என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    குழந்தைகளுக்கு பிரைடு ரைஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே எளிய முறையில் வெஜ் பன்னீர் பிரைடு ரைஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பன்னீர் - 100 கிராம் 
    பாஸ்மதி அரிசி - 1 கப்
    கேரட் - 20 கிராம் 
    பீன்ஸ் - 20 கிராம் 
    வெங்காயம் - 1
    பூண்டு - 10 பல்
    எண்ணெய் - 2 ஸ்பூன்
    தேவையான அளவு - உப்பு
    சோயா சாஸ் - 1 ஸ்பூன்
    மிளகு தூள் - 2 ஸ்பூன் 
    வெங்காயத்தாள் - சிறிதளவு
     
    செய்முறை

    பாஸ்மதி அரிசியை முக்கால் பாகம் வேகவைத்து தண்ணீர் வடித்து வைக்கவும்.

    பன்னீரை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    கேரட், பீன்ஸ், வெங்காயத்தாள், வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் நறுக்கிய பூண்டை வதக்கவும் ‌.

    அடுத்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்

    அடுத்து நறுக்கிய காய்கறிகள் சேர்த்து வதக்கவும்

    தேவையான அளவு உப்பு, மிளகு தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.

    அடுத்து பன்னீர் துண்டுகளை சேர்த்து நன்கு வதக்கவும்... பின்னர் சோயா சாஸ் சேர்த்து நன்கு கலந்து விடவும்....

    கடைசியாக வடித்த சாதம் சேர்த்து நன்கு கலந்து வெங்காய தாள் தூவி மீண்டும் ஒரு முறை நன்கு கலந்து சூடாக தக்காளி சாஸ் உடன் பரிமாறவும்.....

    சூப்பரான வெஜ் பன்னீர் பிரைடு ரைஸ் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பருப்பு பாயாசம், பால் பாயாசம் என்று பல வித பாயாசம் செய்வார்கள். ஆனால் இன்று பன்னீரில் பாயாசம் செய்து குடும்பத்தாரை அசத்துங்கள்..
    தேவையான பொருள்கள்:

    பால் - 1 லிட்டர் 
    பன்னீர் - 1 கப் 
    அரிசி மாவு - 1 ஸ்பூன் 
    ஏலக்காய் - 6 
    சர்க்கரை - 1/4 கப் 
    உலர்ந்த திராட்சை - தேவையான அளவு 
    குங்குமப்பூ - தேவையான அளவு 
    பாதாம் - 5 
    பிஸ்தா - 5. 

    செய்முறை:

    பன்னீரை சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    பாதாம், பிஸ்தாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அடுப்பில் பாத்திரம் வைத்து அதில் பால் மற்றும் அரிசி மாவை சேர்த்து நன்றாக 10 நிமிடம் கிளற வேண்டும். 

    கிளறும் பொழுது கட்டிகள் வராதவாறு பார்த்து கொள்ள வேண்டும். 10 நிமிடம் கழித்த பிறகு பால் கெட்டி ஆகி விடும்.

    பிறகு அதில் உலர்ந்த திராட்சை பழங்கள், ஏலக்காய், குங்குமப்பூ, தேவையான அளவு சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து கொதிக்க வைக்கவும். 

    நன்றாக கெட்டி பதத்தில் வந்த பிறகு அதில் நறுக்கிய பன்னீர் துண்டுகளை சேர்த்து ஒரு 3 நிமிடம் மிதமான தீயில் கிளறி விடவும்.. 

    அடுத்து அடுப்பை அனைத்து பாயசத்தை ஒரு பௌலில் மாற்றி பாதாம், பிஸ்தா குங்கும பூ ஆகியவை கொண்டு அலங்கரித்தால் பன்னீர் பாயசம் தயார்... 

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பன்னீரில் அதிக கால்சியம் சக்தி உள்ளதால் உணவில் அடிக்கடி பன்னீர் சேர்த்து கொள்வது நல்லது. நீங்கள் வீட்டில் சாப்பாத்தி செய்தால் இந்த மேத்தி மலாய் பன்னீரை தவறாமல் ட்ரை செய்து பாருங்கள்.
    தேவையான பொருட்கள்

    பன்னீர் - 200 கிராம் 
    எண்ணெய் - 4 ஸ்பூன் 
    சீரகம் -1 ஸ்பூன் 
    வெங்காயம் -1 
    இஞ்சி பூண்டு பேஸ்ட் -1 ஸ்பூன் 
    முந்திரி - 3 ஸ்பூன் 
    பாதாம் -3 ஸ்பூன் 
    உலர்ந்த வெந்தய இலைகள் -1 ஸ்பூன் 
    க்ரீம் - ½ கப் 
    உப்பு -தேவையான அளவு 
    சர்க்கரை -1 ஸ்பூன் 
    மிளகாய் தூள் -1 ஸ்பூன் 
    மல்லித் தூள் -1 ஸ்பூன் 
    சீரகப் பொடி -2 ஸ்பூன் 
    மஞ்சள் தூள் -1 ஸ்பூன் 
    கரம் மசாலா -1ஸ்பூன். 

    செய்முறை:

    பன்னீரை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஓரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு அதில் பன்னீரை போட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். 

    பின்னர் வறுத்த பன்னீரை 15 நிமிடம் வெந்நீரில் ஊறவைக்கவும்.15 நிமிடம் கழித்து, தண்ணீரை பிழிந்து தனி பாத்திரத்தில் பன்னீரை மாற்றவும். 

    முந்திரி மற்றும் பாதாமை நீரில் 15 நிமிடம் ஊறவைத்து மிக்சியில் பேஸ்ட் போல் அரைத்து எடுத்து கொள்ளவும். 

    பின்பு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் சீரகம்,வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது போன்றவற்றை சேர்த்து பச்சை வாசனை விலகும் வரை நன்றாக வதக்கி கொள்ளவும். 

    வெங்காயம் நன்கு வதங்கிய பிறகு மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகப் பொடி, மஞ்சள் தூள், கரம் மசாலா, அரைத்த முந்திரி, பாதாம் பேஸ்ட், உப்பு ஆகியவை சேர்த்து கிளறி விடவும். 

    அடுத்து அதில் தேவையான நீர் சேர்த்து பன்னீரை போட்டு மிதமான சூட்டில் 15-20 நிமிடம் வேக வைக்கவும். 

    கடைசியில் உலர்ந்த வெந்தய கீரை மற்றும் க்ரீமை சேர்த்து கிளறி இறக்கினால் சூடான மேத்தி மலாய் பன்னீர் ரெடி... 

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு வித்தியாசமான உணவுகளை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று முட்டை புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாசுமதி அரிசி - 1 கப்
    முட்டை - 3
    கிராம்பு - 3
    ஏலக்காய் - 3
    பட்டை - 3
    மஞ்சள் தூள் - ¼ ஸ்பூன்
    கரம் மசாலா தூள் - 1 ஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
    நெய் - 4 ஸ்பூன்
    தேங்காய் பால் - 1 கப்
    சின்ன வெங்காயம் - 150 கிராம்
    தக்காளி சாறு - கால் கப்
    புதினா - அரை கட்டு
    கொத்தமல்லி தலை - அரை கட்டு
    உ‌ப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    கொத்தமல்லி, புதினா, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாசுமதி அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

    குக்கரை அடுப்பில் வைத்து நெய்யை ஊற்றி சூடானதும் கிராம்பு, பட்டை, ஏலக்காய் சேர்த்து தாளித்த பின் இதனுடன் ஊறவைத்த பாசுமதி அரிசியை போட்டு அரிசியில் உள்ள நீர் சுண்டும் வரை அரிசி உடையாமல் வதக்கவும்.

    இதனுடன் தேங்காய் பால் 1 கப், கொஞ்சம் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரில் வேக வைத்து தனியாக எடுத்து வைக்கவும். சாதம் உதிரி உதிரியாக இருக்க வேண்டும்.

    ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி உப்பு போட்டு லேசாக நுரை வரும்படி அடித்து வைக்கவும்.

    ஒரு கடாயில் நெய் ஊற்றி நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் தக்காளி சாறு ஊற்றி நன்றாக வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் எல்லாவற்றையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் புதினா, கொத்தமல்லி இலைகளைச் சேர்க்கவும்.

    அடுத்து அதில் முட்டை ஊற்றி இடைவிடாது கிளறிவிட்டு வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.

    இந்த முட்டைக் கலவையுடன் சாதத்தை சேர்த்து நன்றாக கலந்து சூடாக பரிமாறவும்.

    சூப்பரான முட்டை புலாவ் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கொத்தமல்லி இலையில் இரும்புச்சத்து இருப்பதால், இரத்தசோகை வருவதற்கான வாய்ப்புக் குறைகிறது. எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு, உறுப்புக்களின் இயல்பான இயக்கத்துக்கு என்று பெரிதும் உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
    தேவையான பொருட்கள் :

    சீரகம் - 1 1/2 டீஸ்பூன்
    சின்ன வெங்காயம் - 1 1/2 கப்
    எண்ணெய் - தேவைக்கு
    அரிசி - 1 1/2 கப்

    அரைக்க :

    கொத்தமல்லி தழை - 1 கட்டு
    பூண்டு - 5 பல்
    உப்பு - ருசிக்கேற்ப
    பச்சை மிளகாய் - காரத்திற்கேற்ப

    செய்முறை :

    அரிசியை முதலில் வேகவைத்து உதிரியாக வடித்து ஆறவைத்துக் கொள்ளவும்.

    வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.

    அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

    அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகத்தை போட்டு தாளித்து பின் வெங்காயத்தை போட்டு நன்றாக சிவக்கும் வரை வறுக்கவும்.

    வெங்காயம் வதங்கியம் அரைத்த மசாலாவை வாணலியில் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    எண்ணெய் ஓரங்களில் வர ஆரம்பித்தவுடன் சாதத்தை போட்டு கிளறி இறக்கி பரிமாறவும்.

    சுவையான கொத்தமல்லி புலாவ் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    உருளைக்கிழங்கு வெங்காய வடை சிறிது நேரத்தில் சட்டென்று செய்யக் கூடிய ருசியான சிற்றுண்டி. இனி உருளைக்கிழங்கு வெங்காய வடை செய்முறை பற்றிப் பார்ப்போம்.
    தேவையான பொருட்கள்

    உருளைக்கிழங்கு - 1/4 கிலோ
    பெரிய வெங்காயம் - 2 
    கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
    சோள மாவு - 2 ஸ்பூன்
    மிளகாய் வற்றல் பொடி - 1/2 ஸ்பூன்
    மஞ்சள் பொடி - 1 டீஸ்பூன்
    கரம் மசாலா பொடி - 1 ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    இஞ்சி - பாதி சுண்டு விரல் அளவு
    பச்சை மிளகாய் - 1 எண்ணம்
    கொத்தமல்லி இலை - 1 கொத்து
    கறிவேப்பிலை - 3 கீற்று
    கடலை எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

    செய்முறை

    உருளைக்கிழங்கின் தோலை நீக்கிக் கொள்ளவும். பின்னர் அதனை துருவிக்கொள்ளவும்

    பெரிய வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இஞ்சியை தோல் சீவி நசுக்கிக் கொள்ளவும். 

    உருளைக் கிழங்கில் உள்ள அதிகப்படியான தண்ணீரை பிழிந்து விடவும்.

    வாயகன்ற பாத்திரத்தில் துருவிய உருளைக்கிழங்கு, நறுக்கிய பெரிய வெங்காயம், கடலை மாவு, சோள மாவு, மஞ்சள் பொடி, கரம் மசால் பொடி, மிளகாய் பொடி, இஞ்சி, பச்சை மிளகாய், கொத்த மல்லி இலை, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும். வடை பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். திக்காக வேண்டுமென்றால் சிறிது கடலை மாவு சேர்த்து கொள்ளவும்.

    வாணலியை அடுப்பில் வைத்து கடலை எண்ணெய் ஊற்றி காய விடவும். எண்ணெய் காய்ந்ததும் பிசைந்து வைத்துள்ள கலவையை கையில் எடுத்து வடைகளாகத் தட்டி போட்டு சிவக்க பொரித்து எடுக்கவும்.

    சுவையான உருளைக்கிழங்கு வெங்காய வடை தயார். இதனை மாலை நேரத்தில் டீ-யுடன் சேர்த்து உண்ணப் பொருத்தமாக இருக்கும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    முருங்கைக்காயில் இரும்பு சத்துக்கள் அதிகம் உள்ளதால் உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. சரி வாங்க சிம்பிளான ஸ்டைலில் முருங்கை மசாலா செய்வது குறித்து பார்க்கலாம்...
    தேவையான பொருள்கள்: 

    முருங்கைக்காய் - 4 
    சின்ன வெங்காயம் - 10 
    பச்சைமிளகாய் - 2 
    தக்காளி - 1 
    மிளகாய் பொடி - 1 ஸ்பூன் 
    மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன் 
    உப்பு - தேவையான அளவு 
    கொத்தமல்லி - சிறிதளவு
    கடலை எண்ணெய் - தேவையான அளவு. 

    செய்முறை:

    முதலில் முருங்கைக்காயை துண்டு துண்டாக வெட்டி கொள்ளவும். 

    வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடான பிறகு அதில் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து கடுகு பொரிந்தவுடன் நறுக்கிய முருங்கைக்காய், சின்ன வெங்காயம், தக்காளி, மிளகாய் பொடி, மஞ்சள் தூள் மற்றும் தேவையான உப்பு ஆகியவை சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் வேக வைக்கவும். 

    சின்ன வெங்காயம் சேர்ப்பதால் முருங்கை மசாலா சுவையாக இருக்க உதவும். 

    கடைசியில் கொத்தமல்லியை தூவி இறக்கினால் 20 நிமிடத்தில் சுவையான காரசாரமான முருங்கை மசாலா தயார்..

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நமது இளைய தலைமுறைக்கு தானியங்களின் பயன்களை தெரியப்படுத்தி, அவர்களுக்கு பிடித்த வகையில் உணவு தயாரித்துக் கொடுத்து குழந்தைகளைப் பழக்க வேண்டும்.
    தேவையான பொருட்கள்:

    ராகி மாவு - 1 கப்
    பொரிகடலை மாவு - ½ கப்
    வெல்லம் - ½ கப்
    ஏலக்காய்த் தூள் - 1 தேக்கரண்டி
    தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி
    வெள்ளை எள்ளு - 2 தேக்கரண்டி
    எண்ணெய் - பொறிக்கத் தேவையான அளவு

    செய்முறை:

    முதலில் ராகி மாவை வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும். 

    ராகி மற்றும் பொரிகடலை மாவை நன்றாக சலித்துக் கொள்ளவும். 

    வெல்லத்தை ½ கப் தன்ணீரில் கரைத்து வடிகட்டி, குமிழ்ப் பதத்தில் பாகு காய்ச்சிக்  கொள்ளவும்.

    சலித்த மாவுடன் தேங்காய்த் துருவல், எள்ளு மற்றும் ஏலக்காய்த் தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். 

    இத்துடன் வெல்லப் பாகை சிறிது சிறிதாகக் கலந்து சப்பாத்தி மாவுப் பதத்தில் பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, பின் மிக மெல்லிய தட்டைகளாகத் தட்டி வைத்துக் கொள்ளவும்.

    ஒரு அகலமான வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தீயைக் குறைத்து மிதமான சூட்டில் தட்டைகளை போட்டு பொரித்தெடுக்கவும்.

    சத்தான, சுவையான ராகி இனிப்பு தட்டை ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    செட்டிநாடு கறி வறுவல் என்பது மட்டனில் தயாரிக்கப்படும் மிகவும் பிரபலமான செட்டிநாட்டு அசைவ உணவாகும். சாதம், சப்பாத்தி, இட்லி, தோசையுடன் சாப்பிட மிகவும் பிரமாதமாக இருக்கும்.
    தேவையான பொருள்கள்:

    மட்டன்   - 250 கிராம்
    சின்ன வெங்காயம் - 20
    இஞ்சி - பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி
    தக்காளி - 2
    மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
    தனியா தூள் - 1 தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - ½ தேக்கரண்டி
    மிளகு சீரகத் தூள் - 2 தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு

    அரைத்துக் கொள்ள:

    தேங்காய் - 1 மேசைக்கரண்டி
    கசகசா  - 1 தேக்கரண்டி
    முந்திரி - 3

    தாளிக்க:

    பிரியாணி இலை - 1
    பட்டை - சிறிய துண்டு
    கல் பாசி - சிறிது
    ஏலக்காய்  - 1
    லவங்கம் - 1
    சோம்பு - 1 தேக்கரண்டி
    காய்ந்த மிளகாய்   - 2
    கறிவேப்பிலை - 1  கொத்து
    நல்லெண்ணெய்  - 2 மேசைக்கரண்டி

    செய்முறை:

    தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மட்டனை நன்றாக கழுவிக்கொள்ளவும்.

    கழுவிய மட்டனை குக்கரில் போட்டு மஞ்சள் தூள், உப்பு மற்றும் ½ கப் தண்ணீர் விட்டு 3 விசில் வரை விட்டு, பின் சிம்மில் 5 நிமிடம் வேக விடவும். 

    அடி கனமான கடாயில் நல்லெண்ணெய் விட்டு, தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்த பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். 

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியைச் சேர்த்து கூழாகும் வரை வதக்கவும். 

    பிறகு, மசாலா தூள் அனைத்தையும் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். 

    பின் வேக வைத்த மட்டனைச் சேர்த்து தேவையான உப்பையும் சேர்த்து வதக்கி, மூடி போட்டு 5 நிமிடங்கள் வேக விடவும். 

    தேங்காய் விழுதைச் சேர்த்து வதக்கி, பின் மிளகு சீரகத் தூள் சேர்த்து, மசாலா நன்றாகக் கெட்டியாகி வறுவல் பதம் வரும் வரை கிளறி இறக்கவும்.

    இந்த வறுவல் அனைத்து சாத வகைகளுக்கும் தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும். சாதத்தில் பிசைந்தும் சாப்பிடலாம். சப்பாத்தி, பரோட்டா வகைகளுக்குத்  தொட்டும் சாப்பிடலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பிடிகருணை கிழங்கு மசியல் மிகவும் பிரபலமான செட்டிநாடு சமையல் வகையைச் சேர்ந்தது. ரொம்பவும் சுவையான இந்த மசியலை செய்வது மிகவும் எளிது.
    தேவையான பொருட்கள்:

    பிடிகருணைக் கிழங்கு - 5
    வெங்காயம் - 1
    பூண்டு - 2 பல்
    பச்சை மிளகாய் - 1
    தக்காளி - 1
    சிவப்பு மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்
    மஞ்சள்தூள் - சிறிதளவு
    புளி -  சிறு கோலி அளவு
    உப்பு - தேவையான அளவு

    தாளிக்க:

    நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
    கடுகு - 1 டீஸ்பூன்
    சீரகம் - 1 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு

    செய்முறை:

    கருணைக் கிழங்கை நன்றாக மண் போக கழுவி, குக்கரில் போட்டு கிழங்கு மூழ்கும் வரை தண்ணீர் விட்டு நன்றாக வேக வைத்துக் கொள்ளவும்.

    புளியை கால் கப் தண்ணீரில் ஊற வைக்கவும். 

    வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். 

    ப.மிளகாயைக் கீறி வைத்துக் கொள்ளவும். 

    பூண்டை நசுக்கி வைக்கவும்.

    குக்கரில் பிரஷர் அடங்கியதும், கிழங்கை வெளியே எடுத்து, ஆற வைத்து, தோலுரித்து மசித்துக் கொள்ளவும். 

    மசித்த கிழங்குடன் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், உப்பு, புளித் தண்ணீர் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.

    ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளிக்கவும்.  

    பிறகு நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டு  சேர்த்து வதக்கவும்.

    இவை  லேசாக வதங்கியவுடன், பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து வதக்கி, பின் மசித்த கிழங்கைச் சேர்த்து 2 நிமிடங்களுக்கு நன்றாக வதக்கவும்.

    பிறகு அரை கப் தண்ணீர் சேர்த்து கிளறி, மூடி வைத்து சிம்மில் 5 நிமிடங்களுக்கு வேக வைக்கவும். பிறகு, மூடியைத் திறந்து 5 நிமிடங்கள் சிம்மிலேயே வைத்துக் கிளறி இறக்கவும்.

    சூப்பரான செட்டிநாட்டு பிடிகருணை மசியல் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    எலும்பு சாம்பார் ஒரு செட்டிநாடு அசைவ உணவு, ஆட்டு நெஞ்சு எலும்பில் செய்வார்கள். நெஞ்சு எலும்பும், முருங்கைக்காயும் சேர்த்து சமைக்கும்போது, வீடே மணக்கும்.
    தேவையான பொருட்கள்:

    எலும்பு   - 250 கி
    முருங்கைக்காய் – 1
    து.பருப்பு – 50 கி
    வெங்காயம்– 1
    இஞ்சி – பூண்டு விழுது – 1 மேசைக்கரண்டி
    தக்காளி – 2
    மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
    தனியா தூள் –  4 தேக்கரண்டி
    மஞ்சள் தூள் – ½ தேக்கரண்டி
    புளித் தண்ணீர் – 2 தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு

    அரைத்துக் கொள்ள:

    தேங்காய் – 2 மேசைக்கரண்டி
    கசகசா  - 1 தேக்கரண்டி
    மிளகு - 1 தேக்கரண்டி
    சீரகம் - 1 தேக்கரண்டி

    தாளிக்க:

    பிரியாணி இலை – 1
    பட்டை - சிறிய துண்டு
    கல் பாசி – சிறிது
    சோம்பு – 1 தேக்கரண்டி
    காய்ந்த மிளகாய்   - 2
    கறிவேப்பிலை – 1  கொத்து
    நல்லெண்ணெய்  – 2 மேசைக்கரண்டி

    செய்முறை:

    வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முருங்கைக்காயை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    எலும்பை நன்றாகக் கழுவி குக்கரில் போட்டு து.பருப்பு, உப்பு, மஞ்சள்தூள் மற்றும் 2 கப் தண்ணீர் சேர்த்து  3 விசில் விட்டு 5 நிமிடங்கள் சிம்மில் வேக வைக்கவும். 

    கடாயில் நல்லெண்ணெய் விட்டு, தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பொரிய விடவும். 

    பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். 

    பின் , தக்காளியைச் சேர்த்து கூழாகும் வரை வதக்கவும். 

    பிறகு, குக்கரில் உள்ள பொருட்களைச் சேர்க்கவும். 

    பின்  மசாலா தூள் அனைத்தையும் சேர்த்து , முருங்கைக்காய், தேவையான உப்பு சேர்த்துக் கலந்து கொதிக்க வைக்கவும்.

    புளித் தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வந்ததும் தேங்காய் விழுதைச் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்.

    சுவையான, மணம் மிகுந்த செட்டிநாடு நெஞ்செலும்பு முருங்கைக்காய் சாம்பார் சாப்பிட தயார்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கருப்பு கொண்டைக்கடலை கறி என்றவுடனே அனைவருக்கும் கேரளப் புட்டும், கடலைக் கறியும் தான் ஞாபகத்தில் வரும். இது சாதம் மற்றும் டிபன் வகைகளுடன் சாப்பிட, சுவை அபாரமாக இருக்கும்.
    தேவையான பொருட்கள்:

    கருப்பு கொண்டக்கடலை – 150 கி
    பெரிய  வெங்காயம்  – 1
    பூண்டு (நசுக்கியது) – 3 பல்
    தக்காளி – 2
    மிளகாய் தூள்  – 2 டீஸ்பூன்
    மல்லித்தூள் – 1 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் – சிறிதளவு
    உப்பு – தேவையான அளவு

    ரைத்துக் கொள்ள:

    தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
    கசகசா – கால் டீஸ்பூன்
    முந்திரி (விரும்பினால்) – 5  

    தாளிக்க:

    எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்
    பட்டை  – 1” துண்டு
    சோம்பு  – 1 டீஸ்பூன்
    கருவேப்பிலை – சிறிதளவு


    செய்முறை:

    கொண்டைகடலையை குறைந்தது எட்டு மணி நேரம் ஊற வைத்து, தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து குக்கரில் வேக வைக்கவும்.

    வெங்காயம், தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். 

    அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.

    கடாயில்  எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளிக்கவும். 

    பிறகு வெங்காயம்,பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின்  தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். 

    இத்துடன்  மசாலா பொடிகளை சேர்த்து வதக்கி, வேக வைத்த கொண்டைகடலை சேர்க்கவும். இத்துடன் 1 கப்  தண்ணீர் விட்டு மூடி போட்டு கொதிக்க விடவும். 

    பிறகு  உப்பு மற்றும் அரைத்த மசாலா சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்.

    சுவையான கருப்பு கொண்டைக்கடலை கறியை சூடான சாதத்தில் கலந்து சாப்பிடவும், இட்லி, தோசை, ரொட்டி போன்ற டிபன் ஐட்டங்களுடன் தொட்டு சாப்பிடவும் சுவையாக இருக்கும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×