search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kootu"

    ஒவ்வொரு காய்கறிகளிலும் ஒவ்வொரு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று அனைத்து விதமாக காய்கறிகளையும் சேர்த்து கூட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கேரட் - 2
    பச்சைப்பாட்டாணி - ஒரு கைப்பிடி
    உருளைக்கிழங்கு - ஒன்று
    பீன்ஸ் - ஐந்து
    தக்காளி - ஒன்று
    வெங்காயம் - 1
    புதினா - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு
    கடுகு - கால் தேக்கரண்டி

    அரைக்க :

    துருவிய தேங்காய் - ஒரு மேஜைக் கரண்டி
    பொட்டுக்கடலை - ஒரு தேக்கரண்டி
    காய்ந்த மிளகாய் - மூன்று
    கிராம்பு - இரண்டு
    ஏலக்காய் - ஒன்று.



    செய்முறை :

    வெங்காயம், கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ், தக்காளி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அடைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

    நறுக்கிய காய்கறிகளை திட்டமாக தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவைக்கவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகை சேர்த்துத் தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் தக்காளி, புதினா சேர்த்து நன்றாக வதக்கவும்.

    தக்காளி குழைய வதங்கியதும் அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கி வேகவைத்த காய்கறிகளை சேர்க்கவும்.

    ஐந்து நிமிடம் இதை கொதிக்க வைத்து இறக்கி விடவும்.

    சூப்பரான காய்கறி கூட்டு ரெடி.

    பின்குறிப்பு : இதை மிதமான தீயில் சமைத்தால் ருசியாக இருக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×