என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    வெங்காயத்தை போலவே வெங்காயத்தாளிலும் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது. இதை கடலைப்பருப்புடன் சேர்த்து வடையாக சுட்டும் சாப்பிடலாம். இதோ வெங்காயத்தாள் வடை செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    வெங்காயத்தாள் - ஒரு கைப்பிடி
    கடலைப்பருப்பு - 2 கப்
    வெங்காயம் - 2
    பூண்டு - 15 பல்
    காய்ந்த மிளகாய் - 3
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
    சோம்பு - கால் தேக்கரண்டி
    பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

    செய்முறை


    கடலைப்பருப்பை முக்கால் மணி நேரம் ஊறவைத்து தண்ணீரை வடிகட்டி காய்ந்த மிளகாய் சேர்த்து கரகககரப்பாக அரைத்து கொள்ளவும்.

    வெங்காயம், வெங்காயத்தாள், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவை போட்டு அதனுடன் வெங்காயம், நசுக்கிய பூண்டு, வெங்காயத்தாள், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு, சோம்பு, பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய்யை ஊற்றி நன்றாக காய்ந்ததும் மாவை சிறுசிறு உருண்டைகளாக்கி உள்ளங்கைகளில் வைத்து லேசாக அழுத்தி எண்ணெய்யிலிட்டு பொரிக்க வேண்டும்.

    மிதமான தீயில் சில நிமிடம் திருப்பி போட்டு வேகவைத்து கருகிவிடாமல் சிவந்த நிறத்தில் எடுத்தால் கமகம மணத்துடன் கரகர மொறுமொறு வெங்காயத்தாள் வடை ரெடி.
    குஜராத்தி உணவுகளில் முத்தியா குஜராத்தி மிகவும் சுவையானது. செய்வதும் மிகவும் சுலபம். இன்று இந்த ரெசிபியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    முட்டைக்கோஸ்  -  250 கிராம்,
    கடலைமாவு - 100 கிராம்,
    பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி,
    ப.மிளகாய் - 3,
    இஞ்சி - 1 துண்டு,
    மஞ்சள் தூள் -  1/4 தேக்கரண்டி,
    ஈனோ எனப்படும் புரூட் சால்ட் - 1/4 தேக்கரண்டி,
    எலுமிச்சை சாறு - 1,
    சர்க்கரை - 1 மேஜைக்கரண்டி,
    எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி.

    தாளிக்க

    எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி,
    கடுகு - 1 தேக்கரண்டி
    மிளகாய்த்தூள், பெருங்காயம், கறிவேப்பிலை,
    சீரகம் - 1/2 தேக்கரண்டி.

    செய்முறை:


    ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மிகவும் பொடியாகத் துருவிய கோஸ் உடன் உப்புக் கலந்து 20 நிமிடம் அப்படியே வைக்கவும். பின் கோஸை நன்றாக பிழிந்து தண்ணீரை வடித்து வைக்கவும்.

    கடலைமாவு மற்றும் ப.மிளகாய், உப்பு, இஞ்சி, எலுமிச்சைச்சாறு, சர்க்கரை, 2 மேஜைக்கரண்டி எண்ணெய், பெருங்காயம் ஆகியவற்றை கோஸ் உடன் சேர்த்து, தேவையான நீர் சேர்த்து, மென்மையான மாவு தயாரிக்கவும்.

    உள்ளங்கையில் சிறிது தண்ணீரைத் தொட்டுக் கொண்டு, உருளை வடிவில் உருட்டி, 15, 20 நிமிடம் ஆவியில் வேகவைக்கவும்.

    ஆறிய பின் துண்டுகளாக நறுக்கவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், பெருங்காயம் தாளித்து ஆவியில் வேகவைத்த முத்தியாவுடன் சேர்த்து 5 நிமிடம் பிரட்டவும்.

    சூடாகப் பரிமாறவும்.

    சூப்பரான முத்தியா குஜராத்தி ரெடி.
    குழந்தைகளுக்கு வீட்டிலேயே அல்வா செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று நேந்திரம் பழம் வைத்து சுவையான அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    நேந்திரம் பழம் - 4
    தேங்காய்த்துருவல் - கால் கப்
    முந்திரிப்பருப்பு - 50 கிராம்
    சர்க்கரை - தேவைக்கு
    ஏலக்காய்த்தூள் - சிறிதளவு
    நெய் - தேவைக்கு

    செய்முறை:

    நேந்திரம் பழத்தை தோலூரித்து சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

    பின்னர் இட்லி தட்டில் 5 நிமிடங்கள் வேகவிட்டு ஆற வைக்கவும்.

    ஆறியதும் மிக்சியில் போட்டு கூழாக அரைத்துக்கொள்வும்.

    அதனை அகன்ற பாத்திரத்தில் ஊற்றி சிறு தீயில் வைத்து கிளறிவிடவும்.

    அத்துடன் சர்க்கரை மற்றும் ஏலக்காய்த்தூளை சேர்த்துக்கொள்ளவும்.

    கொஞ்சம் கொஞ்சமாக நெய் ஊற்றி கிளறி விடவும்.

    பாத்திரத்தில் ஒட்டாமல் அல்வா பதத்துக்கு வரும்போது கீழே இறக்கிவிடவும்.

    அதில் முத்திரி பருப்புகளை தூவி ருசிக்கலாம்.
    மொறுமொறுப்பான பக்கோடா வகைகளை வீட்டிலேயே தயார் செய்து மாலை நேர ஸ்நாக்ஸாக டீ, காபியுடன் சேர்த்து ருசிக்கலாம். உணவுடன் சேர்த்தும் சாப்பிடலாம்.
    தேவையான பொருட்கள் :

    வறுத்த சேமியா - கால் கிலோ  
    கடலை மாவு - 50 கிராம்  
    இஞ்சி துண்டு - 1  
    பெ.வெங்காயம் - 3 (நறுக்கவும்)  
    பச்சை மிளகாய் - 3 (நறுக்கவும்)  
    அரிசி மாவு - கால் கப்  
    எண்ணெய், உப்பு - தேவைக்கு
    கொத்தமல்லி தழை - சிறிதளவு

    செய்முறை:

    அகன்ற பாத்திரத்தில் அரிசி மாவு, கடலை மாவு, சேமியா, இஞ்சி, மிளகாய், வெங்காயம், கொத்தமல்லித்தழை ஆகியவற்றை கொட்டி போதுமான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து பிசைந்து மாவு பதத்துக்கு கொண்டு வரவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் மாவு கலவையை சிறிது சிறிதாக உதிர்த்து போட்டு பொரித்தெடுக்கவும்.

    சூப்பரான சேமியாபக்கோடா ரெடி.
    கறிவேப்பிலை உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து நல்ல கொழுப்பை அதிகரித்து இதய நோய் வராமல் பாதுகாக்கிறது. இன்று கறிவேப்பிலையில் தொக்கு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கறிவேப்பிலை - 1 கப்
    புளி - சிறிய எலுமிச்சை பழம்அளவு
    துருவிய வெல்லம் - ஒரு கைப்பிடி அளவு
    காய்ந்த மிளகாய் - 4
    கடுகு - சிறிதளவு
    பெருங்காயத்தூள் - சிறிதளவு
    உப்பு, நல்லெண்ணெய் - தேவைக்கு
    கடுகு பொடி - சிறிதளவு

    செய்முறை:

    புளியையும், மிளகாயையும் சிறிது நேரம் தண்ணீரில் ஊறவைத்து அதனுடன் கறிவேப்பிலை சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும்.

    பிறகு கறிவேப்பிலை விழுதைக் கொட்டி கிளறவும்.

    கெட்டி பதத்துக்கு வந்ததும் வெல்லம், உப்பு தூவி கிளறி இறக்கவும்.

    அதனுடன் கடுகு பொடி தூவி பரிமாறலாம்.
    தோசை, இட்லி, சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த தேங்காய்ப்பால் சிக்கன் குழம்பு. இந்த குழம்பு செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோழி இறைச்சி - அரை கிலோ
    தக்காளி - 3 (நறுக்கவும்)
    சி.வெங்காயம் - அரை கப் (நறுக்கியது)
    பச்சை மிளகாய் - 2 (நறுக்கவும்)
    காய்ந்த மிளகாய் - 2 (நறுக்கவும்)
    சிக்கன் மசாலா தூள் - 2 டேபிள்ஸ்பூன்
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு
    மஞ்சள் தூள், கடுகு - சிறிதளவு
    தேங்காய்ப்பால் - அரை டம்ளர்
    கறிவேப்பிலை - சிறிதளவு

    செய்முறை:

    கோழி இறைச்சியை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், தக்காளி, வெங்காயம் ஆகியவற்றை கொட்டி வதக்கவும்.

    அதனுடன் கோழி இறைச்சி துண்டுகளை சேர்த்து கிளறவும்.

    பின்னர் சிக்கன் மசாலா தூள், மஞ்சள் தூள், உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து மூடி வேக வைக்கவும்.

    ஓரளவு வெந்ததும் தேங்காய்ப்பாலை ஊற்றி கிளறி மீண்டும் மூடி வைக்கவும்.

    தேங்காய் பால் நன்கு வற்றி குழம்பு பதத்துக்கு வந்ததும் இறக்கி பரிமாறலாம்.

    சூப்பரான தேங்காய்ப்பால் சிக்கன் குழம்பு ரெடி.
    சிறுதானியங்களில் பல்வேறு சுவையான ரெசிபிகளை செய்யலாம். அந்த வகையில் இன்று உருளைக்கிழங்கு, தினை மாவு சேர்த்து பூரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தினை மாவு - 2 கப்
    உருளைக்கிழங்கு - 2
    கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி
    இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
    எண்ணெய் - தேவையான அளவு
    இந்துப்பு - சிறிதளவு
    நெய் - 1 டேபிள்ஸ்பூன்

    செய்முறை:

    உருளைக்கிழங்கை வேக வைத்து தோலை நீக்கி நன்றாக மசித்துக்கொள்ளவும்.

    அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, இந்துப்பு, நெய், கொத்தமல்லி தழை ஆகியவற்றை சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

    தினை மாவை கலந்து பூரி பதத்துக்கு பிசைந்து கால் மணி நேரம் ஊற வைக்கவும்.

    மாவு பிசைவதற்கு உருளைக்கிழங்கை வேகவைத்த தண்ணீரை சிறிதளவு சேர்த்துக்கொள்ளலாம். பின்னர் சிறு உருண்டைகளாக உருட்டி பூரிகளாக தேய்த்தெடுத்துக்கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் பூரிகளை போட்டு மொறுமொறுப்பாக பொரித்தெடுக்கவும்.

    சூப்பரான தினை உருளைக்கிழங்கு மசாலா பூரி ரெடி.
    தோசை, நாண், சப்பாத்தி, சூடான சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த பச்சை பயிறு குருமா. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பச்சை பயிறு  - 1/2 கப்
    வெங்காயம் - 1
    தக்காளி     - 1
    மிளகாய்     - 1
    இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு
    கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை - தேவையான அளவு

    செய்முறை

    கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரில் பச்சை பயிறு, வெங்காயம், தக்காளி, மிளகாய் போட்டு அவித்துக் கொள்ள வேண்டும்.

    அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சி, பூண்டு விழுதை போட்டு வதக்கிய பின்னர் அவித்ததைப் கொட்டி உப்பு சேர்த்து கிளற வேண்டும்.

    திக்கான பதம் வந்தவுடன் கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை தூவி இறக்க வேண்டும்.

    சப்பாத்தி செய்து அதற்கு குருமாவாக பயன்படுத்தலாம். ருசியாக இருக்கும்.

    குறிப்பு:

    * கருவுற்ற பெண்கள் தினமும் முளைகட்டிய சிறுபயிறு எடுத்துக்கொள்வது நல்லது.
    * இரவில் பச்சை பயிறு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். வாயுவை உற்பத்தி செய்யும்.
    * குழந்தைகளுக்கு அளவாக கொடுக்க வேண்டும். அதிகமாக சாப்பிட்டால் வயிறு உப்பிசம் ஏற்படும். பேதியாகலாம்.
    ஜீரண சக்தி குறைபாடு, வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினை, சீறுநீரகப் பாதிப்பு கொண்டவர்கள் மிக குறைவான அளவில் பயன்படுத்த வேண்டும்.
    இந்த தொக்கை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் கல்லீரல், சிறுநீரகம், எலும்பு ஆகியவற்றின் ஆரோக்கியம் மேம்படும். தொற்றுக்கிருமிகளின் தாக்கமும் குறையும்.
    தேவையான பொருட்கள் :

    சுண்டைக்காய் - அரை கப்
    தனியா - 2 டீஸ்பூன்
    சின்னவெங்காயம் - 1 கப்
    தக்காளி - 4 (நறுக்கவும்)
    கடலை எண்ணெய் - 5 ஸ்பூன்
    கடுகு - அரை டீஸ்பூன்
    உளுந்து பருப்பு - 1 ஸ்பூன்
    கடலை பருப்பு - 1 டீஸ்பூன்
    வெந்தயம் - அரை டீஸ்பூன்
    பூண்டு - 4 பல்
    கறிவேப்பிலை - தேவைக்கேற்ப
    கல் உப்பு - தேவையான அளவு
    புளி கரைசல் - 2 டீஸ்பூன்
    வெல்லம் - அரை டீஸ்பூன்

    செய்முறை:

    ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அது சூடானதும் தனியா, தக்காளி ஆகியவற்றை கொட்டி லேசாக வதக்கவும்.

    பின்னர் அதனை ஆறவைத்து மிக்சியில் அரைத்துக்கொள்ளவும்.

    அகன்ற பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, பூண்டு, கடலை பருப்பு, உளுந்து பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். பின்னர் அதனுடன் வெங்காயத்தை கொட்டி பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

    அதனுடன் வெந்தயம், வெல்லம் ஆகியவற்றை கொட்டி நன்றாக கிளறி இறக்கவும்.

    மற்றொரு பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அது சூடானதும் சுண்டைக்காயை கொட்டி லேசாக வதக்கவும்.

    அதனுடன் அரைத்த விழுது, வதக்கிய பொருட்கள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.

    பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும். தொக்கு பதத்துக்கு வந்ததும் இறக்கவும். இதை 3-4 மணிநேரம் கழித்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.

    ஆரோக்கிய பலன்: இந்த தொக்கை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் கல்லீரல், சிறுநீரகம், எலும்பு ஆகியவற்றின் ஆரோக்கியம் மேம்படும். அல்சர் பிரச்சினை, நுரையீரல் புற்றுநோய் போன்ற பாதிப்புகள் குறையும். தொற்றுக்கிருமிகளின் தாக்கமும் குறையும். பற்களின் ஆரோக்கியமும் மேம்படும்.
    சப்பாத்தி, நாண், தோசை, சூடான சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த வெண்டைக்காய் பாதாம் கிரேவி. இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாதாம் பருப்பு - 10
    வெண்டைக்காய் - 100 கிராம் (நறுக்கவும்
    பெ.வெங்காயம் - 2 (நறுக்கவும்)
    தக்காளி - 3 (நறுக்கவும்)
    இஞ்சி - சிறிதளவு
    ஏலக்காய் - 2
    மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
    உலர்ந்த வெந்தயக்கீரை - சிறிதளவு
    கரம் மசாலாத்தூள், சோம்புத்தூள் - சிறிதளவு
    எண்ணெய், உப்பு - தேவைக்கு

    செய்முறை:

    சுடுநீரில் பாதாம் பருப்பை கால் மணி நேரம் ஊறவைத்து தோல் நீக்கிக்கொள்ள வேண்டும்.

    வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அது சூடானதும் வெண்டைக்காயை கொட்டி வதக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் பாதாம், ஏலக்காய், வெங்காயம், சோம்புத்தூள், வெந்தயக்கீரை, இஞ்சி ஆகியவற்றை மிக்சியில் விழுதாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

    தக்காளியையும் தனியாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதனுடன் அரைத்து வைத்த விழுதை கொட்டி வதக்க வேண்டும்.

    அடுத்து தக்காளி விழுதையும் சேர்த்து கிளறிவிட வேண்டும்.

    பின்னர் கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து கிளறிவிடவும்.

    இறுதியில் வதக்கிய வெண்டைக்காயை சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி வேகவிட்டு இறக்கவும்.

    சூப்பரான வெண்டைக்காய் பாதாம் கிரேவி ரெடி.
    குழந்தைகளுக்கு முந்திரி பிஸ்கட் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே எளிய முறையில் முந்திரி பிஸ்கட் தயார் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மைதா மாவு - கால் கிலோ
    பெ.வெங்காயம் - 2 (நறுக்கவும்)
    பச்சை மிளகாய் - 5
    பேக்கிங் பவுடர் - சிறிதளவு
    நறுக்கிய கொத்தமல்லி தழை - கால் கப்
    பூண்டு - 4 பல்
    சீரகப்பொடி - அரை டீஸ்பூன்
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை:

    சீரகப்பொடியை சிறு தீயில் வறுத்துக்கொள்ளவும்.

    கொத்தமல்லி தழை, வெங்காயம், மிளகாய், பூண்டு ஆகியவற்றை மிருதுவாக அரைத்துக்கொள்ளவும்.

    அகன்ற பாத்திரத்தில் மைதா மாவை கொட்டி அதனுடன் அரைத்த விழுது, சீரகப்பொடி, பேக்கிங் பவுடர், உப்பு ஆகியவற்றை சேர்த்து கிளறவும்.

    அதனுடன் சிறிதளவு சூடான எண்ணெய் ஊற்றி மாவு பதத்துக்கு பிசைந்து கொள்ளவும்.

    பின்னர் சப்பாத்தி பதத்திற்கு தேய்த்து முந்திரி பருப்பு வடிவில் சிறு சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் துண்டுகளை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

    முந்திரி வடிவத்தில் இருப்பதால் அந்த பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

    முந்திரி பிஸ்கட் ரெடி.
    குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் சாப்பிட மிகவும் பிடிக்கும். இன்று பேபி கார்ன் வைத்து அருமையான ஸ்நாக்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்  :

    பேபி கார்ன் - 5 கூம்புகள்
    சோள மாவு - அரை கப்
    மிளகாய்த்தூள் - சிறிதளவு
    கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
    எலுமிச்சைச்சாறு - சிறிதளவு
    எண்ணெய், உப்பு - தேவைக்கு

    செய்முறை:

    பேபி கார்னை நீள வாக்கில் சிறிதாக நறுக்கிக்கொள்ளவும்.

    அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

    கொதிக்க தொடங்கியதும் பேபி கார்னை போட்டு ஓரிரு நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும்.

    அவை ஆறியதும் அதனுடன் மிளகாய் தூள், கரம் மசாலாத்தூள், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கிளறவும்.

    பின்னர் சோளமாவில் போட்டு புரட்டி எடுக்கவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் பேபி கார்ன்களை ஒவ்வொன்றாக போட்டு பொன்னிறமாக வறுத்தெடுக்கவும்.

    ருசியான பேபி கார்ன் பிரை ரெடி.

    இதனை சிறுவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.
    ×