search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூட்டு"

    நரசிங்கபுரம் நகராட்சியில் கூட்டு துப்புரவு பணி நடந்தது.

    ஆத்தூர்:

    எனது குப்பை எனது பொறுப்பு என்ற தமிழக அரசின் திட்டப்படி நரசிங்கபுரம் நகராட்சியில் கூட்டு துப்புரவு பணி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர், நகர்மன்ற தலைவர் அலெக்சாண்டர், நகர்மன்ற துணைத்தலைவர் தர்மராஜ், நகர செயலாளர் வேல்முருகன், 4-வது வார்டு உறுப்பினர் மற்றும் அனைத்து வார்டு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

    நரசிங்கபுரம் நகராட்சி 4-வது வார்டில் உள்ள தக்காளி மண்டி பின்புறம் உள்ள நகராட்சி பூங்கா இடத்தில் குப்பைகள் தேங்கி கிடந்தன.

    தூய்மை பணியாளர்களை கொண்டு அந்த குப்பைகள் அகற்றப்பட்டன. பின்பு அந்த இடத்தில் மரக்கன்று நடப்பட்டது. மேலும் தூய்மை பணியாளர்களுக்கும் மற்றும் அனைத்து நபர்களுக்கும் 4-வது வார்டு உறுப்பினர் ஜோதி சார்பாக காலை உணவு வழங்கப்பட்டது.

    ×