search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மேத்தி மலாய் பன்னீர்
    X
    மேத்தி மலாய் பன்னீர்

    சப்பாத்திக்கு அருமையான மேத்தி மலாய் பன்னீர்

    பன்னீரில் அதிக கால்சியம் சக்தி உள்ளதால் உணவில் அடிக்கடி பன்னீர் சேர்த்து கொள்வது நல்லது. நீங்கள் வீட்டில் சாப்பாத்தி செய்தால் இந்த மேத்தி மலாய் பன்னீரை தவறாமல் ட்ரை செய்து பாருங்கள்.
    தேவையான பொருட்கள்

    பன்னீர் - 200 கிராம் 
    எண்ணெய் - 4 ஸ்பூன் 
    சீரகம் -1 ஸ்பூன் 
    வெங்காயம் -1 
    இஞ்சி பூண்டு பேஸ்ட் -1 ஸ்பூன் 
    முந்திரி - 3 ஸ்பூன் 
    பாதாம் -3 ஸ்பூன் 
    உலர்ந்த வெந்தய இலைகள் -1 ஸ்பூன் 
    க்ரீம் - ½ கப் 
    உப்பு -தேவையான அளவு 
    சர்க்கரை -1 ஸ்பூன் 
    மிளகாய் தூள் -1 ஸ்பூன் 
    மல்லித் தூள் -1 ஸ்பூன் 
    சீரகப் பொடி -2 ஸ்பூன் 
    மஞ்சள் தூள் -1 ஸ்பூன் 
    கரம் மசாலா -1ஸ்பூன். 

    செய்முறை:

    பன்னீரை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஓரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு அதில் பன்னீரை போட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். 

    பின்னர் வறுத்த பன்னீரை 15 நிமிடம் வெந்நீரில் ஊறவைக்கவும்.15 நிமிடம் கழித்து, தண்ணீரை பிழிந்து தனி பாத்திரத்தில் பன்னீரை மாற்றவும். 

    முந்திரி மற்றும் பாதாமை நீரில் 15 நிமிடம் ஊறவைத்து மிக்சியில் பேஸ்ட் போல் அரைத்து எடுத்து கொள்ளவும். 

    பின்பு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் சீரகம்,வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது போன்றவற்றை சேர்த்து பச்சை வாசனை விலகும் வரை நன்றாக வதக்கி கொள்ளவும். 

    வெங்காயம் நன்கு வதங்கிய பிறகு மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகப் பொடி, மஞ்சள் தூள், கரம் மசாலா, அரைத்த முந்திரி, பாதாம் பேஸ்ட், உப்பு ஆகியவை சேர்த்து கிளறி விடவும். 

    அடுத்து அதில் தேவையான நீர் சேர்த்து பன்னீரை போட்டு மிதமான சூட்டில் 15-20 நிமிடம் வேக வைக்கவும். 

    கடைசியில் உலர்ந்த வெந்தய கீரை மற்றும் க்ரீமை சேர்த்து கிளறி இறக்கினால் சூடான மேத்தி மலாய் பன்னீர் ரெடி... 

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×