்திரத்தில் நெய் விட்டு உருக்கி, வெல்லம் சேர்த்து கிளறவும்.
வெல்லம் கரைந்ததும் அடுப்பை சிறுதீயில் வைத்து பாதாம், முந்திரி, வேர்க்கடலை, எள் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கிளறவும்.
பிறகு இதை சுத்தமான நெய் தடவிய சமையல் மேடையில் கொட்டி கனமாக தேய்க்கவும்.
ஐந்து நிமிடங்களுக்கு பிறகு துண்டுகளாக்கி காற்றுப்புகாத டப்பாவில் சேகரிக்கவும்.
இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
காளான் பக்கோடா மாலை நேரத்தில் டீ மற்றும் காப்பியுடன் சேர்த்து உண்ணக் கூடிய சிற்றுண்டி ஆகும். இன்று சுவையான காளான் பக்கோடா செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
காளான் - 200 கிராம்
பெரிய வெங்காயம் - ஒரு எண்ணம் (நடுத்தர அளவு)
கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
இஞ்சி - முக்கால் சுண்டுவிரல் அளவு
வெள்ளைப் பூண்டு - 2 பற்கள் (பெரியது)
காஷ்மீரி மிளகாய் பொடி - 1 ஸ்பூன்
கரம் மசாலா பொடி - 1 ஸ்பூன்
மஞ்சள் பொடி - ½ ஸ்பூன்
மசாலா பொடி - 1 ஸ்பூன்
மிளகு பொடி - ¾ ஸ்பூன்
சீரகப் பொடி - ½ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 2 ஸ்பூன்
சமையல் எண்ணெய் - பொரித்தெடுப்பதற்கு ஏற்ப
செய்முறை
காளானை சுத்தம் செய்து நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
இஞ்சி மற்றும் வெள்ளைப் பூண்டினை சுத்தம் செய்து விழுதாக்கிக் கொள்ளவும்.
கறிவேப்பிலையை கழுவி உருவிக் கொள்ளவும்.
பெரிய வெங்காயத்தை தோல் நீக்கி நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்
வாயகன்ற பாத்திரத்தில் நீளவாக்கில் நறுக்கிய காளான் போட்டு, அதனுடன் நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்க்கவும்.
அதனுடன் கறிவேப்பிலை, கடலை மாவு, அரிசி மாவு, காஷ்மீரி மிளகாய் பொடி ஆகியவற்றைச் சேர்க்கவும்.
பின்னர் அதனுடன் கரம் மசாலா பொடி, மசாலா பொடி, மஞ்சள் பொடி, மிளகு பொடி, சீரகப் பொடி, உப்பு, நல்லெண்ணெய் சேர்த்து மெதுவாக ஒருசேர பிசுபிசுப்புப் பதத்திற்குப் பிசையவும்.
வெங்காயம் மற்றும் காளானில் உள்ள தண்ணீரால், கலவை எண்ணெயில் பொரித்தெடுக்க தேவையான பதத்திற்கு வந்துவிடும். ஆகவே தண்ணீர் ஏதும் சேர்க்க தேவையில்லை.
வாணலியை அடுப்பில் வைத்து பொரித்தெடுக்கத் தேவையான அளவு சமையல் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள மாவினை எடுத்து சிறிது சிறிதாகக் கிள்ளிப் போடவும். சிவக்க வெந்ததும் எடுத்து விடவும்.
சுவையான காளான் பக்கோடா தயார்.
குறிப்பு
விருப்பமுள்ளவர்கள் பச்சை மிளகாய் சேர்த்து பக்கோடா தயார் செய்யலாம்.
காளான் - 200 கிராம்
பெரிய வெங்காயம் - ஒரு எண்ணம் (நடுத்தர அளவு)
கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
இஞ்சி - முக்கால் சுண்டுவிரல் அளவு
வெள்ளைப் பூண்டு - 2 பற்கள் (பெரியது)
காஷ்மீரி மிளகாய் பொடி - 1 ஸ்பூன்
கரம் மசாலா பொடி - 1 ஸ்பூன்
மஞ்சள் பொடி - ½ ஸ்பூன்
மசாலா பொடி - 1 ஸ்பூன்
மிளகு பொடி - ¾ ஸ்பூன்
சீரகப் பொடி - ½ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 2 ஸ்பூன்
சமையல் எண்ணெய் - பொரித்தெடுப்பதற்கு ஏற்ப
செய்முறை
காளானை சுத்தம் செய்து நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
இஞ்சி மற்றும் வெள்ளைப் பூண்டினை சுத்தம் செய்து விழுதாக்கிக் கொள்ளவும்.
கறிவேப்பிலையை கழுவி உருவிக் கொள்ளவும்.
பெரிய வெங்காயத்தை தோல் நீக்கி நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்
வாயகன்ற பாத்திரத்தில் நீளவாக்கில் நறுக்கிய காளான் போட்டு, அதனுடன் நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்க்கவும்.
அதனுடன் கறிவேப்பிலை, கடலை மாவு, அரிசி மாவு, காஷ்மீரி மிளகாய் பொடி ஆகியவற்றைச் சேர்க்கவும்.
பின்னர் அதனுடன் கரம் மசாலா பொடி, மசாலா பொடி, மஞ்சள் பொடி, மிளகு பொடி, சீரகப் பொடி, உப்பு, நல்லெண்ணெய் சேர்த்து மெதுவாக ஒருசேர பிசுபிசுப்புப் பதத்திற்குப் பிசையவும்.
வெங்காயம் மற்றும் காளானில் உள்ள தண்ணீரால், கலவை எண்ணெயில் பொரித்தெடுக்க தேவையான பதத்திற்கு வந்துவிடும். ஆகவே தண்ணீர் ஏதும் சேர்க்க தேவையில்லை.
வாணலியை அடுப்பில் வைத்து பொரித்தெடுக்கத் தேவையான அளவு சமையல் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள மாவினை எடுத்து சிறிது சிறிதாகக் கிள்ளிப் போடவும். சிவக்க வெந்ததும் எடுத்து விடவும்.
சுவையான காளான் பக்கோடா தயார்.
குறிப்பு
விருப்பமுள்ளவர்கள் பச்சை மிளகாய் சேர்த்து பக்கோடா தயார் செய்யலாம்.
மாவினை தயார் செய்ததும் எண்ணெயில் பொரித்து எடுக்கவும். நேரங்கடந்தால் கலவை தண்ணீர்விட ஆரம்பிக்கும்.
இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
காடையில் வறுவல், குழம்பு, தொக்கு செய்து இருப்பீங்க. இன்று தீபாவளி ஸ்பெஷலாக காடையை வைத்து செட்டிநாடு ஸ்டைலில் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
காடை - 4
சீரகச் சம்பா அரிசி - 750 கிராம்
வெங்காயம் - 150 கிராம்
தக்காளி - 100 கிராம்
பச்சை மிளகாய் - 5
புதினா இலை - 50 கிராம்
கொத்தமல்லித்தழை - 50 கிராம்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
தயிர் - 50 மில்லி
தேங்காய்ப்பால் - 100 மில்லி
பட்டை - 2
ஏலக்காய் - 2
கிராம்பு - 4
பிரிஞ்சி இலை - ஒன்று
இஞ்சி, பூண்டு விழுது - 50 கிராம்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 100 மில்லி
நெய் - 50 மில்லி
பிரியாணி மசாலா செய்ய :
பட்டை - 2
ஏலக்காய் - 4
கிராம்பு - 6
பூண்டு - 50 கிராம்
இஞ்சி-1 துண்டு
செய்முறை :
தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
காடையை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.
சீரகச் சம்பா அரிசியை நன்றாக கழுவி 20 நிமிடம் ஊற வைக்கவும்.
பிரியாணி மசாலா செய்ய கொடுத்துள்ள பொருட்களை எண்ணெயில் சிவக்க வறுத்து ஆறியதும், தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல அரைத்துக் கொள்ளவும்.
வாயகன்ற ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்து வறுத்து, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக சிவக்க வறுக்கவும்.
அடுத்து அதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாற வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து அது கரையும் வரை வதக்கவும்.
அடுத்து அதில் கழுவி சுத்தம் செய்த காடையை இத்துடன் சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், அரைத்த பிரியாணி மசாலா சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
இத்துடன் தயிர், தேங்காய்ப்பால் தேவையான அளவு தண்ணீர், கழுவிய சீரகச் சம்பா அரிசியைச் சேர்த்து 10 நிமிடம் வேகவிடவும்.
பின்னர் தீயை மிதமாக்கி நெய் ஊற்றி கிளறி, புதினா இலை, கொத்தமல்லித்தழை தூவி மூடி போட்டு 20 நிமிடம் தம் போட்டு இறக்கிப் பரிமாறவும்.
காடை - 4
சீரகச் சம்பா அரிசி - 750 கிராம்
வெங்காயம் - 150 கிராம்
தக்காளி - 100 கிராம்
பச்சை மிளகாய் - 5
புதினா இலை - 50 கிராம்
கொத்தமல்லித்தழை - 50 கிராம்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
தயிர் - 50 மில்லி
தேங்காய்ப்பால் - 100 மில்லி
பட்டை - 2
ஏலக்காய் - 2
கிராம்பு - 4
பிரிஞ்சி இலை - ஒன்று
இஞ்சி, பூண்டு விழுது - 50 கிராம்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 100 மில்லி
நெய் - 50 மில்லி
பிரியாணி மசாலா செய்ய :
பட்டை - 2
ஏலக்காய் - 4
கிராம்பு - 6
பூண்டு - 50 கிராம்
இஞ்சி-1 துண்டு
செய்முறை :
தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
காடையை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.
சீரகச் சம்பா அரிசியை நன்றாக கழுவி 20 நிமிடம் ஊற வைக்கவும்.
பிரியாணி மசாலா செய்ய கொடுத்துள்ள பொருட்களை எண்ணெயில் சிவக்க வறுத்து ஆறியதும், தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல அரைத்துக் கொள்ளவும்.
வாயகன்ற ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்து வறுத்து, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக சிவக்க வறுக்கவும்.
அடுத்து அதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாற வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து அது கரையும் வரை வதக்கவும்.
அடுத்து அதில் கழுவி சுத்தம் செய்த காடையை இத்துடன் சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், அரைத்த பிரியாணி மசாலா சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
இத்துடன் தயிர், தேங்காய்ப்பால் தேவையான அளவு தண்ணீர், கழுவிய சீரகச் சம்பா அரிசியைச் சேர்த்து 10 நிமிடம் வேகவிடவும்.
பின்னர் தீயை மிதமாக்கி நெய் ஊற்றி கிளறி, புதினா இலை, கொத்தமல்லித்தழை தூவி மூடி போட்டு 20 நிமிடம் தம் போட்டு இறக்கிப் பரிமாறவும்.
சூப்பரான செட்டிநாடு காடை பிரியாணி ரெடி.
இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
தீபாவளிக்கு சிக்கன், மட்டன் பிரியாணி செய்து இருப்பீங்க இந்த வருடம் செட்டிநாடு ஸ்டைலில் சூப்பரான இறால் பிரியாணியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பாசுமதி அரிசி - 2 கப்
இறால் - அரை கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - ஒன்று
பிரியாணி இலை - ஒன்று
எண்ணெய் - தேவையான அளவு
மராத்தி மொக்கு - ஒன்று
லவங்கம் - 3
சோம்பு தூள் - ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை, புதினா - ஒரு கைப்பிடி
கறிமசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
தயிர் - ஒரு மேசைக்கரண்டி
பட்டை - சிறு துண்டு
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 3
மஞ்சள் தூள் - சிறிது
பிரியாணி மசாலா - அரை தேக்கரண்டி
அன்னாசிப்பூ - பாதி
ஏலக்காய் - 3
செய்முறை :
இறாலை சுத்தம் செய்து அதில் மஞ்சள் தூள், உப்பு, தயிர், சிறிது மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கலந்து அரைமணி நேரம் ஊற வைக்கவும்
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, ஏலக்காய், அன்னாசிப்பூ, சோம்பு தூள், லவங்கம், மராத்தி மொக்கு, பிரியாணி இலை சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாயை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் பிரியாணி மசாலா, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கறிமசாலா தூள் சேர்த்து வதக்கிய பின்னர் தக்காளி, கொத்தமல்லி, புதினாயை சேர்த்து வதக்கவும்.
தக்காளி குழைய வெந்ததும் இறாலைச் சேர்த்து ஒரு முறை பிரட்டி விடவும். அதிகம் வதக்கக் கூடாது.
அடுத்து அதில் 2 கப் அரிசிக்கு 3 1/4 - 3 1/2 கப் நீர் விட்டு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்
நன்றாக கொதி வந்ததும் அரிசியை சேர்த்து மீண்டும் ஒரு கொதி விடவும். பின் மூடி அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். முக்கால் பதம் வெந்ததும் தம்மில் போடவும்.
பாசுமதி அரிசி - 2 கப்
இறால் - அரை கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - ஒன்று
பிரியாணி இலை - ஒன்று
எண்ணெய் - தேவையான அளவு
மராத்தி மொக்கு - ஒன்று
லவங்கம் - 3
சோம்பு தூள் - ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை, புதினா - ஒரு கைப்பிடி
கறிமசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
தயிர் - ஒரு மேசைக்கரண்டி
பட்டை - சிறு துண்டு
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 3
மஞ்சள் தூள் - சிறிது
பிரியாணி மசாலா - அரை தேக்கரண்டி
அன்னாசிப்பூ - பாதி
ஏலக்காய் - 3
செய்முறை :
இறாலை சுத்தம் செய்து அதில் மஞ்சள் தூள், உப்பு, தயிர், சிறிது மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கலந்து அரைமணி நேரம் ஊற வைக்கவும்
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, ஏலக்காய், அன்னாசிப்பூ, சோம்பு தூள், லவங்கம், மராத்தி மொக்கு, பிரியாணி இலை சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாயை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் பிரியாணி மசாலா, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கறிமசாலா தூள் சேர்த்து வதக்கிய பின்னர் தக்காளி, கொத்தமல்லி, புதினாயை சேர்த்து வதக்கவும்.
தக்காளி குழைய வெந்ததும் இறாலைச் சேர்த்து ஒரு முறை பிரட்டி விடவும். அதிகம் வதக்கக் கூடாது.
அடுத்து அதில் 2 கப் அரிசிக்கு 3 1/4 - 3 1/2 கப் நீர் விட்டு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்
நன்றாக கொதி வந்ததும் அரிசியை சேர்த்து மீண்டும் ஒரு கொதி விடவும். பின் மூடி அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். முக்கால் பதம் வெந்ததும் தம்மில் போடவும்.
சுவையான செட்டிநாடு இறால் பிரியாணி தயார்.
இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
காலா ஜாமூன் கடைகளில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று எளிய முறையில் காலா ஜாமூனை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
இனிப்பில்லாத கோவா - 1/4 கிலோ,
சர்க்கரை - 750 கிராம்,
மைதா - 60 கிராம்,
ஆப்ப சோடா - 1 சிட்டிகை,
ஏலக்காய் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்,
ஜாதிக்காய் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்.
செய்முறை :
சர்க்கரையில் 600 மி.லி தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் ஜீரா காய்த்து வைக்கவும். 1/2 மணி நேரம் ஜீரா (பாகை) ஆற வைக்க வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் பால்கோவா, சோடா, மைதாவை ஒன்றாக சேர்த்து நன்றாக கலந்து கொஞ்சம் நீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
5 நிமிடம் கழித்து, சிறு சிறு உருண்டைகளாகச் செய்து வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த உருண்டைகளை போட்டு பொன்னிறத்தில் வறுக்க வேண்டும்.
வறுத்த உருண்டைகளை சூடாக இருக்கும் ஜீராவில் சேர்த்து ஊறவைக்க வேண்டும்.
இனிப்பில்லாத கோவா - 1/4 கிலோ,
சர்க்கரை - 750 கிராம்,
மைதா - 60 கிராம்,
ஆப்ப சோடா - 1 சிட்டிகை,
ஏலக்காய் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்,
ஜாதிக்காய் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்.
செய்முறை :
சர்க்கரையில் 600 மி.லி தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் ஜீரா காய்த்து வைக்கவும். 1/2 மணி நேரம் ஜீரா (பாகை) ஆற வைக்க வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் பால்கோவா, சோடா, மைதாவை ஒன்றாக சேர்த்து நன்றாக கலந்து கொஞ்சம் நீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
5 நிமிடம் கழித்து, சிறு சிறு உருண்டைகளாகச் செய்து வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த உருண்டைகளை போட்டு பொன்னிறத்தில் வறுக்க வேண்டும்.
வறுத்த உருண்டைகளை சூடாக இருக்கும் ஜீராவில் சேர்த்து ஊறவைக்க வேண்டும்.
சூப்பரான காலா ஜாமூன் ரெடி.
இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்






