என் மலர்tooltip icon

    சமையல்

    தோசை, சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட இந்த ஆம்லெட் புளிக்குழம்பு அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முட்டை - 4
    எண்ணெய் - தேவையான அளவு
    வெங்காயம் - 2
    தக்காளி - 1
    பச்சை மிளகாய் - 2
    புளி - எலுமிச்சை காய் அளவு
    மஞ்சத்தூள் - அரை ஸ்பூன்
    மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன்
    கொத்த மல்லித்தூள் - அரை ஸ்பூன்
    சோம்பு - அரை ஸ்பூன்
    தேங்காய் - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு

    அரைக்க வேண்டிய பொருட்கள்:

    காய்ந்த மிளகாய் - 2
    மிளகு - அரை ஸ்பூன்
    சீரகம் - 1 ஸ்பூன்

    தாளிக்க வேண்டிய பொருட்கள்:


    கடுகு -  1/4 டீஸ்பூன்
    உளுத்தம் பருப்பு - 1/4டீஸ்பூன்
    வெந்தயம் - 1/4டீஸ்பூன்
    கறிவேப்பிலை - 1 கொத்து

    ஆம்லெட் புளிக்குழம்பு

    செய்முறை

    வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பின்பு அரைக்க கொடுத்துள்ள மிளகாய், சீரகம், மிளகு இவற்றை நைசாக அரைத்துக் கொள்ளவும்.

    பின்பு புளியை ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும்.

    பின்பு சோம்பையும், தேங்காவையும் சேர்த்து தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

    பின்பு முட்டை, உப்பு, மற்றும் அரைத்து வைத்துள்ள (மிளகாய், சீரகம், மிளகு) பொடியைப் போட்டு நன்கு அடித்து வைத்துக் கொள்ளவும்.

    தோசைக் கல்லில் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கி சிவந்ததும், அடித்து வைத்துள்ள முட்டையை ஊற்றி நன்கு வெந்ததும் திருப்பிப் போட்டு ஆம்லெட் செய்து கொள்ளவும்.

    பின்பு ஆம்லெட்டை நான்கு அல்லது ஆறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

    ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாயை போட்டு நன்றாக வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியையும் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.

    தக்காளி குழைய வதக்கியதும் புளிச் சாரையுடன், மஞ்சத்தூள், மிளகாய் தூள், மல்லி தூள், உப்பு சேர்த்து அதில் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும்.

    மசாலா பச்சை வாசனை  போனவுடன் அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது (தேங்காய் + சீரகம்) சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விட்டு இறக்கவும்.

    இறக்கும் பொழுது வெட்டி வைத்த ஆம்லெட் துண்டுகளைப் போட்டு இறக்கவும்.

    சுவையான முட்டை ஆம்லெட் புளிக்குழம்பு ரெடி

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இருமல், சளி தொல்லையால் அவதிப்படுபவர்கள் தினமும் இந்த கற்பூரவள்ளி டீயை பருகலாம். இன்று இந்த டீ செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கற்பூரவள்ளி இலைகள் - 5,  
    இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்புன்,
    டீத்தூள் - ஒரு டீஸ்பூன்,
    எலுமிச்சை சாறு - தேவையான அளவு
    தேன் - தேவைக்கு,
    தண்ணீர் - 2 கப்.

    கற்பூரவள்ளி

    செய்முறை :

    கற்பூரவள்ளி இலையை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் டீத்தூள், இஞ்சித் துருவல், ஓமவல்லி இலைகள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

    பிறகு வடிகட்டி தேவையான அளவு தேன், எலுமிச்சை சாறு கலந்து பருகலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு பிடித்தான சிக்கனுடன் நெய் சேர்த்து சூப்பரான சிக்கன் நெய் சோறு செய்வது எப்படி என்று பார்க்கலாம். இந்த ரெசிபியை செய்வது மிகவும் எளிமையானது.
    தேவையான பொருட்கள் :

    சிக்கன் - 1/2 கிலோ
    பாசுமதி அரிசி - 1/2 கிலோ
    மிளகாய் தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்
    கரம் மசாலா தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவைக்கு ஏற்ப
    எலுமிச்சைபழம் - அரை மூடி
    பச்சை மிளகாய் - 10
    வெங்காயம் - கால் கிலோ
    தக்காளி - 3
    இஞ்சி - ஒரு துண்டு
    பூண்டு - 10 பல்
    ஏலக்காய் - 3
    கிராம்பு - 3
    பட்டை - சிறிது
    புதினா - கால் கட்டு
    கொத்தமல்லி இலை - கால் கட்டு
    முந்திரிப்பருப்பு - 10
    தேங்காய் - கால் மூடி
    நெய் - 100 கிராம்

    சிக்கன் நெய் சோறு

    செய்முறை

    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    அரிசியை நன்கு கழுவி அதனுடன் 1 1/2 மடங்கு நீர் ஊற்றி குழையாமல் உதிரியாக வேக வைத்து கொள்ளவும். இதனை ஒரு அகலமான பாத்திரத்தில் கொட்டி ஆற வைக்கவும்.

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை ஒன்றிரண்டாக தட்டி கொள்ளவும்.

    தேங்காயை விழுது போல் அரைத்துக் கொள்ளவும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சிறிது நெய் ஊற்றி முந்திரி பருப்பைப் பொன்னிறமாக வறுத்துத் தனியே வைக்கவும்.

    அடுத்து வாணலியில் மீதமுள்ள நெய்யை ஊற்றிக் காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்துக் பொன்னிறமாக வதக்கவும். அதில் பாதியை எடுத்து தனியாக வைக்கவும்.

    வதக்கிய வெங்காயத்துடன் தட்டி வைத்த இஞ்சி, பூண்டை சேர்த்து போட்டு வதக்கி, வாசனை வரும் போது மிளகாய், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறவும்.

    அடுத்து அதில் தக்காளி, கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் நறுக்கி வைத்திருக்கும் சிக்கன் துண்டுகளை போட்டு நன்கு எண்ணெய் பிரிந்து வரும் வரை கிளறி, கடைசியில் தேங்காய் விழுதைச் சேர்த்து சிக்கனை மிதமான தணலில் வேக வைக்கவும்.

    அதனுடன் சிறிது உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

    சிக்கன் கறி நன்கு வெந்து தண்ணீர் வற்றியதும், எலுமிச்சை பழத்தைப் பிழிந்து விடவும்.

    பிறகு கொத்தமல்லி, புதினாவைத் தூவவும்.

    அடுத்து அதில் ஆற வைத்திருக்கும் சாதத்தில் வதக்கிய கறி மசாலாவைக் கொட்டி நன்கு கிளறவும்.

    கடைசியில் வறுத்த முந்திரி பருப்பு, தனியான எடுத்து வைத்த வெங்காயத்தையும், நெய்யையும் சேர்த்து கிளறிப் பரிமாறவும்.

    சூப்பரான சிக்கன் நெய் சோறு ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகள் பழம் சாப்பிட மறுத்தால் இப்படி ஃப்ரூட் பாப்சிக்கில் வடிவில் செய்து கொடுக்கலாம். இது உடலுக்கு ஆரோக்கியம் தரும். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.
    தேவையான பொருட்கள்  :

    மாம்பழம் - 1
    கிவி - 1
    செர்ரி - 6
    ஆப்பிள் - பாதி
    பப்பாளி - 6 துண்டு
    எலுமிச்சை ஜூஸ் - ஒரு கப்
    தேன் - 2 டீஸ்பூன்.
    பாப்சிக்கில் மோல்ட் - இரண்டு அல்லது இரண்டு டம்ளர்கள்
    நடுவில் சொருக - இரண்டு ஐஸ்க்ரீம் ஸ்டிக்குகள் அல்லது ஸ்பூன்கள்.

    ஃப்ரூட் பாப்சிக்கில்

    செய்முறை:

    எலுமிச்சை ஜூஸில் தேனைக் கலந்து வைக்கவும்.

    பழங்களை பெரிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    பாப்சிக்கில் மோல்டில் தோல் சீவி பெரிய துண்டுகளாக நறுக்கிய கிவி மாம்பழம் ஆப்பிள் பப்பாளி செர்ரி இந்த வரிசையில் போட்டு எலுமிச்சை ஜூஸை ஊற்றவும்.

    இதை ஃப்ரீஸரில் எட்டுமணி நேரம் குளிரவைக்கவும்.

    மோல்டை பைப் தண்ணீரில் காட்டினால் ஃப்ரூட் பாப்சிக்கில் பிரிந்து வரும்.

    சூப்பரான ஃப்ரூட் பாப்சிக்கில் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தர்பூசணி பழத்தில் ஜூஸ் செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று தர்பூசணி பழத்தை வைத்து சூப்பரான அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தர்பூசணி பழம்(சிறியது) - 1
    வெல்லம் - அரை கிலோ
    தேங்காய்ப்பால் - அரை டம்ளர்
    நெய் - 50 கிராம்,
    முந்திரி - 10
    ஏலக்காய்த் தூள் - சிறிய அளவு

    தர்பூசணி

    செய்முறை:

    முந்திரியை நெய் விட்டு வறுத்து வைக்கவும்.

    தர்பூசணியில் சிவப்புச் சதைப் பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டு, விதைகளை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கி, மிக்ஸியிலிட்டு கூழாக அரைத்து கொள்ளவும்.

    வெல்லத்தைப் பொடித்து போதிய அளவு தண்ணீரில் இட்டு கரைத்து வடிகட்டி கொள்ளவும்.

    வாணலியை அடுப்பில் வைத்து, வெல்லக் கரைசலை விட்டு பாகு காய்ச்சவும். பாதிபதம் வந்ததும், தர்பூசணி கூழ், தேங்காய்ப்பால் சேர்த்து வேகவிடவும்.

    இடையிடையே நெய் ஊற்றி, நன்கு கிளறி கொண்டே இருக்கவும்.

    கலவை நன்கு வெந்து வாணலியில் ஒட்டாது சுருண்டு அல்வா பதம் வந்ததும், ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரிபருப்பு சேர்த்து இறக்கவும்.

    நெய் தடவிய தட்டில் கொட்டி பரவலாக வைக்கவும், ஆறியதும் விரும்பும் அளவில் துண்டுகள் போடவும்.

    தர்பூசணி அல்வா தயார். சுவையும், சத்தும் மிக்கது.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கீரை, வாழைப்பழம் கொண்டு செய்யப்படும் இந்த ஸ்மூத்தி ரத்த சர்க்கரை அளவை சமன் செய்வதாக கூறப்படுகிறது. இந்த ஸ்மூத்தியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    பாலக்கீரை - 1 கப்
    வாழைப்பழம் - 1
    பாதாம் பால் - அரை கப்
    தேன் - தேவையான அளவு.

    கீரை வாழைப்பழ ஸ்மூத்தி

    செய்முறை:

    பாலக்கீரையை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். எந்த கீரையாகவும் இருக்கலாம்.

    வாழைப்பழத்தை தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

    கீரை, வாழைப்பழம் மற்றும் பாதாம் பால் கலந்து நன்கு அரைத்து கொள்ள வேண்டும்.

    இனிப்பு தேவை எனில் தேன் சேர்த்துக்கொள்ளலாம்.

    இப்போது சுவையான கீரை, வாழைப்பழ ஸ்மூத்தி பருக தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பல்வேறு வெரைட்டியில் சமோசா சாப்பிட்டு இருப்பீங்க. இன்று மாட்டு இறைச்சியில் சூப்பரான சமோசா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    மாட்டு இறைச்சி - அரைக்கிலோ (கொத்து இறைச்சி/கீமா/கைமா)
    உருளைக்கிழங்கு - 4
    பச்சை மிளகாய் -  3
    பெரிய வெங்காயம் -  2
    கறிமசாலா -  1 தேக்கரண்டி
    மல்லிப்பொடி - 1 தேக்கரண்டி
    மிளகாய் பொடி - தேவையான அளவு
    சீரகம், பெருஞ்சீரகம் பொடி - தலா 1 தேக்கரண்டி
    ஏலக்காய்-  2
    கருவாப்பட்டை-  2
    இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு
    சமையல் எண்ணெய் - பொரிக்கவும், தாளிக்கவும்

    சமோசா செய்ய:

    மைதா மாவு - 3 தேக்கரண்டி
    சமோசா பட்டி (wrap) (கடைகளில் கிடைக்கும், கிடைக்காதவர்கள் தனியாக மைதா மாவு வைத்துக் கொள்ளவும்)

    மாட்டு இறைச்சியில் அருமையான சமோசா செய்யலாம்

    செய்முறை:

    மாட்டு கறியை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
     
    ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சுத்தம் செய்த கறியை சிறிது உப்பு, மஞ்சள் இட்டு நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்.

    உருளை கிழங்கை கழுவி விட்டு நன்றாக அவித்து தோலுரித்து, அதை மசித்து வைத்துக் கொள்ளவும்.

    மூன்று தேக்கரண்டி மாவை தனியாக அளவாக நீர் விட்டு தோசை மாவு பக்குவத்திற்கு கலக்கி தனியாக வைத்திருக்கவும்.

    (சமோசா உறையை நாமாக செய்தால் இது தேவையில்லை)

    வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் ஏலக்காய், கருவாப்பட்டை போட்டு அது பொரிந்ததும் இறைச்சியை போட்டு நன்றாக கிளற வேண்டும்.

    அதோடு இஞ்சி பூண்டு அரைத்ததை போட்டு மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி விடவும்

    இதனுடன் மசித்து வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து கிளறவும்.

    அத்துடன் பச்சை மிளகாய், கறிமசாலா மல்லி பொடி, மிளகாய் பொடி, தேவையான அளவு போட்டு கிளறி விடவும்.

    கடைசியாக வெங்காயம் போட்டு நன்றாக வதங்கி நீர் வற்றியதும் இறக்கி தனியாக வைக்கவும்

    சமோசா பட்டி கிடைக்காதவர்கள், மைதாமாவில் சிறிது வெந்நீர், தேவையான உப்பு, சீரகம் போட்டு சப்பாத்தி மாவு போல நன்கு பிசையவும்.  

    பின்பு மாவை சிறு சிறு உருண்டையாக பிடித்து வைக்கவும். இவற்றை சப்பாத்தி போல உருட்டி எடுத்து அவற்றை கத்தி மூலம் இரு பாகமாக வெட்டி வைத்துக் கொள்ளலாம்.

    சமோசா உறையில் தேவையான அளவு இறைச்சி கலவையை ஒரு மூலையில் வைத்து முக்கோணமாய் சுற்றவும்.

    சுற்றி முடிந்ததும் கடைசியில் சமோசாவின் மூலைகளை கரைத்த மாவால் ஒட்டி தனியாக வைத்துக் கொள்ளவும்.

    சமோசா பட்டியை நாமாக செய்திருந்தால் அதே மாவிலேயே ஒட்டி விடலாம்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்த வைத்த சமோசாக்களை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.

    சூப்பரான மாட்டு இறைச்சி சமோசா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காய்கறிகளை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு சப்பாத்தியில் காய்கறிகளை வைத்து செய்து கொடுக்கலாம். இன்று கேரட் சப்பாத்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    துருவிய கேரட் - ஒரு கப்
    பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் - கால் கப்
    பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - ஒரு டீஸ்பூன்
    கோதுமைமாவு - ஒன்றரை கப்
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    கேரட் சப்பாத்தி

    செய்முறை:

    ஒரு பாத்திரத்தில் துருவிய கேரட், வெங்காயத்தாள், பச்சைமிளகாய், உப்பு சேர்த்து நன்றாக கலந்து அதனுடன் கோதுமைமாவு தண்ணீர் சேர்த்து சப்பாத்திக்கு பிசைவது போல் கெட்டியாக பிசைந்து அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.

    பிறகு மாவை சப்பாத்திகளாக திரட்டி வைக்கவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்த்து வைத்த சப்பாத்தியை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

    சத்தான சுவையான கேரட் சப்பாத்தி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சேமியாவில் பல்வேறு ரெசிபிகளை செய்து இருப்பீங்க. இன்று சேமியாவை வைத்து சூப்பரான ஸ்நாக்ஸ் பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சேமியா - 100 கிராம்
    கடலை மாவு - 2 டீஸ்பூன்
    அரிசி மாவு - ஒரு டீஸ்பூன்
    வெங்காயம் - 2
    புதினா - ஒரு கைப்பிடி அளவு
    எண்ணெய் - தேவையான அளவு
    மிளகாய்த்தூள், உப்பு - தேவையான அளவு.

    சேமியாவில் செய்யலாம் சூப்பரான பக்கோடா

    செய்முறை:

    வெங்காயத்தை நீளவாக்கில் மெலிதாக நறுக்கி கொள்ளவும்.

    புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சேமியாவை தண்ணீரில் 5 நிமிடம் ஊறவிட்டு வடிகட்டவும்.

    வடிகட்டிய சேமியாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் கடலைமாவு, அரிசி மாவு, வெங்காயம், மிளகாய் தூள், புதினா, உப்பு சேர்த்து நன்கு பிசிறவும் (நீர் சேர்க்க வேண்டாம். சேமியாவின் ஈரம் போதுமானது).

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் இந்தக் கலவையை பக்கோடாக்களாக கிள்ளிப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.
    எலும்புக்கு உறுதியைத் தரும் கேழ்வரகில் கால்சியமும் மாம்பழத்தில் பீட்டா கரோட்டினும் அதிகம் உள்ளன. நார்ச்சத்தும் இருப்பதால் மலச்சிக்கல் பிரச்சனை தவிர்க்கப்படும்.
    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு மாவு - 5 டேபிள்ஸ்பூன்
    மாம்பழம் - 1
    தயிர் - ஒரு கப்
    உப்பு - ஒரு சிட்டிகை
    பால் - கால் கப்.

    கேழ்வரகு மாம்பழம்

    செய்முறை:

    மாம்பழத்தை தோல் நீக்கி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். சிறிது மாம்பழ துண்டுகளை தனியாக எடுத்து வைக்கவும்.

    ராகி மாவை ஒரு டம்ளர் நீரில் கரைத்து கொதிக்கவைத்து கஞ்சியாகத் தயார் செய்யவும்.

    இதில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துக் கலக்கவும்.

    மாம்பழத் துண்டுகள், தயிர், ஆறவைத்த ராகி கஞ்சி, பால் சேர்த்து மிக்ஸியில் அடித்து குளிரவைக்கவும்.

    கண்ணாடி டம்ளரில் குளிர்ந்த கலவையை ஊற்றி மாம்பழத் துண்டுகள் சேர்த்துப் பரிமாறவும்.

    சத்தான சுவையான கேழ்வரகு மாம்பழ ஸ்மூத்தி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தயிர் சாதம், சாம்பார் சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த சில்லி முட்டை மசாலா. இன்று இந்த ரெசிபி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முட்டை - 2
    பச்சை மிளகாய் பேஸ்ட் - 1 டீஸ்பூன்
    கிராம்பு, பூண்டு - 2
    உப்பு - சுவைக்கேற்ப
    சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
    காய்ந்த மிளகாய் பேஸ்ட் - 1 டீஸ்பூன்
    இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்
    புளிக்கரைசல் - 2 டீஸ்பூன்
    வெங்காயம் - 1
    எண்ணெய் - தேவையான அளவு
    கொத்தமல்லி - சிறிதளவு

    சில்லி முட்டை மசாலா

    செய்முறை :

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முட்டையை வேக வைத்து ஓட்டை எடுத்து விட்டு முட்டையை இரண்டாக வெட்டிக் கொள்ளவும்.

    அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் விட்டு இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கிய பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை இட்டு பொன்னிறமாக வதக்கவும்.

    வெங்காயம் வதங்கிதும், காய்ந்த மிளகாய்த்தூள் பேஸ்ட், பச்சை மிளகாய் பேஸ்ட் போட்டு 1 நிமிடங்கள் நன்கு கிளறி விடவும்.

    அடுத்து அதில் சோயா சாஸ், கெட்டியான புளிக்கரைசல், உப்பு போட்டு கொதிக்க வைத்து அடுப்பை அணைக்கவும்.

    இரண்டாக நறுக்கிய முட்டையை மசாலா கலவையுடன் சேர்த்து நன்கு கலந்து அதன் மேலாக கொத்தமல்லி இலையைத் தூவி பரிமாறலாம்.

    சில்லி முட்டை மசாலா ரெடி!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பீட்ரூட் கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. சூடான சாதத்தில் போட்டு சாப்பிட பீட்ரூட் கீரை மசியல் அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பீட்ரூட் கீரை - 4 செடிகளின் இலைகள்
    சின்ன வெங்காயம் - 10
    தக்காளி - பாதி
    பச்சை மிளகாய் - 1
    புளி - சிறு கோலி அளவு
    பூண்டு - 7 எண்ணிக்கை
    உப்பு - தேவைக்கு

    தாளிக்க:

    நல்லெண்ணெய்
    கடுகு
    உளுந்து
    மிளகு - 5
    சீரகம்
    காய்ந்த மிளகாய் - 1
    பெருங்காயம்

    பீட்ரூட் கீரை மசியல்

    செய்முறை:

    முற்றிய, பூச்சி இலைகளை நீக்கி விட்டு, மீதமுள்ள கீரையை நன்றாக நீரில் அலசித் தண்ணீரை வடிய வைக்கவும்.

    வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுந்து, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், பெருங்காயத்துள் சேர்த்து தாளித்த பின்னர் பூண்டு சேர்த்து நன்றாக வதக்கி ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.

    அதே வாணலை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளிவை சேர்த்து வத்க்கவும்.

    தக்காளி சற்று வதங்கியதும் புளி, கீரை இவற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்கி இறக்கவும்.

    தாளித்தது, வதக்கியது இவை எல்லாம் ஆறியதும் மிக்ஸியில் போட்டு மசித்து எடுக்கவும். தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை.

    இப்போது சுவையான, சிறிது பிங்க் நிறத்தினாலான பீட்ரூட் கீரை மசியல் தயார்.

    இது சாதத்துடன் பிசைந்து சாப்பிட நன்றாக இருக்கும். துவையல் போலவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×