search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Briyani"

    • டோனிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் 2 கிலோ பிரியாணியை கொண்டு டோனியின் உருவம் உருவாக்கப்பட்டுள்ளது.
    • ஐ.பி.எல். கோப்பையையும் வரைந்து அசத்தியுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலம் முருங்கப்பாக்கத்தைச் சேர்ந்தவர் அறிவழகி.

    ஓவியரான இவர் தேச தலைவர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாளின் போது அவர்களுடைய உருவத்தை தத்ரூபமாக கோலமாவுகளைக் கொண்டு வரைந்து அசத்தியுள்ளார். காந்தியடிகள், டாக்டர் அப்துல் கலாம், டெண்டுல்கர், டோனி ஆகியோரின் உருவங்களையும் ரங்கோலியிலும் வரைந்துள்ளார்.

    அந்த வகையில் இன்று நடைபெற உள்ள ஐ.பி.எல் போட்டி இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. 

    பிரியாணியில் வரையப்பட்ட தோனி ஓவியம்.

    பிரியாணியில் வரையப்பட்ட தோனி ஓவியம்.

    இதில் சென்னை அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் டோனிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அறிவழகி 2 கிலோ பிரியாணியை கொண்டு 2 அடியில் டோனியின் உருவத்தை தத்ரூபமாக உருவாக்கியுள்ளார்.

    இதில் ஐ.பி.எல். கோப்பையையும் வரைந்து அசத்தியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    • கடந்த 25 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 மகள்கள் உள்ளனர். 2 பேருக்கும் திருமணம் ஆகி விட்டது.
    • நேற்று பக்ரீத் பண்டிகை யையொட்டி ஆயிஷாவின் வீட்டிற்கு அவரது 2 மகள்களும் வந்து இருந்தனர்.

    கோவை:

    கோவை போத்தனூர் அருகே உள்ள சர்தார் சாகிப் வீதியை சேர்ந்தவர் அப்துல் கரீம். இவரது மனைவி ஆயிஷா (வயது 45). இவர்களுக்கு கடந்த 25 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 மகள்கள் உள்ளனர். 2 பேருக்கும் திருமணம் ஆகி விட்டது.

    நேற்று பக்ரீத் பண்டிகை யையொட்டி ஆயிஷாவின் வீட்டிற்கு அவரது 2 மகள்களும் வந்து இருந்தனர். இதனையொட்டி அவர் தனது மகள்களுக்கு கொடுப்பதற்காக கியாஸ் அடுப்பில் பிரியாணி சமைத்துக்கொண்டு இருந்தார்.

    அப்போது திடீரென கியாஸ் கசிவு ஏற்பட்டு தீ பிடித்தது. கண்இமைக்கும் நேரத்தில் ஆயிஷாவின் ஆடையில் தீ பிடித்தது. இதனால் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார். இதனை கேட்ட வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டனர். பின்னர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ஆயிஷாவை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இது குறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    முன்னணி நடிகைகளாக வலம் வரும் காஜல் அகர்வால், திரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ், பிரியா ஆனந்த் ஆகியோர் பிரியாணிக்கு அடிமையாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Kajal #Trisha #AishwaryaRajesh
    தென்னிந்திய நடிகைகளுக்கு சாப்பாட்டு வி‌ஷயத்தில் என்னென்ன பிடிக்கும் என்று பட்டியல் எடுத்தோம். அனுஷ்காவுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். சமீபகாலமாக ஏறிய உடல் எடையை குறைப்பதில் கவனம் செலுத்துவதால் சிக்கன் சாப்பிடுவதை நிறுத்தி இருக்கிறார்.

    தமன்னாவுக்கு வறுத்த உணவுகள் என்றால் பிரியம். வீட்டில் இருக்கும்போது டால் செய்து குடும்பத்தினருக்கு கொடுப்பார். லட்சுமி மேனனுக்கு சப்பாத்தி, பன்னீர் பட்டர் மசாலா பிடிக்கும். காஜல் அகர்வாலுக்கு ஐதராபாத் பிரியாணி என்றால் விருப்பம். தென் இந்தியா பக்கம் வந்தால் காரசாரமான உணவு வகைகளை விரும்பி சாப்பிடுவார். மும்பையில் இருக்கும்போது அந்தேரியில் இருக்கும் பானிபூரி கடைக்கு மாலையில் தவறாமல் சென்று சாப்பிடுவார். நன்றாக சமைப்பார்.



    காஜல் செய்யும் தளி சாப்பாடுக்கு அவரது நண்பர்கள் அடிமை. பிரியா ஆனந்துக்கும் பிரியாணி தான் பிடிக்கும். திரிஷா 15 ஆண்டுகளாக ஒரே உடல் அமைப்பை வைத்திருந்தாலும் சாப்பாட்டு வி‌ஷயத்தில் எந்த கட்டுப்பாடும் கடைபிடித்ததில்லை. பிரியாணி வகை உணவுகளை ஒருபிடி பிடிப்பார். ஐஸ்வர்யா ராஜேசுக்கும் பிரியாணி என்றால் பிடிக்கும். நடு இரவு ஒரு மணிக்கு பிரியாணி கொடுத்தால் கூட சாப்பிடுவேன் என்று ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.
    ×