என் மலர்tooltip icon

    சமையல்

    இட்லி, தோசை, சாதத்தில் ஊற்றி சாப்பிட அருமையாக இருக்கும் மட்டன் எலும்பு சால்னா. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மட்டன் எலும்பு - 1 கப்
    துவரம் பருப்பு - 1/2 கப்
    கடலைபருப்பு - 1/2 கப்
    நறுக்கிய வெங்காயம் - 1/4 கப்
    தக்காளி - 1/2 கப்
    இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
    பிரிஞ்சி இலை - 1
    பட்டை - 1
    கிராம்பு - 1 - 2
    வெங்காயம் - 1/2 கப்
    தக்காளி - 1/4 கப்
    கத்தரிக்காய் - 2
    கறிவேப்பிலை - சிறிதளவு
    மிளகாய் பொடி - 1 டேபிள்ஸ்பூன்
    மல்லி பொடி - 2 டேபிள்ஸ்பூன்
    கொத்தமல்லி இலை - சிறிதளவு
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு

    மட்டன் எலும்பு சால்னா

    செய்முறை :

    மட்டன் எலும்பை நன்றாக கழுவிக்கொள்ளவும்.

    கத்தரிக்காய், வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடலை பருப்பு, துவரம் பருப்பை நன்றாக கழுவி அதனுடன், மட்டன் எலும்பு, வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, தக்காளி, பிரிஞ்சி இலை சேர்த்து குக்கரில் (4 விசில்) விட்டு வேக வைத்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, கறிவேப்பிலையை சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும். தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும்  தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும்.

    அடுத்து அதில் மிளகாய்தூள், மல்லி தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் போகும் வரை வதக்கவும்,

    பின் கத்தரிக்காயை சேர்த்து வேகவைக்கவும்.

    பின்னர் வேகவைத்த பருப்பு கலவை, உப்பு சேர்த்து 10 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான மட்டன்  எலும்பு சால்னா ரெடி

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    அடுப்பில் வைத்து சமைக்காமல் அருகம்புல், ராசி அவல் வைத்து சத்தான சுவையான லட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அருகம்புல் - ஒரு கப்
    வெல்லம் - 100 கிராம்
    ராகி அவல் -100 கிராம்
    தேங்காய் துருவல் - ஒரு கப்
    பொட்டுக்கடலை - 50 கிராம் (கொரகொரப்பாக அரைத்தது)
    ஏலக்காய்த்தூள்  - சிறிதளவு
    சுக்கு தூள்  - சிறிதளவு

    செய்முறை:

    அருகம்புல்லை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
     
    ராகி அவலை நன்றாக கழுவி இரண்டு நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

    வெல்லத்தை மிக்ஸியில் பொடித்துக் கொள்ள வேண்டும்.

    ராகி அவலில் உள்ள தண்ணீரை நன்றாக வடித்து விட்டு மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும்.

    பொடியாக நறுக்கிய அருகம்புல்லை தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் விழுதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

    பிறகு ஒரு கிண்ணத்தில் அரைத்த ராகி அவல், விழுதாக அரைத்த அருகம்புல், பொடித்த வெள்ளம், தேங்காய் துருவல், பொட்டுகடலை, சுக்குத்தூள், ஏலக்காய்த்தூள், அனைத்தையும் சேர்த்து நன்றாக பிசைந்து லட்டாக பிடித்தால் அருகம்புல் லட்டு தயார்.

    சத்தான சுவையான அருகம்புல் லட்டு ரெடி.

    B. இந்துமதி

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு மக்ரோனி என்றால் மிகவும் பிடிக்கும். இன்று மக்ரோனியுடன் சிக்கன் சேர்த்து செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    சிக்கன் - 200 கிராம்
    மக்ரோனி - ஒரு கப்
    சோயா சாஸ் - 3 டேபிள் ஸ்பூன்
    சோள மாவு - 2 டீஸ்பூன்
    வெங்காயம் - ஒன்று
    இஞ்சி - ஒரு துண்டு
    பூண்டு - 10
    பச்சை மிளகாய் - 1
    குடை மிளகாய் - 1
    இஞ்சி பூண்டு விழுது - அரை டீஸ்பூன்
    தக்காளி - ஒன்று
    மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
    தக்காளி சாஸ் - 3 டேபிள் ஸ்பூன்
    காய்ந்த மிளகாய் துகள் - 3 டேபிள் ஸ்பூன்
    மிளகு தூள் - 1 டீஸ்பூன்
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    சிக்கன் மக்ரோனி

    செய்முறை:

    கொத்தமல்லி, பூண்டு, இஞ்சி, ப.மிளகாய், குடைமிளகாய், வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    ஒரு கிண்ணத்தில் சுத்தம் செய்த சிக்கனை போட்டு அதனுடன் சோயா சாஸ், சோள மாவு, மிளகு தூள், உப்பு சேர்த்து கலந்து சுமார் அரை மணி நேரம் ஊறவிடவும்.

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் மக்ரோனி, எண்ணெய், உப்பு சேர்த்து முக்கால் பாகம் வேகவிட்டு தனியாக எடுத்து வைக்கவும்.

    மற்றொரு கடாயில் எண்ணெய்விட்டு சிக்கன் துண்டுகளை போட்டு சுமார் பத்து நிமிடங்களுக்கு வேகவிடவும். சிக்கன் வெந்ததும் தனியாக எடுத்து வைக்கவும்.

    அதே வாணலியில் மீண்டும் எண்ணெய்விட்டு சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், குடை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.

    அத்துடன், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி பூண்டு பச்சை வாசனை போனவுடன் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.

    பின்னர், மிளகுத்தூள், காய்ந்த மிளகாய் துகள், மிளகாய்த்தூள், உப்பு, தக்காளி சாஸ் சேர்த்து கிளறி வேகவிடவும்.

    பின்னர், சிக்கன் துண்டுகள், மக்ரோனி சேர்த்து கலந்து இரண்டு நிமிடங்கள் கழித்து இறக்கவும்.

    இறுதியாக, கொத்தமல்லித்தழை தூவி சுடச்சுட பரிமாறவும்.

    சுடச்சுட சிக்கன் மக்ரோனி ரெடி..!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஓட்ஸை மசாலா பொருட்கள் சேர்த்து ஓட்ஸ் மசாலா கஞ்சி செய்யலாம். இது அருமையான சுவையில் இருப்பதுடன், செய்வது மிகவும் ஈஸி. அந்த ஓட்ஸ் மசாலா கஞ்சி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    ஓட்ஸ் - 1/2 கப்
    சீரகப் பொடி - 1/4 டீஸ்பூன்
    மல்லி தூள் - 1/4 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    தண்ணீர் - தேவையான அளவு
    கொத்தமல்லி - சிறிது

    ஓட்ஸ் மசாலா கஞ்சி

    செய்முறை:

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஓட்ஸை போட்டு சிறிது நேரம் வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    பின் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.

    தண்ணீரானது கொதிக்க ஆரம்பிக்கும் போது, அதில் வறுத்து வைத்துள்ள ஓட்ஸை போட்டு, தட்டு கொண்டு மூடி வைத்து ஓட்ஸை வேக வைக்க வேண்டும்.

    ஓட்ஸானது நன்கு வெந்ததும், அதில் சீரகப் பொடி, மல்லி தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை சிறிது நேரம் கிளறி இறக்கி, இறுதியில் கொத்தமல்லியைத் தூவினால், சுவையான ஓட்ஸ் மசாலா கஞ்சி ரெடி!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு கேக் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று கேழ்வரகு வைத்து சுவையான பிரவுனி கேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    கெட்டித்தயிர் - அரை கப்,
    பிரவுன் சுகர் - முக்கால் கப்,
    கேழ்வரகு மாவு - முக்கால் கப்,
    கோதுமை மாவு - அரை கப்,
    டார்க் சாக்லெட் - 140 கிராம்,
    கோக்கோ பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்,
    செக்கு தேங்காய் எண்ணெய் - கால் கப்,
    வெனிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்,
    நட்ஸ்  - தேவைக்கேற்ப.

    கேழ்வரகு பிரவுனி

    செய்முறை

    கேழ்வரகு மாவு, கோதுமை மாவு மற்றும் கொக்கோ பவுடர் அனைத்தையும் சலித்து கொள்ளவும்.

    தேங்காய் எண்ணெய்,  சாக்லெட் இரண்டையும் டபுள் பாய்லரில் உருக்கவும்.

    மற்றொரு பாத்திரத்தில் பிரவுன் சுகர் மற்றும் கெட்டித்தயிர் இரண்டையும் கலக்கவும்.

    உருகிய சாக்லெட் கலவையை இத்துடன் சேர்க்கவும்.

    அடுத்து அதனுடன் வெனிலா எசன்ஸ் சேர்த்து கிளறவும்.

    சலித்த மாவை இதனுடன் சேர்த்து கட்டி இல்லாமல் கலந்து கேக் பாத்திரத்தில் ஊற்றி,  நட்ஸ் தூவி 180 டிகிரி பிரீ ஹீட்டட் ஓவனில் 30 நிமிடம் வைத்து எடுக்கவும்.

    சூப்பரான கேழ்வரகு பிரவுனி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு உண்ணக்கொடுக்கும் உணவு சத்தானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கவேண்டும். குழந்தைகளுக்கு மாலை நேரங்களில் சென்னா சுண்டல் தயாரித்து கொடுக்கலாம்.
    தேவையான பொருட்கள்

    சென்னா - கால் கிலோ
    சின்னவெங்காயம் - 50 கிராம்
    பச்சை மிளகாய் - 2
    கறிவேப்பிலை - 1 கொத்து
    கடுகு, உளுந்து - 1 டீ ஸ்பூன்
    எண்ணெய் - 2 டீ ஸ்பூன்
    துருவிய தேங்காய் - கால் கப்
    உப்பு - தேவையான அளவு

    சென்னா சுண்டல்

    செய்முறை :

    சென்னாவை 6 மணிநேரம் ஊற வைத்து சிறிதளவு உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.

    சின்ன வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெயில் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் சின்னவெங்காயம், பச்சைமிளகாய் போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்கு வதங்கியதும் வேகவைத்த சுண்டலை தண்ணீரை வடித்து வாணலியில் போட்டு கிளறவும்.

    அத்துடன் தேங்காய் துருவலை சேர்த்து வதக்கி இறக்கவும்.

    சத்தான சென்னா சுண்டல் ரெடி.

    குழந்தைகளுக்கு ஏற்ற மாலை நேர சிற்றுண்டி இது.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் எள்ளு மட்டன் குழம்பு. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    மட்டன் - ½ கிலோ
    மஞ்சள் தூள் - ¼ ஸ்பூன்
    இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
    தயிர் - ¼ கப்
    மிளகு - 1 ஸ்பூன்
    சீரகம் - 1 ஸ்பூன்
    பெருஞ்சீரகம் - 1 ஸ்பூன்
    எள்ளு - 2  ஸ்பூன்
    பட்டை - 1 துண்டு
    கிராம்பு - 2 துண்டு
    நட்சத்திர மொக்கு - 1
    முந்திரி - 6
    வெங்காயம் - 2
    தக்காளி - 2
    காய்ந்த மிளகாய் - 4
    பூண்டு - 10 பல்
    முருங்கைக்காய் - 1
    உருளை கிழங்கு - 1
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் -

    எள்ளு மட்டன் குழம்பு

    செய்முறை

    கொத்தமல்லி, உருளைக்கிழங்கு, முறுங்கைக்காய், வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மட்டனை நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.

    பின் மட்டனுடன் மஞ்சள் தூள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது, சிறிதளவு தயிர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் 6 முதல் 7 விசில் வைத்து நன்கு வேக வைக்கவும்.

    பின்னர் ஒரு அகன்ற வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மிளகு, சீரகம், பெருஞ்சீரகம், எள், பட்டை, கிராம்பு, நட்சத்திர மொக்கு, முந்திரி, சேர்த்து வதக்கவும்.

    வதங்கிய பின் அதனுடன் வெங்காயம், காய்ந்த மிளகாய், பூண்டு, இஞ்சி சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கவும்.

    வதக்கிய பொருட்களை ஆற வைத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவு்ம்.

    மற்றொரு பாத்திரத்தில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை தாளிக்கவும்.

    இதனுடன் ஒரு வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம், தக்காளியுடன் அரைத்து வைத்துள்ள வெங்காய மசாலா கலவையை சேர்த்து நன்கு கிளறி விடவும்.

    அதனுடன் குக்கரில் வேக வைத்து வைத்துள்ள  மட்டனை சேர்க்கவும்.

    பின்னர் ஒரு முருங்கைக்காய் அல்லது ஒரு உருளைகிழங்கு அதனுடன் நறுக்கி சேர்க்கவும்.

    மட்டன் வேக வைத்த தண்ணீருடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

    நன்கு கொதித்த பின்னர் கொத்தமல்லித் தழை தூவி இறக்கினால் சுவையான எள்ளு  மட்டன் குழம்பு ரெடி

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மூங்கில் அரிசியை நீரிழிவு நோயாளிகள் பயன்படுத்துவதன் மூலம் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க முடியும். இன்று மூங்கல் அரிசியில் சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    இனிப்பு சுவையுடன் கூடிய மூங்கில் அரிசி உறுதியானது என்பதுடன், ஊட்டச்சத்து நிறைந்த அரிசியாகும். உடலில் உள்ள வாத, பித்த, கப தோஷங்களை நிவர்த்தி செய்வதுடன் உடலில் சேரும் நச்சுக்களை நீக்கும் தன்மை கொண்டது. அதாவது சிறுநீர் வழியே உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றும் வகையில் இதன் செயல்பாடு அமைகிறது.

    தேவையான பொருட்கள் :

    மூங்கில் ரைஸ் (‘காதி கிராஃப்ட்’டில் கிடைக்கும்) - ஒரு கப்,
    கேரட் - ஒன்று ,
    பட்டாணி - ஒரு கப்,
    பீன்ஸ் - 5,
    வெங்காயம் - ஒன்று,
    பூண்டு - 2 பல்,
    வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
    கொத்தமல்லி தழை  - ஒரு கைப்பிடி அளவு,
    மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு.

    மூங்கில் அரிசி காய்கறி சூப்

    செய்முறை:

    பீன்ஸ், கேரட், கொத்தமல்லி, வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.

    மூங்கில் அரிசியில் கல் இருந்தால் நீக்கிவிட்டு, கழுவி 30 நிமிடம் ஊற வைத்து சாதம் சமைப்பது போல் வேக வைத்து கொள்ளவும். (குக்கரில் போட வேண்டாம்). வடிகஞ்சியையும் உபயோகிக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து வெண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய பூண்டு, கேரட், பீன்ஸ், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

    இதனுடன் வேக வைத்த பட்டாணியும் சேர்த்து வதக்கவும்.

    உப்பு, மிளகுதூள், வடித்த கஞ்சியை சேர்த்து மேலும் சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விட்டு, காய்கறி பாதி வெந்தவுடன் மூங்கில் ரைஸை சேர்த்து, கொதி வந்தவுடன் நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி, இறக்கி பரிமாறவும்.

    சத்தான மூங்கில் அரிசி காய்கறி சூப் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு பூரி என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வெந்தயகீரையை சேர்த்து சத்தான பூரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை மாவு - 2 கப்
    வெந்தயக்கீரை - 2 கப்
    மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
    எண்ணெய் உப்பு - தேவையான அளவு.

    மேத்தி பூரி

    செய்முறை:


    வெந்தயக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கோதுமை மாவுடன் வெந்தயக் கீரை, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துக் கலந்து பிசைந்து கொள்ளவும்.

    மாவை சிறு சிறு உருண்டைகளாக செய்து பூரிகளாக தேய்த்து வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்து வைத்த பூரியில் எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

    சூப்பரான மேத்தி பூரி ரெடி

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சோயா பீன்ஸ், டோஃபுவில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று இது இரண்டையும் வைத்து சத்தான சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முளைவிட்ட சோயா பீன்ஸ் - —300 கிராம்
    கேரட் - 1
    முட்டைக்கோஸ் - சிறிய துண்டு
    டோஃபு - — - 200 கிராம்
    வெங்காயம் - 1
    உப்பு, மிளகு துள் - — சுவைக்கேற்ப
    நல்லெண்ணெய் — - 1 தேக்கரண்டி
    எள், ரோஸ்ட் செய்தது— - 2 தேக்கரண்டி
    இனிப்பு சோயா சாஸ்— - 1 தேக்கரண்டி
    கொத்தமல்லி தழை - சிறிதளவு

     சோயா பீன்ஸ் டோஃபு சாலட்

    செய்முறை:

    முளைவிட்ட சோயா பீன்ஸை வேக வைத்து கொள்ளவும்.

    வெங்காயம்,  கொத்தமல்லி, கேரட், முட்டைகோஸை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    டோஃபுவை நீவவாக்கில் வெட்டி வேக வைத்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் முளைத்த சோயா பீன்ஸ் விதை, கேரட், முட்டைக்கோஸ், டோஃபு, உப்பு, மிளகு தூள், வெங்காயத்துடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    நல்லெண்ணெயால் சீசன் செய்யவும், பின்னர் இனிப்பான சோயா சாஸை சேர்க்கவும்.

    எள், கொத்தமல்லி தழையை தூவி அலங்கரித்து பரிமாறவும்.

    சத்தான சோயா பீன்ஸ் டோஃபு சாலட் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கிராமத்து ஸ்டைலில் கறிக்குழம்பு செய்து சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட்டால் அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    ஆட்டுக்கறி - 1 கிலோ
    பெரிய தக்காளி - 2  
    சின்ன வெங்காயம் - 10  
    காய்ந்த மிளகாய் - 10  
    எண்ணெய் - தேவையான அளவு  
    சோம்பு  - ½ ஸ்பூன்   
    உப்பு - தேவையான அளவு  
    பூண்டு - 5 பல்
    ஏலக்காய் - 2  
    துருவிய தேங்காய் - 1/4 கப்
    மஞ்சள் தூள் -  ½ ஸ்பூன்
    பட்டை -1 துண்டு   
    லவங்கம் - 2
    கசகசா - 1 ஸ்பூன்
    மிளகு - 2 ஸ்பூன்
    தனியா - 1 ஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு  
    கொத்தமல்லி தழை - சிறிதளவு
    கடுகு - 1 ஸ்பூன்
    சீரகம் - 1 ஸ்பூன்
    உளுந்து - 1 ஸ்பூன்
    கடலைப்பருப்பு  - 1 ஸ்பூன்

    கிராமத்து கறிக்குழம்பு

    செய்முறை

    முதலில் கறியை சுத்தம் செய்து கழுவி எடுத்துக் கொள்ளவும்.

    பின்னர் கறியில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும்.

    எண்ணெய் காய்ந்ததும் அதில் காய்ந்த மிளகாய், தனியா, மிளகு என அனைத்தையும் தனித்தனியே போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

    வறுத்த பொருட்களுடன் பட்டை, லவங்கம், ஏலக்காய், சோம்பு, கசகசா, தேங்காய் என அனைத்தையும் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.

    இன்னொரு பாத்திரத்தில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், உளுந்து, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, என அனைத்தையும் சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம், பூண்டு ஆகிய இரண்டையும் போட்டு நன்கு வதக்கவும்.

    அனைத்தும் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

    அத்துடன் வேகவைத்த ஆட்டுக் கறியை சேர்க்கவும்.

    அரைத்த விழுது, மஞ்சள் தூள், தண்ணீர், உப்பு ஆகிய அனைத்தையும் சேர்த்து எண்ணெய் நன்கு திரண்டு வரும் வரையில் கொதிக்க விடவும்.

    நன்கு கொதித்த பிறகு கடைசியாக கறிவேப்பிலை, கொத்தமல்லியை தாளித்து கொட்டி இறக்கினால் சுவையான கிராமத்து கறிக்குழம்பு ரெடி..

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு சத்தான டிபன் கொடுக்க விரும்பினால் கேழ்வரகு, கருப்பட்டி சேர்த்து தோசை செய்து கொடுக்கலாம். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு மாவு - ஒரு கப்,
    அரிசி மாவு - கால் கப்,
    கருப்பட்டி  - அரை கப்,
    தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள் ஸ்பூன்,
    ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்,
    நெய் - தேவையான அளவு,
    உப்பு - ஒரு சிட்டிகை.

    கேழ்வரகு கருப்பட்டி தோசை

    செய்முறை :


    ஒரு பாத்திரத்தில் கருப்பட்டி மூழ்கும் வரை தண்ணீர் சேர்த்து சூடாக்கி ஒரு கொதிவிட்டு இறக்கவும்.

    கல், மண் போக வடிகட்டி ஆறவிடவும்.

    அகலமான பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, அரிசி மாவு, கருப்பட்டி கரைசல், தேங்காய்த்துருவல், ஏலக்காய்த்தூள், உப்பு சேர்த்து தோசை மாவு பதத்துக்கு கரைக்கவும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை ஊற்றி, இருபுறம் நெய் விட்டு வேகவைத்து எடுத்துப் பரிமாறவும்.

    சூப்பரான சத்தான கேழ்வரகு கருப்பட்டி தோசை

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×